தமிழ்நாட்டிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தமிழருடையது என்றிருந்தேன்,
தமிழ்நாட்டிலுள்ள தொழில் நிறுவனங்கள் அனைத்தும் தமிழருடையது என்றிருந்தேன்,
தமிழ்நாட்டிலுள்ள உணவகங்கள் அனைத்தும் தமிழருடையது என்றிருந்தேன்,
தமிழ்நாட்டிலுள்ள ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் அனைத்தும் தமிழருடையது என்றிருந்தேன்,
தமிழ்நாட்டிலுள்ள பொட்டிக்கடைகளையும் உள்ளடக்கி வர்த்தகம் அனைத்தும் தமிழருடையது என்றிருந்தேன்,
தமிழ்நாட்டிலுள்ள தனியார் மற்றும் அரசு பணியாளர்கள் அனைவரும் தமிழர்தான் என்றிருந்தேன்,
தமிழ்நாட்டின் நிலங்கள் அனைத்தும் தமிழருடையது தான் என்றும், உழவர் சங்கத்தலைவர்கள் அனைவரும் தமிழர்தான் என்றிருந்தேன்,
அதுபோக தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் அனைத்திலும் தமிழர் தலைமைதான் என்றிருந்தேன்,
இதுபோக இன்னும் விடுபட்டுள்ள அனைத்திலும் தமிழர்தான் ஆதிக்கத்தில் உள்ளனர் என்றிருந்தேன்,
இப்போதுதான் கொஞ்சம் தடுமாற்றம் வந்தது, எல்லாத்திலும் தமிழராக இருந்திருந்தும் பின்பு ஏன் ஈழம் சுடுகாடாகியது,தமிழ்நாடு ஆகிக்கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுந்தது,
கேள்விக்கான விடையை தேடும்போது ஆதிக்கத்திலுள்ள ஒரு கருத்தியலின் சித்தாந்தம் இறுதியாக சாதியொளிப்பில் நின்றது,
எதற்காக இந்த சாதியொளிப்பு நாடகம் என ஆராய்ந்து ஆணிவேரை பிடித்திழுக்க முயன்றால், அவ்வேரை வலுவாக பிடித்திருந்தது தமிழரல்லாத வேற்றினச் சாதிகள்,
பிறகுதான் அரசியலையும், அரசியல் அதிமுக்கிய தலைகளின் பூர்வீகத்தையும், ஒவ்வொரு துறையிலும் ஊடுறுவியிருந்த வேற்றினச் சாதிகளையும் பலருடைய தேடலின் மூலம் அறிய நேரிட்டது,
ஒரு இனம் தன் தொன்மையை இழந்து நிற்கவேண்டும் என்பதற்காகவும், உடமை, உரிமை,ஆளுமை, அரியணையை தக்கவைத்துக்கொள்ள கூடாது என்பதற்காகவும்,
மன்னராட்சி அநாகரிக கூட்டம் மொழியை கவசமாக்கி, இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி, அதையும் இனமென்று பொய்யுரைத்து ஒரு தொன்மை வாய்ந்த இனத்தை காயடித்துக்கொண்டிருக்கிறது என்பதை,
இவ்வளவையும் அறிய புதைக்க நினைத்த சாதி எனப்படும் குடிவழியை தோண்டியெடுத்து அக்குவேர் ஆணிவேராக பிரித்து வகைப்படுத்த முடிந்தது,
யாருக்கு எப்படியோ, யாருக்கு எத்தனைக் கேள்விகள் எழுந்தாலும், தமிழ்நாட்டில் வாழ்வோரெல்லாம் தமிழரே என்ற பிம்பத்தை உடைத்தெறிய சாதி என்னும் குடிவழியை வைத்தே இனங்காண முடிந்தது,
இக்குடிவழியில்,வந்தவனாலும், உள்ளவனாலும் ஏற்பட்டுள்ள விரிசலை, காழ்ப்பை, பகையை,பொறாமையை, சுயநலத்தை களைய என்ன செய்ய வேண்டுமோ அதைமட்டும் ஆக்கப்பூர்வமாக செய்யவேண்டும்.
இரா. வேல்முருகன்
No comments:
Post a Comment