Tuesday, November 22, 2011

பணம் – ஓஷோ


அமெரிக்க பத்திரிகைகளை பார்த்தால் நீங்கள் வாழ்க்கையில் ஒரு விஷயத்தை தவறவிடுகிறீர்கள் என்பதை புரிந்துகொள்வீர்கள். அது மகிழ்ச்சியை பணத்தின் மூலம் வாங்கிவிடலாம் என்பதே ஆகும். அவை நீங்கள் எதையோ தவறவிட்டு விட்டீர்கள் என்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகின்றன. அதன் பின் நீங்கள் அதற்காக வேலை செய்ய ஆரம்பிக்கிறீர்கள். அதற்காக பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறீர்கள். பின்னர் அதனை வாங்குகிறீர்கள். அதன் பின் நீங்கள் ஏமாற்றப்பட்டதாக உணருகிறீர்கள். அந்த உணர்வு ஆழமான உணர்வு அல்ல. ஏனெனில் நீங்கள் ஏமாற்றப்பட்டதாக உணருவதற்கு முன்பே சில புதிய ஏமாற்றங்கள் உங்கள் மனதில் பதிந்து விட்டன. இப்போது அவை முன்னோக்கி இழுத்துச் செல்கின்றன. நீங்கள் கண்டிப்பாக ஒரு மலைவாசஸ்த் தலத்தில் ஒரு வீடு வைத்திருக்க வேண்டும். அல்லது நீங்கள் கண்டிப்பாக ஒரு கோடை ஓய்வு இல்லம் வைத்திருக்க வேண்டும். அல்லது நீங்கள் கண்டிப்பாக ஒரு படகு வைத்திருக்க வேண்டும். எப்போதும் எதையாவது சாதித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களால் சந்தோஷமாக இருக்க முடியும். அவை உங்களை மரணம் வரை இழுத்துச் செல்லும். நீங்கள் இறக்கும் வரை, அந்த விளம்பரங்கள், அந்த பரப்புரை உங்களை இழுத்துச் செல்லும்.

பொருள் சார்ந்த (உலக ஆதாய) வாழ்க்கை முறையில் பணம் எல்லாவற்றும் மேலானதாக உள்ளது. பொருள் சாராத வாழ்க்கை முறையில் பணம் என்பது ஒரு வழிமுறையாக உள்ளது. சந்தோஷம் மேலானதாக உள்ளது. மகிழ்ச்சி மேலானதாக உள்ளது. உங்களது சுய தனித் தன்மையே மேலானதாக உள்ளது. நீங்கள் யார் என்று அறிந்திருப்பீர்கள் மற்றும் எங்கே நீங்கள் போகிறீர்கள் என்று அறிந்திருப்பீர்கள். அப்போது உங்களை திசை திருப்ப முடியாது. திடீரென உங்களது வாழ்க்கை தியானம் செய்யக்கூடிய தரம் கொண்டிருப்பதை பார்ப்பீர்கள்.

பணம் உருவாக்கும் மிகப் பெரிய பிரச்சனை என்னவென்றால், மற்றவர்கள் உங்கள் மீது பணம் செலுத்துகிறார்களா அல்லது உங்களது பணத்தின் மீது அன்பு செலுத்துகிறார்களா, நீங்கள் விரும்பத் தக்கவராக இருக்கும்போது நீங்கள் விரும்பத்தக்கவராக இருக்கிறீர்களா அல்லது உங்களது பணம் விரும்பத்தக்கதாக உள்ளதா என்பதை கண்டறிய முடியாமல் போவதே ஆகும். இது தெரிந்தாலாவது வாழ்க்கை எளிமையானதாக ஆகிவிடும்.

