Saturday, December 31, 2011

அரசியல்வாதியும் குடிமகனும்

ஒரு நல்ல முதலாளி தன் தொழிலாளியின் முழுத் திறமையை பயன்படுத்தி வேலை வாங்குவான்.

ஒரு நல்ல தொழிலாளி தன் முதலாளியிடமிருந்து தனக்கு சேரவேண்டிய வசதிகளை உரிமையுடன் கேட்டுப் பெறுவான்.

அதுபோல ஒரு நல்ல அரசியல்வாதி மக்களை விழிப்புணர்வுடன் வைத்திருந்து தன் அரசியலுக்கு பயன்படுத்த வேண்டும்.

ஒரு நல்ல குடிமகன் விழிப்புணர்வுடன் இருந்து தன் அரசியல்வாதி தனக்கு செய்ய வேண்டிய கடமைகளை உரிமையுடன் கேட்டுப் பெறுவான்.

Friday, December 30, 2011

நமக்கு பொதுவானவை

என் தமிழினமே

இதுவரை நாம் கண்ட மதங்கள்
நமக்கு பொதுவானவை

இதுவரை நாம் கண்ட சாதிகள்
நமக்கு பொதுவானவை

இதுவரை நாம் கண்ட ஆட்சிகள்
நமக்கு பொதுவானவை

இதுவரை நாம் கண்ட கட்சிகள்
நமக்கு பொதுவானவை

இதுவரை நாம் கண்ட தலைவர்கள்
நமக்கு பொதுவானவர்கள்

நல்லவற்றை எடுப்போம்
மற்றவற்றை மறப்போம்

தமிழர் என்று ஒன்றுபடுவோம்
நாளைய பொழுது நமதே

தினமணி - உதட்டளவு நேசம்!

"செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில்
சிந்தனை ஒன்றுடையாள்".

என மகாகவி பாரதி இந்தியத் திருநாட்டின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தியுள்ளார். ஆனால், பாரத நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவானது. சுதந்திரத்துக்கு முன்பாக பாரத நாடு ஆங்கிலேயர்களால் ஒன்பது
மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது.

பொதுவாக தென்னிந்தியா முழுவதும் சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டது. சென்னை மாகாணத்தில் இப்போதைய முழுத் தமிழகமும், ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களின் பெரும்பகுதிகளும் இருந்தன. தமிழகத்தில் தனி திராவிட நாடு கோரும் இயக்கங்கள் வலுப்பெற்று வந்த காலகட்டம் அது. அதாவது, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகள் கோரிய தனி திராவிட நாடு வரைபடத்தில் தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கியிருந்தன.

இந்தியாவைப் பிரித்து பாகிஸ்தான் உருவாக்க வேண்டும் என போராட்டம் நடத்திய ஜின்னாவோடு பேச்சுவார்த்தை நடத்தினர். வடஇந்தியாவில் தனித்திராவிட கோரிக்கைக்கு ஆதரவாக ஜின்னா பிரசாரம் செய்வது என்றும் தென்னிந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகத் திராவிட இயக்கங்கள் பிரசாரம் செய்வது என்றெல்லாம்கூட திராவிட இயக்கத் தலைவர்களின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன.
ஆனால், இவர்களுக்கு தமிழகம் தவிர, வேறு எந்தப் பகுதியிலும் ஆதரவு கிடைக்கவில்லை என்பது அப்பட்டமான உண்மை.

ஆந்திரத்தில் தனித்தெலங்கானா இயக்கத் தலைவர்கள் ஆயுதம் தாங்கி தங்களது புரட்சிகர நடவடிக்கைகளைத் தொடங்கியிருந்தனர்.

தமிழகம் உள்பட்ட தென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சி அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அதிகாரங்களைப் பெற்றிருந்தது. கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வலுப்பெறத் தொடங்கி இருந்தது.

பொட்டி ஸ்ரீராமுலு என்கிற தலைவர் தனித்தெலுங்கு மாநிலம் அதாவது, ஆந்திர மாநிலம் மற்றும் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்த்துறந்தார். நாடு முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றது. வேறுவழியில்லாமல் அன்றைய பிரதமர் நேரு மொழிவாரி மாநிலப் பிரிவினைக்குச்
சம்மதித்தார்.

மொழிவாரி மாநிலங்களை உருவாக்குவதற்காக 1953ல் பசல் அலி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு என்.கே. குன்சுரு, கே.என். பணிக்கர் ஆகியோர் அதன் உறுப்பினர்களாகச் செயல்பட்டனர். இவர்கள் 1955 மார்ச் 23ம் தேதி தங்களது அறிக்கையைத் தாக்கல் செய்தனர். இதன்பிறகு மொழிவழி மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. மாநிலங்களின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டன.

