Friday, May 19, 2017

இந்தியர்களின் இன அறிவும் - குடியுரிமை அறிவும்



இந்தியர்கள் இனத்தையும், குடியுரிமையையும் போட்டுக் குழப்பி புரிந்துகொள்கிறார்கள். அல்லது அவ்வாறு நடித்து தங்கள் இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

அரசியலுக்கு வருவேனா மாட்டேனா என்ற சர்ச்சையை கடந்த 20 ஆண்டுகளாக கிளப்பி வரும் திருவாளர் ரஜினி காந்த் என்ற சிவாஜி ராவ் கெய்க்வாட் மீண்டும் அந்தச் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இது பற்றி திருவாய் மலர்ந்த அவர் தான் 40 ஆண்டுகளாக தமிழகத்தில் வசித்து வருவதாகவும் இதனால் தான் ஒரு பச்சைத் தமிழன் என்று கூறி இருக்கிறார்.

சுதந்திரத்தை, நாகரீகத்தை, மனிதப் பண்பாட்டை முன்னெடுப்பதாகச் சொல்லிக் கொள்ளும் மேலை நாடுகள் தங்கள் நாட்டில் தொடர்ந்து 14 ஆண்டுகள் வசித்தால் அவருக்கு அந்த நாட்டின் குடியுரிமையை வழங்குகின்றன.

ஆனால் அமெரிக்காவின் குடியுரிமை பெற்ற இந்தியர் என்பவர் இந்தியராகவே இருப்பார். கருப்பர் என்றால் அவர் கருப்பராகவும், ஜப்பானியர் என்றால் ஜப்பானியராகவுமே இருப்பார். அவர் ஒரு காலத்திலும் வெள்ளை இனமாக மாற முடியாது.

ஆனால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் வாழும் அந்நியர்கள் தங்கள் அடையாளத்தை மறைக்க, தங்கள் பிழைப்பை, வாழ்வை தக்க வைத்துக் கொள்வதற்காக தாங்களும் தமிழர்கள்தான் என்று சொல்லத் தொடங்கி உள்ளனர். இது சாதி ஒழிப்பு கருத்தியலை அடிப்படையாகக் கொண்டதாகவும் உள்ளது.

உற்றுக் கவனித்து வந்தால் இந்த அந்நியர்கள் சிறிய எண்ணிக்கையிலான நபர்கள் சாதி ஒழிப்புக்காக கூக்குரல் எழுப்புவதை பார்க்கலாம். ஆழ் மனதில் தாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் அல்ல என்ற அவர்களின் அச்ச உணர்வே அவர்களை இவ்வாறு பேசச் செய்கிறது. இதற்கு நடிகர் ரஜினிகாந்த் ஒன்றும் விதி விலக்கல்ல.

கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டின், தமிழர்களின் அரசியல் மீது அக்கறை கொண்டவராக காட்டிக் கொள்ளும் இவர் அதற்காக என்ன செய்திருக்கிறார். கடந்த 20 ஆண்டுகள் கிடைக்காத வாய்ப்பை இவர் இனி பயன்படுத்திக் கொள்ளப் போகிறாரா?

ரஜினிகாந்த் என்ற தனி மனிதனின் பெயர், புகழ், அந்தஸ்து, பணம், ரசிகர் செல்வாக்கை வைத்து இந்த நாட்டிற்கு எதுவுமே செய்ய முன்வராத அந்த அற்புத மனிதர் அரசியல் மூலம் பதவி பெற்று மட்டும் நல்லது செய்து விடுவார் என்று நம்பிவிட தமிழன் என்ன இளிச்சவாயனா?

அரசியல் தீயது, அரசியல் செய்யக் கூடாது, அரசியல் பதவிக்கு வந்துதான் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும், மக்களுக்கு நன்மை செய்து அரசியல் செய்து விட முடியாது போன்ற முட்டாள்தனமான கருத்துக்களை திராவிட அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் புகுத்தியுள்ளனர். இனி தமிழர்கள் அப்படி இருக்க மாட்டார்கள். அதைக் காலம் காட்டி வருகிறது.
---------------------------------

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...