கரியவன்@இந்திரனை தேடிய எனது பயணத்தில் முதல் வெற்றியாக சுமார் 72வருட பழமையான பத்திரத்தில், கள்ளர் சமூகத்தவர்கள் தங்களை இந்திர குலம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
கள்ளர்களில் அதுவும் குறிப்பாக பிரமலைக்கள்ளர்களில் போன தலைமுறை வரைக்கும் தனது வீட்டில் உள்ள ஒரு ஆண் குழந்தைக்கு தெய்வேந்திரன் என்கிற பெயர் சூட்டுவார்கள்.
தேவேந்திரன் என்கிற இந்திரனுடைய பெயரைத் தான் தெய்வேந்திரன் என்று வைத்துள்ளார்கள்.
கல்வெட்டுகளில் கூட தேவர் என்கிற பெயர் தெவர் என்றே இருக்கும்.
இந்திரனை பற்றி கடந்து முறை நான் பதிவு செய்ததை பார்த்து மதிப்பிற்குரிய அண்ணன் Thirumaranji அவர்கள் என்னை தொடர்பு கொண்டு தன்னிடம் ஒரு நிலப்பத்திரம் உள்ளது என்று எனக்கு அனுப்பினார்.
அதனுடைய காலம் கிபி1947ஆம் ஆண்டு, அது ஒரு நிலப்பத்திரம் திருமாறன் அண்ணன் தாயாரின் 3தலைமுறைக்கு முன்னாள் உள்ள பூர்வீக சொத்து.
அந்த பத்திரத்தில் மாயாண்டித்தேவர் இந்திரகுலம் என்று தெளிவாக உள்ளது.
இன்னும் இதற்கு முந்தைய பத்திரத்தில் இந்திர குலம் பிறமலைக் கள்ளர் சாதி என்று தெளிவாக உள்ளதாகவும், அதனை நகல் எடுத்து தருகிறேன் என்று கூறியுள்ளார்.
தொடர்ச்சியாக ஆய்வு செய்தால் சில மடையர்களின் மண்ணாங்கட்டி புனைவுகளை உடைத் தெரியலாம்.
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
No comments:
Post a Comment