Thursday, October 24, 2019

தென்னிந்தியாவின் பெருமை


வீரத்தின் கலியுக பிறப்புகளின் மறு உருவமான மருதுபாண்டியர்களின் குரு பூஜை வரும் நேரத்தில் அவர்களுடன் நாட்டுக்காக தங்களுடைய இரத்தம் சிந்தி உயிர் நீத்த கள்ளர் பெருங்குடிகளுக்கு இந்த கட்டுரையை காணிக்கையாக்குகிறேன்.
சிவகங்கை அரசுத் தலைவர் சின்ன மருதுவால் முன்னெடுக்கப்பட்ட தென்னிந்திய புரட்சி பிரிட்டீஸ் இந்தியாவால் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல இயலாது.
ஏனென்றால் மைசூர் புலி திப்பு சுல்தான், கள்ளர் நாட்டு தலைவர்கள், திண்டுக்கல் கோபால நாயக்கர், கொங்கு மண்டல வெள்ளாள கவுண்டர் தலைவர்கள், பாளையக்காரர்கள், ஊர் தலைவர்கள் என 100க்கும் மேற்பட்டவர்களை இனைத்து மண்ணுரிமைக்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒரே அணியாக திரட்டிய இராஜ தந்திரம் அரசுத் தலைவர் சின்ன மருதுவையே சேரும்.
இந்த தென்னிந்திய புரட்சியின் தமிழ் நாட்டின் தலைமை இடமாக திகழ்ந்தது ஆனையூர்(கருமாத்தூர்) கள்ளர் நாடு என்பதை பிரிட்ஸார் மிகவும் ஆணித்தனமாக குறித்துள்ளனர்.
சிவகங்கை கள்ளர் நாட்டு தலைவர்கள், நெல்லை நாயக்க, மறவர் தலைவர்கள், இராமநாத மறவர் தலைவர்கள், திண்டுக்கல் நாயக்க தலைவர்கள் அனைவரும் ஆங்கிலேயருக்கெதிராக திட்டம் தீட்டி, செயல்பட்ட இடம்தான் ஆனையூர்(கருமாத்தூர்) கள்ளர் நாடு.
இந்த தென்னிந்திய புரட்சியை மேற்கோள் காட்டும் ஆங்கில வரலாற்று ஆய்வாளர்கள் “கள்ளர் பழங்குடிகளை ஆங்கிலேயரின் பரம்பரை எதிரிகள் என்றும் கள்ளர்களின் சுயாட்சி கொள்கையாலும், வீரியத்துடன் மார்பை காட்டி எதிர்த்து நிற்கும் குணத்தாலும், இடைவிடாத தாக்குதல் பண்பாலும் கள்ளர் பழங்குடிகளை கண்முடித்தனமாக ஆங்கிலேய தளபதிகள் கொலை செய்துள்ளனர் என குறிக்கின்றனர்.
இந்த வேங்கை சின்ன மருதுவின் தென்னிந்திய புரட்சியில் நாம் கடந்து செல்ல முடியாத ஊர்களில் மேலூர் கள்ளர் நாடும் மற்றும் திருமங்கலம்(ஆனையூர் நாட்டு பிரிவு) ஏனென்றால் இங்கு தான் வேங்கை மருது பாண்டியர்களின் ஆயுத தொழிற்சாலை உருவாக்கப்பட்டது.
மேலும் இந்த ஆயுத தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட ஆயுதங்களை மேலூர் கள்ளர் நாட்டு காடுகளில் மண்ணில் புதைத்து வைத்து ஆங்கிலேயர்கள் வரும் போது திடீரென புதைத்து வைத்த ஆயுதங்களை எடுத்து கொரில்லா தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த மேலூர் கள்ளர் நாட்டின் ஆயுத தொழிற்சாலையை புரட்சியின் இறுதிகாலத்தில் ஆங்கிலேயர்களால் முற்றிலுமாக தரைமட்டமாக்கப்பட்டது.
இந்த தென்னிந்திய புரட்சியில் மிகவும் வீரியத்துடன் சண்டையிட்ட கருமாத்தூர் கள்ளர் தலைவர்கள் மூவரை பினாங்கு தீவிற்கு நாடு கடத்தப்பட்டு சொந்த நாட்டிற்காக போர் புரிந்த வீரர்கள் அன்னிய தேசத்தில் அடக்கமாயினர்.
1. ஆண்டியப்ப தேவர்
2. சடைமாயன்
3. கொன்றி மாயத்தேவர்

