Sunday, May 11, 2014

நான் ஒரு “மொழிவெறியன், இனவெறியன்”


எங்களுக்கு பார்ப்பனர் மீதோ அல்லது தெலுங்கு, மலையாளம், கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள் மீதோ எந்தவித கோபமோ, ஆத்திரமோ, காழ்ப்புணர்ச்சியோ இல்லை. 

பொதுவாகவே ஒருசிலர் செய்யும் தவறுகளுக்கு அவர்கள் சார்ந்த குழுக்களை பொறுப்பாக்குவதை நான் வெறுக்கிறேன். 

இது எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பொருந்தும். பார்ப்பனர் என்று ஒதுக்கும்போது நமக்கு நன்மை செய்த எல்லா பார்ப்பனரையும் ஒதுக்க வேண்டியிருக்கும். இதுவே மாற்று மொழிபேசுவோருக்கும் பொருந்தும்.

சிறுபான்மையினர், சிறு எண்ணிக்கையிலானவர்கள் ஆட்சி செய்யும்போது, மண்ணுக்குச் சொந்தமில்லாதவர்கள் ஒரு நாட்டில் ஆட்சி செய்யும்போது அவர்கள் செய்யும் சிறு தவறுகூட பெரும் பிழைகளுக்கு வழிவகுக்கும். அது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தும். துரோகமாக கருதப்படும்.

அந்த வகையில்தான் வளர்ந்து முன்னேறிய நாகரீக நாடுகள் கூட வேற்று மண்ணில் பிறந்தவர்கள் தங்கள் நாட்டில் உயர் பதவிக்கு வரக்கூடாது என்ற விதிமுறையை வைத்திருக்கின்றன.

உலகின் சுதந்திரம், நாகரீகம், ஜனநாயகத்தின் ஒட்டுமொத்த குத்தகைக்காரராக காட்டிக் கொள்ளும் அமெரிக்காவை இதற்கு உதாரணமாக கூறலாம்.

அமெரிக்கர்களின் அன்பைப் பெற்ற அர்னால்டு செவாஸ்நேகர் நினைத்திருந்தால் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆகியிருக்கலாம். ஆனால் அந்நிய மண்ணில் பிறந்தவர்கள் உச்ச பதவிக்கு வரமுடியாது என்ற விதி அங்கே உள்ளது. அதனால்தான் ஆஸ்திரியாவில் பிறந்த அவர் கலிஃபோர்னியாவின் கவர்னர் பதவியோடு நின்று விட்டார்.

இந்த நிலையில்தான் நாங்கள் வேற்று மொழிபேசும் நபர்களைப் பார்க்கிறோம். மற்றபடி அவர்கள் இங்கு பிழைப்பதைப் பற்றி நாங்கள் சிறிதும் கவலைப்படவில்லை.

எங்கள் நிலைப்பாட்டிற்காக நீங்கள் எங்களுக்கு “மொழிவெறியன், இனவெறியன்” பட்டத்தை கொடுத்தால் அதனை நாங்கள் பெருமையோடு ஏற்றுக் கொள்வோம்.

2 comments:

Unknown said...

7உயர்திரு பெருமாள்தேவன் அவர்களே,
//எங்களுக்கு பார்ப்பனர் மீதோ அல்லது தெலுங்கு, மலையாளம், கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள் மீதோ எந்தவித கோபமோ, ஆத்திரமோ, காழ்ப்புணர்ச்சியோ இல்லை.

பொதுவாகவே ஒருசிலர் செய்யும் தவறுகளுக்கு அவர்கள் சார்ந்த குழுக்களை பொறுப்பாக்குவதை நான் வெறுக்கிறேன்.

இது எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பொருந்தும். பார்ப்பனர் என்று ஒதுக்கும்போது நமக்கு நன்மை செய்த எல்லா பார்ப்பனரையும் ஒதுக்க வேண்டியிருக்கும். இதுவே மாற்று மொழிபேசுவோருக்கும் பொருந்தும்.

இந்த நிலையில்தான் நாங்கள் வேற்று மொழிபேசும் நபர்களைப் பார்க்கிறோம். மற்றபடி அவர்கள் இங்கு பிழைப்பதைப் பற்றி நாங்கள் சிறிதும் கவலைப்படவில்லை.//

பார்ப்பனர்களையும், மாற்றுமொழி பேசுபவர்களையும் ஒன்றாகக் குறிப்பிட்டிருக்கீர்களே, அப்படியானால், பார்ப்பானர்கள் தமிழர்கள் இல்லையா? பிராமணர்கள் என்று குறிப்பிடாமல், பார்ப்பனர்கள் என்று குறிப்பிடுகிறீர்களே? அது அவர்களைத் தாழ்வாகக் கருதுவதனாலா?
சமரசம் விரும்பும், இந்து-தமிழர் ஒற்றுமையை விரும்பும் நீங்கள் இப்படி எழுதி உள்ளது என்னைக் குழப்புகிறது. அருள்கூர்ந்து விளக்கம் அளிப்பீர்களா? வணக்கம்.

பெருமாள் தேவன் செய்திகள் said...

திரு மஹாதேவன் அவர்களுக்கு,

பார்ப்பனர்கள் தமிழ்க் குடிகள்தான், ஆனால் அவர்கள் மண்ணின் மைந்தர்கள் கிடையாது. ஒரு நாட்டின் குடியுரிமை பெறுவதற்கும் அந்த நாட்டின் மண்ணின் மைந்தராக இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. அந்த வித்தியாசமே பார்ப்பனருக்கும் உள்ளது. இந்துவாக இருப்பதும், தமிழினமாக இருப்பதும் வேறு வேறு. தமிழர்கள் இந்து மதத்தில் இருக்கலாம். ஆனால் இனத்தில் அவர்கள் தமிழர்கள். உலகம் முழுவதும் இஸ்லாம் மதம் இருந்தாலும் இஸ்லாமியர்கள் அந்தந்தப் பகுதியின் இனத்தாலேயே ஒன்றுபடுகின்றனர். அதுபோலவே இந்தியா முழுவதும் இந்துக்கள் இருந்தாலும் அவர்கள் பல்வேறு இனமாக இருக்கலாம். பண்டைய இந்தியாவில் அப்படித்தான் இருந்தார்கள். நூற்றுக்கணக்கான இறையாண்மை பெற்ற இன அரசுகள் இருந்தன.

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...