சாதிப்பாசம் இயல்பானது.
ஒரு வன்னியர் அன்புமணி முதல்வராக வரவேண்டும் என்று
ஆசைப்படுவதில்
தவறில்லை. ஒரு பறையர் திருமாவளவன் முதல்வர் ஆக வேண்டும்
என்று
ஆசைப்படுவதில் தவறில்லை. ஒரு பள்ளர் கிருஷ்ணசாமி முதல்வர்
ஆக வேண்டும்
என்று ஆசைப்படுவதில் தவறில்லை. ஒரு மறவர் பன்னீர் செல்வம்
முதல்வர் ஆக
வேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறில்லை. ஒரு கள்ளர் சசிகலா
முதல்வர் ஆக
வேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் அவர்களின்
அந்த ஆசைக்குப்
பின்னே அதற்கான நியாயமும் உண்மைத் தன்மையும் நடைமுறை
சாத்தியமும் இருக்க
வேண்டும்.
பதவி - அதிகாரம் என்பது கூர்மையான கத்தி போன்றது. அது
எவ்வாறு இனத்தை,
உரிமைகளை காக்க பயன்படுமோ, அதுபோலவே அது தெரிந்தோ
தெரியாமலோ
புண்படுத்தவும் செய்யும். இதற்கு அன்புமணியோ, திருமாவளவனோ, பன்னீர்
செல்வமோ,
சசிகலாவோ விதிவிலக்கு அல்ல. அது அவருக்கும் அவர் சார்ந்த
குடும்பத்தாருக்கும் கெட்ட பெயரையே ஏற்படுத்தும்.
ஆனால் அன்புமணியை முதல்வர் பதவியில் அமர வைக்காமலேயே அவர்
ஊழல்வாதி,
மோசடி பேர்வழி அவர் அங்கே வரவே கூடாது என்று கூறுவது
மூடத்தனம் ஆகும்.
இதில் அன்புமணியோ,
திருமாவளவனோ,
பன்னீர் செல்வமோ,
சசிகலாவோ தங்கள்
அரசியல்
செயல்பாட்டிற்காக பணம் திரட்டும்போதுதான் அவர்கள் கெட்டவர்களாக
ஆக அதிக வாய்ப்புள்ளது. அவ்வாறு அவர்கள் பணம் திரட்டும்போது
எத்தனை பேர்
கெட்டவர்களிடமிருந்து பணம் வாங்காதீர்கள் நாங்கள் தருகிறோம்
என்று முன்
வருகிறார்கள்?
நீங்கள் அரசியல் செய்ய தீய வழிகளில் பணம்
சம்பாதித்தவர்களிடம் பணம்
வாங்காதீர்கள்,
நல்ல வழியில் பணம் சம்பாதித்த நாங்கள் தருகிறோம் என்று
எத்தனை பேர் முன் வருகிறார்கள்? அப்படிச்
செய்யாத நாம் எப்படி நம்மை
யோக்கியர்கள் என்றும் அவர்களை அயோக்கியர்கள் என்றும் சொல்ல
முடியும்?
சரி,
பணம் யார் கொடுப்பார்கள்? யாருக்கு காரியம் ஆக
வேண்டுமோ அவர்கள்தான்
பணம் கொடுப்பார்கள். பணம் வாங்குபவர்கள் அவர்களின் வேலையை
முடித்து
தருவதுதானே நியாயம்?
அப்படியிருக்க யாரை நல்லவர் யாரை கெட்டவர் என்று
சொல்ல முடியும்?
அரசியல் அதிகாரம் என்பது சுலபத்தில் கிடைப்பதில்லை. ஒவ்வொரு
தலைவரும்
ஏதாவது ஒருவகையில் உழைத்து, அல்லது தந்திரமாக
செயல்பட்டு அதிகாரத்தை
கைப்பற்றியுள்ளனர். அப்படி இருக்க அரசியலில் செயல்பாடு
காட்டாத ஒரு
நல்லவர் அந்த அதிகாரத்தை என்னிடம் கொடுங்கள் என்று கேட்டால்
அப்படி
அதிகாரத்தை கைப்பற்றியுள்ள அவர் விட்டுக் கொடுப்பாரா? உண்மையில்
ஒரு
நல்லவர் அவ்வாறு அதிகாரம் பெற விரும்பினால் அவரிடம்
போட்டியிட்டு அரசியல்
செய்துதான் அந்த அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்.
ஒரு நல்லவர் ரயிலேற வேண்டும். ஆனால் அவர் ரயிலடிக்கே
வரவில்லை. ஆனால் ரயிலேறும் இடத்தில் ஒரு கெட்டவர் இருக்கிறார். அவர்தான் அங்கு
ரயிலை பிடிக்க முடியும். இங்கே ரயிலடியில் நிற்பதுதான் தகுதியாக உள்ளது.
வீட்டிலிருந்து ரயிலேற ஆசைப்படும் நல்லவரை இங்கு தகுதி கொண்டவராக கருத முடியாது.
அதேவேளையில் முடமாக ரயிலடியில் படுத்திருக்கும்
ஒருவருக்கும் அதந்தத் தகுதி இல்லை. ஏனெனில் ரயிலைப் பிடிக்கவும். ரயிலிலிருந்து
இறங்கவுமே அவருக்கு மற்றவர்களின் உதவி தேவை. அவரால் எதையும் சாதிக்க முடியாது.
இழப்புகளையே ஏற்படுத்த முடியும். இதில் நல்லவருக்கும் கெட்டவருக்கும் ஒரே இடம்தான்
உள்ளது. நல்லவர் அந்த தீயவருடன்
போட்டியிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றாதவரை அதிகாரத்தை
கோருவதற்கான தகுதி
அவருக்கு இல்லை என்றே பொருளாகும்.
------------------------
No comments:
Post a Comment