படத்தில் இருப்பவர் எலும்பு வைத்தியர் காசி விஸ்வநாதன்.
இவர் மதுரையைச் சேர்ந்தவர். இவர் மதுரை மட்டுமல்லாமல் வடுகபட்டி, பெரியகுளம், சின்னமனூர்
ஆகிய ஊர்களில் எலும்பு வைத்தியம் செய்து வருகிறார்.
இவரது தாத்தா காலத்திலிருந்து இவர்கள் இந்தத் தொழிலைச்
செய்து வகிறார்கள். இவரது தந்தைக்குப் பின் இவர் தனது வைத்திய சேவையை தொடர்கிறார்.
பொதுவாக இவர்களின் வைத்திய முறை நமது பாரம்பரிய வைத்திய முறையாகும். எலும்பு
முறிவுகளுக்கு கட்டுப் போட்டு மருந்து கொடுப்பார்கள்.
ஆங்கில வைத்தியம் என்பது உடலைக் கிழித்துச் செய்வது. நமது
பாரம்பரிய வைத்தியம் வெளிப்புறம் இருந்தே சிகிச்சை அளிப்பது. ஆங்கில வைத்தியர்கள்
எலும்பு முறிவை எக்ஸ்ரே எடுத்து அதன் அடிப்படையில் கட்டுப் போடுதல், அறுவைச்
சிகிச்சை செய்தல்,
முறிந்த எலும்புகளை போல்ட்-நட் போட்டு இணைத்தல் போன்ற
சிகிச்சை முறைகளைப் பின்பற்றுகிறார்கள். பெரும்பாலும் ஆங்கில வைத்திய முறையை
சிகிச்சை என்று சொல்வதை விட சித்ரவதை என்றே சொல்லலாம். இது போன்ற இணைப்புகளால்
அந்த உறுப்புகள் இணைக்கப்பட்டிருக்குமே தவிர செயலற்றதாக இருக்கும். ஆனால் பாரம்பரிய
வைத்திய முறையில் அந்த உறுப்பு மீண்டும் இயங்கத் தொடங்கும்.
அப்படி பலரும் தங்கள் எலும்பு முறிவுகளை ஆங்கில வைத்திய
முறையில் சரி செய்ய முடியாமல் பெரும் பணத்தை இழந்து இவரிடம் வந்து சிகிச்சை
பெற்றுக் கொள்வதைக் காணலாம். பாரம்பரிய வைத்திய முறையில் வைத்தியத்திற்காக
சிறிதளவு செலவு செய்தாலே போதுமானது.
ஒருநாள் காலையில் எழும்போது என் மனைவியால் நிமிர
முடியவில்லை கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனே நாங்கள் வழக்கமாக
சிகிச்சை எடுத்துக் கொள்ளும் ஆங்கில வைத்தியரிடம் காட்டினோம். சோதனை செய்த
மருத்துவர் முதுகெலும்பு டிஸ்க் லேசாக விலகியுள்ளது. மூன்று நாட்கள் ஊசி போட்டால்
சரியாகிவிடும். பின்னர் பெல்ட் போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதன்படி
தினமும் 2 ஊசி என்ற கணக்கில் 3 நாட்கள் தொடர்ந்து ஊசி போட்டுக் கொண்டோம் வலி குறைந்தாலும் நிற்கவில்லை. பெல்ட் போட்டுக் கொள்ளச் சொன்னார். பெல்ட் போட்டும்
பலனில்லை.
அதுபற்றி சொன்னதும் இனி எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து அறுவைச்
சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சொன்னார். எந்த வழியிலும் அது
விரும்பத் தகாத ஒன்றாகவே இருக்கும் என்பதை உணர்ந்தோம். இது பற்றி நண்பர்கள்
சிலரிடம் விசாரித்தபோது எலும்பு வைத்தியர் காசி விஸ்வநாதனைப் பற்றிச் சொன்னார்கள்.
அவர்கள் சனிக்கிழமை தோறும் எங்கள் ஊரின் அருகேயுள்ள வடுகபட்டி, பெரியகுளத்திற்கு
வந்து சிகிச்சை அளித்து வருவது தெரிந்தது.
அவரைச் சந்தித்து ஆங்கில வைத்தியர் சொன்ன தகவலைச் சொன்னோம்.
முதுகெலும்பு விலகி இருந்தால் உங்களால் நகரக் கூட முடியாது என்று சொன்ன அவர்
முதுகு சவ்வு விலகி இருக்கிறது. வாரம் ஒருமுறை கட்டுப் போட வேண்டும். 3 முறை
கட்டுப்போட்டால் சரியாகிவிடும் என்று சொன்னார். அதன்படி அவர் கட்டுப் போட்டு
மருந்துகளைக் கொடுத்து அனுப்பினார்.
சரியாக ஒரு மாத காலத்திற்குள் சரியாகி விட்டது.
இவ்வாறு கட்டுப் போடச் சென்றபோது பனை மரத்தில் இருந்து
விழுந்து கை எலும்பை முறித்துக் கொண்ட ஒருவர் சிகிச்சைக்காக வருவதை பார்க்க
முடிந்தது. அவர் மதுரையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து ஓரிரு
லட்சங்களை இழந்திருந்தார்.
முறிந்த எலும்பில் நான்கு துளைகளைப் போட்டு எலும்புகளை
இணைக்க முயன்றிருந்தார்கள். அதற்கான எக்ஸ்ரேக்கள் அவரிடம் இருந்தன. எலும்பு
இணைக்கப்பட்டிருந்தது ஆனால் கை செயலற்று இருந்தது. அதைப் பார்த்த வைத்தியர் கையை
சரி செய்து விடலாம் என்று சொல்லி கட்டுப்போடும் வேலையைத் துவங்கினார். இன்று
வைத்தியரைச் சந்தித்த போது அந்த நபர் தேறி வருவதாகச் சொன்னார்.
எலும்பு தொடர்பான சிறு
வலி, முதல் முறிவு வரை இவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை செய்து கொள்ளலாம். எலும்பு
வைத்தியம் முக்கியமாக இருந்தாலும் இவர் மற்ற நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கிறார்.
மதுரை, தேனி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக இவரை அணுகலாம். வைத்தியரின்
தொடர்பு எண் 99426
47440
No comments:
Post a Comment