மேலும் புரட்சி மேலோங்கி இருந்த காரணத்தாலும், திண்டுக்கல்லை பிரிட்டிசார் கைப்பற்றியதாலும், கோபால நாயக்கர் ஆனையூர் கள்ளர் நாட்டுக்கு பொன்னித்தேவர் (கள்ளப்பட்டி(செல்லம்பட்டிக்கு அருகில்) உதவியால் தப்பிச்செல்கிறார். இந்த சம்பத்தில் பொன்னித்தேவர் பிரிட்டிஸ் படையால் கொல்லப்படுகிறார்.
பிறகு கோபால நாயக்கர் ஆரியபட்டி, கருமாத்தூர், நமணூர் நாட்டில் உள்ள கள்ளர் தலைவர்களுடன் சேர்ந்து மறு தாக்குதல் செய்கிறார்.
இந்த தென்னிந்திய புரட்யில் மேலூர், வெள்ளலூர் நாட்டு கள்ளர்கள் திருப்பரங்குன்ற மலையில் இருந்து ஆங்கிலப்படைகள் மதுரையிலிருந்து சிவங்கை செல்லவிடாமல் தொடர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த புரட்சி இறுதியில் ஆங்கிலேயர்கள் வேங்கை மருது பாண்டியர்களை வீழ்த்த மிகவும் நேர்த்தியாக செயல்பட்டு உள்ளனர்.

அதாவது முதலில் ஆனையூர் நாட்டு பிறமலைக் கள்ளர்களை தொடர் தாக்குதல் நடத்தி அவர்களின் ஆயுதங்களை முற்றிலுமாக அழிக்கின்றனர்.
பின்பு மேலூர், வெள்ளலூர், திருப்பத்தூர்(அம்பலம்) நாட்டு கள்ளர்களை தொடர் தாக்குதல் நடத்தி அவர்களின் இரண்டு தொழிற்சாலைகளை தரைமட்டமாக்கி ஆங்கிலேய படை சிவங்கையை நோக்கி சிறுவயலுக்கு முன்னேறுகிறது.
சிவங்கை நாட்டு எல்லையில் நுழைந்த ஆங்கிலேய படைகளுக்கு அதிர்ச்சி வைத்தியமாக கண்டதேவி, தேர்போகி (ஏழுகிளை கள்ளர் நாடு (அம்பலம்,சேர்வை)) நாட்டு கள்ளர்கள் மிகவும் வீரம் செறிந்து போரிட்டனர்.
தேர்போகி நாட்டு கிளைவழி கள்ளர்கள் மிகவும் வீரத்துடனும் சண்டையிட்டுள்ளனர் மேலும் புரட்சியாளர்களின் தளபதிகளுக்கு மிகவும் தோளுக்கு தோளாக நின்றுள்ளனர்.
இவர்களின் தாக்குதலை தவிர்க்க பிரிட்டீஸார் மருது பாண்டியர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம் எனவும், தேர்போகி நாட்டு கள்ளர்களுக்கு போர் மன்னிப்பு கொடுக்கிறோம் என்று பிரிட்டிஸ் தளபதி பிளாக் பர்ன் பரிந்துரைக்கிறார்.
ஆனால் இதனை முற்றிலுமாக மறுத்து தாங்கள் இறுதி மூச்சுவரை மருது பாண்டியர்களுக்காக தான் நிற்போம் என்று நெற்றி பொட்டில் அடித்தால் போல் கூறிவிட்டனர்.
புரட்சியில் தோல்வியால் இந்த தேர்போகி நாட்டு கள்ளர்களும் கருவறுக்கப்பட்டனர்.
கண்டதேவி கள்ளர் நாட்டில் 3000 வீரர்களை திரட்டி ஆங்கில தளபதி பிளாக் பர்னுக்கு சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியுள்ளனர்.
இதனால் தளபதி அறந்தாங்கிற்கு சென்று மறு தாக்குதல் நடத்த செல்கிறார்.
அதே போல் பாலை நாட்டு கள்ளர்களும், அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் பிரிட்டீஸாருக்கு எதிராக தாக்குதல் நடத்துகிறார்கள்.
இந்த கிளை வழி கள்ளர் நாட்டை முழுவதுமாக வீழ்த்தி ஆங்கிலேயர்கள் சிவகங்கை உள்ளே நுழைகின்றனர்.
அங்குதான் நம்முடைய தென் பாண்டி சிங்கம் பாகனேரி நாட்டு பட்ட அம்பலக்காரர் வாளுக்கு வேலி அம்பலம் எல்லை சாமியாக நின்று துரோகத்தால் வீழ்த்தப்பட்டார் என்பது தனித்த காவிய வரலாறு.
அதுபோக கொண்டைய கோட்டை மறவர் தலைவரான, தற்கொலைப் படை பீரங்கி மாவீரர் மயிலப்பன் சேர்வையை தெற்கில் வீழ்த்தி ஒரு பிரிட்டிஸ் ரிஜ்மெண்ட் முன்னேறியுள்ளது.