உண்மையான ஆன்மீகம் பூமியில் வேரூன்றியதாக இருக்க வேண்டும். உலகத்தை ஒதுக்கும் ஆன்மீகம், உலகத்தை மறுக்கிறது. அது பண்பாக மாறிவிடுகிறது. அது அழகிய கற்பனையாக மாறிவிடுகிறது. அதில் ரத்த ஓட்டம் இருப்பதில்லை. அதில் உயிரோட்டம் இருப்பதில்லை. யூதர்கள் மிகவும் உலக ஆதாயத்தில் ஈடுபாடு மிக்கவர்களாக உள்ளனர் என்பது உண்மையே. பணம் வைத்திருப்பதில் என்ன தவறு? ஆனால் யாரும் அதனை தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடுபவராக இருக்கக் கூடாது. அவர்கள் அதனை பயன்படுத்தக் கூடியவராக இருக்க வேண்டும். அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று யூதர்கள் அறிந்துள்ளனர். யாரும் கஞ்சத்தனமாக இருக்கக் கூடாது. பணத்தை உருவாக்கி பயன்படுத்த வேண்டும். சரியான முறையில் பயன்படுத்தப்பட்டால் பணம் என்பது அழகிய கண்டுபிடிப்பு, ஒரு பெரும் ஆசீர்வாதம் ஆகும். பணம் பல சாதனைகளை சாதித்து சாட்டுகிறது. பணம் என்பது ஒரு மாயமந்திம் போன்றது.

உங்களது சட்டைப் பையில் பத்து ரூபாய் தாள் இருந்தால், நீங்கள் உங்களது சட்டைப் பையில் ஆயிரக்கணக்கான பொருட்களை வைத்திருக்கிறீர்கள். நீங்கள் அந்த பத்து ரூபாயை வைத்து எதையும் வாங்கலாம். நீங்கள் ஒரு மனிதனைக் கொண்டு இரவு முழுவதும் உங்களுக்கு மசாஜ் செய்ய வைக்கலாம். அல்லது நீங்கள் அதனை கொண்டு உணவை வாங்கலாம். அல்லது நீங்கள் அதனைக் கொண்டு எதைவேண்டுமானாலும் செய்யலாம். அந்த பத்து ரூபாய் தாள் பல விஷயங்களை சாத்தியமாக்கும் தன்மை கொண்டுள்ளது. ஆனால் அந்த தாள் இல்லாவிட்டால் உங்களால் அந்த சாத்தியங்களை எடுத்துச் செல்ல முடியாது. அப்போது உங்களது வாழ்க்கை வரம்புக்குட்பட்டதாக ஆகிவிடுவிறது. நீங்கள் மசாஜ் செய்யும் ஒருவரை வேலைக்கு அமர்த்தலாம். ஆனால் அது உங்களிடம் உள்ள சாத்தியம் மட்டுமே. திடீரென உங்களுக்கு பசிக்கிறது அல்லது தாகமெடுக்கிறது. அப்போது ஒரு மனிதனால் எதையும் செய்ய முடியாது. ஆனால் பத்து ரூபாய் தாள் பல விஷயங்களை செய்யக் கூடியது. லட்சக்கணக்கான விஷயங்கள். அதில் முடிவில்லாத சாத்தியங்கள் உள்ளன. இது மனிதனின் கண்டுபிடிப்புக்களில் மிகச் சிறந்த ஒன்று. எனவே அதனை எதிர்க்கத் தேவையில்லை. நான் அதனை எதிர்ப்பவன் இல்லை.

அதனை பயன்படுத்துங்கள். அதனை பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு அழுத்தமாக அதனை பிடித்துக் கொள்கிறீர்களோ, உங்களது அழுத்தத்தைப் பொறுத்து உலகம் ஏழையாகிவிடும். ஏனெனில் பணம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு செல்லும்போதுதான் அது பெருகுகிறது. ஆங்கிலத்தில் பணத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த சொல் ஒன்று உள்ளது. அது “கரண்சி” ஆகும். அதற்கு என்ன பொருள் என்றால் பணம் நீரோட்டம் போல ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என்பதே. எப்போதுமே அது ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் சென்றவாறு இருக்க வேண்டும். அது எவ்வளவு அதிகமாக செல்கிறதோ அவ்வளவு சிறப்பானது.

