காவல் அதிகாரிக்கு ஒரு மனிதனை தாக்கும் அதிகாரம் இருப்பதைப் போல ஒரு அரசியல்வாதிக்கு பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டும் அதிகாரம் உள்ளது.
அந்த உரிமையை அவர் சரியாக பயன்படுத்துகிறாரா என்று மக்கள் கவனிக்க வேண்டும். அதேபோல அவருக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற அளவு அவர்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டும். அவர் நல்லவரா கெட்டவரா என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். அதன் பின்னர் நிதியுதவி செய்ய வேண்டும். அவர்கள் அளிக்கும் சிறு நிதி உதவிதான் சிறந்த அரசியல் தலைவர்களை உருவாக்க வல்லது.
அதை விட்டு விட்டு அந்த அரசியல்வாதி தவறான நபர்களிடம் பெரும்பணத்தை நிதியுதவியாக பெறுவதை வேடிக்கை பார்த்து விட்டு ஐயோ லஞ்சம் ஊழல் என்று கூக்குரலிடுவதில் அர்த்தமில்லை. அது மக்களாட்சிக்கு தகுதி பெற்ற மக்களின்
பண்பும் அல்ல.
No comments:
Post a Comment