ஈழப் படுகொலையை தொடர்ந்து
எழுப்பப்படும் ஒரு கருத்து இந்து மத ஒழிப்பு.
இது புதிய ஒன்றல்ல. ஏற்கனவே ராமசாமி
நாயக்கர் முன் வைத்த விஷயம்தான். இவர் சொன்ன காரணம், இந்து மதம் சாதி
கட்டமைப்புக்கு காரணமாக உள்ளது. அதை ஒழித்துவிட்டால் சாதிக் கட்டமைப்பு ஒழிந்து
விடும் என்பதே.
ஆனால் சாதியை இன்னமும் ஒழித்த
பாடில்லை. சாதி அவலங்களை ஒழித்தபாடும் இல்லை. இந்து மதத்தை ஒழிப்போம் என்ற குரல்
மட்டும் மீண்டும் எழுந்துள்ளது.
உண்மையில் இந்து மதம்தான் சாதிக்கு
காரணமா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்லலாம். இந்து மதம் என்ற ஒன்று
தோன்றுவதற்கு முன்பே இந்திய துணைக் கண்டத்தில் இனக்குழுக்கள் தோன்றியுள்ளன. அவையே
நாளடைவில் சாதியாக மாறியுள்ளன.
இந்து மதம் அனைத்து வேறுபாடுகளையும்
தன்னகத்தே கொண்டுள்ளது. இந்து மதத்தின் அடிப்படை கொள்கையும் அதுவே. இந்து மதம்
நிலவிய இந்த பூமியில் தோன்றிய மதங்கள் ஏராளம். இது அத்தனை மதங்களையும் அப்படியே
ஏற்றுக் கொள்வதாகவே இருந்து வந்துள்ளது. அதுபோலவே சாதிய கட்டமைப்பையும் அப்படியே
ஏற்றுக் கொண்டுள்ளது.
வர்ணாசிரம பிரிவுகள் என்பவை
சாதிகளுக்கானவை அல்ல. அது மனிதர்களின் குணத்தை காட்டுவதாகும். அதாவது ஒரே சாதியில்
பிராமண், வைஷ்யன், சத்திரியன், சூத்திரன் என்ற இந்த நான்கு பிரிவையும் காணலாம். சிலர்
இதனை சாதிகளுக்கானது என்று கூறி சமூக அவலங்களை ஏற்படுத்தியதற்கு இந்து மதம் பொறுப்பாகாது.
இது சைவம், வைணவம், சாக்கியம்,
கெளமாரம், புத்தம், சமணம் என அனைத்தையும் உள்வாங்கியே வந்துள்ளது. இன்றுள்ள
இஸ்லாம், கிறிஸ்தவம் கூட பல நடவடிக்கைகளில் இந்து மதத்தின் சாயலை பெற்றுள்ளன. இது
இன்றும் மற்ற மதங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளும் ஒன்றாகவே உள்ளது. ஆனால் மற்ற
மதங்கள் அப்படி இல்லை.
உலகில் எப்போதெல்லாம் இன, மத
துவேஷங்கள் நடைபெற்றனவோ அப்போதெல்லாம் அவர்களை வரவேற்று புகலிடம் அளித்தது இந்து
மதம். இதில் ஜொராஸ்டிரியர், யூத மதத்தவரையும்
சேர்க்கலாம். இந்து மதத்தில் உருவம், அருவம், அத்வைதம், துவைதம் என அத்தனை
வழிபாட்டு முறைகளும் உள்ளன. இதுவே இந்தியாவில் எண்ணற்ற ஞானிகள் தோன்ற காரணமாக
இருந்து வந்துள்ளது. இது கர்மயோகம், பக்தி யோகம், இராஜ யோகம்,
ஞான யோகம் என்ற நான்கு ஆன்மீக அணுகுமுறைகளையும் தந்துள்ளது.
இந்து மதத்தில் மதச்
சஹிப்புத்தன்மை, கூடி வாழ்தல் போன்ற கருத்துக்களுக்கு எப்போதும் பஞ்சமில்லை. இந்து
மதத்தில் உள்ளவர்கள்தான் மற்ற அனைவருக்கும் இந்த சுதந்திரத்தை கொடுத்துள்ளனர். இந்த
சுதந்திரங்களையெல்லாம் அனுபவித்து வருபவர்கள்தான் இன்று சமூக -அரசியல்
பிரச்சனைகளுக்கு காரணம் காட்டி இந்து மதத்தை அழித்துவிடுவேன், ஒழித்து விடுவேன்
என்று ஜம்பம் பேசுகிறார்கள்.
இதே மத ஒழிப்பு ஆசாமிகள் மற்ற
மதங்களைப் பற்றி எதுவும் பேசமாட்டார்கள். அப்போது மதச்சார்பின்மை முகமூடியை
சௌகரியமாக அணிந்துகொள்வார்கள்.
இந்து மதம் ஏற்படுத்தியதாக கூறும் சமூக
அவலங்களையே களைய முடியாத இவர்கள் எப்படி இந்து மதத்தை அழிப்பார்கள்? இவர்களது
பேச்சு நுனிக்கிளையில் அமர்ந்து அடிமரத்தை வெட்டியதாகும்.
••••••
2 comments:
Good simple article with lot of answers my appreciations
அருமை நண்பரே. வாழ்த்துக்கள்..
Post a Comment