உதாரணமாக, என்னிடம் ஒரு பத்து ரூபாய் தாள் இருந்து அதனை நானே வைத்துக்கொண்டால், அப்போது உலகிலேயே ஒரேயொரு பத்து ரூபாய் தாள்தான் இருக்கும். அதனை நான் உங்களுக்கு கொடுக்க, நீங்கள் அதனை மற்றொருவருக்கு கொடுத்தால், அது பத்து கைகளின் வழியே சென்றால் அப்போது நம்மிடையே நூறு ரூபாய் இருக்கும். நாம் நூறு ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பயன்படுத்தியுள்ளோம். பத்து ரூபாய் பத்தால் பெருக்கப்படுகிறது. பணத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று யூதர்கள் அறிந்திருந்தார்கள். அதில் தவறேதும் இல்லை. ஆனால் பேராசை தீயது. பேராசை என்பதற்கு நீங்கள் எப்போதும் பணத்தைப் பற்றியே நினைக்கிறீர்கள், அதனை பயன்படுத்துவது இல்லை என்று பொருள். அது ஒரு முற்றுப்புள்ளியாகி விடுகிறது. அது கெட்டது. நீங்கள் ஒரு யூதராக இருக்கிறீர்களா, ஜைனராக இருக்கிறீர்களா, இந்துவாக இருக்கிறீர்களா அல்லது முஸ்லீமாக இருக்கிறீர்களா என்பது பிரச்சனையில்லை.

மனது எப்போதுமே இன்னும் இன்னும் என்று கேட்ட வண்ணம் உள்ளது. உங்களிடம் பணம் இருந்தால், அது அதிக பணத்தை விருமபுகிறது. உங்களுக்கு கௌரவம் இருந்தால், அது அதிக கௌரவத்தை எதிர்பார்க்கிறது. உங்களிடம் அறிவு இருந்தால் அது அதிக அறிவுக்காக ஏங்குகிறது. மனது எப்போதுமே “இன்னும்” வேண்டும் என்ற நிலையில் உள்ளது.

வாழ்க்கை பற்றிய நமது மனப்போக்கு முழுவதுமாகவே பணம் தொடர்பானதாக உள்ளது. பணம் என்பது படைப்பு சக்தியே இல்லாத ஒன்றின் மீது ஒருவர் ஆர்வம் கொள்ளும் பொருளாக உள்ளது. அணுகுமுறை முழுவதுமே அதிகாரம் சார்ந்ததாக உள்ளது. அதிகாரம் அழிவை ஏற்படுத்தக் கூடியது. அது ஒன்றை படைக்கக் கூடியதல்ல. பணம் கொள்ளையடிக்கக் கூடிய ஒன்றாக, சுரண்டக் கூடிய ஒன்றாக இருப்பதால் பணத்தின் பின்னால் ஓடும் ஒருவர் அழிவை ஏற்படுத்தக் கூடியவராக இருப்பார். அது பலரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் அது உங்களிடம் இருக்கும். அதிகாரத்தை பெறவேண்டும் என்றால் நீங்கள் பலரை சக்தியற்றவராக ஆக்க வேண்டும் என்று பொருள். நீங்கள் அவர்களை அழிக்க வேண்டும். அதன் பின்னால்தான் நீங்கள் சக்திவாய்ந்தவராக ஆக முடியும். சக்தி பெற்றவராக இருக்க முடியும். நினைவிருக்கட்டும் – இவை அழிவுக்குரிய செயல்கள். படைப்பாற்றல் உலகை அழகு படுத்துகிறது. அது உலகிற்கு ஒன்றை கொடுக்கிறது. அது எதையும் எடுத்துக் கொள்வதில்லை. ஒரு படைப்பாளி உலகிற்கு வந்தால் அவன் உலகின் அழகிற்கு மெருகேற்றுகிறான்.