சங்ககாலம் தொட்டே தமிழ்கூறும் நல்லுலகத்தின் தெற்கு எல்லையாகக் குமரியும், வடக்கு எல்லையாக வேங்கடமலையும் திகழ்ந்து வந்தது. ஆனால், நம் தலைநகர் சென்னைகூட ஆந்திர மாநிலத்தில் இணைக்கப்பட வேண்டும் என தெலுங்கு மக்களின் தலைவர்கள் சென்னையிலேயே "மதராஸ் மனதே!" என்கிற கோஷத்துடன் போராட்டங்களைத் தொடங்கினர்.

குமரி மாவட்டம், இடுக்கி, மூணாறு, தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் கேரளத்துடன் இணைக்கப்பட வேண்டும் என கேரள மாநிலத்தில் உள்ள அன்றைய சோசலிஸ்ட், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தலைவர்கள் அனைவரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

கர்நாடகத்திலும், சாம்ராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகள் கர்நாடக மாநிலத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்கிற போராட்டங்கள் வலுப்பெற்றன.

பொதுவாக ஒரு பகுதியில் எந்த மொழி பேசுகின்ற மக்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்களோ அந்தப் பகுதி அந்த மொழி பேசுகிற மாநிலத்தோடு இணைக்கப்பட வேண்டும் என்பது கருத்தாக இருந்தது. தமிழகத்தில் முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழரசு கழகத்தின் தலைவருமான ம.பொ.சிவஞானம் தலைமையில் தமிழக எல்லை மீட்பு போராட்டம் தொடங்கியது.

கிராமணியார், சிலம்புச் செல்வர் என்றெல்லாம் அன்போடு அழைக்கப்பட்ட ம.பொ.சி.யை தமிழகத்தின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரும், கம்யூனிச சித்தாந்தியுமான ஜீவானந்தம், காங்கிரஸ் கட்சியில் திருவிதாங்கூர் சமஸ்தான எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தாணுலிங்க நாடார், பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர் ஆதரித்தனர்.

ம.பொ.சி. தலைமையில் நடைபெற்ற போராட்டம் காரணமாக ஆறுபடை வீடுகளில் ஒன்றாகத் திகழ்கிற தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கிற திருத்தணி தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. தலைநகர் சென்னையும் காப்பாற்றப்பட்டது. ஆனால், தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்த சித்தூர் பகுதி ஆந்திரத்தோடு இணைக்கப்பட்டது.

அன்றைய மதுரை மாவட்டம் பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட இடுக்கி பகுதியில் வசிக்கும் தமிழர்கள் இடுக்கியைத் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். இப்போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்று ஆறு பேர் வரை உயிரிழந்தனர். இருந்தபோதும் இடுக்கி மாவட்டம் கேரளத்துடன் இணைக்கப்பட்டது.

தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்த தேவிகுளம், பீர்மேடு, கண்ணகி கோவில் பகுதி ஆகியவையும் கேரளத்துடன் இணைக்கப்பட்டன.

குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்கிற நியாயமான கோரிக்கைக்காகப் போராட ஐவர் குழு அமைக்கப்பட்டது.

குழுவில்,

1. தாணுலிங்க நாடார்
2. சிதம்பரநாதன்
3. குஞ்சு நாடார்
4. டேனியல்
5. நேசமணி நாடார்

ஆகியோர் இடம்பெற்றனர்.

இவர்கள் செங்கோட்டையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என செங்கோட்டையில் போராட்டம் நடத்தினர். இதில் நேசமணி நாடார் கைதாகவில்லை. ஏனைய நால்வரும் கைது செய்யப்பட்டு ஒன்பது மாத கால சிறைவாசம் அனுபவித்தனர். இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.

1946 முதல் 1952 வரை இடைக்கால அரசாங்கத்தில் தமிழக முதலமைச்சர்களாக இருந்த ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், குமாரசாமிராஜா ஆகிய இருவருக்கோ, 1952 முதல் 1954 வரை முதல்வராக இருந்த இராஜாஜிக்கோ, 1954க்குப் பிறகு தமிழகத்தின் தனிப்பெரும் தலைவராகத் திகழ்ந்த காமராஜருக்கோ மொழிவழி மாகாணங்கள் பிரிக்கப்படுவதில் உடன்பாடு இல்லை. இவர்கள் அப்பழுக்கற்ற தேசியவாதிகளாகத் திகழ்ந்தார்கள். ஆனாலும், மொழிவழி மாகாணங்கள் பிரிக்கப்பட்டன.

இந்தியத் தேசிய உணர்வு கொண்ட காங்கிரஸ் கட்சியும் அப்போது வலுப்பெறத் தொடங்கியிருந்த திராவிட இயக்கங்களும், தமிழகத்தின் கம்யூனிஸ்ட் தலைவர்களும், ம.பொ.சி.யை ஆதரித்திருந்தால் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்த மாவட்டங்கள் தமிழகத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால், இவர்கள் இதுவிஷயத்தில் தமிழக நலனில் போதிய கவனம் செலுத்தவில்லை என்கிற வருத்தம் இன்றும் நமக்குள்ளது.

