காரைக்குடி
அரிமளம் செல்லும் வழியில் உள்ள புகழ்மிக்க கோட்டை தான் இந்த கீழா நிலைக்கோட்டை. கீழாநிலை என்பது கிழக்கு நிலை என நிர்ணயிக்கப்படுகிறது. ஏனென்றால் மேல
நிலை, புது நிலை என இதேபோல் உள்ள
ஊர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கில் உள்ளது.
மிகவும்
பழமையான, பாரம்பரியமிக்க கோட்டையான கீழாநிலைக் கோட்டையை கட்டியது சோழரா இல்லை பாண்டியரா என்ற கேள்வி இன்று வரை தொடர்கிறது. ஏனென்றால் கல்வெட்டுகள் ஏதும் கிடைக்காத நிலையில், சிங்கள புனித நூல்களாக மகாவம்சம் மற்றும் குலவம்ச நூல்களில் இக்கோட்டையானது சோழர், பாண்டியர்களின் எல்லை இராணுவமாக செயல்பட்டதை பற்றி விவரிக்கிறது.
10 மற்றும்
12 நூற்றாண்டு ஆரம்பத்தில் சோழர்களின் வலிமையான கிழக்கு கோட்டையாக இருந்த் கிழாநிலைக் கோட்டையானது. 12ஆம் நூற்றாண்டு இடைப்பகுதியில் பாண்டியர்களின் எழுச்சியில் பாண்டியர் வசம் சென்றது.
இந்த
நேரத்தில் தான் வரலாற்று சிறப்பு மிக்க சிங்கள தளபதி மதுரையை நோக்கி பாண்டிய நாட்டையும், வீரபாண்டிக்கு ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள சோழ நாட்டையும் கைப்பற்ற மீமிசல் துறைமுகத்தில் இறங்கி படையெடுத்து வருகிறார்.
அப்போது
சிங்கள தளபதியை எதிர்கொள்ள பல பாண்டிய, சோழ
தளபதிகள் மீமிசல், தொண்டி, ஏம்பல், பொன்பற்றி(பொன்பேத்தி), கப்பலூர், கண்டதேவி, அணில் ஏறாக் கோட்டை, மங்கலம், தொண்டைமான் காடு, செம்பொன்மாரி, லங்கமாரி, ஆறாவயல், இறகுசரி, ஏழுகோட்டை, உஞ்சனை, அஞ்சுகோட்டை, அதளையூர், வல்ல நாடு, கீழாநிலை, மனமேல்குடி என தங்களது தாய்
நாட்டை காக்க போராடினர்.
அத்தாக்குதலில்
கீழாநிலை கோட்டையானது, சிங்களத் தளபதி லங்கப்புரா, செம்பொன்மாரி நாட்டு அரசர் மாளவச் சக்கரவர்த்தியை வீழ்த்திய பின்பு தனது படையை கீழாநிலை கோட்டைக்கு திருப்புகிறார்.
அப்போது
கீழாநிலை கோட்டையை வீழ விடாமல் சோழர் குல காவலன் பெருமாள் பல்லவராயர் லங்கப்புராவை எதிர்த்து தாக்குதல் நடத்துகிறார்.
இத்தாக்குதலால்
லங்கப்புரா சோழ நாட்டிற்கு செல்லாமல் தனது படையை ஶ்ரீவில்லிபுத்தூர் நோக்கி திருப்புகிறார்.
கீழாநிலை
கோட்டையானது பல்லவராயரின் கட்டுப்பாட்டிற்கு சென்றது.
ஶ்ரீவில்லிபுத்தூரில்
சிங்கள படை, பாண்டியர் படையை தோற்கடிக்கிறது. இதனால் குலசேகர பாண்டிய மன்னர் தொண்டைமான் காட்டில் (அறந்தாங்கி தொண்டைமான்) மன்னையர், கள்ளர் வேளைக்காரர், முனையத்திரையர் பாதுகாப்பில் தஞ்சம் அடைகிறார். அதனால் மீண்டும் கீழாநிலை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர் சிங்களப்படைகள்.
அப்போது
சிங்கள படைகளை உள்ளே வரவிடாமல்,எதிர் தாக்குதல் நடத்தி அறந்தாங்கி தொண்டைமானின் படைகள் விரட்டியடித்தனர்.
அப்போது
முதல் 17ஆம் நூற்றாண்டு வரை அறந்தாங்கி தொண்டைமான் கட்டுப்பாட்டில் வருகிறது.
கிபி1674ல்தஞ்சை நாயக்கரின் படையெடுப்பில் அறந்தாங்கி தொண்டைமானிடம் இருந்து நாயக்கர் கட்டுப்பாட்டிற்கு சென்று விட்டது.
வரலாற்று
சிறப்புமிக்க கீழாநிலை கோட்டை முதன் முதலாக அந்நிய மன்னர் கட்டுப்பாட்டிற்கு சென்று விடுகிறது.
அதே
கிபி1674ல் தஞ்சை நாயக்கரின்
வீழ்ச்சிக்கு பின்பு மராட்டியர் தஞ்சையை ஆட்சி அமைக்கும் நேரத்தில், நாயக்கருக்கு வரிகட்ட மறுத்து, கிழவன் சேதுபதி மதுரை நாயக்கருடன் போரில் ஈடுபடுகிறார், இப்போரில் சேதுபதிக்கு தஞ்சை மராட்டியர்கள் உதவியதால் இக்கோட்டை மற்றும் பாம்பாற்றுக்கு தெற்கிற்கு அப்பால் உள்ள பகுதியை சேதுபதி மராட்டியர்களுக்கு கொடுத்துவிடுகிறார்.
