யார்
தமிழர் என்பதை வரையறுக்கும் முன்பாக ஏன் இந்தக் கேள்வி எழுகிறது என்பதை புரிந்துகொள்ள
வேண்டும்.
தமிழரின்
தேசமான ஈழதேசம் இந்தியாவின் துணையோடு அழிக்கப்பட்டது. அங்கு தமிழர் இரண்டாம் குடிமக்களாக
வாழ்ந்து வருகிறார்கள். அதேபோல இந்தியாவில் உள்ள தமிழர் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து
வருகிறார்கள்.
தமிழர்கள்
தங்களது அரசியல் உரிமைகளை இழந்து உரிமைகள் பறிக்கப்பட்டு அனாதையாக நடுத்தெருவில் நிற்கிறார்கள்.
இதற்கு காரணம் பலநூறு ஆண்டுகாலமாக தமிழகத்தில் வாழும் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட
தலைவர்கள் தங்களை தமிழர் என்று கூறிக் கொண்டு தமிழரின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதே
ஆகும். இவர்கள் தமிழை நன்கு அறிந்தவர்களாக இருப்பதால் இவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குவது
அவசியமாகிறது. எனவே தமிழர்கள் என்பது யார் என்பதை நாம் வரையறை செய்ய
வேண்டியதாகிறது.
உலகில்
எந்த இனமுமே கலப்பு இல்லாத இனம் என்று சொல்ல முடியாது. 18-ம் நூற்றாண்டு வரை மனித இனம்
பூமிப் பந்தில் சுதந்திரமாகவே சுற்றி வந்தது. எனவே அதுவரை உலக இனங்கள் கலந்து இருக்க
வாய்ப்புள்ளது. அதற்காக இனங்கள் தொடர்ந்து கலக்க வேண்டும் என்பதும் சரியாகாது. ஏனெனில் அரசியல் அதிகாரத்தை
தமிழர் இழந்து பல்வேறு முனைகளில் அழிவைச் சந்தித்து
வரும் நிலையில் இனக்கலப்பை தடுப்பது அவசியமாகிறது. எனவே ஒவ்வொரு இனமும் தன்னைப் பாதுகாத்துக்
கொள்ள வேண்டிய தேவை உள்ளது. அதற்கு அந்த இனத்தை வரையறை செய்ய வேண்டியுள்ளது.
ஆனால்
19-ம் நூற்றாண்டிற்குப் பிறகு உலகில் பெரும்போர்கள் ஏற்பட்டு எல்லைகள், இனங்களுக்கான
உரிமைகள் வரையறுக்கப்பட்டன. அதேவேளையில் இந்தியாவில் பல்வேறு இனங்கள் ஒரே நாட்டின்
கீழாக வசித்து வருகின்றன. அந்த இனங்களும் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. எனவே ஒரு
இனத்திற்கு மொழியே அடிப்படை அளவுகோலாகும்.
தாய்மொழி அளவுகோல்
ஒரு
மொழியை தாய்மொழியாகப் பேசுபவரே அந்த மொழி அடிப்படையிலான இனத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
அதேவேளையில் ஒரு குழந்தையின் தந்தை வேற்றுமொழி பேசுபவராக இருந்து தாய் மொழி வேறாக இருந்தால்
அவர் அந்த மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவராக கருதப்பட மாட்டார். அவர் அந்த இருமொழிகளின்
கலப்பினமாகவே கருதப்படுவார். அதேவேளையில் அந்த தந்தை அந்த பெண்ணின் மொழிக்குரிய பகுதியில்
வசித்து அவர்கள் குடும்பத்தில் தாயின் மொழியை மட்டுமே அறிந்தவர்களாக, பேசுபவர்களாக
இருந்து வந்தால் அவர்கள் தாயின் மொழி இனத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.
தந்தைமொழி அளவுகோல்
தாய்
மொழியும் தந்தை மொழியும் ஒரே மொழியாக இருந்தால்தான் அவர் அந்த மொழி இனத்தைச் சேர்ந்தவராக
கருதப்படுவார். தந்தை ஒரு மொழியைப் பேச தாய் தன் மொழியையே பேசி குழந்தைகளை வளர்த்தால்
அந்தக் குடும்பம் தந்தை மொழி இனத்தைச் சேராது.
