நமது ஆட்சியாளர்களால்...
• காவேரி தண்ணீரைக் கொண்டு வர முடியவில்லை. ஆனால் நெய்வேலி மின்சாரம் இன்னமும் கர்நாடகா அனுப்பப்படுகிறது.
• முல்லைப் பெரியாறு தண்ணீர் மட்டம் குறைக்கப்படுகிறது. நம் ஆட்சியாளர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
• கூடங்குளம் அணு உலை திணிக்கப்படுகிறது. நம் ஆட்சியாளர்கள் கையொப்பம் போடுகிறார்கள்.
• ஈழப்போரில் ஈழத்தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்படுகிறார்கள். நம் ஆட்சியாளர்கள் கொலையாளிகளுக்கு துணைபோகிறார்கள். போர் நின்றுவிட்டது என்று பொய் சொல்கிறார்கள்.
• கட்சத்தீவை மீட்கப் போவதாக அறிக்கை மட்டுமே விடுத்து வருகிறார்கள்.
• மீனவர்கள் கொல்லப்படுகிறார்கள். நம் ஆட்சியாளர்கள் கடிதம் எழுதுகிறார்கள்.
• கெய்ல் எரிவாயுக் குழாய் பதிக்க விளைநிலங்களை பாழ்படுத்துகிறார்கள். நம் ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்.
• தமிழகத்தின் விவசாயத்தை ஒழித்துக்கட்ட மத்திய அரசு திட்டமிடுகிறது. நம் ஆட்சியாளர்கள் மீத்தேனுக்காக விளைநிலங்களை பலிகொடுக்கிறார்கள்.
• நியூட்ரினோ என்ற அணுக்கழிவுத் தொட்டியை தமிழரின் தலையில் கட்டுகிறார்கள். அதற்கும் ஆட்சியாளர்கள் ஒப்புதல் அளிக்கிறார்கள்.
அப்புறம்தான் இவர்கள் யாரென்று தேடவேண்டிதாயிற்று. அப்போதுதான் தெரிந்தது இவர்கள் இந்த மண்ணுக்கான சாதிகளைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது.
அப்போது இருந்துதான் சாதி பார்க்க ஆரம்பித்தோம்.
No comments:
Post a Comment