
ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் சே குவேராவின் சீடரான திரு ரான் ரைடெனோர், ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அவர் இலங்கை அரசாங்கத்தால் நயவஞ்சகமாக போருக்கு உதவச் செய்த அல்பா கூட்டணி நாடுகளான க்யூபா, வெனிசுவேலா பொலிவியா, பிரேஸில் நாடுகள் தங்களது நீதிநெறி தவறாமல் இந்த இனப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஸ்பானிஷ் மொழிபேசும் இந்நாட்டு மக்களிடையே பெரும் தாக்கத்தை பெற்றுள்ள அவரது கட்டுரையை தமிழில் வழங்குகிறேன். இந்த கட்டுரை விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
http://pflt.org/july-26-cuba%E2%80%99s-revolution-morality-and-solidarity
http://www.counterpunch.org/
ஜூலை 26- க்யூபாவின் புரட்சி, தார்மீக நெறியும் உறுதியும்
ரான் ரைடெனோர்
மேற்கோள், “இந்த ஜூலை 26ம் நாள் கொண்டாட்டத்தின்போது, தமிழ் மக்களுக்கு சரியான ஒன்றை செய்வதன் மூலம் க்யூபா அரசாங்கத்திற்கும், அல்பா கூட்டணி நாடுகளுக்கும் (க்யூபா, வெனிசுவேலா பொலிவியா, பிரேஸில்) ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் சே குவேராவால் தெரிவிக்கப்பட்ட தார்மீக நெறிமுறைகளுக்கு திரும்புமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறோன். இலங்கை அரசாங்கம் செய்த போர்க்குற்றங்கள் பற்றி நடுநிலையான சர்வதேச விசாரணை நடத்தவும் மற்றும் இந்த மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை முடிவுக்கு கொண்டுவரவும் நீங்கள் உங்களது நெறி முறைகள், உங்களது புரட்சி வரலாற்றை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.”
ஐம்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக, 1953-ம் ஆண்டு ஜூலை 26ம் தேதியன்று சான்டியாகோ டி க்யூபா அருகேயுள்ள மோன்காடா படைக்களம் மீது வெறும் 160 போராளிகள் தாக்குதல் நடத்தினர். 1000 வீரர்களை கொண்ட அந்த கோட்டையை அவர்கள் வீழ்த்திவிடும் சாத்தியம் இருந்தது. அவ்வாறு வீழ்த்தியிருந்தால் சர்வாதிகாரி ஃபுல்ஜென்சியோ படிஸ்டாவின் ஆட்சியை குறுகிய காலத்திற்குள்ளாகவே வீழ்த்தியிருக்கும் ஒரு புரட்சி ஆரம்பித்திருக்கும். ஆனால் அது முடியாமல் போனது.
அதற்கான முக்கிய காரணம் அவர்களது கனரக ஆயுதங்களை கொண்டு வரவேண்டிய வாகனம் வராமல் போனதே. இருந்தாலும் அவர்கள் தங்களுக்கு ஏற்பட்டதை விட மூன்று மடங்கு சேதத்தை எதிரிகளுக்கு ஏற்படுத்தினர். போராளிகளில் பாதிப்பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் சித்ரவதை செய்யும்போது அல்லது செய்த பின்னர் கொல்லப்பட்டனர்.
வெளி உலகத்துடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் 76 நாட்கள் தனிமை சிறையில் வைக்கப்பட்ட பின்னர், அப்போது 26 வயதான ஃபிடல் காஸ்ட்ரோ 100 போர் வீரர்கள் நிரம்பியுள்ள நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவர், “அனைவருக்கும் உணவு, கல்வி மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு அளிக்கப்பட வேண்டும், விவசாயிகளுக்கு நிலம் அளிக்கப்பட வேண்டும், அனைவருக்கும் உரிமை வேண்டும்” என்ற காரணத்திற்காக, லஞ்ச ஊழல் மிக்க சர்வாதிகாரியின் ஆட்சியை கவிழ்க்கத் தேவையான ஒரு எழுச்சிமிக்க தற்காப்பு உரையை நிகழ்த்தினார்.
