Monday, November 14, 2011

ஈனமலரே

சேற்றில் தோன்றும்
செந்தாமரை பல இருக்க
சேற்றை பூசிக்கொள்ளும்
மலர் தினமும் பிறக்கிறது

ஒரு மொழியை, இனத்தை,
உணர்வை கேலி பேசும்
காகித சருகே
உன்னை நீயே கேட்டுப்பார்

நீ பழிக்கும் மொழிபேசும்
மக்கள் பணத்தை
உண்டு கொழுத்த
நீ செய்ததென்ன?

உனக்கு துணிவிருந்தால்
கன்னித்தாயின் வரலாறை
காதல் திருமணத்தை
பெற்ற குழந்தையை எழுதுவாயா?

மதச்சார்பற்ற நாளிதழென
பேரு பெற்ற இந்து கூட
ஏனோ(?) தமிழன் விஷயத்தில்
சோரம் போனபோது

கரிக்கொட்டையால் எழுதும்
கழிவறை எழுத்துக்களை
அச்சிலேற்றும் நீ மட்டும்
விதிவிலக்கா?

நிச்சயம் நீ ஈன வரலாறு
படைக்கிறாய்,
உன் ரத்தத்தில்
பெருமை சேர்க்கிறாய்

பாவம் இந்த மக்கள்
பொறுமைசாலிகள்
தமிழின வரலாற்றில்
உனக்கும் இடமுண்டு

வல்லரசெல்லாம் போனதெங்கே?
பாழாய் நீயும் போவதெங்கே?

ஆனாலும் நான் உன்னை
வாழ்த்துகிறேன்
உன் சேவையால் என் இனத்தை
தட்டி எழுப்புவதற்காக

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...