ஒரு
கூகிள் குழுமத்தில் தமிழராக நடித்து வந்தவர் தானும் தமிழர்தான் என்று கூற அவருக்கு
தமிழர் ஒருவர் பரிந்து பேச அவருக்கு நான் எழுதிய மடல் இது...
“தெலுங்கர்கள்
உண்மையை ஏற்கும் நேர்மையைப் பின்பற்ற வேண்டும்”
என்று நான் எழுதிய மடலுக்கு பதிலளிக்கும் முகமாக ஒரு தெலுங்கர் தன்னை தமிழர்
என்று சொன்னார்.
அனுதினமும்
வேந்தர் என்பவர் தமிழில் மூச்செடுத்தாலும் அவர் பிறப்பால் ஒரு தெலுங்கர் என்பதே உண்மை.
அதை அவரே ஒப்புக் கொண்டார். நீங்கள் கனடாவில் வாழ்ந்தாலும் ஒருக் காலத்திலும் கனடா
இனத்தவர் (வெள்ளையர்) ஆக முடியாது. கனடா குடி உரிமை பெற்றவராக வேண்டுமானால் ஆகலாம்.
அதுவே இந்திய தேசிய இனத்தவருக்கும் பொருந்தும்.
ஒரு
தெலுங்கரை தெலுங்கர் என்று சொல்வதில் என்ன இகழ்வு இருக்கிறது என்று குழுமத்தினர்தான்
சொல்ல வேண்டும். இழையின் நோக்கமே தமிழகத்தில் வாழும் தெலுங்கர்கள் தாங்கள் தெலுங்கர்தான்
என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளும் நேர்மையைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான்.
மொழிவாரி
மாநிலங்கள் உருவாக உயிர் துறந்த பொட்டி ஸ்ரீராமுலு போன்ற எண்ணற்ற இனமான தெலுங்கு
இனம் இன்று இனமானத்தை இழந்து நின்று கொண்டிருக்கிறது. அதனால்தான் தெலங்கானா தெலுங்கர்கள்
ஆந்திர தெலுங்கர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டியதாயிற்று. அதிலும் தமிழகத்தில்
வாழும் தெலுங்கர்கள் தாங்கள் வாழும் மண்ணுக்கும் மக்களுக்கும் எந்தவித விசுவாசமும்,
உண்மையும், நேர்மையும் இன்றி நாங்களும் தமிழர்தான் என்று நடிக்க முற்படுகின்றனர். மேலும்
நாங்கள்தான் தமிழகத்தை ஆளப்பிறந்தவர்கள் என்று ஆர்ப்பரிக்கின்றனர். இது தெலுங்கு இனத்திற்கே
பெரும் அவமானமாகும்.
நாங்கள்
பேசிக்கொண்டிருப்பது தமிழின அரசியலாகும். இதில் எந்த இனத்தையும் பகையாகவோ, வெறுப்பாகவோ,
பிணக்கு கொண்டோ பார்க்க வில்லை. தமிழினம் தனக்கான அரசியலைக் கட்டமைத்துக் கொள்ள
அதற்குள்ள நியாயமான உரிமையைப் பேசுகிறோம். இது ஜனநாயக ரீதியானது. தமிழ்நாடு ஒன்றும்
தனித் தீவு அல்ல. அது ஒரு நாடு. அந்த நாட்டின் அருமை பாரதத்தவருக்குத் தெரியவில்லை.
எனவே பாரத நாட்டவர் அந்த நாட்டை தங்கள் காலில் போட்டு நசுக்கும் அளவுக்கு நடந்து கொள்கின்றனர்.
அதன் உரிமையை காற்றில் பறக்கவிட்டு மகிழ்கிறார்கள்.
10000
ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்கு தமிழகம் பாரதம் போன்ற கலாச்சாரத்தைப் பின்பற்றி
வருகிறது என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. ஆனால், பாரதத்திற்கு அதைப்பற்றியெல்லாம்
கவலையில்லை. பாரத விடுதலையை முன்னெடுத்ததில், பாரதம் விடுதலை பெற்றதில் தமிழரின் பங்கு
அளப்பரியது. அது நேதாஜியின் தலைமையில் செயல்பட்டது குறையாக அமைந்தது. அதனால்தான் தமிழகம்
பாரதத்தில் இழந்துதான் அதிகம். பெற்றது குறைவு. இன்னமும் தமிழகம் பாரதத்திற்கு சோறு
போட்டு வருகிறது. ஆனால், பாரதம் சோறுபோடும் தமிழகத்தின் கையை முறுக்குகிறது. இது
எங்கள் ஆதங்கம். அதற்காக நாங்கள் இந்திய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றோ,
தனித் தமிழகம் அமைக்க வேண்டும் என்றோ பிரச்சாரம் செய்யவில்லை. நாங்கள் இந்திய ஒன்றியத்திற்குள்ளாகவே
எங்களது அதிகபட்ச உரிமைகளைப் பெற விரும்புகிறோம். ஆனால், உலகின் மிகப்பெரும் ஜனநாயகமான
பாரதம் ஒரு காலத்தில் மேற்கு உலகைப் போல மேம்படலாம் என்று எதிர்பார்க்கிறோம். அப்போது
எங்கள் உரிமைகள் மீட்கப்படும் என்று நம்புகிறோம்.
நாளுக்கு
நாள் தமிழ்த் தேசிய உணர்வு அதிகரித்து வருவதை எல்லாரும் உணர்ந்து வருகிறார்கள். பாவம்
அப்பாவித் தெலுங்கர்கள் ஒரு மயக்கத்தில் இருக்கிறார்கள். மாறிவரும் அரசியல் சூழலில்
அவர்களால் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. அதற்கு வேந்தன் அரசு போன்ற ஒவ்வொரு
தெலுங்கரும் எடுத்துக்காட்டாகவே இருக்கின்றனர். மற்றபடி நான் அவரையோ அவர் சார்ந்த
இனத்தையோ, பாரதம் என்ற இந்திய தேசியத்தையோ அவமதிக்கவோ, இகழவோ இல்லை என்று நான்
மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
No comments:
Post a Comment