தெலங்கானா புரட்சியை வழிநடத்திய ஆந்திர மாநிலத்தவர்கள் பொதுவுடைமை சித்தாந்தத்தில் நம்பிக்கை உள்ளவர்கள். சர்வதேசிய வாதத்தில் நம்பிக்கை உள்ள இவர்கள் மொழிவழி உரிமை என்று வருகிறபொழுது சென்னையைக்கூட ஆந்திரத்துடன் இணைக்கக் கோரினார்கள். அதேபோல கேரளத்தில் செல்வாக்குப் பெற்ற பொதுவுடைமைத் தலைவர் ஏ.கே.கோபாலன் தமிழர்களை "வந்தேறிகள்", அவர்கள் கேரளத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றெல்லாம் கூறினார். ஆனால்,
தமிழகத்தைச் சார்ந்த பொதுவுடைமைவாதிகளில் ஒருவரான ஜீவானந்தத்தைத் தவிர, தமிழகப் பொதுவுடமைவாதிகள் யாரும் தமிழ்மாநில எல்லை காக்கும் போராட்டத்தை ஆதரிக்கவில்லை.

"அடைந்தால் திராவிட நாடு,
அடையாவிட்டால் சுடுகாடு"!

"தம்பி வா ஒன்றாகக் கூடி
இன்ப திராவிடம் தேடி"!

"திண்ணையிலே படுத்தாவது
திராவிட நாடு வாங்குவோம்"!

என்றெல்லாம் வீரவசனம் பேசி இந்தியாவைப் பிரித்து பாகிஸ்தானை உருவாக்கியதுபோல நாங்கள் "திராவிடஸ்தானை" உருவாக்குவோம் என திராவிட நாடு கோரிக்கையை திராவிட இயக்கத்தவர்கள் வெகு தீவிரமாகப் பரப்பி வந்தனர். அப்பொழுது திராவிடர் கழகமோ, தி.மு.க.வோ தமிழக எல்லை காக்கும் போராட்டத்துக்குப் போதிய ஆதரவு தரவில்லை.

தமிழகத்தில் பிரிவினை கோரும் திராவிட இயக்கங்கள் வலுப்பெற்று வருகிற காரணத்தால் இவர்கள் எப்படியாவது ஆயுதம் தாங்கிப் போராடவும் துணிவார்கள். அதற்கு தமிழகத்தைச் சுற்றியிருக்கக்கூடிய மலைப்பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என அன்றைய உளவுத்துறை
தமிழகத்தில் திராவிட தனிநாடு கோருவோர் குறித்து தகவல்களை மத்திய அரசிடம் பதிவு செய்திருந்தது.

இதன் காரணமாக மத்திய அரசும் மலை மற்றும் வனப்பகுதிகளை தமிழகத்துடன் இணைப்பது குறித்து மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்படும்படி மொழிவழி மாகாண பிரிவினை குழுவுக்கு ஆலோசனை வழங்கியிருந்தது.

பொதுவாக ஆரம்பகாலத்திலிருந்தே அதாவது 1948 ஜுன் 17 அரசியலமைப்பை உருவாக்கும் குழுத்தலைவராக இருந்த டாக்டர்.இராஜேந்திர பிரசாத், ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே.தார் தலைமையில் அமைத்த கமிட்டியில் இடம்பெற்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், ஐக்கிய கேரளம் உருவாக்கும் நோக்கத்துடன் எஸ்.கே.தாஸ் கமிஷன் சென்னை வந்து நேசமணியைச் சந்தித்தபோதும் கேரள மாநிலத்தைச் சார்ந்த அதிகாரிகள் கேரளத்துக்குச் சாதகமான முடிவுகளையே
எடுத்தார்கள்.

1953 பசல் அலி தலைமையிலான மொழிவழி மாகாண பிரிவினைக் கமிட்டியில் எம்.கே.கும்சுரு, கே.என்.பணிக்கர் ஆகியோர் இடம்பெற்றனர். இதில் கேரள மாநிலத்தைச் சார்ந்த கே.என். பணிக்கர் தமிழகத்துக்கு விரோதமான முடிவுகளையே எடுத்தார். தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்த பல தாலுகாக்களை பிற மாநிலங்களோடு இணைத்து மொழிவழி மாநிலங்களை உருவாக்கினர்.

இப்போதும் மத்திய அரசின் அதிகார மையங்களில் பதவி வகிக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்து உயர்அதிகாரிகள் 35க்கும் மேற்பட்டோர் மிகுந்த சக்தி வாய்ந்த பொறுப்புகளில் இருக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து தமிழகம், தமிழர்கள் தொடர்பான பிரச்னைகளில் தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் விரோதமாகவே செயல்பட்டு வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டு பரவலாக
எழுந்துள்ளது.

