சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், அளகாபுரி அளகமணீஸ்வரர் கோவில் கல்வெட்டில்.
பாண்டிய மன்னர் ஶ்ரீசுந்தரபாண்டித் தேவர் ஆட்சியாண்டான கிபி1228ஆம் ஆண்டு தேவதானமாக ஊர் நிலங்கள் கிளிப்பற்றுடையானுக்கு வழங்கப்படுகிறது.
கல்வெட்டில் உள்ள விளக்கமானது அதளையூர் நாடாள்வார் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் கேரளசிங்க வளநாட்டு (புதுக்கோட்டை, சிவகங்கை) சேர்ந்த கிளிப்பற்றுடையானுக்கு தேவதானமாக,அதளையூர் நாடாள்வாரின் கோவில் நிலங்கள் மற்றும் கள்ளர் நிலங்களைத் தவிர்த்து அனைத்து நிலங்களும் கிளிப்பற்றுடையாருக்கு தானமாக அளிக்கப்படுகிறது. தானமாக வழங்கப்பட்ட நிலங்களில் இருக்கும் வரிகள் அப்படியே இருக்க கடவாராகவும் உள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோர்:
அதளையூர் நாடாள்வார் (தொண்டைமான்)
முனையத்தரையர்
சுந்தரபாண்டிய விழுப்பரையர்
வாதராஜன்
திருமலையுடையான் சேதிராயர்
பல்லவரையர்
குறிப்பு: ஏதோ கள்ளர்கள் திருடர்கள் என்று பிதற்றும் மூடர்களே, பாண்டிய மன்னர் காலத்திலே கள்ளர்களுக்கென்று தனிக்காணி நிலம் இருந்துள்ளது, அதுபோக கள்ளர் காணி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருந்தால் அது கோவில் நிலத்திற்கு கொடுக்கப்பட்ட நிலத்தோடு சேர்த்து ஒப்பீடு செய்யப்படுகிறது. இதில் வரும் கள்ளர் காணி முறையே ஏழுகிளை கள்ளர்கள், புதுக்கோட்டை கள்ளர்கள், மல்லாக்கோட்டை கள்ளர்கள் என கலந்து வரும் நில எல்லையாக வருவது தனிச்சிறப்பு.
மேலும் இதில் வரும் விழுப்பரையர், முனையத்தரையர், அதளையூர் நாடாள்வார், சேதிராயர், பல்லவரையர் முதலானோர் கள்ளர் சிற்றரசர்கள் என்பது தனிச்சிறப்பு.
கல்வெட்டு :2
மன்னர் : சுந்தரபாண்டித் தேவர்
ஆட்சியாண்டு : கிபி1231
அதே கேரளசிங்க வளநாட்டு கிளிப்பற்றுடையானுக்கு தானமாக அதலையூர் நாடாள்வாரின் ஆட்சி பகுதியில் உள்ள கோவில் நிலம் மற்றும் கள்ளர் காணியயும் நீக்கி வழங்கப்படுகிறது.
கையொப்பம்:
அதளையூர் நாடாள்வார்(தொண்டைமான்)
கள்ளர் படைப்பற்று, கள்ளர் காணி என்று இராணுவம், நிர்வாகமும் சோழ, பாண்டியர் காலத்திலே கள்ளர் பெருமக்கள் எவ்வளவு வலிமையாக அரையர்களாகவும், மன்னர்களாகவும், தளபதிகளாகவும், நாடாள்வார்களாகவும் வாழ்ந்துள்ளதை இன்றுள்ளவர்கள் மறைக்கலாம், மறுக்கலாம்.
ஆனால் வரலாற்று தாய் யாருக்காகவும் அதை வளைக்க மாட்டாள்.
நன்றி
தமிழக தொல்லியல் துறை
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
No comments:
Post a Comment