படத்தில் உள்ளவரின் பெயர் ராஜவேல் (வயது 40). திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு கடைவீதியில் வைத்து நேற்றுச் சந்தித்தேன்.
அதே கடைவீதியில் இவருக்கு ஓரிரு வீடுகளும் கடைகளும் உள்ளன. அதோடு பணம் கொடுத்து வாங்குகிறார். அது மட்டுமில்லாமல் இவரால் வேலை செய்ய முடியாமல் இருக்க முடியாது என்கிறார்.
ஞாயிற்றுக் கிழமையான நேற்றும் கூட இவர் உழைத்துக் கொண்டிருந்தார். தான் வாடகைக்கு விட்டுள்ள கடைகயில் நடக்கும் அச்சகத்திலும் வேலை செய்கிறார். இதுதான் உழைக்கும் குணம்.
இவர் நினைத்தால் சொகுசாக இருக்க முடியும். இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான மக்கள் உழைக்காமல் சொகுசு வாழ்க்கையையே விரும்புகின்றனர். ஆனால் இவரோ ஞாயிற்றுக் கிழமையும் உழைக்கத் தயாராக இருக்கிறார்.
இவரது முன்னேற்றத்தை யார் தடுத்தாலும் நிறுத்த முடியுமா?
No comments:
Post a Comment