ஐந்து மணிநேரம் அவர் ஆற்றிய உரையில், ஃபிடல் காஸ்ட்ரோ, “பேராசை பிடித்த கருத்துக்கள் மற்றும் கொள்கைகள் கொண்ட சர்வாதிகாரத்திற்கு எதிராக புரட்சி செய்யும் உரிமையை மாண்புமிகு நிதிபதிகள் பண்டைக் காலம் முதல் இன்றுவரை ஏற்றுக் கொண்டுள்ளனர்” என்று பேசினார்.
அவர் தன்னை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுக்காமல், சிறையில் உள்ள தனது சகோதர – சகோதரிகளுடன் இருக்க அனுமதிக்குமாறு வேண்டினார்.
“நீங்கள் என்னை கண்டியுங்கள், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை, வரலாறு எனக்கு நீதி வழங்கும்”
புரட்சி செய்ய நெறிமுறைகளும் தார்மீக பொறுப்புகளும் அவசியம் என்று ஃபிடல் காஸ்ட்ரோ கருதுகிறார். 2006ம் ஆண்டு இக்னாசியோ ராமோனெட் பேட்டி கண்டு வெளியிட்ட எனது வாழ்க்கை புத்தகத்தில், “ஃபிடல் காஸ்ட்ரோ, பல்வேறு இடங்களில் இந்த கொள்கைகளைப் பற்றி பேசுகிறார். தேசிய விடுதலை வீரரான ஜோஸ் மார்ட்டியிடமிருந்து தான் கற்றுக்கொண்ட -விசேஷ நெறிமுறைகளை” பற்றி அவர் உறுதியாக பேசுகிறார்.
க்யூபாவுக்கு விடுதலை பெற்று அரைநூற்றாண்டு ஆன நிலையில், 1956 டிசம்பர் 2 முதல் 1959 ஜனவரி 1 வரை எட்டு ஆண்டுகள் அங்கு வேலை செய்து வாழ்ந்த கொரில்லா போராட்ட காலத்தில், புரட்சியாளர்கள் தார்மீக பொறுப்புடன் நடந்துகொண்டனர் என்பதை கண்டேன். இந்த வகையில் க்யூபாவின் ஆயுதப் புரட்சி போராட்டம் தனிப்பட்ட ஒன்றாக இருந்தது. ராமோனெட்டிடம், “நாங்கள் எந்த கைதிகளையும் கொல்லவில்லை”, “அவர்களை அடித்தது கூட இல்லை” ஃபிடல் கூறினார். அதுதான், “எங்களது கொள்கை”, “அனைத்து புரட்சி சிந்தனைகளுமே ஓரளவு நெறிமுறைகளுடன்தான் ஆரம்பிக்கின்றன.”
அதனால்தான் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான மக்கள் சே குவேரா - அவரது தார்மீக பொறுப்பு, அவர் ஒரு புரட்சி தலைவர் என்ற முறையில் அவர் மீது அன்பு கொண்டுள்ளனர், மரியாதை வைத்துள்ளனர். இது “பொதுவுடமை மற்றும் மனிதன்” என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.
“கேலிக்குரியதாக பார்க்கப்படும் அபாயம் இருந்தபோதிலும், மாபெரும் அன்புணர்வுடன்தான் புரட்சி வழிநடத்தப்படுகிறது... நமது புரட்சியாளர்கள் கண்டிப்பாக மக்கள் மீது தாங்கள் கொண்டுள்ள அன்பை பெருக்கிக் கொள்ள வேண்டும். இதுவே மிகவும் அச்சத்தை ஏற்படுத்துவதற்கான காரணம், அதனை பிரிக்க முடியாத ஒன்றாக்கவும். பொதுமக்களிடமிருந்து பிரிந்து விடாமல் இருக்க, தீவிரமான பழமைவாதம் மற்றும் ஏட்டுக் கொள்கைகளுக்கு ஆளாகாமல் இருக்க ஒவ்வொருவரும் மனிதாபிமானம் மற்றும் நீதி மற்றும் உண்மை மீது உறுதியான நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டும். இந்த வாழும் மனிதாபிமானம் உண்மையான நடவடிக்கையாக, ஒரு நடமாடும் சக்தியாக, சேவைசெய்யும் செயலுக்கு எடுத்துக்காட்டாக மாறவேண்டும் என்பதற்காக நாம் தினமும் போராட வேண்டும்.”
