கடந்த சில தினங்களுக்கு முன்பு,கொரோனா தொற்று விடயத்தில் கேரளாவை தூக்கிப்பிடிக்கும் சிலருக்காக நான் பதிவிட்ட வீடியோ ஒன்றுக்கு,,, தரம் தாழ்ந்த பதில் ஒன்று வந்திருக்கிறது.
அதில் என்னுடைய நம்பகத்தன்மையை பலவாறு கேள்விக்குள்ளாக்கி இருப்பதாக, தனக்குத்தானே சொரிந்து சுகம் கண்டிருக்கிறார் ஒரு கேரளத்து தமிழ் மார்க்சிஸ்ட்.கேரளாவில் தமிழ் மார்க்சிஸ்ட்டா என்று கேட்டுவிடாதீர்கள்.ஈழத்தில் தமிழ் சிங்களவனே இருந்தபோது இங்கு தமிழ் மார்க்சிஸ்டுகள் இருப்பதில் வியப்பேதும் இல்லை.
அதை கம்பத்தில் வாழும் ஒரு பெரிய புரட்சியாளர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டு புளங்காகிதம் அடைந்திருக்கிறார்.
நாகரீகமாக பதிவிடவும் தெரியும், நரகல் நடையில் கிழித்துக் கேப்பைய நட்டவும் தெரியும் எனக்கு.
ஆனாலும் ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் கவுரவமான ஒரு இடத்தில் இருப்பதால் பொறுமையோடு சில கேள்விகளை முன் வைக்கிறேன்...
1-கேரளாவில் வாழும் தமிழர்களுக்கு (உண்மையான) குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் வாழும் தமிழர்களுக்கு,,,
இருப்பிடச் சான்று கொடுப்பதற்கு கேட்கப்படும் ஆவணம் எது...?
இருப்பிடச் சான்று கொடுப்பதற்கு கேட்கப்படும் ஆவணம் எது...?
2-கடந்த பத்தாண்டுகளில்
கேரளாவில் அடைக்கப்பட்ட தமிழ் பள்ளிகளின் பட்டியலை நீங்கள் தருகிறீர்களா அல்லது நாங்கள் தரட்டுமா...?
கேரளாவில் அடைக்கப்பட்ட தமிழ் பள்ளிகளின் பட்டியலை நீங்கள் தருகிறீர்களா அல்லது நாங்கள் தரட்டுமா...?
3-கேரளாவில் தமிழ்ப்பள்ளிகள் அதிகமாக இருக்கிறது என்றால்... எதற்காக உண்மையான தமிழ் மாணவர்கள், தேனி மாவட்டத்திற்கும், ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்திற்கும் பள்ளி மற்றும் கல்லூரிக் கல்விக்காக வரவேண்டும்...?
4-எத்தனை பெரிய கொம்பனாக இருந்தாலும், கேரள அரசு பதிவிதழில், இடுக்கி மாவட்டத்து தமிழர்கள், இன்னமும் floating labour என்று அழைக்கப்படுவது உண்மையா பொய்யா...?
5-கடந்த பத்தாண்டுகளில் கேரளத்தின் அரசுப்பணிகளில் சேர்ந்த, தமிழர்கள் எத்தனை பேர், பட்டியலில் இருக்கிறதா, நாங்கள் தரட்டுமா...?
6-இருப்பிடச் சான்று கேரளாவிலும், பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி தமிழகத்திலும் என்றால்,அரசு வேலைவாய்ப்புக்கு என்ன உத்தரவாதம்...?
7-இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் உண்மையான தமிழ் தொழிலாளர்கள், வாரிசு வேலை இல்லை என்றாகிவிட்ட பிறகு, தங்கள் பணிக்காலம் முடிந்ததும், கம்பெனியின் வீட்டில் தொடர்ந்து தங்கி கொள்ளலாமா...?
அப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எத்தனை தமிழ் தொழிலாளர்களை தங்களுடைய பணிக் காலத்திற்குப் பிறகு கம்பெனியின் வீடுகளில் குடி அமர்த்தியிருக்கிறது... பட்டியல் இருக்கிறதா...?
