தமிழின விரோத கருத்துக்களால் பெரியார் என்ற ஈரோடு வெங்கட்ட ராமசாமி நாயக்கர் தமிழர்களுக்கு பெருந்தீங்கு செய்திருக்கிறார் என்பதை இன்று தமிழ் மக்கள் புரிந்து ஈவெராவை அடையாளம் கண்டுள்ளனர். அதுபோல அடையாளம் காண வேண்டிய கடந்த காலத் தலைவர்தான் காமராஜர். இவர் ஈவெராவுடன் இணக்கமாக செயல்பட்டார் என்பதற்காக இதனைச் சொல்லவில்லை.
இவர் தமிழ் மண்ணை அண்டை மாநிலங்கள் பறிப்பதை வேடிக்கை பார்த்தவர் ஆவார். அதுபற்றி கேட்டபோது
மேடாவது குளமாவது என்று எள்ளி நகையாடியவர் ஆவார். தமிழ் மொழியை அலட்சியப்படுத்தி இந்தியை கற்கவேண்டும் சொன்னவர் ஆவார். அதைவிட முக்கியமான விஷயம் தமிழினத்தின் முக்கிய இனக்குழுக்களான மறவர்-பள்ளர் இடையே பகைமை ஏற்பட காரணமாக இருந்தவர். அதுவே இன்று பட்டியல் சாதியினர் - முக்குலத்தோர் இடையேயான பகைமையாக மாறி நிற்கிறது. இவர் முதுகுளத்தூர் கலவரத்தை உருவாக்கி இந்தப் பகைமையை ஏற்படுத்தினார். முதுகுளத்தூர் கலவரம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துணை நிற்பதாகக் கூறிக் கொண்டு மறவர்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட அரச பயங்கரவாதம் ஆகும். (அதற்கான பலனை அந்த ஆட்சியாளர்கள் பெற்றார்கள் என்பது வேறு விஷயம்). தமிழ் மக்கள் இதனை உணராமல் இந்தப் பகைமை போகாது. எனவே தமிழ் மக்கள் காமராஜரின் ஆட்சிகாலத்தை, செயல்பாடுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு பேசுவது, நாடார் - முக்குலத்தோர் இடையே பகைமையை ஏற்படுத்தும், எனவே காமராஜர் தமிழ் மக்களுக்கு செய்த துரோகத்தைக் கண்டுகொள்ளாமல் செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள். உண்மையில் தமிழின நலன் என்று வரும்போது தமிழ் மக்கள் தங்கள் சொந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களை தூக்கி எறிவார்கள், தூக்கி எறிய வேண்டும். அந்த வகையில் நாடார் மக்களும் காமராஜரை அடையாளம் கண்டு அவ்வாறு செய்வார்கள் என்று நம்புவோம்.
ஈவெராவை அடையாளம் காணாமல் தமிழின மீட்சி எவ்வாறு சாத்தியமில்லையோ அதுபோலவே காமராஜரை அடையாளம் காணாமல் பட்டியல்சாதி மக்கள் மற்றும் முக்குலத்தோர் இடையேயான பகைமை போகாது.
முதன் முதலில் ஈவெரா பற்றிப் பேசியபோது நாயக்கர் மக்களின் பகைமையை சம்பாதிக்க வேண்டும் என்று சிலர் சொன்னார்கள். இன்று ஈவெராவின் இரண்டகங்களை அவர்களும் புரிந்துகொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். காமராஜர் விஷயத்திலும் அதுவே நடைபெறும்.
No comments:
Post a Comment