நான் ஃபிடல் மற்றும் சே கூறுவதை ஒப்புக்கொள்கிறேன். வீட்டிலும் அடக்குமுறை நடக்கும் எல்லா இடங்களிலும் புரட்சியாளர்கள் லட்சியத்தில் நெறிமுறை தவறாதவர்களாக, நடைமுறையில் தார்மீகம் தவறாதவர்களாக இருக்க வேண்டும். காஸ்ட்ரோவின் க்யூபா, க்யூபாவின் ஃபிடல் புத்கத்திற்காக லீ லாக்வுடிடம் ஃபிடல் கீழ்க்கண்டவாறு கூறினார்-
“உலகத்தில் எந்த மூலையிலும் சுரண்டப்படுபவர்கள் நமது தேசாபிமானிகளே, சுரண்டுபவர்கள் நமது எதிரிகள்... உண்மையில் உலகமே நமது நாடு, உலகம் முழுவதும் உள்ள புரட்சியாளர்கள் நமது சகோதரர்கள்.”
நான் நெறிமுறைகளை கீழ்க்கண்டவாறு வரையறுக்கிறேன். சஹிப்புத்தன்மையின் வரம்புகளை கடந்து தாக்கப்படாமல் அல்லது அடக்குமுறை செய்யப்படாமல் நமது உணர்வுமிக்க கைகளால் உயிர் தவறாக நடத்தப்படக் கூடாது அல்லது அழிக்கப்படக் கூடாது. தார்மீக பொறுப்புள்ள ஒருவர், அமைப்பு, அரசியல் கட்சி அல்லது அரசாங்கம் தினசரி வாழ்க்கையில் மற்றும் நீதிக்கான போராட்டத்தில் நெறிமுறைகளை மனதில் வைத்து செயல்பட வேண்டும். தார்மீக பொறுப்பு பற்றிய எனது சிந்தனைகள் இவையே-
1. யாரும், எந்த இனமும் அல்லது இனக்குழுவும் மற்றொரு இனத்திற்கு மேலாகவோ அல்லது கீழாகவோ இருக்கக் கூடாது.
2. அடக்குமுறையாளர்கள் மற்றும் அத்துமீறுபவர்களுக்கு எதிரான போராட்டத்தில், போராட்டத்தில் ஈடுபடாத பொதுமக்களை நாம் கொல்லக் கூடாது. அல்லது கட்டாயமாக அவர்களை படையில் சேர்க்கக் கூடாது. அல்லது அவர்களை பணயக் கைதிகளாக பிடிக்கக் கூடாது.
3. நாம் அனைவருக்கும் சமத்துவத்தை அளிக்க போராடுகிறோம்.
4. உழைப்பை சுரண்டி அல்லது எந்தவொரு நபர், குழுவினர், வகுப்பு அல்லது சாதியை அடக்கு முறைக்குள்ளாக்கி லாபம் சம்பாதிப்பதை நாம் ஒழிப்போம். அதற்கு மாறாக, நாம் யாரும் பட்டினியாக இல்லாத, நமது ஆதாரங்கள் மற்றும் உற்பத்தியை சமமாக பங்கிடும் நீதி மற்றும் சமத்துவத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவோம்.
5. நாம் பங்கேற்பது அடிப்படையிலான அரசியல் அமைப்பை உருவாக்க போராடுகிறோம். அதில் உள்ளூர், தேசியம் மற்றும் சர்வதேச கொள்கைகள் பற்றிய முக்கிய விஷயங்களில் முடிவெடுப்பதில் அனைவருக்கும் உரிமை இருக்கும்.
6. நாம் ஒவ்வொருவரிடமும் உள்ள தனிமையை அழிக்க போராடுகிறோம்.