ஈழத்தமிழர், கச்சத்தீவு, தமிழக மீனவர், முல்லைப் பெரியாறு ஆகிய பிரச்னைகளில் உண்மைகளை மறைத்து தமிழகத்துக்குப் பாதகமான முடிவுகளையே எடுத்து வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டும் இங்கு உண்டு.

அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் செயல்பட்ட திராவிட இயக்கங்களும், காங்கிரஸ் பேரியக்கமும் கம்யூனிச இயக்கங்களும் விழிப்புணர்வுடன் இல்லாத காரணத்தால் தமிழகத்தின் எல்லைகள் சுருங்கிப் போய்விட்டது என்பது உண்மை. இதன் காரணமாகவே காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, நெய்யாறு, பரம்பிக்குளம் ஆழியாறு, சிறுவாணி ஆகிய நதிகளில் நமது பாரம்பரிய உரிமையை இழந்துள்ளோம்.

முல்லைப் பெரியாறு விவகாரம் வலுத்திருக்கும் இப்போதைய சூழ்நிலையிலாவது மேற்கண்ட இயக்கங்கள் தமிழக நலன் கருதி ஒன்றுபட்டு செயல்பட வேண்டுகிறோம். வளமான தமிழகம் வலிமையான பாரதம் உருவாகிட உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு நமது உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கிறோம்.

பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் இவர்கள் காட்டும் அக்கறையைத் தமிழக நலனில் காட்டினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

மற்றவர்களை தில்லிக்குக் காவடி தூக்குகிறார்கள் என்று நையாண்டி செய்தவர்கள். இப்போது தில்லிக்குக் கைகட்டி சேவகம் செய்வது அவர்கள் விருப்பம்.

அதற்காகத்தமிழ், தமிழன் என்று பேசித் தங்களை வளர்த்துக் கொண்டவர்கள் தமிழகத்தின் நலனைத் தங்கள் சுயநலத்துக்காக பலி கொடுக்கிறார்களே, என்னே இவர்களது தமிழ்ப் பற்று!

அர்ஜுன் சம்பத்

நன்றி:- தினமணி

http://dinamani.com/edition/rtistory.aspx?SectionName=Editorial%20Articles&artid=529930&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D!

Thursday, December 29, 2011

உணர்ச்சி அரசியலை தவிர்ப்பீர்

தற்போது தமிழக மக்களிடையே கட்சி பாகுபாடற்ற ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. அடுக்கடுக்கான நிகழ்வுகள் தமிழ் இளைஞர்களையும் அவர்களது சிந்தனையையும் தூண்டியுள்ளன. ஈழப்போரில் ஆரம்பித்து மீனவர் படுகொலை, மூவருக்கு தூக்குத் தண்டனை, கூடங்குள அணுத் திணிப்பு, முல்லைப் பெரியாறு பிரச்சனை என ஒவ்வொன்றாக அவர்களின் உணர்வுகளை தூண்டியுள்ளன.

இதில் அரசியல் கட்சியில் உள்ளவர்கள் என்ன செய்வதென்று தங்களது தலைமையை நோக்க, எந்தவித அறிகுறிகளையும் காணமல் அவர்கள் உள்ளுக்குள் புழுங்கி தவித்து வருகின்றனர். அரசியல் கட்சி சாராதவர்கள் தங்களது அதிகாரம் இப்படி பறிக்கப்பட்டு விட்டதே என்று உள்ளுக்குள் வெம்பி புலம்பி வருகின்றனர்.

தமிழகத்தில் பெரும்பாலும் படித்த மேல்த்தட்டு வர்க்கத்திடம் தமிழ் உணர்வு மழுங்கடிக்கப்பட்டு விட்டது. அப்படி உணர்வு இருந்தாலும் அவர்கள் யாரையும் நம்பி அதை வெளிக்காட்டத் தயாராக இல்லை. கீழ்த்தட்டு மக்கள் தங்களது உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். இதில் இயலாமையின் உச்ச நிலையை அடைந்த முத்துக்குமாரன், செங்கொடி போன்றோர் தங்கள் இன்னுயிரை துறந்தனர். முல்லைப் பெரியாறு போராட்டத்திலும் தங்களது உயிரை விட சிலர் முயன்றனர்.

ஆனால் தமிழகத்தின் தற்போதைய காலகட்டம் மிகவும் முக்கியமான கால கட்டம் ஆகும். தமிழகம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்த நிலையில் உள்ளது. ஆனால் இந்தியாவுக்காக ஒரு காந்தி இருந்தார். தமிழகத்திற்கு ஒரு தலைவர் இல்லை. எனவேதான் பொங்கி வரும் உணர்வை தமிழர்கள் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். சுதந்திரம் பெற்ற பின் இந்தியா, தமிழர் தொடர்பான பிரச்சனைகளில் தமிழருக்கு எதிரான நிலையையே எடுத்து வந்திருக்கிறது. எனவே இனியும் இந்தியாவை நம்பி பலன் இல்லை.

