Friday, October 18, 2019

கள்ளர்வழி சோழர்கள்










இதற்கு முன்பாக மானுடவியல் ரீதியாக இராஜ இராஜ சோழர் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர் என்று பார்த்தோம்.

இப்போது சில கல்வெட்டுகள் மூலமாக சோழர்களின் களப்படை, கப்பற்படை மற்றும் படைப்பற்று என காண்போம்.

கல்வெட்டு எண்: 115/1974
இடம் : தர்மபுரி
நடுகல் வீரனின் பெயர் : ஶ்ரீகள்ளச் சோழன்

இந்த கள்ளர் குல சோழன் மார்பில் அம்பு பாய்ந்த படி உள்ளனர், இவர் ஒரு போரில் இறந்த வீரராக இருக்கலாம் என தொல்லியல் துறை கருதுகிறது.

இரண்டாம் இராஜ இராஜ சோழரின் மெய்கீர்த்தி: கிபி1146 -1163

மெய்கீர்த்திகள் பெரும்பாலும் அரசர்கள் தங்களுடைய குலத்தை குறித்திருப்பார்கள், அப்படி 2ஆம் இராஜ இராஜ சோழர் தன்னுடைய மெய்கீர்த்தியில் “கள்வன் இராஜ இராஜன்” என்றே குறித்துள்ளார்.

கல்வெட்டு எண்: 103 of 1897
அரசர் : குலோத்துங்க சோழர்

இந்த கல்வெட்டில் கள்ளர்பற்று இருந்ததை தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். அதே கல்வெட்டுகள் தொடர்ச்சியில் களப்படையின் (கள்ளர் படை) வீரத்தையும் பறை சாற்றுகிறது.
தஞ்சையின் இந்த கள்ளர் பற்றுகள் பிரிட்டீஸ் காலம் வரை போர் தொழிலை மட்டுமே செய்து கொண்டிருந்தது....!

கல்வெட்டு காலம்: 8-ம் நூற்றாண்டு

இந்த கல்வெட்டில் ஊர் மக்களுக்கு மதகு அமைத்துக் கொடுத்த சோழர் கால அரையரான (சிற்றர்சர்) கொங்கரையர் கள்ள பெருமாள் என்பவரின் மனைவி கொங்கச்சியார் அமைத்து கொடுக்கிறார் என கல்வெட்டு முடிகிறது.

கல்வெட்டு எண்: 132 of 1947-1948
காலம் : இராஜேந்திர சோழர்

இந்த கல்வெட்டில் இராஜேந்திர சோழரின் சேனாபதியாக முனையத்திரியர் என்பவர் குறிக்கப்படுகிறார்.

கல்வெட்டு எண்: 129 of 1938-1939
காலம் : இராஜேந்திர சோழன்

இந்த கல்வெட்டிலும் இராஜேந்திர சோழரின் பட்டப்பெயரான கங்கை கொண்டான் என்ற பெயரையே அவருடைய சேனாபதியான முனையத்திரியருக்கும் தாங்கி நிற்கிறது.

இந்த முனையத்திரியர் என்கிற பெயரை கள்ளர் மக்கள் இன்றும் குடும்ப பட்டமாக பயன்படுத்துகிறார்கள்.

குலோத்துங்க சோழன் உலாவில் “கண்ணன் வம்சத்து கள்ளரில் ஒருவர் குலோத்துங்க சோழன்” என கள்ளர்களை கண்ணன் வம்சம் என்றும் அந்த கண்ணன் வம்சத்தில் ஒருவன் குலோத்துங்க சோழன் எனக்கூறுகிறது,

இந்த குலோத்துங்க சோழனுக்கு ஆதரவாக செம்பொன்மாரி ஏழுகிளை கள்ளர் நாட்டில் கள்ளர்குல மாளவசக்கரவர்த்தி தனது கள்ளர் படைப்பற்றை வைத்து சிங்களவர்களை விரட்டியடித்தார் என்பது கூடுதல் வரலாறு.

இதுபோக இன்னும் நக்கன்காவடியர் (நாயக்காவடியர்)
வங்கார முத்தரையர்
வளவத்தரையர்
மழவராயர் என 100-க்கும் மேற்பட்ட கள்ளர்குல அரையர்கள், நிர்வாகிகள், தளபதிகள் என கல்வெட்டுகளில் அலங்கரிக்கிறார்கள்.

குறிப்பு: மாற்று சமூகத்தினருக்கு ஒரு வேண்டுகோள்...! எந்தவொரு இரத்த சரித்திரம், நாட்டு நிர்வாகம் என எதிலும் இடம்பெறாமல், மனசாட்சியே இல்லாமல் சோழரை உரிமை கொண்டாட வேண்டாம்.

நன்றி
விக்னேஷ் மாளுசுத்தியார்
சியாம் சம்பட்டியார்
மற்றும்
தமிழக தொல்லியல் துறை

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...