Saturday, May 18, 2019

மேலூர் தன்னரசுகள்ளர் நாட்டின் நில அளவு




தற்போதைய காலக்கட்டத்தில் மதுரையில் சொந்தமாக ஒரு 20செண்ட் நிலம் இருந்தாலே, அந்த குடும்பம் ஓரளவு வசதி உள்ள குடும்பமாக பார்க்கப்படுகிறது.
காலங்கள் தற்போது இப்படி இருக்க, பிரிட்டிஸ் அரசு மதுரையில் கிபி1763ஆம் ஆண்டு மேலூர் தன்னரசு கள்ளர்களை அடக்குவதற்கு கேப்டன் ரூம்லே என்கிற அதிகாரியுடன் கிட்டத்தக்க 10000 சிப்பாய்கள்,குதிரைப் படை வீரர்கள்,கனரக பீரங்கிகளுடன் உள்ளே நுழைந்து போரிட்டது, போரில் கள்ளர் நாட்டு தலைவர்கள் உட்பட ஆண்,பெண்,குழந்தைகள் என்று பாராமல் 5000பேர்கள் தோட்டங்களுக்கு இரையாக்கினான் கேப்டன் ரூம்லே.
இந்த இனப் படுகொலைகளுக்கு பின்பு கேப்டன் ரூம்லேவின் மேற்பார்வையில் மேலூர் தன்னரசு கள்ளர் நாட்டின் நிலங்களை மதுரை பிரிட்டிஸ் கவர்னர் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருகிறார்.
அவ்வாறு அளந்து எடுத்த கள்ளர் நாட்டின் நிலம் எவ்வளவு என்றால்.
நஞ்சை : 400 cheys
புஞ்சை : 20,000 kurkkam
ஒரு Chey என்பது அரை காணிக்கும் அதிகமானது, ஒரு காணி என்பது 1.25 ஏக்கர் ஆகும்.
ஆக ஒரு Chey என்பது 3/4 ஏக்கர் குறிக்கும்.
அப்போதை மேலூர் தன்னரசு கள்ளர் நாட்டின் நஞ்சை (வயல்) மட்டும் கிட்டத்தட்ட 300ஏக்கர் இருந்துள்ளது.
அதாவது 1.21 சதுர கிலோமீட்டர் இருந்துள்ளது.
அதேபோல் 20,000 kurkam நஞ்சை(காடு) இருந்துள்ளது.
ஒரு kurukkam என்பது ஒரு ஏக்கருக்கும் அதிகமானது.
20,000ஏக்கர் நஞ்சை நிலம் என்பது 80.93 கிட்டத்தட்ட 81சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.
இரண்டும் சேர்ந்து 82சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.
தற்போதைய மதுரை மாநகராட்சியின் பரப்பளவே 147.97 சதுர கிலோமீட்டர் என்பது கூடுதல் தகவல்.
ஆக மதுரை வட்டாரத்தின் பாதி பகுதிகள் கிபி1763க்கு முன்னாள் அனைத்தும் மேலூர் தன்னரசு கள்ளர் நாட்டின் நிலங்கள் என்பது ஆனித்தரமான உன்மையாக உள்ளது.
82சதுரகிலோமீட்டர் நிலப்பரப்பளவு என்பது மேலூர் கள்ளர் நாட்டின் நிலம் மட்டுமே.
இதுபோக
பிரமலை கள்ளர்களின் 8 நாட்டு நிலங்களையும் சேர்த்தால் மதுரை மீனாட்சியின் பூமி யாரிடம் இருந்தது என்பதை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.
சிவகங்கையில் 14 கள்ளர் நாடு உள்ளன என்பது கூடுதல் தகவல்
புதுக்கோட்டை எனும் ஒரு கள்ளர் மாநிலம் கிபி1947வரை இருந்துள்ளது.
தஞ்சையில் 13 கள்ளர் ஜமீனுடன் கம்பீரமாக இருந்துள்ளனர்.
மதுரையின் அந்த 82சதுரகிலோமீட்டர் நிலப்பரப்பளவின் இன்று இந்த சோழபாண்டியனுக்கு ஒரு 10செண்ட் நிலம் இருந்திருந்தால்....??????
நான் ஏன் கார்ப்ரேட் அடிமையாக வாழ வேண்டும்
நன்றி
Madurai Gazetteer revenue report
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...