Thursday, February 2, 2017

கோல்வால்கர் பற்றி ஒரு கோல்மால் கதை




சில மாதங்களுக்கு முன்பு இந்து மக்கள் கட்சியின் தலைவரான அர்ஜூன் சம்பத்தமிழகத்தில் பெரியாரின் சிலைகளை அகற்றி விட்டு அங்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைகளை அமைக்க வேண்டும் என்று பேசினார். தமிழ் மக்களின் நலன்களை பாஜக காற்றில் பறக்கவிடும் நிலையில் இவரது பேச்சு வாங்கு வங்கி அரசியலை அடிப்படையாகக் கொண்டது என்று நான் பதிவு செய்தேன்.



அதற்கு மறுப்பு தெரிவித்த ஒருவர், தேவர் ஆர்எஸ்எஸ்ஸின் இரண்டாவது தலைவரான கோல்வால்கரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டதாக கூறினார். அதற்கு ஆதாரமாக திண்ணை இணையத்தில் வெளியான கட்டுரையை காட்டினார்.

கோல்வால்கரின் 50வது பிறந்தநாள் விழா 1956-ம் ஆண்டு மதுரையில் நடந்ததாகவும் அந்த விழாவிற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தலைமை தாங்கியதாகவும் புதுவை சரவணன் என்பவர் எழுதியுள்ளார். இந்தக் கட்டுரை திண்ணை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது அப்பட்டமான பொய் ஆகும்1949-ம் ஆண்டு தலைமறைவாகும் முத்துராமலிங்கத் தேவர் 1951 ஜனவரியில் கேரளா வழியாக நாடு திரும்புகிறார். அப்போது அவரது அழகிய மீசை மழிக்கப்பட்டு பாகவதரைப் போல கூந்தலை வளர்த்திருக்கிறார். அது முதல் அவர் தலைமுடியை வெட்டவேயில்லை. இதுமுடிசூடா மன்னன் முத்துராமலிங்கத் தேவர்” புத்தகத்தில் 146வது பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.



1955-ம் ஆண்டு இறுதியில் பர்மா வாழ் தமிழர்கள் கேட்டுக் கொண்டதன் பெயரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பர்மா பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் டிசம்பர் இறுதி வாரம் முதல் பிப்ரவரியில் இரண்டு வாரங்கள் வரை இருக்கிறார். இந்தப் பயணம் முழுவதும் காணொளியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.


18.02.1956-ம் தேதி அவர் விமானம் மூலமாக பர்மாவிலிருந்து கல்கத்தா வந்தடைகிறார்.

அதே ஆண்டு மே 30 முதல் ஜூன் 5-ம் தேதி வரை மதுரை தமிழ்ச் சங்கத்தின் பொன் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தேவர் அதற்கு முந்தைய நாள் அறிஞர் அண்ணாதுரை பேசிய பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கிறார்.

அதே ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி தமிழ் மொழியை ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதாக தேவர் சட்டமன்றத்தில் பேசுகிறார்.

இப்படியாக 1956-ம் ஆண்டு முழுவதுமாக தேவர் கலந்துகொண்ட நிகழ்வுகள்
அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த தகவல்கள் பேராசிரியர் காவ்யா சண்முகசுந்தரம் எழுதிய "பசும்பொன் சரித்திரம்" என்ற நூலில் இடம்பெறுகின்றன. இதில் கோல்வால்கரின் 50வது பிறந்தநாள் விழா மதுரையில் தேவரின் தலைமையில் நடந்திருந்தால் அது பதிவு செய்யப்படாமல் போக வாய்ப்பே இல்லை.

தேவரின் வாழ்க்கை வரலாற்று நூல் என்றால் அது "முடிசூடா மன்னன் முத்துராமலிங்கத் தேவர்நூலே ஆகும். அந்த நூலை எழுதிய .ஆர். பெருமாள் தனது சிறு வயது முதல் தேவருடன் இணைந்து பணியாற்றியவர் ஆவார். அவர், தேவர் தானே வாய்மொழியாகச் சொன்ன தகவல்கள், தான் நேரில் கண்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அந்த நூலை எழுதினார். ஆக தேவரின் வாழ்க்கை வரலாற்றுக்கான அடிப்படை நூலே இதுதான். இந்த நூலில் கோல்வால்கர் பற்றிய குறிப்பு இல்லை. இத்தனைக்கும் தேவரின் (இந்து) மத தொண்டு குறித்தும் இதில் ஒரு கட்டுரையும் உள்ளதுகாவ்யா சண்முகசுந்தரம், மேற்படி நூல் உட்பட 24 சிறிய பெரிய நூல்களை ஆதாரமாகக் கொண்டு "பசும்பொன் சரித்திரத்தை" எழுதியுள்ளார். இதிலும் கோல்வால்கர் பற்றிய குறிப்பு இல்லை.

தற்போது வாழும் "தேவர் தகவல் களஞ்சியம்" என்று அழைக்கப்படும் வரலாற்று ஆய்வாளர் திரு நவமணி அவர்களை தொடர்புகொண்டு விசாரித்தேன். அவரும் கோல்வால்கரின் கதை பொய் என்று கூறிவிட்டார்.
எனவேஇந்து வியாபாரிகள்தங்கள் கோல்மால் கதைகளை குப்பையில் கொட்டி விட்டு உண்மையாக மக்களுக்குத் தொண்டு செய்து அரசியல் செய்து மக்களின் மனதில் இடம் பிடிக்க  வேண்டும்.






(படத்தில் கோல்வால்கரின் முன்பாக வணங்கி கைகூப்பி நிற்கும் நபரை தேவர் 
என்கிறார்கள். முதலில் தேவர் கிராப் வெட்டி இருக்கவில்லை. இரண்டாவது தேவரின் மூக்கு இத்தனை கூர்மையானதாக இல்லை. இந்த நபரின் படம் எந்த விதத்திலும் தேவருடன் ஒத்துப் போவதில்லை.)








No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...