சோழர்களின் வீழ்ச்சிக்கு பின்பு கிபி12ஆம் நூற்றாண்டில் இருந்து சோழர்களின் கிளைக்குடியான தொண்டைமான் மற்றும் பல்லவராயர் போன்றோர் பாண்டிய மன்னர்களின் மேலான்மையிலும் பின்பு தன்னரசாகவும் புதுக்கோட்டை பகுதியில் ஆளுமை செலுத்தி வந்துள்ளனர்.
அறந்தாங்கி தொண்டைமான் இன்றும் புதுக்கோட்டை மாவட்டம் பாலைவனத்தில் ஆண்டவராய அருணாச்சால வணங்காமுடி தொண்டைமானாக இன்றும் கள்ளராகவே வாழ்ந்து வருகிறார்.
புதுக்கோட்டை தொண்டைமான் இன்றும் அரச மரபை கடந்து எளிமையின் சிகரமாக மக்கள் தொண்டர், மதிப்பிற்குரிய கார்த்திக் தொண்டைமான் கள்ளராகவே வாழ்ந்து வருகிறார்.
கருமாணிக்க தொண்டைமான் இன்றும், நடமாடும் நீதிமன்றம் என பொதுமக்களால் அழைக்கப் பெரும் கப்பலூர் நாட்டு தலைவர், கரியமாணிக்க இராமசாமி அம்பலமாக இன்றும் கள்ளராகவே வாழ்ந்து வருகிறார்.
சூரைக்குடி தொண்டைமான் இப்போது எந்த குடும்பத்தினராக வாழ்கிறார் என்ற ஆய்வு செய்யாத காரணத்தால், அவ்வப்போது சர்ச்சையில் அவரது வரலாறு அல்லாடுகிறது. ஆனால் அவரது வாரிசு வாழ்ந்து வருவது யாருக்கும் தெரியாததால் இப்படி பிதற்றல் வருகிறது.
காலம் வரும்போது நிச்சயம் தகுந்த ஆதரங்களுடன் அறிமுகப்படுத்துகிறேன்.
ஆனால் அதற்கு முன்பே புதுக்கோட்டை தொண்டைமான், சூரைக்குடி தொண்டைமானை தங்களுடைய முன்னோர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். வரலாறு மற்றும் மானுடவியல் ஆய்வாளர் நிக்கோலஸ் டிரிக்ஸ் இருவரும் ஒரே மரபினரே என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தொண்டைமான் என்கிற கள்ளர்களின் உட்பிரிவில் உள்ள பட்டத்து பிரிவினர்கள் என்றே பதிவு செய்துள்ளனர். முன்னாள் தொல்லியல் துறை இயக்குனர் புலவர் இராசு, தன்னுடைய அறந்தாங்கி தொண்டைமான் புத்த்கத்தில் நான்கு தொண்டைமான்கள் கள்ளர் சமூகம் என்றே பதிவு செய்துள்ளனர்.
ஆதாரங்கள் கொட்டிக் கிடக்கின்றன, அள்ளத்தான் ஆளில்லையே தவிர ஆதாரங்கள் அழியவில்லை.
நன்றி
Journal of Indian history and culture
Journal of Indian history and culture
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
No comments:
Post a Comment