Wednesday, August 17, 2011

அரசியலுக்கான அடிப்படைத் தேவை - நேரம்


அரசியலுக்கான அடிப்படைத் தேவை - நேரம்

தோழர்களே, நாம் தினமும் நமது நண்பர்களை சந்தித்துப் பேசுகிறோம். திரைப்படங்களுக்கு செல்கிறோம். இன்னும் பிற தேவையில்லாத அல்லது குறைந்த தேவையுள்ள வேலைகளுக்காக நேரத்தை செலவழிக்கிறோம். இதையே நாம் நமது அரசியலுக்கு பயன்படுத்தினால் போதுமானது. இந்த நேரத்தை நாம் நமக்காக நம்மை சார்ந்திருப்பவர்களுக்காக செலவு செய்தால் போதும். இதுவே அரசியலும் கூட.

இதுவே அரசியலின் அடிப்படைத் தேவை. வேலைக்கு செல்பவர்கள் மாலை நேரங்களில் ஒரு மணிநேரமோ அரைமணிநேரமோ பொது காரியங்களுக்காக செலவழித்தால் போதும். இந்த நேரத்தில் நீங்கள் உங்களது நண்பர்களிடம், உங்கள் தெருவில் உள்ளவர்களுடன் நீங்கள் எப்போதும் பேசுவதைப் போலவே பல விஷயங்களை பேசலாம். இவர்கள் இரண்டுபேர், மூன்றுபேர் அல்லது நான்கு பேராக இருந்தாலும் போதுமானது. இந்த வட்டத்தை சிறிது சிறிதாக பெருக்கலாம். இந்த வட்டமே பொதுமக்களாக மாறுவர்.

பெரும்பாலும் இவ்வாறு பேசும்போது, சிலர் தங்களது மனதில் உள்ளதை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். அவர்களது தயக்கத்தைப் போக்கி கருத்தையும் தாராளமாக சொல்ல அனுமதிக்க வேண்டும். இதற்காக நீங்கள் தினமும் நேரம் ஒதுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாரத்திற்கு நான்கு நாள், மூன்று நாள் ஒதுக்கினால்க் கூட போதுமானது. இந்த உரையாடல்களில் நீங்கள், நலம் விசாரித்தல், பிரச்சனைகளைப் பற்றி விசாரித்தல் போன்றவை இடம் பெறலாம். ஆனால் ஒருவரது தனிப்பட்ட பிரச்சனையில் ஆழமாக செல்லக் கூடாது. அது அவரை நம்மிடமிருந்து துரத்துவதாக அமையும்.  

இது போன்ற உரையாடல்களின்போது நீங்கள் விவாதிக்கும் கருத்து எந்த விஷயத்தைப் பற்றியதாகவும் இருக்கலாம். அதைப்பற்றிய மற்றவர்களின் கருத்தை அறிவது முக்கியமானது. நீங்கள் சொல்லும் கருத்தை எத்தனைபேர் ஆமோதிக்கின்றனர், எதிர்க்கின்றனர், விரும்பவில்லை என்பதை அறிந்துகொள்வது முக்கியமானது. அதிகமானோர் எதிர்க்கும், விரும்பாத விஷயங்களை விட்டுவிடவேண்டும். இதெற்கெல்லாம் உங்களுக்குத் தேவை நேரம்.

எனவே நேரம் இல்லாத ஒருவரால் அரசியல் செய்ய முடியாது. அரசியல் செய்ய அத்தியாவசியத் தேவை நேரம். அரசியல் கடிதங்கள் தொடரும்...






 



No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...