புத்தர் தனது பிரச்சாரத்தை துவங்கிய
காலம். அவர் தன் சீடர்களுடன் கிராமம் கிராமமாக சென்று தனது கருத்துக்களை
பிரச்சாரம் செய்து வந்தார். அவருக்கு பல இடங்களில் வரவேற்பும் பல இடங்களில்
எதிர்ப்பும் இருந்து வந்தது.
புத்தர் தங்கள் கிராமத்திற்கு
வருவதை அறிந்த ஒரு கிராம மக்கள் அவரை கடுமையாகத் திட்ட திட்டமிட்டனர். அதேபோல
ஊர்மக்கள் திரண்டு கிராம எல்லையில் காத்திருந்தனர்.
புத்தர் தனது சீடர்களுடன் வந்தார். உடனே
கிராம மக்கள் அவரை கண்டபடி திட்ட ஆரம்பித்தனர். புத்தரும் அவரது சீடர்களும்
பொறுமையாக நின்று அவர்கள் திட்டுவதை கேட்டனர். கண்டபடி திட்டிய கிராம மக்கள்
சிறிது நேரத்தில் திட்டுவதை நிறுத்தி விட்டனர்.
அப்போது ஒருவர், நாங்கள் இவ்வளவு
கடுமையாக திட்டுகிறோமே நீங்கள் ஏன் ஒன்றும் பேசவில்லை என்று புத்தரிடம் கேட்டார்.
நீங்கள் திட்டிய வார்த்தைகளை நான் ஏற்றுக்
கொள்ளவில்லை, அவற்றை நீங்கள்தான் எடுத்துச் செல்லவேண்டும் என்று புத்தர் சொன்னார்.
அந்த கிராமத்தாருக்கு அது புரியவில்லை. மேலும் விளக்கிச் சொல்லுமாறு கேட்டார்கள்.
அப்போது புத்தர், இதற்கு முன்பு
நாங்கள் ஒரு கிராமத்திற்கு சென்றோம், கிராம மக்கள் திராட்சைகளை பரிசாக கொடுத்தனர்.
அந்த திராட்சைகள் புளிப்பாக இருந்ததால்
நாங்கள் அதை ஏற்க மறுத்துவிட்டோம். உடனே அவர்கள் அந்த திராட்சையை எடுத்து
சென்றுவிட்டனர். அதுபோல நீங்கள் திட்டிய வார்த்தைகளை நாங்கள் ஏற்கவில்லை. அவற்றை
நீங்கள்தான் எடுத்துச் செல்லவேண்டும் என்று புத்தர் சொன்னார்.
கிராம மக்கள் தங்கள் தவறை உணர்ந்தனர்.
- -ஓஷோவின் குட்டிக்
கதைகளிலிருந்து
No comments:
Post a Comment