அதேவேளையில்
ஒரு ஆணைத் திருமணம் செய்த வேற்று மொழி இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் அந்த ஆணின் மொழியை
பேசியே குழந்தைகளை வளர்த்தால் அவர்கள் அந்த மொழி இனத்தைச் சேர்ந்தவர்களாகவே கருதப்படுவர்.
பேச்சு மொழி
வேறு
மொழி பேசுபவர்கள் ஒரு மாநிலத்தின் மொழியைக் கற்றுக் கொண்டு அந்த மாநிலத்தில் வசித்து
வந்தால் அவர்கள் அவர்களின் தாய்மொழி இனத்தைச் சேர்ந்தவர்களாகவே கருதப்படுவார். எந்தச்
சூழலிலும் அவர்கள் பேசிக் கற்ற மொழியின் இனத்தவராக ஆக மாட்டார்கள்.
சாதிகள் - மதங்கள் அளவுகோல்
ஒரு
மொழி இனத்தைச் சேர்ந்த இனக்குழுக்களை மொழியினத்தின் அளவுகோலாக எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு மொழி இனத்திற்கான பகுதியில் பூர்வீகமாக வசித்து வரும், அந்த மொழியை மட்டுமே தாய்மொழியாகக்
கொண்ட இனக்குழுக்கள் (சாதிகள்) அந்த மொழி இனத்தைச் சேர்ந்தவையாக கருதப்படும். இது மதங்களுக்கும்
பொருந்தும்.
சாதிப் பெயர்கள், துணைப்பெயர்கள்,
பட்டப்பெயர்கள், குடும்பப் பெயர்கள்
ஒவ்வொரு
இனக்குழுவிற்கும் பெயர்கள், துணைப் பெயர்கள், பட்டப் பெயர்கள், குடும்பப் பெயர்கள்
உள்ளன. எனவே இனக்குழுக்களின் பெயர்கள், துணைப் பெயர்கள், பட்டப் பெயர்கள், குடும்பப்
பெயர்கள் ஆகியவை ஒரு மொழிக்கான அளவுகோலாக கருதப்படும்.
நிலப்பரப்பு அளவுகோல்
ஒரு
மொழி இனம் தொடர்ந்து கால காலமாக வசித்து வரும் நிலப்பகுதி அந்த இனத்திற்கானதாகும்.
அந்த வகையில் அந்த நிலப் பகுதிக்குள் வாழ்வது மக்கள் அந்த இனத்திற்கான அளவுகோலாக கருதப்படும்.
அதாவது ஒருவர் யார் என்று நிர்ணயம் செய்யப்படும்போது அவரது பூர்வீகம் எது என்று ஆராய்வது
அவசியமாகும்.
ஈழம்,
மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், ஃபிஜி போன்ற பகுதிகள் அல்லது வேறு நாடுகளைச் சேர்ந்த
தமிழ் மக்கள் அந்த நாட்டுத் தமிழர்கள் அல்லது தமிழரின் வழித்தோன்றல்கள் என்று கருதப்படும்.
மூதாதையர் அளவுகோல்
ஒருவர்
மேற்படி அளவுகோல்களில் ஒன்று இல்லாதவராக அல்லது
குறைபாடு உள்ள தகுதிகளைக் கொண்டிருந்தால் அவரது மூதாதையரை வைத்து அவரது இனம் வரையறை
செய்யப்பட வேண்டும்.
அதேபோல
இந்தியாவின் மற்ற மாநிலங்களில் குடியேறி வசித்துவரும் தமிழர்களும் மேற்படி அளவுகோல்களைக்
கொண்டு தமிழர் என்று நிர்ணயிக்கப்படுவர். பிரச்சனைகளின் அடிப்படையில் உலகம் முழுவதும்
வாழும் தமிழர்களுக்கு தமிழகத் தமிழர்கள் ஆதரவு, அடைக்கலம் கொடுக்க வேண்டும்.
*********************
No comments:
Post a Comment