ஆக
கீழாநிலை கோட்டை இரண்டாவது முறையாக அந்நியர் கைகளில் சென்று விடுகிறது.
மராட்டியர்
கைகளில் இருந்தாலும், கிபி1700 ஆரம்ப காலகட்டத்திலிருந்து புதுக்கோட்டை தொண்டைமான்கள், மராட்டியருடன் தொடர் மோதல் போக்க கையாண்டு, கீழாநிலைகோட்டையை சர்ச்சைக்குரிய பகுதியாகவே வைத்திருந்தனர்.
கிபி1723ல் இராமநாதபுர வாரிசு
போரில் தண்ட தேவன் சேதுபதி, புதுக்கோட்டை மன்னரிடம் ஆதரவு கேட்க, அதற்கு தொண்டைமான் உதவி செய்கிறார். செய்த உதவிக்காக கிழவன் சேதுபதி போட்ட ஒப்பந்தத்தை தண்ட தேவன் சேதுபதி ரத்து செய்து, கீழாநிலை கோட்டையை இரகுநாத தொண்டைமானுக்கு கொடுக்கப்படுகிறது.
கிபி1726ல் ரகுநாத தொண்டைமான்
கீழாநிலை கோட்டையை பல நிபந்தனைகளுடன் கூடிய
ஒப்பந்த அடிப்படையில் மராட்டியர்களுக்கு விற்று, பட்டுக்கோட்டை தெற்கு பகுதிகளை பெறுகிறார். ஆனால் தஞ்சை மராட்டியர் ஒப்பந்த விதிகளை மீறியதால் கிபி1736ல் மராட்டிய படைகளை
கீழாநிலை
கோட்டையில்
இருந்து விரட்டி, மீண்டும் கீழானிலைக்கோட்டை தொண்டைமான் வசம் செல்கிறது.
பிறகு
மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் தஞ்சை மராட்டியர் வசமே தொண்டமான் கீழாநிலை கோட்டையை கொடுக்கிறார்.
கிபி1749ல் பிரஞ்சு படைகள்
திருச்சி,தஞ்சாவூரை தாக்கிய நேரத்தில், மராட்டிய தளபதி மனோஜி, தொண்டைமான் உதவியை நாட, தொண்டைமானும் தன்னுடைய படைகளை தஞ்சை,திருச்சிக்கு அனுப்பி, பிரஞ்சு படைகளை விரட்டுகிறார்.
இதனால்
மராட்டிய தளபதி மனோஜி கீழா நிலை கோட்டையை மீண்டும் தொண்டைமானுக்கே அளிக்கிறார்.
கிபி1756ல் தளபதி மனோஜி
தொண்டைமானுக்கு கொடுத்த கீழாநிலைக்கோட்டையை மீண்டும் தஞ்சாவூருடன் இனைக்க ஆனையிடுகிறார். கீழாநிலை மீண்டும் தஞ்சாவூருடன் இணைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் பிரஞ்சு படைகளும், கர்நாடக படைகளும் புதுக்கோட்டையை நான்கு முனை தாக்குதலில் ஈடுபட்டதால் தொண்டைமான் இதனை பெரிதுபடுத்தவில்லை.
கிபி1781ல் ஒட்டுமொத்த தஞ்சையை,
மைசூர் படையான ஹைதர் அலியின் படை முற்றுகை இட்டது.
அப்போதைய
மராட்டிய மன்னர் சரபோஜி தஞ்சையை விட்டு தலைமறைவானார். அப்போது கீழாநிலைக் கோட்டை மைசூர் படைகள் கட்டுப்பாட்டிற்கு சென்று விட்டது.
அப்போதைய
புதுக்கோட்டை மன்னரான ராய ரகுநாத தொண்டைமானார், தஞ்சையில் உள்ள மைசூர் படைகளை விரட்டியதோடு, கீழாநிலை கோட்டையையும், அதே ஆண்டான கிபி1781 ஆகஸ்ட்டில் மீண்டும் கைப்பற்றினார்.
ஆனால்
கிபி1813வரை தஞ்சை மராட்டியர் பிரிட்டிஸ் அரசாங்கம் மூலமாக தொடர்ந்து சர்ச்சையை கிளப்பிக் கொண்டே இருந்தது. இறுதியாக ஆண்டுக்கு ஒரு யானை தர வேண்டும் என்கிற
ஒப்பந்தம் போட்டது. ஆனால் கிபி 1948வரை புதுக்கோட்டை தொண்டைமான்கள் அதை ஏற்கவில்லை. அன்னியர்களிடம் இருந்து முழுமையாக ஒரு தமிழ் மன்னர்களின் ஆட்சியில் கீழாநிலைக்கோட்டை 167வருடங்கள் தொடர்ச்சியாக தொண்டைமான்களில் ஆட்சியில் இருந்தது.
பின்பு
இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
வரலாற்று
பாரம்பரியமிக்க இக்கோட்டையை பற்றி எழுதியதில் மிகவும் பெருமையடைகிறேன்.
குறிப்பு:-
இக்கோட்டையை
கட்டியது தஞ்சை நாயக்கர், மராட்டியர், சேதுபதி என பல மேனுவலில்
தவறாக குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இக்கோட்டையை மூவரும் முறையே புதுப்பித்தையே தவறாக கட்டியதாக எழுதியுள்ளனர். ஆனால் கோட்டையோ சோழர், பாண்டியர், பல்லவராயர், அறந்தாங்கி தொண்டைமான்கள், புதுக்கோட்டை தொண்டைமான்களுக்கு உரித்தான ஒன்றாக வருகிறது.
Source:-
Mahavamsam,culavamsam
Trichy manual
Tanjore Marathas
Pudukkottai manual
The important monuments in and around pudukkottai
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை
நாடு
No comments:
Post a Comment