18ஆம் நூற்றாண்டில் தவிர்க்க முடியாத வரலாறாக பொறிக்கப்பட்டதே மைசூர்
யுத்தம் 1,2,3 ஆகும்.
மைசூர் சுல்தான்கள்,பிரஞ்சு படைகள், தென்னக பாளையக்காரர்கள் ஒரு அணியினராகவும்.
ஆற்காட் நவாப், தொண்டைமான் அரசர், ஆங்கிலேயப் படைகள் ஒரு அணியாகவும்
நின்று மோதிக் கொண்டனர்.
இதில் இரண்டாம் மைசூர் போரில், கிபி1781ல் மைசூர் அரசர் ஹைதர் அலியின்
கூட்டுப்படைகள் மைசூரில் இருந்து பெங்களூர், சித்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், திண்டுக்கல்
வரை கைப்பற்றியது. பிறகு தஞ்சை, மேலூர், திருச்சி மண்டலங்களை கைப்பற்ற முன்னேறியது.
அதில் தஞ்சை மராட்டியர்களின் இரு தரப்பட்ட நிலைப்பாட்டால் பட்டுக்கோட்டை,
அறந்தாங்கி, கீழாநிலைக்கோட்டை போன்ற பகுதிகளை மைசூர் அரசர் ஹைதர் அலியின் படைகளால்
கைப்பற்றப்பட்டது. தஞ்சையின் இக்கட்டான இச்சூழலில் தஞ்சை மராட்டியர்கள் தஞ்சையை விட்டு
வெளியேறி தலைமறைவாகின்றனர்.
பிறகு புதுக்கோட்டைக்கு முன்னேறிய ஹைதர் அலியின் படையை, புதுக்கோட்டை
அரசர் இராய ரகுநாத தொண்டைமான் நேரடியாக போரிட்டு வீழ்த்தி, ஹைதர் அலியின் படைகளை திண்டுக்கல்லுக்கு
விரட்டுகிறார்.
தஞ்சையை மீட்க புதுக்கோட்டை அரசர் தொண்டைமானின் உதவி இல்லாமல் மீட்க
முடியாது என்பதனை உணர்ந்த ஆற்காட் நவாப்பும், ஆங்கிலேய அரசும், இராய ரகு நாத தொண்டைமானிடம்
உதவி கோருகின்றனர்.
இதனை எற்றுக் கொண்ட புதுக்கோட்டை மன்னர் குதிரைப்படை,கலாட்படையுடன்
கூடிய பெரும் படைப்பற்றை கள்ளர் தளபதிகளான இராமசாமி சேர்வைக்காரர் மற்றும் சுப்ரமணிய
முதலியார் தலைமையில் அனுப்புகிறார்.
ஹைதர், ஷாவின் பெரும் பிரஞ்சு கூட்டுப்படைகளை மிகவும் குறைந்த மணி நேரத்தில்
வீரமிக்க இவ்விரண்டு தளபதிகளால் அறந்தாங்கி, கீழா நிலைக்கோட்டை, பட்டுக்கோட்டையில்
முற்றுகையிட்டு ஹைதர் படைகளை வீழ்த்தி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுகிறார்கள்.
அதன் பின்பு ஒப்பந்த அடிப்படையில் பட்டுக்கோட்டையை தஞ்சை மராட்டியரிடமும்,
அறந்தாங்கியை அறந்தாங்கி தொண்டைமான்களிடமும் ஒப்படைக்கின்றனர்.
ஆனால் பாரம்பரியமிக்க கீழாநிலைக்கோட்டையை இராய ரகுநாத தொண்டைமான் புதுக்கோட்டை
நாட்டில் இனைத்துக் கொண்டார்.
அவருக்கு பின்னால் வந்த 6 தொண்டைமான் அரசர்களும் இக்கோட்டையை முறையாக
பராமரித்து வந்துள்ளனர்.
சோழ, பாண்டியர் காலம் தொட்டு இருக்கும் இப்போர் பாசறை, இன்று சிதலமடைந்திருக்க்கிறது.
இக்கோட்டையில் இன்றும் புதுக்கோட்டை தொண்டைமான்கள் வீரம் சொல்லும் விதமாக கிபி1920ல்
இராஜா ஸ்ரீமார்த்தாண்ட பைரவ தொண்டைமானால் வைக்கப்பட்ட பீரங்கி இன்றும் உள்ளது.
மேலும் புதுக்கோட்டை அரசர்களால் உருவாக்க்பட்ட நெற்களஞ்சியமும் இன்றும்
உள்ளது. கிபி1989ல் சுதந்திர இந்தியாவில் இக்கோட்டை மரமத்து என்கிற பெயரில் சிதைவை
ஏற்படுத்தியுள்ளனர்.
சுமார் 43.61 ஏக்கர் பரப்பளவு உள்ள இக்கோட்டையின் நுழைவுவாயிலில் ஆஞ்சனேயர்
கோவில் உள்ளது. அதனை தொடர்ந்து உள்ளே சென்றால் இக்கோட்டையின் முதன்மை தெய்வமாகவும்,
பாண்டிய மன்னரின் மகளாக கருதப்படும் ஸ்ரீஅரியநாயகி அம்மன் ஆங்கார சொருபமாக காட்சியளிக்கிறார்.
அதனை தொடர்ந்து அம்மன் குளமும்,விஷ்ணு கோவிலும் உள்ளது. கோட்டையின் தெற்கு பகுதியில்
கோட்டை காவல் தெய்வமாக பொற்பனைக்கோட்டை முனி உக்கிரமாக காட்சியளிக்கிறார்.
கோட்டையின் நுழைவுவாயிலுக்கு முன்பு வல்லம்பர் சமுதாயத்தை சேர்ந்த செல்லச்சாமி
சாமியாடி அவர்களின் ஜீவசமாதி இன்று கோவிலாக அனைவராலும் வணங்கப்படுகிறது. இப்பகுதி வாழ்
மக்கள்கள், இக்கோட்டையை பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும்,சுற்றுலா தளமாகவும் அறிவிக்கக்
அரசுக்கு கோரிக்கை அளித்து வருகிறார்கள்.
குறிப்பு:-
இப்பகுதி மக்கள் கீழாநிலைக்கோட்டையில் இரகசிய சுரங்க பாதை உள்ளதாகவும்,
அப்பாதை சாக்கோட்டைக்கு செல்லலாம் என்கிறார்கள். இதனை நான் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளேன்.
நன்றி
The important moments in and around pudukkottai
History of madras army by Wilson
Copies and extract of letters of pudukkottai Thondaiman
மற்றும் இக்கட்டுரையை எழுத ஆர்வம் தூண்டிய நாடுமதிச்சான் வெங்களப்பன் அம்பலம்
The important moments in and around pudukkottai
History of madras army by Wilson
Copies and extract of letters of pudukkottai Thondaiman
மற்றும் இக்கட்டுரையை எழுத ஆர்வம் தூண்டிய நாடுமதிச்சான் வெங்களப்பன் அம்பலம்
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
No comments:
Post a Comment