Saturday, March 16, 2019

நாயக்கர்பாளையம் : கள்ளர் பாளையக்காரர் சாவடி நாயக்கர்


தஞ்சை நாயக்கர் காலத்தில், அரசு அதிகாரியாக கள்ளர் குடியை சேர்ந்த அய்யம்பேட்டை சாவடி நாயக்கர் நியமிக்கபட்டவர்கள் (கள்ளர்-நாயக்கர் என்ற பட்டம்) . அய்யம்பேட்டை அவர்களுக்கு இனாம் கிராமம். முதல் மரியாதைக்கு உரியவர்கள்.

சத்ரபதி சிவாஜி மறைவை தொடர்ந்து அவர் மூத்த மகன் சத்ரபதி சமபாஜி மராட்டியத்தின் மன்னரானார். முஹலாய மன்னன் ஔரங்கசீப் சம்பாஜியை கொன்று மராட்டியத்தை கைபற்றினார். சிவாஜியின் ஆறாவது மனைவி சொயிராபாய் தன் மகன், மராட்டியத்தின் அடுத்த அரசன் ராஜாராம் என்கிற ராமராஜவுடன் தப்பித்து செஞ்சி வந்து, பின்னர் தஞ்சை மன்னர் எகோஜியிடம் பாதுகாப்பு கேட்டு வருகிறார்கள். தஞ்சை மன்னர் சிவாஜியின் தந்தை ஷாஜியின் முதல் மனைவி துக்காவுபாய் மகன். தன் சகோதரன் மனைவி, மகனை வரவேற்ற எக்கோஜி, அவர்களை தஞ்சை அருகில் உள்ள அய்யம்பேட்டையில் (ராமச்சந்திரபுரம் ) சாவடி நாயக்கர் பொறுப்பில் முழு பாதுகாப்புடன், அரச மரியாதையுடன் தங்கவைக்கிறார். அக்ரகாரத்தில் உள்ள ஸ்ரீ ராமஸ்வாமி கோயில் அருகில் வீடு, சேவகர்களுக்கான குடியிருப்பு ஏற்படுத்தி, சில காலம் சகல பரிவாரங்களுடன் தங்கி, அருகில் உள்ள கோயிலில், இழந்த ராஜ்ஜியத்தை மீண்டும் பெற வழிபாடு இயற்றி கொண்டிருந்தார்கள்.

ஔரங்கசீப் மறைவிற்குப்பின் மராட்டியம் திரும்பு கிறார்கள். சாவடி நாயக்கர் பொறுப்பில் பாதுகாப்பாக இருந்த, ராஜாராம் மராட்டியத்தின் மன்னனாகிறார்.




#சௌராஷ்டிர சமூக மக்கள் மானம் காத்த சாவடி நாயக்கர் :

‌சௌராஷ்டிர சமூக மக்கள் திருச்சி ஜில்லா அரியலூர் தாலுகாவில் வாழ்ந்து வந்தனர் இன்றளவும் பட்டுநூல்காரர் தெரு என்று இரண்டு தெருக்கள் உள்ளது செட்டிகுளம் என்ற ஊரிலும் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக யாரும் இல்லை என்ற எண்ணத்திலும் உடையார்பாளையம் ஜமீன்தார் சௌராஷ்டிர மக்களிடம் அவர்கள் வீட்டில் புதிதாக பூப்பெய்திய பெண்ணை ஜமீன்க்கு தரவேண்டும் என்று காம இச்சையுடன் கட்டளை இட்டான்.

இது நாள் வரை பல நாடுகள் கடந்து வந்த சௌராஷ்டிர மக்களுக்கு ஏற்படாத சோதனை உடையார்பாளையம் ஜமீன் மூலம் ஏற்பட்டது. சௌராஷ்டிர சபையார் கூடி என்ன செய்வது என்று விவாதித்தனர். நாளைய தினம் ஒரு புது பெண்ணை அனுப்பவேண்டுமே என்று கலங்கி நின்றனர். அப்போது நம்மில் மந்த்ர தந்த்ரம் தெரிந்த சௌராஷ்டிர பிராமிணர்கள் ஒரு உபயம் செய்தனர். மாவினால் ஒரு பெண் உருவத்தை பிண்டமாக செய்து அதை உடையார்பாளையம் ஜமீன் அனுப்பி வைத்த பல்லக்கில் ஏற்றி அனுப்பிவிட்டு , சௌராஷ்டிரர்கள் தத்தம் உடைமைகளை எடுத்துக்கொண்டு ஊரை காலி செய்து விட்டு தஞ்சையை நோக்கி கால்நடையாக கிளம்பிவிட்டனர்.