செய்ய வேண்டியது என்ன?
எனவே இளைஞர்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கை, தமிழர் பாதுகாப்பு, உரிமைகளை கருத்தில் கொண்டு தொலை நோக்குப் பார்வையுடன் சிந்தித்துச் செயல்பட வேண்டும். அவர்கள் உணர்வு கொண்ட சக தோழர்களை அடையாளம் காண வேண்டும். அவர்களோடு இணைந்து அறிவுப் பூர்வமாக செயல்பட வேண்டும். தனித் தனி அமைப்புகளில் இருந்து கூட ஒன்றாக செயல்படலாம். ஆனால் நோக்கம் ஒன்றாக இருக்க வேண்டும். அவ்வாறு செயல்படும்போது உங்களுக்குள் சிறந்த தலைவர்களை நீங்கள் அடையாளம் கண்டு தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

அதிகாரத்தை பெற முடிகிறதோ இல்லையோ கிடைக்கிற நேரங்களில் நேரடியாக மக்களிடம் செல்லுங்கள். வீடு வீடாக, தெரு தெருவாக சென்று அவர்களது பிரச்சனைகளை கண்டறியுங்கள். அந்த பிரச்சனைகளை போக்க என்னனென்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்யுங்கள். அதில் தோல்வி ஏற்படலாம். அதனால் துவண்டு விடாதீர்கள். தொடர்ந்து மக்களோடு இணைந்து பணியாற்றுங்கள். நீங்கள் மக்களின் மனதில் இடம் பிடித்து விடலாம். அப்போது நீங்கள் மக்களின் பிரதிநிதிகளாகலாம்.

சட்டசபையில் திராவிட கட்சிகளைவிட அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும். அதன் பின் அரசியலில் புதிய மாற்றங்களை கொண்டு வரவேண்டும். தமிழ் மக்கள் சிறந்த அரசியலை நடத்தக் கூடியவர்கள் என்பதை நிரூபித்துக் காட்டவேண்டும். அதற்காக என்னென்ன சாதனைகள் செய்ய வேண்டுமோ அத்தனை சாதனைகளையும் செய்ய வேண்டும். முதலில் கற்றறிந்தோரை ஒன்று சேருங்கள். அவர்களின் வட்டங்களை பெரிதாக்குங்கள்.

இந்த வட்டம் பெரிதாகும்போது உங்களது வேலைகள் எளிதாகிவிடும். சாதிப் பிரச்சனை தமிழனுக்கு முதல் எதிரி என்பதை கண்டுகொள்ளுங்கள். எனவே மாற்றுச் சாதிகளைச் சேர்ந்த ஒத்த கருத்துடைய தோழர்களை ஒன்று சேருங்கள். அனைவருக்கும் சாதிச் சமநிலையை உணர்த்துங்கள். அதன் பின் சாதி மறைந்து விடும். படித்த பெரியவர்களை ஒன்று சேருங்கள். அவர்களின் அறிவுரையின்படி ஆங்காங்கே நிலவும் சிறு சிறு பிரச்சனைகளை முளையிலேயே கிள்ளிப் போடுங்கள். தமிழ்ச் சாதிகள் இடையே அனைவரும் சமம் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். அதன் அடுத்த நிலைதான் சாதியற்ற சமுதாயம். சாதிச் சமநிலை ஏற்பட்டால் சாதியற்ற சமுதாயம் தன்னால் உருவாகும். சாதிகள் ஒன்றிணைந்தால் தமிழனை ஏமாற்றுபவர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும்.

சமூக ஒருங்கிணைப்பை உருவாக்குங்கள். ஒவ்வொரு பிரச்சனைக்கும் அரசாங்கத்தையே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்காமல், மக்கள் தாங்களாக தேவைகள் மற்றும் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுங்கள். எனவே என் உணர்வுள்ள தமிழ் மக்களே உணர்ச்சி வசப்பட வேண்டாம். உணர்ச்சி அரசியலை கைவிடுங்கள். நிதானத்துடன் தொலைநோக்குப் பார்வையுடன் அரசியல் செய்ய ஆரம்பியுங்கள். உங்களது எதிர்காலம் உங்கள் கையில்தான் உள்ளது.

