சிலர் இந்தி படித்தால் வாழ்க்கையில் முன்னேறி விடலாம். அதிகம் சம்பாதித்து விடலாம் என்றெல்லாம் பிதற்றித் திரிகிறார்கள். அவர்களுக்காகத்தான் இந்தப் பதிவு..
இந்தியை ஏன் படிக்கக் கூடாது என்ற கேள்வியின் அடிப்படையில் நான் சுயமாக 1984-ம் ஆண்டு இந்தி கற்க துவங்கினேன்.
1994-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை மும்பையில் இருந்தேன். எனக்கு
இந்தி தெரியும் என்பது ஒரு கூடுதல் தகுதியே தவிர மற்றபடி பெரிய
பயனெல்லாம் கிடைக்கவில்லை.
நடந்து செல்பவருக்கு சைக்கிளில் செல்வது எவ்வளவு உதவிகரமாக இருக்குமோ
அவ்வாறு உதவுகிறது அவ்வளவே.
இந்தி பாசத்தில் பேசுபவர்கள் அந்த மொழியை ஊதிப் பெரிதாக்கி பேசினால்
பாவம் அந்த மொழி என்ன செய்யும்?
தமிழுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அந்த மொழியை ஒரு தொடர்பு மொழி என்பதற்கு
மேலாக பெரிதாக ஒன்றும் சொல்லி விட முடியாது.
மற்றபடி அந்த மொழி துருக்கியை மூலமாகக் கொண்டு அந்நிய மொழிகளை கலந்து
கட்டி நிற்பதால் அது தனக்கே உரித்த குணத்துடன் காணப்படும். பாவம்
இந்தியர்கள்.
இந்தி தெரிந்தால் வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்பது உண்மையாக இருந்தால்
இந்தி தெரிந்த வடநாட்டவர் இங்கே வந்து கூலி வேலை செய்ய வேண்டிய அவசியம் என்ன?
----------------------------------------------------
No comments:
Post a Comment