அண்ணன் Perumal Ammavasi Thevan, ஒரு சந்தேகம்... தீர்த்து வையுங்க.
ஒரு 100 வருசத்துக்கு முன்ன,
மதுரை செட்டியார், கோயமுத்தூர் நாடார், விழுப்புரம் தேவர் என்று பத்து
பதினைந்து குடும்பங்கள் ஐதராபாத்தில் வந்து குடியேறுகிறார்கள் ......
ஏதோவொரு காரணத்திற்காக, இவர்கள் அதற்கு பிறகு தெலுங்கர்களிடையே திருமணம்
செய்து கொள்கிறார்கள்... காலப் போக்கில் தங்களது தாய்மொழி தமிழை மறந்து
விடுகிறார்கள்... இப்போது அந்த குடும்பங்களில் தாய்மொழி #தெலுங்கு.....
இந்த தலைமுறையில் அங்கு ஒருவருக்கு பெயர் #தமிழ்_மறவன் ....
இப்ப, இவர் தமிழரா, தெலுங்கரா?
அதே மாதிரி ,
ஒரு 100 வருசத்துக்கு முன்ன,
சித்தூர் நாயுடு, ஐதராபாத் ரெட்டி, விசாகப்பட்டினம் ராவ், ஓங்கோல்
நாயக்கர் என்று பத்து பதினைந்து குடும்பங்கள் மதுரைப் பக்கம் வந்து
குடியேறுகிறார்கள் ... ஏதோவொரு காரணத்திற்காக, இவர்கள் அதற்கு பிறகு
தமிழர்களிடையே திருமணம் செய்து கொள்கிறார்கள்... காலப் போக்கில் தங்களது
தாய்மொழி தெலுங்கை மறந்து விடுகிறார்கள்... இப்போது அந்த குடும்பங்களில்
தாய்மொழி #தமிழ் .....
இந்த தலைமுறையில் அங்கு ஒருவருக்கு பெயர் #தெலுங்கு_ரெட்டி ....
இப்ப, இவர் தெலுங்கரா, தமிழரா?
அன்புத் தம்பி S Manickavasagam அவர்களுக்கு,
நீங்கள் கூறிய எடுத்துக் காட்டு ஒன்றின் கீழ் வரும் வகையினருக்கு தமிழர்
வழித்தோன்றிய தெலுங்கர் என்றும் எடுத்துக் காட்டு இரண்டின் கீழ் வரும்
வகையினருக்கு தெலுங்கு வழித் தோன்றிய தமிழர் என்றும் சொல்லலாம்.
இதனை இன்னமும் சுருங்கக் கூறின் முதல் வகையினரை தமிழர் வழித்தோன்றல்கள்
என்றும் இரண்டாம் வகையினரை தெலுங்கு வழித்தோன்றல்கள் என்றும்
குறிப்பிடலாம்.
இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.
பொதுவாக நாம் ஒருவர் தமிழரா அல்லது வேற்று மொழியினரா என்று ஏன் பார்க்கத்
தொடங்கினோம் என்று ஆராய்ந்தால் இவ்வாறு சிலர் இருப்பதில் எந்தச்
சிக்கலும் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். ஒரு நாடு என்பது
பெரும்பான்மையாக ஒரு இனம்-மொழி பேசும் மக்களைக் கொண்டதாக இருந்தாலும்
பல்வேறு இன-மொழி மக்கள் வாழக்கூடிய பகுதியாகவே இருக்கும்.
அவ்வாறு இருக்கும்போது ஒரு தெலுங்கர் தமிழ் நாட்டிலோ ஒரு தமிழர்
ஆந்திராவிலோ வசிப்பதில் தவறில்லை. ஒரு தெலுங்கர் தமிழரை திருமணம்
செய்துகொள்வதிலும் ஒரு தமிழர் தெலுங்கரை திருமணம் செய்துகொள்வதிலும்
தவறில்லை. அது அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை, சூழல் சந்தர்ப்பங்களைப்
பொருத்தது. ஆனால் பிரச்சனை எப்போது எழுகிறது என்றால் ஒரு தெலுங்கர் தன்னை
தமிழர் என்று கூறி ஏமாற்றி அரசியல் செய்யும்போதுதான் ஏற்படுகிறது.
எனவேதான் ஒரு ஆட்சியாளர் தமிழரா அல்லது வேறு மொழி பேசுபவரா என்பதை நாம்
ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
நீங்கள் எடுத்துக் காட்டாக கூறிய கலப்பு இனத்தவர் தங்களை இன்னாரென்று
வெளிப்படையாகக் கூறி அரசியலில் ஈடுபடுவதிலும் தவறில்லை. தேர்தலில்
அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும்போது அவர்களை ஆந்திரா-தமிழ்நாடு
இடையிலான பிரச்சனைகளை தீர்க்கும் பிரதிநிதிகளாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால் அவர்களை தலைமை பொறுப்புகளில் அமர்த்த முடியாது. அதுதான் முக்கியப்
பிரச்சனையே தவிர அவர்கள் கலப்பு இனமாக இருப்பதில் எந்த பிரச்சனையும்
இல்லை.
No comments:
Post a Comment