Thursday, May 2, 2019

தமிழீழமும் தமிழகத்தை தமிழர் ஆள்வதும்

தமிழீழ நாடு கிடைக்க வேண்டும் என ஒத்துக்கொள்பவர்களில் ஒரு கூட்டம் தமிழ்நாட்டைத் தமிழன் ஆள வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை அதை நிரூபிக்கும் விதமாக நேற்று ஒரு நிகழ்வு நடந்தது
நாடு கடந்த தமிழீழ அரசு என்ற ஒரு அமைப்பு இருக்கிறது அந்த அமைப்பு நடத்திய கூட்டத்தில் நேற்று நான் கலந்து கொண்டேன். பேச வேண்டாம் என்று இருந்தேன் இருந்தாலும் மூன்று முறை என்னை அழைத்தனர் சரி பேசுவோம் என்று பேசினேன். நான் பேசும் முன்பாக அங்கு பேசியவர்களிலிருந்து சில செய்திகளை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டேன்
1. எனக்கும் முன்பாக பேசிய ஒருவர் தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என விரும்புகிறவர்கள் எல்லாம் கை தூக்குங்க என்றார் பாதிப்பேர் கை தூக்கினார்கள்
2. ஒருவர் பேசும்போது இஸ்ரேலியர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? புதுப் புதுக் கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். பெரும் செல்வந்தர்களாக இருக்கிறார்கள் பல இடங்களில் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். உலக அளவில் அவர்களுக்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தில் வருபவர்களாக தமிழர்களாக இருக்கிறார்கள் தமிழர்களும் யூதர்களைப் போல பொருளாதாரத்தில் மிகவும் பலம் கொண்டவர்களாக மாற வேண்டும்.
வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் பலர் இங்குள்ள தமிழர்கள் பொருளாதாரத்தில் உயர கை கொடுக்க தயாராக இருக்கிறார்கள் இங்கிருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்தால் அதை அவர்கள் வாங்க தயாராக இருக்கிறார்கள் என்றார் இப்படி பேசியவற்றை எல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு நான் பேசத் தொடங்கினேன்
அந்த அறையில் கிட்டத்தட்ட 60 பேர் இருந்தனர் தமிழினியன் தமிழ்நேயன் வழக்கறிஞர் புகழேந்தி ,நாடு கடந்த தமிழீழ அரசின் விளையாட்டு மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் ஜெயகுமார், பேராசிரியர் சாம்சன், மேகநாதன் முனுசாமி, டி எஸ் எஸ் மணி என பலர் இருந்தனர் நாடு கடந்த தமிழீழ அரசின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற பேராசிரியர் சரஸ்வதியும் அங்கே இருந்தார்
பேசத் துவங்கினேன்
எல்லோருக்கும் வணக்கம் இங்கே இருப்பவர்கள் அனைவரும் தமிழீழம் அடைய வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து உடையவர்கள் என்பது எனக்கு தெரியும்
உங்களை பார்த்து நான் ஒன்று கேட்கிறேன் தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும் என்பதில் இங்குள்ள எத்தனை பேருக்கு உடன்பாடு இருக்கிறது உடன்பாடு இருப்பவர்கள் கையை தூக்குங்கள் என்றேன்
(கிட்டத்தட்ட பத்து பேர் கை தூக்கவில்லை அவ்வாறு இருந்தவர்களில் நாடுகடந்த தமிழீழ அரசின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற பேராசிரியர் சரஸ்வதி முக்கியமானவர்
அவர் ஒரு தெலுங்கர் அவர் கணவரும் ஒரு தெலுங்கர் என நான் முன்பே அறிந்திருக்கிறேன். அவர் கையைத் தூக்க மாட்டார் என எனக்கு நன்றாக தெரியும் இருந்தாலும் எதற்கு நான் இப்படி செய்தேன் என்றால்,
எனக்கு புரிந்தது இந்த பொதுச்சபைக்கு புரிய வேண்டும் இன்னும் எத்தனை நாள் தான் நாம் மங்குணிகளாக இருப்பது என்பதை உணர்த்தவே அவ்வாறு செய்தேன்)
பார்த்தீர்களா தமிழ்நாட்டைத் தமிழன் ஆள வேண்டும் என்பதும் நம் வீட்டில் நாம் தான் குடும்பத் தலைவராக இருக்க வேண்டும் என்பதும் ஒன்றுதான் ஆனால் அதற்கு கூட ஒத்துக் கொள்ளாதவர்கள் தான் தமிழீழ நாடு கிடைக்க வேண்டும் என்றும் நம்முடன் இருக்கிறார்கள் பார்த்துக் கொள்ளுங்கள் இவர்களையெல்லாம் வைத்துக் கொண்டு நாம் எப்படி செயல்படுவது என்று கேட்டேன்
இங்கே ஒரு ஐயா பேசும்போது வெளிநாடுகளுக்கு பொருட்களை அனுப்பினால் அங்குள்ள தமிழர்கள் உதவுவார்கள் அதனால் இவர்களுக்கு சற்று பொருளாதார உயர்வு பெற வழி கிடைக்கும் என்று பேசினார். நான் கேட்கிறேன் இங்கிருந்து நெல்லிக்காய் முட்டைகளை ஒருவர் ஏற்றுமதி செய்வார் ஊருகாய் பாட்டில்களை ஒருவரை ஏற்றுமதி செய்வார் வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களும் நான் தமிழகத்துக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் அதை பெற்று வணிகம் செய்து இவருக்கும் உதவி செய்ததாகக் திருப்தி அடைவார் எல்லாம் சரிதான்
இங்கிருந்து இந்த பொருட்களை அனுப்புகிறவர் தெலுங்கராக இருப்பாரே தமிழர் வேடம் போட்டு அமெரிக்காவில் இருக்கும் தமிழரும் நம்பும்படி தமிழின் பெருமையை பேசுவாரே இப்போது என்ன செய்ய?
அமெரிக்க தமிழர் சங்கத்தை ஆட்டையைப் போட்டு உள்ளவர்கள் தெலுங்கர்கள் அது உங்களுக்கு தெரியுமா என கேள்வி எழுப்பினேன்
இன்னும் நிறைய உதாரணங்களைக் காட்டி தெலுங்கர் முன்னேற்றக் கழகத்தை பிரித்து மேய்ந்து பேசினேன் அதையெல்லாம் எழுதினால் கட்டுரை பெரிதாகிவிடும் நன்றி

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...