
அல்கய்தாவுக்கும் எல்டிடிஈக்கும் என்ன தொடர்பு?
நடராஜா பாலசுப்ரமணியம்
உண்மையில் ஒரு தொடர்பும் இல்லை. ஆனால் பி. ராமன் என்று அழைக்கப்படும் பஹுகுடும்பி ராமனின் பிசாசுத் தனமான கற்பனையான இது மிக மோசமான மனித இனப்படுகொலையில் முடிந்தது. எந்தவொரு மனிதனுக்கும் ஏற்படக்கூடிய இது அதுவும் இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் ஏற்பட்டது. இது ஐக்கிய நாடுகள் சபையையும் உலக ஒழுக்கங்களையும் கேலி செய்வதாக அமைந்தது. மனித இனத்திற்கு நிரந்தரமான சேதத்தை ஏற்படுத்திய இது, மூத்தோரும், கற்றோரும் மற்றும் ‘நோபல் பரிசு பெற்றோரும்’ கூட, சட்ட ஒழுங்கு என்று முணுமுணுத்துக்கொண்டு வெட்கி ஒதுக்கிய வல்லரசுகளின் கதைகளையும் நயவஞ்சக யுக்திகளையும் நாம் பரிசீலனை செய்வோம்.
2004ம் ஆண்டு நியூ டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இந்தியாவின் இலங்கை கொள்கையில் தனிநபர் விருப்ப அடிப்படையிலான மாற்றம் ஏற்பட்டது. அப்போது இந்திய அமைதிப்படைக்கு ஏற்பட்ட வரலாற்று மூக்கறுப்புக்கு எல்டிடிஈயின் தலைமைக்கு பாடம் புகட்டும் ஆசை தலைதூக்கியது. இதனை பாக் நீர்ச்சந்தியின் இருபுறமும் உள்ள தமிழ் மக்களின் தலைவர்கள் மீதான அவமரியாதை மற்றும் தவறான கருத்தும் வலுப்படுத்துவதாக அமைந்தது. இந்தியாவின் தலையிடாக் கொள்கை என்பது எல்டிடிஈக்கு கிடைக்கும் வெற்றிக்கு மேல் வெற்றி மற்றும் தமிழீழத்திற்கு கிடைக்கும் புகழை சஹித்துக்கொள்ள முடியாமல் தலைவலியின் வேதனையோடு ஒருவன் தூங்குவது போல நடித்து வந்ததாகும். இந்தியா தூக்கத்திலிருந்து எழ (வாய்ப்புக்காக) சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தது.
இது இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷேவின் போர்க்குற்றத் தாக்குதல் கொள்கைக்கு மிகச்சரியாக துணைபோனது. எல்டிடிஈயின் ராணுவ பலத்தையும் மலரும் ஈழத்தையும் ஏற்றுக்கொண்ட, சந்தப்பவாத ஏகாதிபத்திய நாடுகளான யூகே, யுஎஸ்ஏ, இந்தியாவிற்கு ஒத்திசைப்பதாக பல்டி அடித்தன. என்ன ஒரு வெட்கக் கேடு. என்ன ஒரு கொடுமை.
2006ம் ஆண்டு மே 11ம் தேதி ஐஐஎஸ்எஸ்-ன் (இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்ட்ரேடஜிக் ஸ்டடீஸ்) விசேஷ வட்டமேஜை கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய இந்தியாவின் புலனாய்வுத்துறையின் (வெளியுறவு) தீவிரவாத எதிர்ப்பு பிரிவின் முன்னாள் தலைவரான திரு. பி.ராமன் ’தெற்காசியா மற்றும் அல் கய்தா – எழும் போக்கு’ என்ற தலைப்பில் பேசினார். அவர் ”எல்டிடிஈயின் வெற்றிகரமான கடற்படை தாக்குதல்கள் தனக்கு 2000ம் ஆண்டு அக்டோபரில் அமெரிக்க கப்பற்படை கப்பலான யுஎஸ்எஸ் கோல் ஆஃப் ஏடன் மீது அல் கய்தா நடத்திய தாக்குலை நினைவுபடுத்தியது” என்று துடுக்காக பேசினார். மேலும், ”அல் கய்தாவின் தாக்குதல்கள் வெறுமனே எல்டிடிஈயிடமிருந்த காப்பி அடிப்பதே ஒழிய எல்டிடிஈ அல் கய்தாவிடமிருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை” என்று பேசினார்.