‌போகும் வழியில் திருமானுர் ஏலாகுறிச்சி அருகே ‘கொள்ளா நீரும் கொள்ளும் இடம்’ என்பார்கள் கொள்ளிடத்தை. கரை புரண்டு ஓடி காவியங்களில் இடம்பெற்ற அந்தக் கொள்ளிடத்தின் வடகரையில் நாயக்கர்பாளையம் என்ற பகுதியில் சாவடி நாயக்கர் பெயரை உடைய ஜமீன் நீதி வழுவாது ஜமீனை பரிபாலனம் செய்து வந்தார். அவரிடம் சௌராஷ்டிர சமூக மக்கள் சரணடைந்த போது , சௌராஷ்டிர சமூக குழந்தைகள் பெண்கள் வயதானவர்கள் அனைவரும் சோர்வுற்ற நிலையில் இருத்ததை கண்ணுற்று அனைவர்க்கும் உணவு படைத்து அஞ்சாதீர் எனக்கு சொந்தமான சாவடி ஒன்று அய்யம்பேட்டை அருகில் உள்ளது அந்த இடத்தில் நீங்கள் குடியேறி நிம்மதியாக வாழலாம் என்று ‌ மனோஜியப்பா சாவடியில் சௌராஷ்டிர மக்களை குடியமர்த்தியோதோடு அல்லாது இவரும் சாவடியில் தாங்கினார்.

‌உடையார்பாளையம் ஜமீன் பல்லக்கில் சென்ற பெண் உருவத்தை ஜமீன் ஆசையோடு நெருங்கியபோது அந்த பெண்ணுருவம் கீழே விழுந்து விட்டது. முதலில் பயந்த ஜமீன் பிறகு சுதாரித்து சௌராஷ்டிரர்கள் நம்மை ஏமாற்றிவிட்டானர் என்று கொதித்து எழுந்தான். அவர்கள் எங்கு சென்றாலும் விடமாட்டேன் என்று சூளுரைத்து தன் வீரர்கள் மூலம் தேடுதல் வேட்டையை தொடங்கினான்.

சௌராஷ்டிரர்கள் தஞ்சை‌க்கு அருகே அய்யம்பேட்டை மனோஜியப்பா சாவடியில் பிரதாப சாவடி ஐயாவின் ஜமீனில் அடைக்கலம் பெறுள்ளனர் என்ற செய்தியை அறிந்து உடையார்பாளையத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு சாவடி ஐயா வீட்டிற்கு வந்தான். சாவடி ஐயாவும் உடையார்பாளையம் ஜமீனை வரவேற்று உணவு உண்ண அழைத்தார். ஊர் மக்களும் என்ன நடக்கபோகிறது என்று பதைத்து நின்றனர். சாவடி ஐயா தன் பணியாள் மூலம் பேயன் வாழை இலையை பறித்து வரசெய்து அதில் உணவு பரிமாறினார். பேயன் வாழை இலை மிகவும் பெரியதாக இருக்கும். உடையார்பாளைய ஜமீன் அமர்ந்து உணவு அருந்த கைக்கு எட்டாத தொலைவில் இருந்தது.

‌என்ன ஐயா எட்டவில்லை என்று உடையார்பாளையம் ஜமீன் கேட்டபோது ஆமாங்க ஐயா உங்களுக்கும் எங்களுக்கும் எட்டதுங்க என்று கூறிவிட்டார். கோபத்துடன் உடையார்பாளையம் ஜமீன் வெளியேறினான். அவனுடன் நமது சாவடி ஐயாவின் ஒற்றனையும் கலந்து அனுப்பிவிட்டார். உடையார்பாளையம் ஜமீன் போகும் வழியில் தன் வீரர்களிடம் இன்னும் இருவாரத்தில் சாவடி ஐயாவின் தலையை கொய்துவிட்டால் இந்த சௌராஷ்டிர மக்கள் அதன்பின் என்னிடம் என்ன பாடுபடபோகிறார்கள் என்று ஆணவ சிரிப்பு உதித்தான்.

‌விவரங்கள் யாவும் தன் ஒற்றன் மூலம் அறிந்த நமது சாவடி ஐயா தன்னுடைய ஆளை அனுப்பி உடையார்பாளையம் சென்று உடையார்பாளையம் ஜமீன் தலையை கொய்து எடுத்து வந்து சாவடியில் வைத்து சௌராஷ்டிர மக்களின் பயம் கலையப்பட்டது.

சௌராஷ்டிர சமூக மக்கள் தமக்குள் உள்ள சர்ச்சையை சாவடி ஐயாவிடம் முறையிட்டு தீர்த்து கொள்வர். கிருஷ்ணன் கோவில் கட்ட இடம் தந்து சௌராஷ்டிர சமூக மக்களை பல இன்னல்களில் காத்ததால் பிரதாப சாவடி ஐயாவிற்கு கோவில் முதல் மரியாதை பரிவட்டம் முதலான சம்பிரதயங்கள் இன்றும் தரப்படுகிறது. அவரது முழு பெயர் தெரிந்தாலும் ஐயா என்றே அனைவரும் அழைக்கின்றனர்.

செப்பேடு உதவி : ஆய்வாளர் ஐயா உயர்திரு. செல்வராஜ் நாயக்கவாடியார்

தகவல் உதவி : திரு. கோபி ஸ்ரீனிவாசன் (சௌராஷ்டிரர்)

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...