Friday, August 19, 2011

எடைக் குறைப்பு வைத்தியம்


எடைக் குறைப்பு வைத்தியம்


பேடி, பீர் குடித்து குடித்து மிகவும் பருமனாகிக் கொண்டிருந்தார். ஒருநாள் அவரது மனைவி மவுரீன், “நீங்க ஏன் ஹெல்த் க்ளினிக்-க்கு போகக் கூடாது? அங்கே போன உங்க உடம்பு குறையும்னு எல்லாரும் சொல்றாங்க”, என்று சொன்னார். 

பேடி அந்த க்ளினிக்-க்கு போனார். ஐந்து கிலோ எடையை குறைக்கும் சிகிச்சைக்காக 10 டாலர் கொடுக்கிறார்.

அவர் ஒரு சிறிய அறைக்குள் அனுப்பப்படுகிறார். அந்த அறைக்குள் ஒரு அழகிய பெண் இருக்கிறார். “என்னை பிடிச்சுட்டா நீங்க என் கூட ஜாலியா இருக்கலாம்“ என்று அந்தப் பெண் சொல்கிறார்.

அரைமணி நேரம் கழித்து பேடி ஐந்து கிலோ எடைக் குறைந்து முகமெல்லாம் புன்னகையாக வெளியே வருகிறார்.

கணவனின் எடைக் குறைந்ததை கண்டு மகிழ்ச்சியுற்ற மவுரீன், அடுத்தநாள் ஐம்பது டாலர் கொடுத்து 25 கிலோவை குறைக்கும் சிகிச்சைக்கு அனுப்புகிறார். பேடி பணம் கட்டியதும் அவருக்கு மற்றொரு அறை காட்டப்பட்டது. அவர் உள்ளே நுழைந்ததுமே கதவு தானகவே அறைந்து சாத்திக் கொள்கிறது.

அவர் ஆர்வமாக சுற்றுமுற்றும் பார்க்கிறார். ஒரு மூலையில் பெரிய கொரில்லா குரங்கு நிற்கிறது. அதைக் கண்டதும் பேடி குழப்பமடைகிறார். ஆனால் கொரில்லா அவரை நோக்கி வர ஆரம்பிக்கிறது. அந்த கொரில்லாவின் கழுத்தில் ஒரு அட்டை தொங்குகிறது.

அதில் “உன்னை நான் பிடித்தால் உன்னோடு ஜாலியாக இருப்பேன்“ என்று எழுதியிருந்தது.   

(ஓஷோவின் நகைச்சுவைகளிலிருந்து)

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...