Monday, December 26, 2011

தமிழீழத்தை நினைவுறுத்தும் ஃபிரான்ஸ்

(யோகன்னா யாழினிக்கு வந்த மின்னஞ்சல்)

விடுதலைப்புலிகள் செய்த நல்லவை + கெட்டவை பற்றி, ஆங்கிலம் பேசக்கூடிய ஒரு ஃபிரெஞ்சுக்கார நண்பனிடம் சில மாதங்களுக்கு முன்னர் விவாதித்துக்கொண்டிருந்தேன்! அரசியல் பேசக்கூடிய அளவுக்கு அப்போது ஃபிரெஞ்சு தெரிந்திருக்கவில்லை! “ பிரபாகரன் செய்த தவறுகள்” பற்றி அவர் என்னிடம் கேள்வி எழுப்பினார்! அந்த உரையாடலில் இடையிலே, நான் பின்வருமாறு அவருக்கு சொன்னேன்! “ நாங்கள் பிரபாகரனை மறந்துவிட்டு, அமைதியாக வாழ தயாராக இருக்கிறோம்! ஆனால் உங்கள் நாடு, எங்களுக்குப் பிரபாகரனை மறுபடியும் மறுபடியும் நினைவூட்டுகிறது” என்று! இதனைக்கேட்ட நண்பருக்கு அதிர்ச்சி! “ என்னது ஃபிரான்ஸ் நாடு, பிரபாகரனை ஞாபகப்படுத்துகிறதா? அது எப்படி? “ என்றுஅவசரமாகக் கேட்டார்! அவரிடம் நான் சொன்னேன்! ” பிரபாகரன் ஒரு நிழல் அரசாங்கம் நடத்தினார் தெரியுமா? அது ஃபிரான்ஸ் போன்ற மேற்கு நாடுகளுக்கு நிகராக இருந்தது!” இப்போது நண்பருக்கு மேலும் மேலும் ஆச்சரியம்! “ எப்படி? எப்படி?” என்று ஆர்வமாகக் கேட்டார்! அவருக்கு நான் சொன்னவற்றை கீழே தொகுப்பாகத் தருகிறேன்!

வன்னியிலே பிரபாகரன் ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தினார்! முதலிலேயே சொல்லிவிடுகிறேன், அந்த அரசாங்கத்தில் ஒரு சில இறுக்கமான கட்டுப்பாடுகள் இருந்தன! ஆனால், நிர்வாகமோ ஐரோப்பிய நாடுகளைப் போலத்தான் இருந்தது! லஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊழல் என்றாலே என்னவென்று தெரியாது! ஏழை பணக்காரன் பேதம் இல்லை! வேலை கொடுக்கும் நிறுவனங்கள் கண் துடைப்புக்கு இண்டெர்வியூ நடத்திவிட்டு, காசு வாங்கிக்கொண்டு அல்லது செல்வாக்கைப் பயன்படுத்தி வேலை கொடுக்கும் இழி நிலை இல்லை! அரசியல் கட்சிகளின் காமெடி கிடையாது! கொழும்பில் இருப்பது போல, ஒரு கட்சி, அதற்கு தொண்டர்கள், சில குண்டர்கள், வன்முறைகள், பஸ் கொழுத்துறது, காரை எரிக்கிறது, ஒருத்தனுக்கு ஒருத்தன் அடிச்சுக்கிட்டு சாவுறது எதுவுமே கிடையாது!

ஐரோப்பா போலவே ரொம்ப அமைதியா இருக்கும்! மேலும் விடுதலைப்புலிகளின் காவல் துறை பற்றி சொல்லியே ஆகவேண்டும்! கருநீல ஜீன்ஸும் + மெல்லிய நீலத்தில் ஷர்ட்டும் அணியும் காவல் துறை உறுப்பினர்கள் நிச்சயமாக ஃபிரெஞ்சுப் போலீசையோ, லண்டன் போலீஸையோ நினைவு படுத்துவார்கள்! இவர்களிடம் இருக்கும் ஸ்மார்ட், கம்பீரம் அவர்களிடமும் இருக்கும்! அப்புறம் தமிழீழ போலீசுக்கு லஞ்சம் கொடுப்பீங்க? அந்தப் பேச்சே இருக்காது! ஒரு வேளை நீங்கள் ஒரு தப்புப் பண்ணிவிட்டு, அதனை விசாரிக்க வரும் போலிஸ் அதிகாரிக்கு ஒரு ஐம்பது ரூபாவை நீங்கள் எடுத்து நீட்டினீர்கள் என்றால், அவ்வளவுதான், அடுத்தநாள் எங்கோ ஒரு இருட்டறைக்குள் இருந்து முழிச்சு முழிச்சுப் பார்ப்பீர்கள்! இன்று மேற்கு நாடுகள் செல்வந்த நாடுகளாக இருப்பதற்கு முக்கிய காரணமே சுய உற்பத்தியும், டெக்ஸ் ( Tax ) அறவிடப்படுகின்றமையுமே ஆகும்!

