Wednesday, August 17, 2011

தியேட்டரில் முல்லா நஸ்ருதீன்


தியேட்டரில் முல்லா நஸ்ருதீன்

ஒருநாள் முல்லா நஸ்ருதீனின் மனைவி அவரை வலுக்கட்டாயமாக சினிமாவுக்கு அழைத்துச் சென்றார். படத்தில் வந்த கதாநாயகன், கதாநாயகியை அன்போடு அரவணைத்து முத்தம் கொடுத்தார். காட்சி அருமையாக இருந்தது. இதைக்கண்ட நஸ்ருதீனின் மனைவி, “பார்த்தீர்களா, நீங்கள் எப்போதாவது என்னிடம் இப்படி நடந்திருக்கிறீர்களா?“ என்றார்

உடனே, “முல்லா, உனக்கு ஒண்ணும் தெரியாது, அவர் சம்பளம் வாங்கிக்கிட்டு நடிக்கிறார். எனக்கென்ன சம்பளமா கிடைக்குது?“

மனைவி அவரை விடுவதாக இல்லை. “சம்பளம் கிடைக்கிறதோ இல்லையோ தெரியாது. ஆனால் உங்களுக்கு ஒண்ணு தெரியுமா, அவங்க நிஜ வாழ்க்கையிலும் கணவன் மனைவிதான்“ என்றார்.

“அப்படியா விஷயம், அவங்க நிஜ வாழ்க்கையிலும் கணவன் மனைவிதானா? அப்படினா கண்டிப்பா அவருக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கணும்“ என்றார் முல்லா நஸ்ருதீன்.

(ஓஷோவின் நகைச்சுவைகளிலிருந்து)





 



No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...