இங்கே ஒரு பாடல், அங்கே ஒரு ஓவியம் என்று உருவாக்குகிறான். அவன் உலகை நளினமாக நடனமாடச் செய்கிறான். அழகாக அனுபவிக்கிறான். ஆழமாக அன்பு செலுத்துகிறான். அமைதியாக தியானம் செய்கிறான். அவன் உலகை விட்டுச் செல்லும்போது. அவன் தனக்குப் பின்னால் ஒரு சிறந்த உலகை விட்டுச் செல்கிறேன். அவனை யாருக்காவது தெரியுமா அல்லது சில பேருக்காவது அவனை தெரியுமா என்பது பிரச்சனையில்லை. சிறிது இயற்கை மதிப்பு உள்ள காரணத்தால் அது அருமையாக நிரம்பியிருக்கும்.

பணம், அதிகாரம், கௌரவம் ஆகியவை படைப்பு இல்லாதவை. உருவாக்க முடியாதவை மட்டுமல்லாமல் அழிக்கும் நடவடிக்கைகளையும் கொண்டது. இவற்றிடம் எச்சரிக்கையாக இருங்கள். இவற்றிலிருந்து எச்சரிக்கையாக இருந்தால் நீங்கள் எளிதாக படைப்பாளியாகி விடலாம். உங்களுக்கு படைக்கும் திறன் சக்தி, கௌரவம், பணத்தை கொடுக்கும் என்று நான் சொல்லவில்லை. உங்கள் வழியெல்லாம் பூந்தோட்டம் அமையும் என்று நான் சொல்லவில்லை. இது உங்களுக்கு தொல்லையை ஏற்படுத்தலாம். இது நீங்கள் ஒரு ஏழையைப்போல வாழ்க்கையை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளலாம். நான் உங்களுக்கு என்ன வாக்குறுதி கொடுக்கிறேன் என்றால், நீங்கள் உங்களுக்குள்ளே மிகப்பெரிய பணக்காரனாக இருப்பீர்கள். மிக ஆழத்தில் நிரம்பியவராக இருப்பீர்கள். ஆழத்தில் நீங்கள் சந்தோஷமாக, கொண்டாட்டமாக இருப்பீர்கள். நீங்கள் கடவுளிடமிருந்து தொடர்ந்து அதிகமாக மற்றும் ஆசீர்வாதத்தை பெறுவீர்கள்.

வெளிப்புறமாக நீங்கள் புகழ் பெற சாத்தியமில்லாமல் போகலாம். உங்களிடம் பணம் இல்லாமல் போகலாம். நீங்கள் இந்த உலகத்தில் வெற்றி பெறுவது என்பது பெருந்தோல்வியாக போகலாம். இது உள்ளேயுள்ள உலகத்தில் தோற்பதாகும். நீங்கள் உங்களது சுயத்தை இழந்து விட்டால் முழு உலகைக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? இந்த உலகம் முழுவதையும் சொந்தமாக்கிக் கொண்டு உங்களை இழந்து விட்டால் என்ன ஆகும்? ஒரு படைப்பாளி தனது சுயத்தை தனதாக்கிக் கொள்கிறான். அவன்தான் குரு. அதனால்தான் கிழக்கில் நாங்கள் ‘ஸ்வாமி’ என்று அழைக்கிறோம். ‘ஸ்வாமி’ என்பதற்கு குரு என்று பொருள். பிச்சைக்காரர்களும் ஸ்வாமி - குரு என்று அழைக்கப்படுகிறார்கள். பேரரசர்கள், தங்களது வாழ்க்கையின் இறுதியில், அவர்கள் பிச்சைக் காரர்கள்தான் என்பதை நிரூபித்ததுள்ளனர். பணம், அதிகாரம், கௌரவத்தின் பின்னால் ஓடும் மனிதன் பிச்சைக்காரன். ஏனெனில் அவன் தொடர்ச்சியாக பிச்சைக்காரனாக இருக்கிறான். உலகிற்கு கொடுக்க அவனிடம் எதுவும் இல்லை.