வன்னியிலும் டெக்ஸ் முறைமை இருந்தது! கள்ளக்கணக்கு காட்டுறது, பணத்தை பதுக்கி வைத்து கறுப்பு பணமாக்குறது இதெல்லாம் கனவிலும் நடக்காது! சட்டம் ஒழுங்கு அப்படி இருந்தது! இங்கு ஃபிரெஞ்சுக்காரர்கள் தூய ஃபிரெஞ்சில் தான் பேசுவார்கள்! அதற்குள் ஆங்கிலத்தைச் செருகி, புதுவிதமான ஒரு பாஷை பேசுவதில்லை! இங்கு தூய ஃபிரெஞ்சு என்றால், அங்கு தூய தமிழ்! எல்லாவிதமான பொறியியல் சாதனங்கள், இலத்திரனியல் சாதனங்கள் அனைத்துக்கும் தமிழைக் கண்டுபிடித்து நல்ல தமிழில் தான் கதைப்பார்கள்! வன்னி மக்கள் பேசும் பேச்சை வைத்தே, அவர் வன்னிதான் என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும்! வன்னிமக்கள் தமது தேவைகளின் நிமிர்த்தம் அரச கட்டுப்பாடுப் பகுதிக்குள் வரும்போது, அவர்களது மொழியை, இங்கிருப்பவர்கள் பரிகசித்த சம்பவங்களும் நிறையவே உண்டு!

கலைகள் - வன்னியிலே கலைத்துறை உச்சம் பெற்றிருந்தது என்பதை ஆணித்தரமாகக் கூறுவேன்! எத்தனை நூல்கள்? எத்தனை பாடல்கள்? எத்தனை கவிஞர்கள்? பாடலாசிரியர்கள்? இசையமைப்பாளர்கள்! அனைவருமே மக்களால் மிகவும் ரசிக்கப்படுபவர்கள்! ஒரு கிளிநொச்சி பாடலாசிரியர் பாடல் எழுதுவார்! அதற்கு கிளிநொச்சி இசையமைப்பாளர் மெட்டுப் போடுவார்! பாடலை பாலசுப்ரமணியம் பாடியிருப்பார்! கார்த்திக் பாடியிருப்பார்! கேட்கவே பரவசமாக இருக்கும்! வன்னியிலே பிரபாகரன் வளர்த்தெடுத்த கலைகள் பற்றி, தனிப்பதிவுகள் ஆறேழு எழுதினால் தான் தகும்! வன்னியின் எல்லைப் பகுதிகளில் கடும் சண்டைகள் நடைபெற்ற 2007 ம் ஆண்டு காலப்பகுதி! கிளிநொச்சியிலே சில தமிழக சிற்பாச்சாரிகள் தங்கியிருந்து, ஒரு மிகவும் வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு நூதன சாலையை நிர்மாணிக்கிறார்கள்!

“ தமிழீழ தேசிய நூதன சாலை” அது! அதன் வேலைப்படுகளைப் பார்த்தால் மண்டை விறைக்கும்! இங்கு பாரிஸின் லூவ்ர் மியூசியத்தைப் பார்த்தது போலவே இருக்கும்! அவ்வளவு அழகிய வேலைப்பாடுகள்! அதற்கு அருகிலே “ சந்திரன் பூங்கா” என்று ஒரு உயிரியல் பூங்கா! தொங்கு பாலம்! எத்தனையோ விதமான பறவைகள், விலங்குகள்! எல்லாமே தமிழில் பொறிக்கப்பட்ட பெயர் பலகைகள்! விளக்க அட்டைகள்! பார்க்கப் பார்க்க பரவசமாக இருக்கும்! இதைவிட விடுதலைப்புலிகள் கட்டியெழுப்பிய மருத்துவத்துறை பற்றியும் அவர்கள் நிகழ்த்திய சாதனைகள் பற்றியும் சொல்ல பல பத்து பதிவுகள் போட வேண்டும்! வன்னியிலே “ கணிநுட்பம்” என்று ஒரு கம்பியூட்டர் சஞ்சிகை வந்தது! தலைவரின் மகன் சாள்ஸ் ஆண்டனிதான் அதன் நிர்வாகி! என்ன சொல்வது? சத்தியமா கொழும்பில் இருந்துகூட அப்படி ஒரு சஞ்சிகையை நான் பார்த்ததில்லை! அதன் அட்டையத் தொட்டுப் பார்த்தால் கை கூசும்! புகைப்படத்துறையும், அச்சகத்துறையும் அங்கிருந்ததைப் போல வேறெங்கும் நான் காணவில்லை!

வன்னியில் இயங்கிய வங்கிகள் பற்றி சொல்லவா வேண்டும்? உங்களுக்கு வங்கியிலே வேலை பார்க்க வேண்டுமா? அப்படியானால் அதற்க்கு லஞ்சப் பணமாக ஒரு தொகை கொடுக்கணுமே! அடப்போங்கப்பா, திறமை இருந்தால் வேலை! ஒரு சல்லிப் பைசா தேவையில்லை! இங்கு ஐரோப்பாவில் இருக்கும் வங்கிகள் போலவே! வன்னியின் ஒவ்வொரு கட்டுமானத்தையும், அணுவணுவாக ரசித்தேன்! அனைத்துமே ஐரோப்பாவுக்கு நிகரானவை! இன்னும் என்னென்ன கட்டமைப்புக்கள் எல்லாம் வன்னியில் இருந்தன என்பதை பின்னூட்டம் போடும் நண்பர்கள் வந்து சொல்வார்கள் என்று நம்புகிறேன்! ஒன்று தெரியுமா? இத்தினூண்டு குட்டி வன்னியில் 7 விமான ஓடுபாதைகள் இருந்ததாக, அரச படையினர் சொல்கிறார்கள்! ஒரு வேளை நாடு கிடைத்திருந்தால்...., சொல்லவே வேண்டாம் நிச்சயமாக ஒரு குட்டி ஐரோப்பாவே அங்கு உருவாகியிருக்கும்!