நெறிமுறைகள் மற்றும் இலங்கை தமிழர்கள்
வேறு வாய்ப்பு கிடைக்காத உண்மையான உறுதிகொண்ட செயல்வீரர்கள் அவர்கள் (இலங்கை தமிழர்கள்). நாம் உலகின் எந்த மூலையிலும் நடைபெறும், அடக்குமுறையால் தாக்கப்படும் மக்களுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும். ஆப்கானிஸ்தான், ஈராக், பாலஸ்தீனம் தொடர்பான போர் எதிர்ப்பு செயல்வீரர்களை பொறுத்தவரை அதுவே நமது கடமையாக இருந்தது என்று நான் கருதுகிறேன்... வியட்நாம்-லாவோஸ்-கம்போடியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் நாம் செய்ததை போலவே..
நமக்கு உறுதிமிக்க செயல்வீரர்களாக தோன்றுபவர்களை அரசாங்கங்கள் முற்போக்கு, ஜனநாயக, பொதுவுடமை, புரட்சிக்காரர்களாக பார்க்கின்றன. இலங்கையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரசாங்கங்கள் அடக்குமுறைக்குள்ளாக்கி வரும் தமிழ் மக்களின் உயிர் மற்றும் உரிமைகளுக்காக அழுத்தம் கொடுப்பது நமது கடமை என்று நான் நம்புகிறேன்.
எதிர்க்கும் உரிமைக்காக வாதாடக் கூடிய, அமைதியான முறையில் அடக்குமுறைக்குள்ளாக்கும் அரசாங்கங்களை மாற்ற தவறும்போது ஆயுதம் ஏந்துவதை வலியுறுத்தக் கூடிய உறுதிமிக்க செயல்வீரர் என்ற முறையில் – நான் கட்சி அல்லது காரணத்தை பொருட்படுத்தாமல் அனைத்து தீவிரத்தையும் துறக்கிறேன். நீதி மற்றும் சமத்துவத்தை தழுவும் நமது கொள்கைகளின்படி தார்மீக அடிப்படையில் அவர்கள் தங்களது யுக்திகளை மாற்றிக்கொள்ள வேண்டுகிறேன்.
பெரும்பாலான ஆயுத இயக்கங்கள் கொடுமைகள் செய்கின்றன, நீண்ட போராட்ட காலத்தில் தீவிரவாதத்தில் ஈடுபடுகின்றன என்பதை நான் காண்கிறேன். உதாரணத்திற்கு சிலசமயம் கொலம்பியாவின் எஃப்ஏஆர்சி மற்றும் பாலஸ்தீனத்தின் பிஎஃப்எல்பி-யின் நடவடிக்கைகளை கூறலாம். ஆனால் நான் அவர்களது உரிமைக்கான போராட்டத்திற்கு ஆதரவளிக்கிறேன். அவர்கள் தொடர்ச்சியாக அரசாங்க பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடும் மாபெரும் ராணுவம் மற்றும் பொருளாதார சக்திகளுக்கு எதிராக போராடுகின்றனர். தென்னாப்பிரிக்காவின் விடுதலைக்காக போராடிய ஏஎன்சியும் பயங்கரமான தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது.
ஆயுதத்தை ஏந்திய டஜனுக்கும் அதிகமான தமிழ் குழுக்களில் பெரும்பாலானவை தங்களை மாக்ர்சிஸ்ட்கள் என்று கருதின, பல குழுக்கள் க்யூபாவின் விடுதலைக்காக போராடிய புரட்சித் தலைவன் சே குவேராவை தங்களது முன்மாதிரியாக கொண்டன. ஆனால் அவர்கள் அனைவருமே தங்களது பெரும்பாலான நடவடிக்கைகளில் தீவிரவாதிகளாகி விட்டனர். வன்முறை பற்றி சே குவேரா என்ன கூறுகிறார் என்று கேளுங்கள்.
