மரபணுக்கள்தான் (genes) நமது கண்கள், முடி, சருமத்தின் நிறம், தோற்றம், பால் போன்றவற்றை நிர்ணயிப்பவை. இந்த மரபணுக்களே நமது குணங்கள், உடலின் செயல்பாடு போன்றவற்றை நிர்ணயிக்கின்றன. நாம் நமது மரபணுக்களை நமது பெற்றோரிடமிருந்து பெறுகிறோம். பெரும்பாலும் மனிதர்களுக்கு மரபணுக்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவற்றில் சிறுசிறு வேறுபாடு காணப்படுகின்றன. இந்த வேறுபாடுகளே ஒவ்வொரு மனிதரிடமும் உள்ள வேறுபாடாக உள்ளது.
இந்த வேறுபாடுகளே, ஒருவரின் உடலில் மருந்து எவ்வாறு வேலை செய்கிறது என்பதை நிர்ணயிப்பதாக உள்ளது. இதன் காரணமாகவே ஒருவருக்கு வேலை செய்யும் மருந்து மற்றவருக்கு வேலை செய்ய மாட்டேன்கிறது. அல்லது குணமடையும் காலம், அவருக்கு அந்த மருந்தால் ஏற்படும் பக்கவிளைவுகள் போன்றவற்றை நிர்ணயிப்பதாக உள்ளது. இதை இப்படிக் கூடச் சொல்லலாம்.
தற்போது இந்த வேறுபாடுகளையும் அதன் காரணமாக ஒரு மருந்து ஒருவருக்கு வேலை செய்யாமல் போகும் காரணத்தையும் கண்டறியும் முயற்சி அடிப்படையிலான ஆராய்ச்சிகளில் மருந்து நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதனை எந்தெந்த மரபணு உள்ளவர்களுக்கு எந்தெந்த நோய் வராது என்பதை கண்டுபிடிப்பதாகக் கூட சொல்லலாம்.
இதனால் எதிர்காலத்தில் என்ன ஆகும் என்றால் இன்ன மரபணு உள்ளவர்களுக்கு இன்ன மருந்துகள் வேலை செய்யாது என்று தெரியவரும். அதற்கேற்றவாறு மருந்துகளை பயன்படுத்த வேண்டும். இதில் உள்ள அபாயம் என்னவென்றால் ஒருவருக்கு இன்ன மரபணு இருக்கிறது என்றால் அவர் இன்ன நோயால் தாக்கப்படும் அபாயம் உள்ளவர் என்றாகிறது.
இது தெரிந்தால் ஒரு முதலாளி ஒருவரை வேலையை விட்டு நீக்கலாம். காப்பீட்டு நிறுவனங்கள் குறிப்பிட்ட மரபணு உள்ளவருக்கு காப்பீடு வழங்க மறுத்துவிடும். சமூகம் ஒருவரை ஒதுக்கி வைக்கலாம். எனவே மரபணு தொடர்பான விவரங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காலத்தில் தனிநபர் அந்தரங்க தகவல்கள் எவ்வாறு விற்பனை செய்யப்படுகின்றன என்பதை நான் பார்த்து வருகிறோம்.
எனவே இது போன்ற ஆராய்ச்சிகள் என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை காலம்தான் சொல்லும்.
Courtesy for image to:
http://www.teenjury.com/can-a-company-patent-your-genes/
தற்போது இந்த வேறுபாடுகளையும் அதன் காரணமாக ஒரு மருந்து ஒருவருக்கு வேலை செய்யாமல் போகும் காரணத்தையும் கண்டறியும் முயற்சி அடிப்படையிலான ஆராய்ச்சிகளில் மருந்து நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதனை எந்தெந்த மரபணு உள்ளவர்களுக்கு எந்தெந்த நோய் வராது என்பதை கண்டுபிடிப்பதாகக் கூட சொல்லலாம்.
இதனால் எதிர்காலத்தில் என்ன ஆகும் என்றால் இன்ன மரபணு உள்ளவர்களுக்கு இன்ன மருந்துகள் வேலை செய்யாது என்று தெரியவரும். அதற்கேற்றவாறு மருந்துகளை பயன்படுத்த வேண்டும். இதில் உள்ள அபாயம் என்னவென்றால் ஒருவருக்கு இன்ன மரபணு இருக்கிறது என்றால் அவர் இன்ன நோயால் தாக்கப்படும் அபாயம் உள்ளவர் என்றாகிறது.
இது தெரிந்தால் ஒரு முதலாளி ஒருவரை வேலையை விட்டு நீக்கலாம். காப்பீட்டு நிறுவனங்கள் குறிப்பிட்ட மரபணு உள்ளவருக்கு காப்பீடு வழங்க மறுத்துவிடும். சமூகம் ஒருவரை ஒதுக்கி வைக்கலாம். எனவே மரபணு தொடர்பான விவரங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காலத்தில் தனிநபர் அந்தரங்க தகவல்கள் எவ்வாறு விற்பனை செய்யப்படுகின்றன என்பதை நான் பார்த்து வருகிறோம்.
எனவே இது போன்ற ஆராய்ச்சிகள் என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை காலம்தான் சொல்லும்.
Courtesy for image to:
No comments:
Post a Comment