8-DEE---DEW---SIPW போன்ற தொழிற் சங்கங்களின் தலைவர்கள்... அதாவது AITUC---INTUC---CITU போன்ற தொழிற் சங்கங்களின் தலைவர்கள், தேயிலைத் தோட்ட முதலாளிகளை எதிர்த்துப் போராடக் கூடியவர்கள் என்றால்...
இவர்கள் எதற்காக தேயிலைத் தோட்ட முதலாளி கொடுத்த வீட்டில் தங்கி இருக்கிறார்கள்..?
இவர்கள் எதற்காக தேயிலைத் தோட்ட முதலாளி கொடுத்த வீட்டில் தங்கி இருக்கிறார்கள்..?
9-தமிழகத்தில் குறிப்பாக ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில், சொத்துக்களை வாங்கி குவித்திருக்கும், இடுக்கி மாவட்டத்து தமிழ் அரசியல்வாதிகளுடைய பட்டியலை நீங்கள் தருகிறீர்களா, நாங்கள் தரட்டுமா...?
10-தோழர் அச்சுதானந்தன் காலத்தில், குட்டியார் வேலியில் கொடுக்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்கள், கம்பெனியின் வீடுகளில் பதுங்கி கிடக்கிறது. பட்டாக்களுக்குரிய இடம் எங்கே இருக்கிறது என்று அளந்து கொடுப்பதை எது தடுக்கிறது...?
11-வட்டவடை, கோவிலூர், மறையூர், காந்தலூர் போன்ற தமிழர்கள் நிறைந்த பகுதிகளில்,,,,
பெரிய அளவிற்கு நில ஆக்கிரமிப்பை செய்த, இடுக்கி மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகளுடைய முகத்திரையை கிழித்தெறிந்த, தேவிகுளம் சார் ஆட்சியர் திருமதி ரேணு ராஜ் அவர்களை,, ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்தது இதே தோழர் பினராயி விஜயனுடைய அரசு...!
பெரிய அளவிற்கு நில ஆக்கிரமிப்பை செய்த, இடுக்கி மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகளுடைய முகத்திரையை கிழித்தெறிந்த, தேவிகுளம் சார் ஆட்சியர் திருமதி ரேணு ராஜ் அவர்களை,, ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்தது இதே தோழர் பினராயி விஜயனுடைய அரசு...!
அப்படியானால் தோழர் பினராயி விஜயன், நிர்வாகத்தின் பக்கம் நிற்கிறாரா, நில மாஃபியாக்களின் பக்கம் நிற்கிறாரா...?
12-மொழிவழி சிறுபான்மையினர் 35 விழுக்காடு வாழும் பகுதிகளில்,அந்தச் சிறுபான்மையினரின் மொழியைப் பேசக் கூடியவர்களை மட்டுமே அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். அப்படியானால் எதற்காக தேவிகுளம் தாலுகா அலுவலகத்திலும், நீதிமன்ற வளாகத்திலும், கிளைச் சிறையின் வாசலிலும், அத்தனை மலையாள ட்ரான்ஸ்லேட்டர்கள் அமர்ந்து மனு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்...?
13-இடுக்கியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தமிழகத்தில் கல்லூரிக் கல்வியை முடித்து வரும், உண்மையான தமிழ் பிள்ளைகளின், பதிவு ஏற்றுக்கொள்ளப்படுகிறதா, இல்லையா...?
14-மறையூர் பகுதியில் எவ்வித கேள்வியுமின்றி இருப்பிடச்சான்று வழங்கிய இதே மார்க்சிஸ்ட் அரசு, எதற்காக தேயிலைத் தோட்டப் பகுதிகளில் அதை வழங்க முன்வரவில்லை...?
15-வட்டவடை, கோவிலூர், கொட்டகம்பூர் போன்ற தமிழ் பகுதிகளில், பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில், பத்தாண்டுகளுக்கு மேலாக மலையாள மர வியாபாரிகளால் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கும்,
இடங்கள் யாருக்கு சொந்தமானது...?
