Saturday, March 2, 2019

சூரைக்குடி தொண்டைமான் - ஒரு தீர்வு


சோழர் ஆட்சிக்கு பின்பு 12 ஆம் நூற்றாண்டில் இருந்து 20ஆம் நூற்றாண்டு வரை அறியப்படும் தமிழகத்தின் கடைசி தொண்டை மன்னர்கள் மொத்தம் 4பேர்.

1.அறந்தாங்கி தொண்டைமான்
2.கருமாணிக்க தொண்டைமான்
3.சூரைக்குடி தொண்டைமான்
4.புதுக்கோட்டை தொண்டைமான்

இவர்கள் நால்வரும் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று முன்னாள் தொல்லியல் துறை இயக்குனர் புலவர் இராசுவின் புத்தகம் மூலமாகவும்,பல கல்வெடு மூலமாகவும்,இன்றைய கள்ளர்களின் மானுடவியல் மூலமாகவும் அனைவரும் ஏற்றுக்கொண்ட விடயம்.

அறந்தாங்கி தொண்டைமான் அரசரின் வாரிசு இன்று பாலைவன ஜமீந்தார் இன்றும் கள்ளராகவே வாழ்ந்து வருகிறார்.

கருமாணிக்க தொண்டைமான் அரசரின் வாரிசு இன்று கப்பலூர் நாட்டு அம்பலமாக இன்றும் கள்ளராகவே வாழ்ந்து வருகிறார்.

புதுக்கோட்டை தொண்டைமான் அரசரின் வாரிசைப் பற்றி சொல்லவே வேண்டாம் அவர்களும் கள்ளராகவே வாழ்ந்து வருகிறார்.

சூரைக்குடி தொண்டைமான் அரசு கள்ளர் மக்களோடு மக்களாக கரைந்து விட்டதால் வாரிசுதாரரை அடையாளம் காண முடியாத சூழலில் இருந்தாலும் ஆதாரங்கள் அடிப்படையில் அவரும் கள்ளர் குடியே.

அதலையூர் நாடாள்வார், அரையர், பேரரையர் என்றும் அஞ்சுக்குடி அரையர்,வன்னியனார் என்றும் சுரைக்குடி தொண்டைமான் குறிக்கப்படுகிறார்.

சூரைக்குடி தொண்டைமானாரை பற்றிய என்னுடைய பழைய பதிவை புரட்டினாலே தெரியும்.

கிபி 1891 வரை கள்ளர்களில் ஒரு பிரிவினர் அதலையூர் கள்ளர்கள் என்றே வாழ்ந்துள்ளனர்.

புதுக்கோட்டையில் 300க்கும் மேற்பட்ட வன்னியர் பட்டம் தாங்கிய கள்ளர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.

கள்ளர் பற்றை தானமாக வழங்கியதற்கு அதழையூர் நாடாள்வார் கையொப்பம் இட்டுள்ளார்.




கிபி 1359ல் சூரைக்குடி கள்ளர் பற்றை துக்ளக் படைகள் அழித்த சான்றும் உள்ளது.

கண்டதேவி கல்வெட்டில் கள்ளர் தலைவராக வன்னியர் குறிக்கப்பட்டுள்ளார்.

அம்புகோவில் கல்வெட்டில் அஞ்சுக்குடி அரையர் கள்ளர் என்றும் குறித்துள்ளது.

கிபி1891ல் அஞ்சுவர் நாட்டு கள்ளர்கள் தனியாகவே குறிக்கப்பட்டுள்னர்.

இது போக தொண்டைமான் என்றாலே கள்ளர் சமூகத்தவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகவே உள்ளது.

ஆனால் ஒரு கல்வெட்டு கிட்டத்தட்ட 3ஆண்டுகளாக முக்குலத்தோர் பிளாக்குகளில் சூரைக்குடி தொண்டைமான் மறவர் என்று கூறி வருகிறார்.

மறவர்கள் கள்ளர்களின் பாகப்பிரிவு பங்காளிகள் என்பது மறுக்க முடியாத கருத்து தான்.

அவர்கள் கூறும் கல்வெட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆரியூர் என்கிற கிராமத்தில் ஈஸ்வரர் கோவிலுக்கு கொடையளித்த செய்தியில் இருந்து காண்பிக்கிறார்கள்.

அதாவது “மாங்குடி மறவன் அவையன் சாத்தன் அதலையூர் பேரரையன்” என்று உள்ளது அதனால் அவர் மறவர் சமூகத்தை சேர்ந்தவர் என்று கூறி வருகிறார்கள்.

அவர்கள் காட்டும் ஆதாரத்தில் உண்மையாகவே அந்த கல்வெட்டில் “மாங்குடி மறவன் அவையன் சாத்தநா...., அதலையூர் பேரரையர்நும்” என்று உள்ளது

இந்த கல்வெட்டில் மாங்குடி மறவனும், அதலையூர் பேரரரையரும் தனித்தனியாக தானம் செய்துள்ளனர்.

மேலும் அந்த கல்வெட்டை வரலாற்று ஆர்வலர் சியாம் சுந்தர் சம்பட்டியார் ஆரியூரில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு நேரடியாக சென்று அதனை படம் எடுத்து இருவரும் தனித்தனியாகவே வருகிறார்கள் என்று ஆதாரத்தையும் கொடுத்துள்ளார்.

உயிரோட்டம் உள்ள அந்த கல்வெட்டில் “மாங்குடி மறவன் அவையன் சாத்தநாநும், அதலையூர் பேரரையநும்” என்று தனித்தனியாகவே வருகிறார்கள்.

மேலும் கல்வெட்டில் வரும் இந்த மாங்குடி மறவன் என்பவர் ஆரியூரில் இருந்து வெரும் 2 கிலோமீட்டர் தொலைவில் தான் மாங்குடி ஊர் உள்ளது.

ஆக ஒரு கள்ளரும்,மறவரும் சேர்ந்து ஒரு சிறிய கோவிலுக்கு கொடையளித்துள்ளனர்.

இது ஒரு ஒற்றுமையின் அடையாளம் ஆனால் இதை வைத்துக்கொண்டு தொண்டைமான் என்றாலே மறவர் தான், கள்ளர் என்போர் களவாணிப் பயல் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்.

சரி இது கள்ளர்,மறவருக்கு நடக்கும் பங்காளிப் பூசல் அது எப்பவும் நடப்பது தான். ஆட்டுக்கறிக்கு அடித்துக் கொள்வார்கள், கோழிக் கறிக்கு கூடிக்கொள்வார்கள்.

இந்த கல்வெட்டை வைத்து வல்லம்பர்களில் சிலர் அதில் சாத்தான் என்று வந்துள்ளது, சாத்தான் வணிகத்தலைவர், வணிகத்தலைவர் என்றாலே நாங்கள் தான் ஆகையால் சூரைக்குடி தொண்டைமான் வல்லம்பர் என்று ஒரு புறம் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இது எந்தவிதத்தில் நியாயம்..?

வேறு ஏதாவது ஆதாரம் இருந்தால் நீங்கள் தாராளமாக உரிமை கோரலாம்.

இனிமேல் இந்த ஆதாரத்தை தூக்கிக் கொண்டு வர வேண்டாம், உங்கள் மானசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.

குறிப்பு: நாகரீகமான விவாதத்திற்கு தயார்.

நன்றி
உயர்திரு சியாம் சுந்தர் சம்பட்டியார்

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...