அன்புள்ள நண்பருக்கு!
முக்குலத்தோர் ஒற்றுமையை வலியுறுத்தும் வண்ணமாக எனக்கு எனது இரண்டாவது கடிதத்தை எழுத வாய்ப்பளித்தமைக்காக உங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
அன்பு நண்பரே! சங்க காலத்தில் ஜாதிகள் இல்லை. குடிகளே இருந்தன. குடிகளிலிருந்து குலங்களும் ஜாதிகளும் கிளைத்தன. அதனுடன் சேவைக்குடிகளும் தோன்றின. அயலார் வருகையில் பல்வேறு புதுப்புது ஜாதிகள் தோற்றம் பெற்றன. 2ம் நூற்றாண்டில் குடிகள் மெல்ல மெல்ல ஜாதி நிலையை எய்தத் தொடங்கி சோழர்களின் காலத்தில் வேகமெடுத்தன. சோழர்களின் கடல்தாண்டிய படையெடுப்புகளாலும் புதிய தேசங்களை கைப்பற்றிய விளைவாலும் தமிழக்குடிகளுடன் சங்கமித்த குழுவினரின் எண்ணிக்கை பெருகத்துவங்கின. நாயக்கர் காலத்தில் புதுப்புது ஜாதிகளும் குலங்களும் வேறொரு பரிணாமத்தை நோக்கி பயணித்தன. வைதீக கோட்பாடுகளை மிகத்தீவிரமாக பின்பற்றிய சமய வளர்ச்சி, ஜாதிகளின் தோற்றங்களை புராணங்களில் வைத்து புளுகத் தொடங்கின. ஒவ்வொரு ஜாதியும் தத்தம் தோற்றங்களை கடவுளரிடமிருந்தும் வானுலக அமரர்களிடமிருந்தும் தொடங்குவது நியதியாகியது. ஆனால் மறக்குடிக்கு இப்படியான இத்யாதிகளும் சங்கதிகளும் தேவைப்படவில்லை! - ஏனெனில் இவர்களுக்கு சிறப்பான வரலாறு எப்போதும் இருந்தது. துளுவ வெள்ளாளர் மறவரிடமிருந்து தோற்றம் பெற்றதாக எதுவும் வெள்ளையர் சான்றுகள் கூட இல்லை. வேளாண் மரபு -போர்க்குலத்தவர் மரபு என இரண்டு வகைகளில் நடுவில் ஒரு மெல்லிய கோடுதான் உள்ளது. தஞசையில் கள்ளர்களும் அகம்படியார்களும் புதுக்கோட்டை-நெல்லை மறவர்களும் குடியான ஜாதிகளில் வைத்து பின்னாளில் எண்ணப்பட்டுள்ளனர்.
கள்ளர் மறவர் அகம்படியர் மூவரின் பண்பாட்டு கலாச்சார விகுதிகள் யாவும் ஒன்றாகவே உள்ளன. வடக்கில் வேண்டுமானால் அவை மறுபடலாம். பண்பாட்டு கலாச்சார விகுதிகள் இடங்களுக்கேற்பவும் மாறுபடும் தன்மையனவாகும். எடுத்துக்காட்டாக புதுக்கோட்டை மாவட்ட முக்குலத்தோர் பழக்க வழக்கங்கள் எதுவும் தென்பாண்டி சீர்மையின் முக்குலத்தோர்களிடம் இல்லை. இவற்றை வைத்து வெவ்வேறு மரபினர் என தீர்மானிப்பது தவறாகும். ஆநிரை கவர்ந்த மறவரும் அகம்படியரும் அச்செயலால் கள்ளர் எனும் பெயர் பூண்டது இயல்பாகவே நடந்த விஷயம். அவர்கள் அதில் நிலைத்து கள்ளர் எனும் இன்றைய ஜாதியாகியுள்ளனர்.
அன்பிற்குரிய நண்பரே! உண்மைகளை அறிய விரும்புகிறீர்கள் என உங்கள் கேள்விகளிலிருந்து நான் கருதுகிறேன். அதை நீங்கள் அறியவேண்டும் என்றால் ஆழமான வாசிப்புகளோடு நல்லோர் தொடர்புகளையும் வலுப்படுத்திக் கொள்ளுங்கள். உணர்வு வயப்பட்ட நிலையிலிருந்து நீங்கள் உங்களை அடிக்கடி நின்று நிதானித்து பயணிக்கப் பழக்க வேண்டும். நான் உங்களை தவறாக வழிநடத்தி விடமாட்டேன் என்று நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
எது உண்மையோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பண்பே உங்களை அடுத்தடுத்த நிலைகளுக்குக் கடத்திச் செல்லும். -நன்றி! உங்கள் வீட்டில் அனைவரது நலனையும் இந்த முகமறியாத அன்புச்சகோதரன் முகநூல் வழியாகக் கேட்டதாகச் சொல்லவும்.
என்றென்றும் அன்புடனும்....மாறாத அன்போடு உள்ளார்ந்த உண்மையுடனும் உங்கள் அன்புச் சகோதரருள் ஒருவன்!
கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.
முக்குலத்தோர் ஒற்றுமையை வலியுறுத்தும் வண்ணமாக எனக்கு எனது இரண்டாவது கடிதத்தை எழுத வாய்ப்பளித்தமைக்காக உங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
அன்பு நண்பரே! சங்க காலத்தில் ஜாதிகள் இல்லை. குடிகளே இருந்தன. குடிகளிலிருந்து குலங்களும் ஜாதிகளும் கிளைத்தன. அதனுடன் சேவைக்குடிகளும் தோன்றின. அயலார் வருகையில் பல்வேறு புதுப்புது ஜாதிகள் தோற்றம் பெற்றன. 2ம் நூற்றாண்டில் குடிகள் மெல்ல மெல்ல ஜாதி நிலையை எய்தத் தொடங்கி சோழர்களின் காலத்தில் வேகமெடுத்தன. சோழர்களின் கடல்தாண்டிய படையெடுப்புகளாலும் புதிய தேசங்களை கைப்பற்றிய விளைவாலும் தமிழக்குடிகளுடன் சங்கமித்த குழுவினரின் எண்ணிக்கை பெருகத்துவங்கின. நாயக்கர் காலத்தில் புதுப்புது ஜாதிகளும் குலங்களும் வேறொரு பரிணாமத்தை நோக்கி பயணித்தன. வைதீக கோட்பாடுகளை மிகத்தீவிரமாக பின்பற்றிய சமய வளர்ச்சி, ஜாதிகளின் தோற்றங்களை புராணங்களில் வைத்து புளுகத் தொடங்கின. ஒவ்வொரு ஜாதியும் தத்தம் தோற்றங்களை கடவுளரிடமிருந்தும் வானுலக அமரர்களிடமிருந்தும் தொடங்குவது நியதியாகியது. ஆனால் மறக்குடிக்கு இப்படியான இத்யாதிகளும் சங்கதிகளும் தேவைப்படவில்லை! - ஏனெனில் இவர்களுக்கு சிறப்பான வரலாறு எப்போதும் இருந்தது. துளுவ வெள்ளாளர் மறவரிடமிருந்து தோற்றம் பெற்றதாக எதுவும் வெள்ளையர் சான்றுகள் கூட இல்லை. வேளாண் மரபு -போர்க்குலத்தவர் மரபு என இரண்டு வகைகளில் நடுவில் ஒரு மெல்லிய கோடுதான் உள்ளது. தஞசையில் கள்ளர்களும் அகம்படியார்களும் புதுக்கோட்டை-நெல்லை மறவர்களும் குடியான ஜாதிகளில் வைத்து பின்னாளில் எண்ணப்பட்டுள்ளனர்.
கள்ளர் மறவர் அகம்படியர் மூவரின் பண்பாட்டு கலாச்சார விகுதிகள் யாவும் ஒன்றாகவே உள்ளன. வடக்கில் வேண்டுமானால் அவை மறுபடலாம். பண்பாட்டு கலாச்சார விகுதிகள் இடங்களுக்கேற்பவும் மாறுபடும் தன்மையனவாகும். எடுத்துக்காட்டாக புதுக்கோட்டை மாவட்ட முக்குலத்தோர் பழக்க வழக்கங்கள் எதுவும் தென்பாண்டி சீர்மையின் முக்குலத்தோர்களிடம் இல்லை. இவற்றை வைத்து வெவ்வேறு மரபினர் என தீர்மானிப்பது தவறாகும். ஆநிரை கவர்ந்த மறவரும் அகம்படியரும் அச்செயலால் கள்ளர் எனும் பெயர் பூண்டது இயல்பாகவே நடந்த விஷயம். அவர்கள் அதில் நிலைத்து கள்ளர் எனும் இன்றைய ஜாதியாகியுள்ளனர்.
அன்பிற்குரிய நண்பரே! உண்மைகளை அறிய விரும்புகிறீர்கள் என உங்கள் கேள்விகளிலிருந்து நான் கருதுகிறேன். அதை நீங்கள் அறியவேண்டும் என்றால் ஆழமான வாசிப்புகளோடு நல்லோர் தொடர்புகளையும் வலுப்படுத்திக் கொள்ளுங்கள். உணர்வு வயப்பட்ட நிலையிலிருந்து நீங்கள் உங்களை அடிக்கடி நின்று நிதானித்து பயணிக்கப் பழக்க வேண்டும். நான் உங்களை தவறாக வழிநடத்தி விடமாட்டேன் என்று நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
எது உண்மையோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பண்பே உங்களை அடுத்தடுத்த நிலைகளுக்குக் கடத்திச் செல்லும். -நன்றி! உங்கள் வீட்டில் அனைவரது நலனையும் இந்த முகமறியாத அன்புச்சகோதரன் முகநூல் வழியாகக் கேட்டதாகச் சொல்லவும்.
என்றென்றும் அன்புடனும்....மாறாத அன்போடு உள்ளார்ந்த உண்மையுடனும் உங்கள் அன்புச் சகோதரருள் ஒருவன்!
கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.
No comments:
Post a Comment