Tuesday, May 23, 2017

தமிழ்த் தேசியம் பேசுவோருக்கான அளவுகோல்

அரசியல் கட்சிகள் சாதி ஒழிப்பு என்று பேசாமல் சாதிகளை அங்கீகரிக்க வேண்டும். இன்று இவர்களின் போலித்தனமான கொள்கையால் சாதியை ஒழிக்க முடியாமலும் அதனை முழுமையாக அங்கீகரிக்க முடியாமலும் இருக்கிறார்கள். தமிழரின் தோல்விக்கு அடிப்படைக் காரணம் இதுதான்.

எனவேதான் அரசியல் கட்சிகள் வெளிப்படையாக சாதிகளை அங்கீகரிக்க வேண்டும். அதேபோல ஒவ்வொரு சாதியின் மக்கள் தொகைக்கேற்ப அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது தமிழர் மத்தியில் நிலவும் சாதீய வெறுப்பு மறையும். ஒவ்வொரு சாதியும் முன்னேற்றமும் பெறும்.

ஆனால் இதை செய்தால் அந்நியர்களின் கையில் உள்ள அரசியல் அதிகாரம் பறிக்கப்படும். அதனால் அவர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் இதைச் செய்ய முன்வரமாட்டார்கள். இதுவே உண்மையான தமிழ்த் தேசியம் ஆகும். இதை மறுப்பவர்கள் உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் என்று உணரலாம். இதுவே தமிழ்த் தேசியம் பேசுவோரை அடையாளம் காண்பதற்கான அளவுகோலும் ஆகும். 

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...