இதற்கு முன்பு 2003ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி ஹாங்ஹாங்கில் புகழ்பெற்ற, முன்னாள் ஈயூ வெளியுறவுத்துளை கமிஷனர் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகத்தின் சான்சலருமான திரு. கிரிஸ் பேட்டன் நமது தேசியத் தலைவர் பிரபாகரனை சந்தித்தபோதும் இந்த பாதகன் இதே போன்ற தந்திரத்தைத்தான் பின்பற்றினான். (பி. ராமனின் பேப்பர் எண் 845, www.southasiaanalysis.org). ஒரு ’இந்திய போலீஸ்காரராக’ தனது வாழ்க்கையை ஆரம்பித்த ஒருவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
பிரபாகரன் அல் கய்தாவைப் போலவே பல பயங்கரமான தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்தியதாகவும், எல்டிடிஈயை பார்த்தே மேற்கு ஆசிய தீவிரவாதிகளும் நடந்துகொள்கின்றனர். 1999ம் ஆண்டுதான் ஒசாமா பின் லேடன் மனித வெடிகுண்டு தாக்குதலை ஆரம்பித்தான். ஆனால் நீண்ட காலத்திற்கு முன்பே எல்டிடிஈ மனித வெடிகுண்டு தாக்குதலை ஆரம்பித்து விட்டது என்று எழுதினான். அவனுடைய துஷ்பிரச்சார கட்டுரையின் தலைப்பு “கிரிஸ் பேட்டன்-எல்டிடிஈயின் சுயாட்சியை நியாயப்படுத்துதல்“. ஆனால் அந்தநேரம், இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை.
அல் கய்தாவின் தோற்றம்
1980ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் ஆஃப்கானிஸ்தானில் சோவியத் யூனியனின் படையெடுப்புக்கு எதிராக போராட அராபியர்களை ஒன்று சேர்க்க ஒசாமா பின் லேடனால் அல் கய்தா ஆரம்பிக்கப்பட்டது. இது யுஎஸ்ஏ மற்றும் மற்ற ஏகாதியபத்திய சக்திகளின் ஆதரவில் ஆரம்பிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அல் கய்தாவின் ஒரே கொள்கை முஸ்லீம்களை ஒன்றுசேர்த்து காலிப்களின் விதிகளை பின்பற்றும் ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதாகும். அவர்களது அரசாங்கத்தின் முதல் அமைப்பு இஸ்லாமை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டது. மேலும் முஸ்லீம் உம்-மா (தேசம்) அரசியல் ஒற்றுமைக்கு பிரதிநிதியாக இருந்தது. கொள்கை அளவில், இது அரசியலமைப்பு அடிப்படையிலான குடியரசு, அதாவது அரசின் தலைமை (காலிப்). மற்ற அதிகாரிகள் குடிமக்கள் மீது அதிகாரம் செலுத்தும் இஸ்லாமிய சட்டப்படி மக்களை ஆட்சி செய்வர்.