ஒவ்வொருவரும் அளவுகடந்த தெய்வீகத் தன்மையை பெற்றிருப்பதால் அளவுகடந்த வலிமை பெற்றிருப்பார்கள். ஒவ்வொருவரும் உயிர்வாழ்தலின் தோற்றமான கடவுளிலேயே வேர் பதித்து இருப்பதால் ஒவ்வொருவரும் வலிமையாக இருப்பார்கள். மனிதனின் மனது அதனை மறக்க முற்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் அதை மறக்கும்போது பலவீனமாகிறீர்கள். நீங்கள் பலவீனமாகும்போது செயற்கையான முறையில் நீங்கள் வலிமை பெற முயற்சிக்கிறீர்கள். பணத்தை தேடுவதன் உண்மையில் மூலம் எதை தேடுகிறீர்கள்? நீங்கள் அதிகாரத்தை தேடுகிறீர்கள், நீங்கள் பலத்தை தேடுகிறீர்கள். கௌரவத்தை, அரசியல் அதிகாரத்தை தேடுவதன் மூலம் நீங்கள் எதைத் தேடுகிறீர்கள்? நீங்கள் அதிகாரம், பலத்தை தேடுகிறீர்கள். ஆனால் பலம் என்பது எப்போதும் உங்களுக்கு அருகிலேயே இருக்கிறது. நீங்கள் தவறான இடங்களில் தேடுகிறீர்கள்.

சந்தோஷத்தை பெறுவதிலிருந்து அதிக இடையூறு ஏற்படுத்துவதால் பணத்தைப் பற்றி மிகவும் கவலைப்படாதீர்கள். ஆனால் அதற்கு மாறாக என்ன நடக்கிறது என்றால் எல்லாரும் பணம் இருந்தால் சந்தோஷமாக இருப்பதாக நினைக்கிறார்கள். பணத்திற்கும் சந்தோஷத்திற்கும் சம்பந்தம் இல்லை. நீங்கள் சந்தோஷமாக இருந்து உங்களிடம் பணம் இருந்தால் நீங்கள் அதனை சந்தோஷத்திற்காக பயன்படுத்தலாம். நீங்கள் கவலையாக இருந்து உங்களிடம் பணம் இருந்தால் நீங்கள் அதிக கவலையைப் பெற பணத்தை பயன்படுத்துவீர்கள். ஏனெனில் பணம் என்பது ஒரு நடுநிலையான சக்தி என்பதால் ஆகும்.

நினைவிருக்கட்டும், நான் பணத்திற்கு எதிரானவன் கிடையாது. நான் சொல்வதை தவறாக புரிந்துகொள்ளாதீர்கள். நான் எதற்கும் எதிரானவன் கிடையாது. பணம் என்பது ஒரு வழிமுறை. நீங்கள் சந்தோஷமாக இருந்து உங்களிடம் பணம் இருந்தால் நீங்கள் அதிக சந்தோஷமாக இருப்பீர்கள். உங்களது பணத்தைக் கொண்டு என்ன செய்ய முடியும்? என்ற நிலை ஏற்படுவதன் காரணமாக நீங்கள் கவலையாக இருந்து பணம் வைத்திருந்தால் மிகவும் கவலைப்படுவீர்கள்.

உங்களது வாழ்க்கை முறை எதுவாக இருந்தாலும் உங்களது பணம் அதை மாற்றிவிடும். நீங்கள் கவலையாக இருக்க உங்களிடம் அதிகாரம் இருந்தால், நீங்கள் உங்களது அதிகாரத்தை வைத்து என்ன செய்வீர்கள்? உங்களது அதிகாரத்தை கொண்டு உங்களுக்கு நீங்களே விஷம் வைத்துக் கொள்வீர்கள். ஆனால் பணம் சந்தோஷத்தை தரும் என்று எல்லாரும் பணத்தையே தேடுகின்றனர். மரியாதை சந்தோஷத்தை தரும் என்று மரியாதையை தேடுகின்றனர். ஏதாவது வழியில் அதிக பணம் கிடைக்கும் என்றால் மக்கள் தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள, வழியை மாற்றிக்கொள்ள எப்போதும் ஆயத்தமாக உள்ளனர்.

