Monday, September 23, 2019

கள்ளர்கள் போர் செய்ததற்கு ஆதாரம் உள்ளதா?




கள்ளர்கள் போர் செய்ததற்கு ஆதாரம் உள்ளதா? என ஒருவர் கேட்பது எந்த
அளவிலான மூடத்தனம், என்பதை நான் சொல்லி யாருக்கும் தெரியவேண்டிய அவசியம்
இல்லை! கீழே...தேதி வாரியாக கள்ளர்கள் போரிட்டதற்கு ஆதாரம் தந்துள்ளேன்.
மறுக்க முடிந்தால் மறுத்து பாருங்கள்!

1.அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூர் மதுரையை கொள்ளையடித்து
திரும்பும்போது கள்ளர்கள் நாகமலை கணவாயில் வழிமறித்து தாக்கியுள்ளனர்.

2. 1330-ம் ஆண்டு சுல்தானியர்கள் மதுரையை தாக்கியபோது மதுரையையும், மதுரை
மீனாட்சி அம்மன் கோவிலையும் அழிவிலிருந்து காத்தவர்கள் கள்ளர்கள்.

3. 1378-ம் ஆண்டு குமாரகம்பண்ணா, தன்னரசு கள்ளர் படையுடன் இணைந்து
சுல்தானியர்களை விரட்டி அடித்துள்ளார்.

4. 17-ம் நூற்றாண்டில் ஸ்ரீரங்க நாயக்கர் மதுரையை ஆண்டபொழுது பிரமலைக்
கள்ளர்கள் மதுரையை கைப்பற்றிக் கொண்டனர் என்ற விவரத்தை போர்த்துக்கீசிய
மொழியில் யேசு சபை துறவி பல்தார்-டி-கோஸ்டா எழுதியுள்ளார்.

5. 17-ம் நூற்றாண்டில் திருமலை நாயக்கர் தன்னரசு கள்ளர்களை அடக்க முயன்று
தோற்று இறுதியில் சமரசம் செய்து கொண்டதே வரலாறு.

6. 1739-ம் ஆண்டு பிரஞ்சு கவர்னர் டியூப்ளே தன்னரசு கள்ளர்களுக்கு கடிதம்
எழுதி ஆங்கிலேயர்களுக்கு எதிரான அணியில் கூட்டணி சேரக் கேட்டுக் கொண்டார்
என்று ஆனந்தரங்க பிள்ளை நாட்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

7. 23.03.1754-ல் அப்போதைய தாலுகா தலைநகரான உசிலம்பட்டி அருகில் உள்ள
ஆனையூரில் தன்னரசு கள்ளர்கள்தான் இந்தியாவிலேயே முதன்முறையாக
வெள்ளையர்களுக்கு எதிராக வரிகொடா இயக்கத்தை துவக்கினர்.

8. 1755-ம் ஆண்டு வெள்ளையனுக்கு எதிராக பூலித்தேவன் நடத்திய போருக்கு
தன்னரசு கள்ளர்கள் படை ஆதரவு கரம் நீட்டினர்.

9. 20.05.1756-ல் கான் சாகிப் கள்ளர்களை கருவறுக்க திட்டமிட்டு தோற்றுப்போனார்.

9. 12.11.1760-ல் பீட்டர்மாட்ரின் பாதிரியார் விகேயின் பாதிரியாருக்கு
எழுதிய கடிதத்தில் கள்ளர்கள் மதுரையை தங்கள் ஆட்சியின் கீழ் வைத்து
இருந்தனர் என்று எழுதியுள்ளார்.

10.1784-ல் கள்ளர்கள் மராட்டிய தளபதி முராரிராவை கொலை செய்து விட்டு
மதுரை மாநகரை பரிபாலனம் செய்தனர்.


No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...