Friday, May 25, 2018

சாதியும் வகுப்பு பிரிவினையும்


இங்கே வகுப்பு பிரிவினை இல்லை, சாதிப் பிரிவினை மட்டுமே உள்ளது, அதனால் கம்யூனிஸம் என்பது இந்தியாவுக்குச் சம்பந்தம் இல்லாதது என்று என் நண்பர்கள் வாதம் செய்கிறார்கள்.
ஆனால் தூத்துக்குடி ஒரு பொதுவான எடுத்துக்காட்டாக உள்ளது. இங்கே கொல்லப்பட்டவர்களில் பாதிப்பேர் நாடார் சாதியைச் சேர்ந்தவர்கள். இந்தச் சாதியில் பணக்காரர்கள் சொகுசு வாழ்க்கையும், ஏழை மக்கள் தலித்களைப் போல எளிய வாழ்க்கையும் வாழ்கிறார்கள்.
இதுவரை எந்தவொரு பணக்கார நாடாரும் கொல்லப்பட்ட ஏழை நாடார்களுக்காக குரல் கொடுக்க வில்லை. தமிழகத்தின் மிகப்பெரிய ஊடகமான தினத்தந்தி ஒரு நாடாருக்குச் சொந்தமானது. ஆனால் இது வெளிப்படையாக அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்து வருகிறது. தமிழகத்தின் மிகப்பணக்கார மாஃபியாவான விவி மினரல்ஸ் மனிதத் தன்மையைக் காட்டுவதில்லை. தமிழகத்தைச் சேர்ந்த ஒரேயொரு மத்திய அமைச்சர் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆவார். கொலைகளுக்கு முட்டுக் கொடுக்கும் அவர் மோதிக்கு வாக்களித்திருந்தால் இப்படி நடக்குமா என்று கேட்கிறார். தமிழக பாஜக தலைவியான தமிழிசையும் ஒரு நாடாராவார். அவர் அமைச்சரின் வாக்குமூலத்திற்கு ஆமாம்சாமி போடுகிறார்.
ஒரே சாதி, ஆனால் வேறுபட்ட வகுப்புக்கள். சாவுக்குப் பின்னரும் இந்த வகுப்பு வேறுபாடு நீடிக்கிறது.
பி.கு. - பணக்காரர்கள் நாடார்கள் என்றும் ஏழைகள் சாணார் என்றும், இந்த இரண்டு பிரிவினைகள் இன்னமும் இருக்கின்றன என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மையில்லை.
-ஆங்கிலத்தில் எழுதியவர் #Andez Raj A Fernando

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...