சில வரலாற்று சிறப்புமிக்க பட்டயங்களை பார்க்கும் போது சில புதிர்களை உடைத்தெரிகிறது.
அப்படிப்பட்ட பட்டயம் தான் “நாட்டார் பட்டயம்”
கிபி1853ஆம் ஆண்டு சித்திரை 24ம் தேதி சர்க்கரைப் புலவர் இயற்றிய இராமயண பிரசங்கத்திற்காக தானமளித்த நாட்டார் பட்டயம் ஆகும்.
இதில் அஞ்சுகோட்டைப் பற்று நாட்டார்களாகவும், அம்ப்லங்களாகவும் கள்ளர், மறவர்கள் மற்றும் பிள்ளைமார்கள் வருகிறார்கள், இப்பட்டயத்தில் கள்ளர், மறவர் என பிரிக்காமல் அம்பலகாரர்கள் என ஒரு குடையின் கீழ் வருவது தனிச் சிறப்பாக உள்ளது.
மேலும் இதில் கிளைவழி கள்ளர் அம்பலகாரர்களுக்கு தேவர் பட்டம் வருவது பல புதிருக்கு விடை தருகிறது.
அனைத்தையும் விட என்னிடம் கப்பலூர் வள்ளல் ஐயா கருமாணிக்கத் தொண்டைமான் வம்சத்தை சேர்ந்த கரிய மாணிக்கம் இராமசாமி அம்பலம் அவர்கள் அவர்களுடைய குடும்ப பெயர் கரி(ரு)யமாணிக்கம் என்று கூறிய உன்மை நிரூபிக்கப்படுகிறது.
ஏனென்றால் இந்த பட்டயம் கிபி 1853 காலத்ததைச் சேர்ந்தது. இப்போது உள்ள அவரின் தலைமுறைக்கு சுமார் 5 தலைமுறைக்கு முந்தையது.
இப்போது அவரின் பெயர்
கரிய இராமசாமி அம்பலம்
தந்தை கரிய மாணிக்கம் அம்பலம்
தாத்தா கரிய இராமசாமி அம்பலம்
கொள்ளுத் தாத்தா கரியமாணிக்கம் அம்பலம் என்றார்.
இப்போது அவரின் கொள்ளுத் தாத்தாவின் முன்னோர் பெயரும் அதையே தாங்கி நிற்கிறது என்பது கப்பற் கோவையின் நாயகர் கப்பலூர் கருமாணிக்கத் தொண்டைமான் வம்சாவழியை இன்னும் உறுதிபடுத்துகிறது.
இதுபோக படை கண்டான் அம்பலம் எனப்படுகிற கண்ணங்குடி கள்ளர் அம்பலத்தின் குடும்ப பெயரும் அதையே தாங்கி நிற்கிறது, 800 வருடத்திற்கு முந்தைய சிங்களப் படையெடுப்புக்கு இதே பெயர் தமிழ் படைத்தளபதியாக வருவது இன்னும் வியப்பளிக்கிறது.
நாட்டார் பட்டயத்தில் வரும் அம்பலகாரர் பெயர்கள்:
கள்ளர் அம்பலங்கள்:
கரியமாணிக்கம் (கப்பலூர்)
படைகண்டான் (கண்ணங்குடி)
ஆண்டியப்பன் அம்பலம் (ஆற்றங்கரை மாகாணம்)
அனுமத்தேவன் (இறகுசரி)
திடக்கோட்டை தேவன் (வெங்கலூர்)
மல்லித்தேவன் (வெங்கலூர்)
திருக்காட்டி தேவன் (வெங்கலூர்)
உடைச்சி (இலுப்பைகுடி)
ஆண்டான் (ஆயங்குடி)
சின்ன கள்ளப்பத்தான் (ஆலம்பாடி)
பொன்னாண்டான் (கப்பலூர்)
முன்னையன் (களபத்தூர்)
உடைச்சியன் (சிறுகல்)
வணங்காமுடி (அனுமந்தகுடி)
சாத்தப்பன் (திருப்பாக்கோட்டை)
கருதேவன் (மணக்குடி)
மறவர் அம்பலங்கள்:
உடையார் (ஓரியூர்)
வெள்ளையத் தேவன் (பஞ்சாவயல்)
சுப்பாத்தேவன் (பஞ்சாவயல்)
வடுகத் தேவன் (நாலூர்)
கோரணி (பனங்குளம்)
வளை சித்திரன் (திருத்தல்)
சீனி (திருத்தல்)
கருமலைத்தேவன் (அஞ்சுகோட்டை)
சின்னாதித்தேவன் (அஞ்சுகோட்டை)
மல்லாரித் தேவன் (பிள்ளையாரேனேந்தல்)
ராக்கத்தேவன் (கிளியூர்)
மன்னங்காரன்
கருப்பன் (மருதங்குடி)
கட்டத்தேவன் (ஆக்களூர்)
ஆவணியாத்தேவன் (ஆக்களூர்)
பேயத்தேவன் (ஆக்களூர்)
மேலும் சில அம்பலங்களின் ஊர்கள் இன்று மருவியுள்ளதால் அடையாளம் காண முடியவில்லை.
மருவிய ஊர் பெயர் யாருக்காவது தெரிந்தால் என்னிடம் தகவல் கொடுங்கள், மேலும் இதில் வரும் அம்பலங்களின் குடும்பங்கள் யாராவது இருந்தாலும் தகவல் கொடுங்கள்.
தகவலுக்காக காத்திருக்கிறேன்
குறிப்பு: இச்சிறப்பு மிக்க நாட்டார் பட்டயம் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
நன்றி
தமிழக தொல்லியல் துறை
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
No comments:
Post a Comment