“எப்போதுமே பின்தங்குபவர்கள் உள்ளனர், ஆனால் நமது இயக்கம் அவர்களை கணக்குத் தீர்ப்பதற்கானதோ, நசுக்குவதோ மற்றும் ஆயுதமேந்திய புரட்சிக்கு அடிபணிய வைப்பதோ அல்ல. ஆனால் அவர்களை முன்னேற்றிச் சென்று அவர்களுக்கு போதிப்பது மற்றும் நம்மை எடுத்துக் காட்டாக கொண்டு நம்மை பின்பற்றச் செய்வது, அல்லது ஃபிடல் சொல்வது போல ‘நெறிமுறைக் கட்டாயம்’ என்று சொல்லாம். ( “உலகத்தில் எங்கோ ஒரு மூலையிலிருந்து” பேச்சிலிருந்து)
இலங்கை தமிழர்களின் ‘கதை’ தமிழர்களுக்கும் உலக மனித சமுதாயத்திற்கும் ஒரு கொடூரமான சோகக் கதை. பெரும்பாலான நாடுகள் நேரடியாக ஈடுபடவில்லை. ஆனாலும் தங்களால் என்ன செய்ய முடியும் என்று தெரியாத காரணத்தால் அவர்களுக்கு எவ்வாறு எதிர்வினை செய்வது என்று தெரியவில்லை. அங்கு ஒரேநேரத்தில் பல கொடுமைகள் நடைபெற்று வருகின்றன. வேண்டுமென்றே முக்கிய முதலாளித்துவ நாடுகளால் மற்றும் உலகின் ‘முதல்நிலை’ அரசாங்கங்கள், முந்தைய ‘இரண்டாம்நிலை’ அரசாங்கங்கள் மற்றும் ‘மூன்றாம் நிலை’ முதலாளித்துவ அரசாங்கங்களால் தொடர்ந்து காட்டுமிராண்டித் தனம் கட்டவிழ்த்து விடப்படுகின்றது. நான் ‘நிரந்தரமான போர்க்காலம்’ என்றழைக்கும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். காட்டுமிராண்டித்தனம் – கண்காணிப்பு – அல்லல் படுதல் ஆகியவையே இந்த உலகின் விதிமுறை.
ஒப்பிடுகையில் குறைந்த அளவு காட்டுமிராண்டித்தனம் உள்ள மற்றும் ஆக்கிரமிப்பு போர்களில் ஈடுபடாத (நான் இங்கே க்யூபா மற்றும் இதர அல்பா நாடுகளான நமது அமெரிக்க மக்கள் கூட்டணி பொலிவேரியன் – நாடுகளைக் குறிப்பிடுகிறேன்) அந்த நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இலங்கை போன்ற போர்க்குற்றவாளி அரசாங்கங்களுடன் உறவுகள் வைத்திருப்பது தேவை என்று கருதுகின்றனர். இது அவர்களை தங்களது நெறிமுறை உறுதிகளை மறந்து அடக்குமுறைக்குள்ளான தமிழர்களை கைவிடச் செய்யும் என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த ஜூலை 26ம் தேதி கொண்டாட்டத்தின்போது, தமிழ் மக்களுக்கு சரியான ஒன்றை செய்வதன் மூலம் க்யூபா அரசாங்கத்திற்கும், அல்பா கூட்டணி நாடுகளுக்கும் (க்யூபா, வெனிசுவேலா பொலிவியா, பிரேஸில்) ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் சே குவேராவால் தெரிவிக்கப்பட்ட நன்னெறி கொள்கைகளுக்கு திரும்புமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறோன். இலங்கை அரசாங்கம் செய்த போர்க்குற்றங்கள் பற்றி நடுநிலையான சர்வதேச விசாரணை நடத்தவும் மற்றும் இந்த மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை முடிவுக்கு கொண்டுவர நீங்கள் உங்களது நெறிகள், உங்களது புரட்சி வரலாற்றை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.
நமது போராட்டங்களில் தார்மீக பொறுப்பு இல்லாவிட்டால், நாம் உலகளாவிய தார்மீக பொறுப்பை இழப்பை நோக்கி செல்கிறோம் என்று கருதுகிறேன். இது ஏற்கனவே முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியம் காரணமாக ஜனநாயகத்தின் அஸ்திவாரங்களை தகர்த்து அழிப்பதன் மூலம் அரங்கேறி வருகிறது. மேலும் உலகம் முழுவதும் பாசிசம் எழுச்சி பெற்று வருகிறது.
No comments:
Post a Comment