Monday, May 6, 2019

`என் அப்பாவின் ஆசையை நிறைவேற்றிவிட்டேன்!' - பசும்பொன்னில் மனம்திறந்த பிரபு



நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு கதாநாயகனாக நடிக்கும் படம், `ராவண கோட்டம்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் கடந்த சில நாள்களாக நடந்துவருகிறது. இந்தப் படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு நடித்து வருகிறார். `ராவண கோட்டம்' படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் பிரபு, நேற்று காலை கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்குச் சென்றார். அங்குள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்குச் சென்று, தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் தேவர் வாழ்ந்த வீட்டுக்குச் சென்று, அங்குள்ள தேவரின் வாழ்க்கை வரலாற்றுப் புகைப்படங்களைப் பார்வையிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரபு, ' எனது தந்தை சிவாஜி, பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவரின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்திவருமாறு, நீண்ட காலமாக என்னிடம் சொல்லிவந்தார். எனது பணிகளுக்கிடையே, தேவரின் நினைவிடத்திற்குச் செல்ல முடியாத நிலை இருந்துவந்தது. அதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்தது. அந்த வாய்ப்பினால், தேவரின் நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்தியதுடன், அவர் வாழ்ந்த வீட்டையும் பார்த்து வியந்தேன். இதன்மூலம், எனது தந்தையின் நீண்ட நாள் எண்ணத்தை நிறைவேற்றியுள்ளேன். இதன்மூலம் எனக்கு மன நிம்மதி ஏற்பட்டுள்ளது'' என்றார்.
https://www.vikatan.com/news/tamilnadu/156744-prabhu-is-who-paid-homage-at-pasumpon-thevar-memorial-near-kamuthi.html?artfrm=others_breaking_news

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...