பாம்பாடும் சோலை தேசிய பூங்காவுக்கு அருகே, அத்தனை மரத்தையும் வெட்டுவதற்கு அனுமதி கொடுத்தது யார்...?
இடங்கள் யாருக்கு சொந்தமானது...?
பாம்பாடும் சோலை தேசிய பூங்காவுக்கு அருகே, அத்தனை மரத்தையும் வெட்டுவதற்கு அனுமதி கொடுத்தது யார்...?
16-கொட்டகம்பூரில் தமிழர்களுடைய நிலத்தை, ஆக்கிரமித்து அழிச்சாட்டியம் செய்ததற்காக, குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்ட இதே இடதுசாரிகள் ஆதரவு பெற்ற முன்னாள் எம்.பி. யான ஜோயிஸ் ஜார்ஜை, சட்டத்தின் பிடியிலிருந்து விடுவித்தது யார்...?
17-வண்டிப்பெரியாறு பஞ்சாயத்து தலைவராக இருந்த பச்சைத் தமிழரான பாலுவை, பட்டப்பகலில் படுகொலை செய்த மார்க்சிய குண்டர்களை தண்டனை காலம் முடியும் முன்பே சுதந்திரமாக வெளியே உலவ விட்டது யார்...?
18-மார்க்சிய கம்யூனிஸ்ட்கட்சி பத்துக்கும் மேற்பட்ட கொலைகளை செய்திருக்கிறது என்று மேடையிலேயே முழங்கிய,குஞ்சித்தண்ணி எம்.எம்.மணியை, மந்திரி ஆக்கியது யார்...?
19-வண்டிப்பெரியாறு பகுதிகளிலிருந்து, பெரிய அளவிற்கு தமிழர்கள் புலம்பெயர்ந்து, தமிழகம் திரும்புவதற்கு காரணமானது யார்...?
20-தமிழகத்திலும் கேரளத்திலும் சமநேரத்தில் ரேஷன் அட்டையும், வாக்காளர் அடையாள அட்டையும் வைத்திருப்பவர்கள் யார்...?
21-தொழிலாளர் நலச் சட்டங்கள், தேயிலை தோட்டங்களில், உண்மையிலேயே அமல்படுத்தப்படுகிறது என்றால்...
பல்லாயிரக்கணக்கான தேயிலைத் தோட்ட தமிழர்கள் வாழும், மூணாறு சுற்றுவட்டாரத்தில், இன்னமும் ஏன் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை வரவில்லை...?
பல்லாயிரக்கணக்கான தேயிலைத் தோட்ட தமிழர்கள் வாழும், மூணாறு சுற்றுவட்டாரத்தில், இன்னமும் ஏன் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை வரவில்லை...?
22-கட்டமைப்புகளில் கொடுக்கப்படும் அதிகாரம் என்பது உண்மையான அதிகாரம் அல்ல, தனி மனிதனுக்கு கொடுக்கப்படும் அதிகாரமே உண்மையான அதிகாரம் என்பதை எப்போது உணர்ந்து கொள்ளப் போகிறீர்கள் மார்க்சிஸ்டுகளே...?
23-கடந்த பத்தாண்டுகளில் தேவிகுளம் மற்றும் பீர்மேடு தாலுகாக்களில் குடியேறிய, மலையாள மக்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா...?
குமுளியில் இருந்து வண்டிப்பெரியாறு வரை சாலையின் இரு மருங்கிலும் கட்டப்பட்ட மலையாள ஆக்கிரமிப்பு வீடுகளை போல, தமிழர்கள் கட்ட முடியுமா...?
24-1870 காலகட்டங்களில் முதல் தேயிலையை தமிழர்கள் பயிரிட்ட பார்வதி மலையை,பாராகிளைடர் பயிற்சி மையமாக கேரள அரசு மாற்றியபோது...
