Saturday, May 20, 2017

எஸ்.ஆர். தமிழன் சிறந்த ஆளுமை மிக்க இளைஞர்



அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட பொதுச் செயலாளராக இருந்த எஸ்.ஆர். தமிழன் சிறந்த ஆளுமை மிக்க, இளைஞர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற தலைவராக இருந்தார். ஆனால் அவர்
தனது உடல் நலத்தை பராமரிக்காமல் விட்டு விட்டார்.

மூச்சிறைப்பு நோயால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 2014-ம் ஆண்டு பெங்களூரில் ஹோட்டல் அறையில் வைத்து இறந்து விட்டார். நடிகர் செவ்வாழையின் மகனான இவர் தனது 39 வது வயதில் திருமணம் முடிக்காமலேயே இறந்து விட்டார்.
அவரை கட்சியின் பொதுச் செயலாளர் கதிரவன்தான் கொலை செய்து விட்டார் என்ற வதந்தி பரப்பப்பட்டது. இது பார்வர்டு பிளாக் தொண்டர்களிடையே ஒரு சுனக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.



நேற்று (19,05,2017) நடைபெற்ற 18வது தேனி மாவட்ட மாநாட்டில் புதிய மாவட்ட பொதுச் செயலாளர் இரா. காசிராஜன் விரிவாக பேசினார். எஸ்.ஆர். தமிழன் மீது யாரும் குற்றம்சாட்ட, குறை கூற முடியாது என்று அழுத்தமாகச் சொன்னார். பின்னர் பேசிய மாநில பொதுச் செயலாளர் எஸ். ஆர். தமிழன் எவ்வாறு கட்சியில் சேர்ந்தார், அவரது விரைவான செயல்பாட்டால் கட்சிக்குள்ளாக வேகமாக வளர்ந்தார் என்று விரிவாக பேசினார்.



சில தனிநபர்களின் தவறான வழிகாட்டுதலின் பெயரில் சென்றதால் அவருக்கும் தனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்பதையும் தெளிவுபடுத்தினார். தமிழனின் காலத்தில் கட்சி வீறு கொண்டு எழுந்தது போல புதிய நிர்வாகிகளும் கட்சியை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டு புதிய உறுப்பினர்களை வாழத்தினார். 
x

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...