நீங்கள் பணத்தை சம்பாதிக்கலாம். ஒருநாள் பணம் கிடைத்துவிடும். அப்போது ‘நீ என்ன பெற்றுவிட்டாய்?’ என்று வாழ்க்கை கேட்கும். ஆனால் நீங்கள் கேட்பதில்லை. இப்போது நீங்கள் உங்களது பணத்தை அரசியலுக்காக செலவிட நினைப்பீர்கள். நீங்கள் பிரதமர் அல்லது குடியரசுத் தலைவராக ஆக விரும்புகிறீர்கள். அதன் பின் எல்லாம் வேறொன்றும் வேண்டாம் என்று நினைக்கிறீர்கள். ஒருநாள் நீங்கள் பிரதமராக ஆகிவிடுகிறீர்கள். இப்போது, ‘நீ என்ன பெற்றுவிட்டாய்?’ என்று வாழ்க்கை மீண்டும் கேட்கிறது. நீங்கள் அதை கேட்பதில்லை. நீங்கள் வேறு எதையாவது யோசிக்க ஆரம்பிக்கிறீர்கள். வேறு ஏதாவது வேண்டும். வாழ்க்கை பரந்தத ஒன்று. அதனால்தான் பல வாழ்க்கை வீணடிக்கப்படுகிறது.

நாம் இயற்கை அல்லாத பணம், கௌரவம், அதிகாரம் என்று பல நகர்வுகளால் திசை திருப்பப்படுகிறோம். குயில் பாடுவதை கேட்பதால் பணம் கிடைக்கப் போவதில்லை. குயில் பாடுவதை கேட்பதால் உங்களுக்கு அதிகாரம், கௌரவம் கிடைக்கப் போவதில்லை. பட்டாம்பூச்சியை பார்ப்பது உங்களுக்கு பொருளாதார, அரசியல், சமூக ரீதியாக உதவப் போவதில்லை. இந்த விஷயங்கள் உங்களுக்கு பணம் அளிப்பதில்லை, ஆனால் இந்த விஷயங்கள் உங்களை சந்தோஷமாக்கும்.

எல்லாரும் அர்த்தமுள்ள விஷயங்களை தள்ளிப் போட்டுக்கொண்டே போகின்றனர். நாளை அவை சிரிக்கும், இன்னும், பணம் சேர்க்க வேண்டும்... நிறைய பணம், அதிக கருவிகள். நாளை அவர்கள் அன்பு செலுத்துவார்கள். இன்று நேரமில்லை. ஆனால் நாளை என்பது ஒருபோதும் வருவதில்லை. ஒருநாள் அவர்கள் அனைத்துவிதமான கருவிகளை வைத்திருப்பர். நிறைய பணமும் வைத்திருப்பர். அவர்கள் ஏனியின் கடைசிப் படிக்கு வந்துவிட்டனர். குளத்தில் குதிப்பதை தவிர வேறு வழியில்லை.

நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். நீங்கள் உலகிலேயே பெரிய பணக்காரனாகலாம். நீங்கள் (அமெரிக்க தொழிலதிபரும் வள்ளலலுமான) ஆண்ட்ரூ கார்னீஜி ஆகலாம். ஆனால் இறுதியில் நீங்கள் உலகிலேயே பெரும் பணக்காரராகும்போது, வாழ்க்கை முழுவதும் வீணாகி விட்டதே என்று நீங்கள் நினைக்க ஆரம்பிக்கிறீர்கள். பணம் இருக்கிறது. ஆனால் அதன் உள்ளே உட்பொருள் எதுவும் இல்லை. வாழ்க்கை நீர்த்துப் போய்விட்டது.

http://www.messagefrommasters.com/Spiritual_Quotes/Osho/osho_money_quotes1.htm

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...