எங்கே போனார்கள் இந்த புரட்சியாளர்கள்...?
எங்கே போனார்கள் இந்த புரட்சியாளர்கள்...?
25-இடுக்கி மலையகத்தை உருவாக்கிய, உண்மையான தமிழர்களுக்கு, தேவிகுளத்திலும், பீர்மேட்டிலும் இருக்கும் சொத்து மதிப்பு என்னவென்று தெரியுமா...?
140 ஆண்டு கால உழைப்பில் அவர்கள் உழைத்து சேர்த்த சொத்து பட்டியலை பாருங்கள் தோழர்களே...?
இதுபோக இன்னமும் ஆயிரம் கேள்விகள் பாக்கி இருக்கிறது...
ஏதோ நாங்கள் தான் உழைக்கும் வர்க்கம், நீங்கள் எல்லாம் சந்தர்ப்பவாதிகள் என்று போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றுவதை எங்களாலும் செய்ய முடியும்...
மற்றபடி சோறு தின்பதற்கும், சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கும் தேனி மாவட்டம் வேண்டும்... ஆனால் விசுவாசமாக இருப்பதெல்லாம் இடுக்கி மாவட்டத்திற்குத்தான் என்றலையும், ஓய்வு நேர புரட்சியாளர்கள் தயவுசெய்து எந்த மண்ணை புகழ்கிறீர்களோ, அங்கு சென்று வாழ்வது தானே சாலச்சிறந்தது...
அதை விடுத்து நான் இங்கே தான் வாழ்வேன்... ஆனால் பக்கத்து வீட்டை கொண்டாடுவேன் என்றால்... இந்த மண்ணில் வாழ அருகதையற்ற மனிதன் நீ என்பதை மறந்து விடாதே...?
கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் ஆரிப் முகமது மட்டும் வெற்றிக்கனியை பறித்து இருக்காவிட்டால், நாடாளுமன்ற மக்களவையில் கேரளாவின் பிரதிநிதித்துவம் சந்தி சிரித்திருக்கும்... மறந்துவிட வேண்டாம்.
மேற்கு வங்கத்தில் காலங்காலமாக நிகழ்த்திய அதே கதையை இன்று கேரளாவிலும் நீங்கள் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்...
முல்லைப் பெரியாறு பிரச்சினையை தொட்டு நாங்களும் ஆரம்பித்தால் கதை நாறிவிடும் என்பதால், இந்தக் கேள்விகளோடு முடிக்கிறோம்.
இனி ஒவ்வொரு நாளும் 25 கேள்விகள் கேட்போம்...
கேரளத்தில் வாழும் தமிழ் மார்க்சிஸ்டுகளே...
தமிழகத்தில் வாழும் கேரள மார்க்சிஸ்டுகளே...
பதில் தாருங்கள்.
மற்றபடி குரோனா தடுப்பு விடயத்தில்,,, கேரளாவை விட, எங்கள் தாய் தமிழகம், சீரோடும் சிறப்போடும் கடமையாற்றி, நோய் தொற்றுக்கு, முற்றுப்புள்ளி வைக்க கடமையாற்றி கொண்டிருக்கிறது.
எங்கள் துப்புரவு பணியாளர்கள்...
எங்கள் மருத்துவ பணியாளர்கள்...
எங்கள் காவல் துறை பணியாளர்கள்...
எங்கள் உழவர்கள்....
எங்கள் சுகாதாரத்துறை அமைச்சர்...
எங்கள் மாண்புமிகு முதல்வர்...
எங்கள் அமைச்சர் பெருமக்கள்...
எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள்...
எங்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள்...
என அனைவரும் தன் முனைப்போடு களத்தில் நிற்கிறோம்.
எங்கள் அரசு எங்களை காக்கும்...
சகுனிகளே சற்று விலகி நில்லுங்கள்...
ச.அன்வர்.
ஒருங்கிணைப்பாளர்.
ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.
16-04-2020
காரைக்குடி.
காரைக்குடி.
No comments:
Post a Comment