Thursday, March 28, 2019

பாண்டியர் காலத்து கள்ளர் காவல்காரர்கள்



கிபி13ஆம் நூற்றாண்டு மதுரையை ஆட்சி செய்த ஜடாவர்ம பராக்கிர பாண்டியர் காலத்தில் திருப்புவனத்தில் ஊர்க்காவல் பணியில் குளமங்கலத்து நாட்டார் கள்ளர் பெருமக்கள் இருந்ததை மதுரைக்கு அருகில் உள்ள திருப்புவனம் அரங்கநாத பெருமாள் கல்வெட்டு மூலமாக தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

திருப்புவனம் அரையரிடமிருந்து திருப்புவனத்தில் ஊர்க்காவலில் இருந்த #குளமங்கலநாட்டார் கள்ளர்கள், ஊர்க்காவல் வரியாக தங்களுடைய கள்ளர் பெருமக்களின் தலைக்கல்யாணத்தில் பெண் பிள்ளைகளுக்கு சேலை மற்றும் திருமண செலவிற்காக நிலங்களை வரியாகவும்.

முதல் ஆண் பிள்ளைகளுக்கு திருமணச் செலவிற்காக நிலங்களை காவல் வரியாக பெற்றுள்ளனர்.

இதற்கு முன்பே பாண்டியர் காலத்தில் கள்ளர் பெருமக்கள் நிலக்கிழார்களாகவும்,தனிக் காணியுடைவர்களாகவும் இருந்ததை நான் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

ஆக பாண்டியர் காலத்தில் நாட்டாராகவும்,நாடாள்வாராகவும்,அரையராகவும்,காவக்காரர்களாகவும்,தளபதிகளாகவும் கள்ளர் பெருங்குடி இருந்துள்ளதை தொல்லியல் துறையினர் பல கல்வெட்டுகள் மூலமாக வெளியிட்டுள்ளனர்.

ஆனால் தங்களுடைய சொந்த குலத்தின் வரலாறு படிக்காததன் விளைவு, இன்று பல நயவஞ்சர்களால் கள்ளர் என்றால் திருடர் என கொக்கரிப்பதை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

வரலாறை படி
மக்களை படி
ரெளத்திரம் பழக வேண்டாம், அது உனக்கு இயற்கையாகவே உள்ளது.
அதனை தூசு தட்டி எழுப்பு

நன்றி
சு பன்னீர்செல்வம்
தமிழக தொல்லியல் துறை

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...