எல்டிடிஈயின் நிரூபிக்கப்பட்ட ராணுவ பலம்
எல்டிடிஈ 2000ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி யானையிறவை பிடித்தது. அவர்கள் 1000க்கும் மேற்பட்ட இலங்கை ராணுவனத்தினரை கொன்று யானையிறவு ராணுவ முகாமை வெற்றி கொண்டனர். எஞ்சிய ராணுவத்தினர் சிதறி தப்பி ஓடிவிட்டனர். இந்த போரை பற்றி இங்கிலாந்து பத்திரிகைகள் விரிவாக செய்தி வெளியிட்டன. லூக் ஹார்டிங் தனது செய்தியில், “யாழ்ப்பானம் எப்போது வேண்டுமானாலும் வீழ்ந்து விடலாம் என்று பெரும்பாலான அரசியல் அறிஞர்கள் கருதுகின்றனர்” என்று எழுதினார். எல்டிடி ஒருபோதும் அனைத்து ராணுவத்தினரையும் கொல்ல விரும்ப வில்லை அவர்கள் தங்களது தாய்நாடான தமிழீழத்திலிருந்து ராணுவத்தினரை துரத்தி அடிக்கவே விரும்பினர்.
யானையிறவு படைக்களத்தை கைப்பற்றிய ஒரு ஆண்டுக்குள்ளாகவே, எல்டிடி இலங்கை ராணுவத்தை அக்னி கிலா (தீக்கம்பி) தாக்குதலில் விரட்டியடித்தது. எல்டிடிஈயின் இந்த ராணுவ பலத்திலான வெற்றிகள் தமிழர்களின் அரசியல் உரிமைகளை பெறுவதற்கான திறமையாகவே கருதப்பட்டன.
தொடர்ச்சியான வெற்றி மற்றும் அதற்கு அப்பால்...
2001ம் ஆண்டு ஜீலை 24ம் தேதி சிறப்பாக திட்டமிடப்பட்டு சுருக்கமாக நிறைவேற்றப்பட்ட இலங்கை காட்டுநாயக்கே சர்வதேச விமான நிலையத் தாக்குதல் 450 மில்லியன் டாலர்கள் இழப்பை ஏற்படுத்தியதாக மதிப்பிடப்பட்டது. இதனால் இலங்கை அரசு புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. உண்மையில் பிரபாகரனின் புத்திசாலித்தனமான தலைமையில் எல்டிடிஈ தமிழ் ஈழ விடுதலையை சாதித்து காட்டியது. அதோடு மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர்களான எல்டிடிஈ-யால் என்ன செய்ய இயலும் என்பதை உலகிற்கு காட்டியது.
தவறுகளின் துயரம்
இங்கிலாந்தின் அனைத்து போர்களுக்குமே இந்தியாதான் வீரர்களை அளிக்கும் முக்கிய நாடாக இருந்து வந்தது என்ற காரணத்தால் சாதாரணமாகவே ஒருவரால் யூகேவின் தவறை புரிந்துகொள்ள முடியும். ஆனால் மிகவும் வெளிப்படையான அமெரிக்காவிற்கு என்ன ஆச்சு? அமெரிக்க நீதித்துறையின் கௌரமிக்க அமைப்பான எஃப்பிஐ(ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்) 2008ம் ஆண்டு ஜனவரியில் எல்டிடிஈ அல் கய்தாவை விட மோசமான அமைப்பு என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதுவே இன அழிப்புக்கு கிடைத்த சிக்னலாக அமைந்தது. ஏன்?
தற்போது இலங்கையில் நடந்து வருவது வல்லரசுகளின் அமைதியான ஆதரவுடன் நடைபெறும் இன அழிப்பு ஆகும். தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இந்த இன அழிப்பு நடத்தப்படுகிறது என்பதை அறிந்துகொண்டே வல்லரசுகள் இந்த ஆதரவை அளித்து வருகின்றன. இது அந்நாட்டின் மக்களுக்கு எந்த நலனையும் அளிக்காது.
சர்வதேச சமுதாயம் இன அழிப்புக்கு அளிக்கும் ஆதரவை நிறுத்திவிட்டு தமிழ் ஈழத்தை நனவாக்க வேண்டிய தருணம் இதுவே.
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழீழம் ஒன்று தெருக்கடை தேங்காய் கிடையாது.
No comments:
Post a Comment