Thursday, August 23, 2012

ஈழப் படுகொலையும் - தமிழர்களின் மத நம்பிக்கையும்


ஈழப்போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், தங்கள் மத நம்பிக்கைகள் மீது கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்கள் தங்கள் மதத்தின் – கடவுளின் மீது கேள்வி எழுப்பியுள்ளனர். ஈழப் படுகொலை பற்றிய கட்டுரை ஒன்றை வாசித்தபோது கட்டுரையாளர் இந்துக்களின் சிவன்- விஷ்ணு தெய்வங்கள் இருந்து என்ன பயன்? இப்போது அந்த கடவுள்கள் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அவர் ஏசு கிறிஸ்துவையும் விட்டு வைக்கவில்லை. அதேபோல ஈழ மக்கள், சிங்களவர்களின் புத்த மதத்தையும், புத்தரையும் பற்றி கடுமையாக விமரிசனம் செய்தனர். அவர்களின் நிலையில் இருந்தால் இந்த கேள்விகள் எழவே செய்யும். இந்த கோபம் இன்னமும் குறையாமல் இருந்தாலும் ஆச்சரியமில்லை. சாதாரணமாக ஒரு உலகாதாயவாதி இதே கேள்விகளை எழுப்பவே செய்வார்.

பெரும்பான்மை தமிழர்கள் இந்துக்களாக இருந்தும் இந்து மதம் ஒன்றும் செய்து விடவில்லை. சிறுபான்மை மக்கள் இருந்து கிறிஸ்தவருக்காக ஏசு கிறிஸ்து என்ன? வாடிகன் கூட ஒன்றும் செய்யவில்லை. எனவே அவர்களின் கோபம் நியாயமானதே.

அவர்கள் கோபம் ஒருபக்கம் இருந்தாலும் நாம் இது சரியா என்று யோசித்துப் பார்ப்போம். உண்மையில் மதங்கள் அரசியலில் ஈடு படுகின்றனவா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும். கடவுள் சமூக பிரச்சனைகளில் ஈடுபடுவதில்லை. ஏன் கடவுளின் பேரில் பிரச்சனை எழுந்தாலும் கூட கடவுள் ஒன்றும் செய்வதில்லை.

அவர் நிச்சயமாக அரசியலை அவர் கண்டுகொள்வதேயில்லை. உண்மையில் அவர் சமூக-அரசியல் பிரச்சனைகளில் அக்கறை செலுத்துவதாக இருந்தால் கடவுள் நேரடியாக சமூக அமைப்பையும், அரசியலையும் உருவாக்கி இருக்க வேண்டும். மனிதனுக்கு அந்த வேலையை கொடுத்திருக்கக் கூடாது. மனிதனுக்கு அது பற்றி சிந்திக்கும் அறிவையும் கொடுத்திருக்கக் கூடாது.

ஆனால் மனிதன் தனது சமூக அரசியலை கட்டி எழுப்ப தவறினால், இறைவன் ஒன்றும் செய்ய மாட்டார். வேடிக்கையே பார்ப்பார். நீங்கள் அவரைத் திட்டினாலும் அவர் கண்டுகொள்ள மாட்டார். அவரைப் பொறுத்தவரை புல் பூண்டுகளும் மனிதரும் ஒன்றுதான்.

எனவே ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல, தமிழக, உலக தமிழர்களும் தங்கள் சமூக – அரசியல் வாழ்க்கையில் சிவன், விஷ்ணு, ஏசு, புத்தர் போன்றோரை இழுக்காமல் தமக்கு தாமே தங்கள் சமூக – அரசியலை கட்டி எழுப்ப முயற்சிக்க வேண்டும். கடவுள்களை ஆன்மீக வாழ்க்கைக்கு மட்டும் அழையுங்கள். உங்கள் உலகாதாய கோரிக்கைகளுக்கு அவர்களை அழைத்தால் அவர்கள் வருவதும் வராததும் அவர்களின் விருப்பம்.  அவர்கள் வரவில்லையே என்று வருத்தப்பட்டால் அது நமது குறையே அல்லாமல் அவர்களது குறை அல்ல.

1 comment:

Unknown said...

துன்பம் வந்தபோது, கடவுள் மீது குறை சொல்வதைத் தவிர்க்கும்படி வலியுறுத்தி, அதற்குத் தெளிவான விளக்கமும் கொடுத்த உங்கள் கட்டுரை மிகவும் நன்றாக இருக்கிறது. மிகவும் ரசித்தேன். பாராட்டுக்கள்!

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...