இந்த ஒட்டு மொத்த கள்ளர் நாட்டு தலைவர்களை வீழ்த்திய பின்புதான் மருதிருவர்களை ஆங்கிலேயர்கள் தூக்கில் இட்டுள்ளனர்.
வேங்கை மருது சகோதரர்களை வீழ்த்த வேண்டுமாயின் கள்ளர் நாட்டு தலைவர்களை வீழ்த்த வேண்டும் என்று பிரிட்டீஸார் நன்கு புரிந்து அதை செயல்படுத்தியும் உள்ளார்கள்.
இதுபோக வேங்கை மருது பாண்டியர்களுக்காக நாயக்கர்கள், இஸ்லாமியர்கள், செட்டியார், அய்யர்கள், வெள்ளாளர், கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் இரத்தம் சிந்தியுள்ளார்கள் என்பது மறுக்க முடியாத உன்மையே.....!
இதுபோக தூத்துக்குடி எங்கள் உடன்பிற சகோதரர்களான பரதவ மக்கள் அவர்களுடைய பரத குலத்தலைவன் பின்னால் அணிவகுத்து ஆங்கிலேயருக்கு எதிராக போர் செய்துள்ளனர்.
இந்த வரலாறை எல்லாம் படிக்காமல், சிவங்கை மருது பாண்டியருக்கே அரண்மனையில் உள்ளவர்கள் “வெளியே செல்” என நான் மேற்கோள் காட்டிய எந்த சமூகத்திலும் இடம் பெறாத ஒரு கூட்டம் பிரிவினை பேசி வருகிறது.
அவர்களுக்கு நான் கூறும் ஒரே விடையம் தான் வேங்கை மருது பாண்டியர்கள் தமிழ் மக்களின் சொத்து அதை பங்கு கேட்டு வரும் எவரையும் வரலாறே விரட்டும்.

குறிப்பு: வேங்கை மருது பாண்டியர்கள் வரலாற்றை மறைக்கிறார்கள் என்று மார்தட்டும் கூட்டத்தாரே, நீங்கள் எப்போது அவர்களோடு வரலாற்றில் பயணித்த கள்ளர், மறவர், பரதவர், கவுண்டர், வெள்ளாளர், அய்யர், செட்டியார், இஸ்லாமியர், நாயக்கர்களை போற்றப்போகிறீர்கள்.....?
நன்றி
South Indian rebellion by Dr.Rajayyan
Historical dictionary of the Tamils
by Mrs.Vijaya Ramaswamy
அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழு கோட்டை நாடு











No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...