இங்கு ஃபிரான்ஸில், இவர்கள் எந்தளவுக்கு தங்கள் நாட்டை நேசிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது, எமக்கும் மிக இயல்பாகவே நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும், மண் பற்றும் வந்துவிடுகிறது! ஆனால் எமக்குத்தான் நாடே கிடையாதே! என்ன செய்ய? தமிழீழம் என்ற மண் மீது வைக்கவேண்டிய அத்தனை பற்றுக்களையும் நான் இந்த ஃபிரெஞ்சு தேசத்தின் மீது வைத்திருக்கிறேன்! உலகத்தில் மிகவும் அழகான சாலை இங்குதான் இருக்கிறது! அதில் நடக்கும் போது, கிளிநொச்சி 9 சாலையில் நடப்பதாகவே தோன்றும்! மோனாலிஸா ஓவியம் இருக்கும் லூவ்ர் மியூசியத்துக்குப் போகும் போதெல்லாம், எனக்கு அந்த கிளிநொச்சி மியூசியத்துக்குப் போவதாகவே நினைப்பு வரும்! பாரிஸ் நகரின் மத்தியில் இருக்கும் கொன்கோர்ட் பூங்காவில் நிற்கும் போது, சந்திரன் பூங்காவின் நினைப்பே வந்து போகும்! இங்கிருக்கும் கல்லறைகளும், அவை பராமரிக்கப்படுகின்ற விதமும், அங்கே எமது தெய்வங்கள் உறங்கும், “ துயிலும் இல்லங்களை” நினைவுபடுத்துகிறது! இங்குள்ள தொலைக்காட்சியில், சுத்தமான ஃபிரெஞ்சில் செய்தி வாசிக்கும் ஒரு ஃபிரெஞ்சுக்காரியைப் பார்க்கும் போது, அவளை சைட் அடிக்கத் தோணுவதில்லை! அங்கே சுத்தமான தமிழிலே செய்தி வாசித்த இசைப்பிரியாதான் நினைவுக்கு வருகிறார்! கூடவே விழியோரம் கொஞ்சம் கண்ணீர்! எப்படிப் பார்த்தாலும் இங்கிருக்கும் ஒவ்வொரு தூணும், துரும்பும் எங்களுக்கு, எமது மண்ணையே நினைவுபடுத்துகிறது!

ஆகவே புலம்பெயர் தமிழர்களின் மனசை விட்டு, புலிகளையும், தமிழீழத்தையும், பிரபாகரனையும் அழிக்க முடியாமல் இருப்பதற்கான உளவியல் பின்னணி இதுதான்! ஒவ்வொரு முறையும், ஃபிரெஞ்சு இராணுவ வீரன் களப்பலியான செய்தி வரும்போதெல்லாம் உள்ளம் துடிக்கும்! யாரென்றே தெரியாத அந்த வீரனுக்கு மனதுக்குள் வீரவணக்கம் செலுத்துவேன்! “ மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடி சூடும் தமிழ் மீது உறுதி” பாடலை மனதுக்குள் உச்சரிப்பேன்! இவையெல்லாம் இயல்பாகவே நடந்துவிடுகிறது! 1940 களில் ஹிட்லரின் படைகள் ஃபிரான்ஸை ஆக்கிரமித்த போது, ஃபிரெஞ்சுத் தளபதி சா து கோல், லண்டனுக்குப் போய், நாடுகடந்த ஃபிரெஞ்சு அரசை உருவாக்கினார்! அதைத்தான் இன்று தமிழனும் செய்கிறான்!

ஆகவே ஐரோப்பாவில் இருக்கும் எந்தவொரு தமிழனுக்கும் ஈழப்பற்று வருவது மிக மிக இயல்புதான்! நாமாக மறக்க நினைத்தாலும், இங்கு வந்த பின்னர் பிரபாகரனையும், தமிழீழத்தையும் இங்கு மறக்கவே முடிவதில்லை! “ புலம்பெயர் தமிழர்கள் யுத்த வெறியர்கள்!” என்று யார் திட்டினாலும் நமக்கு வலிப்பதில்லை! இருந்துவிட்டுப் போகிறோம்! இங்கு மறக்கக் கூடிய சூழல் இல்லை! அதனால் கத்துகிறோம்! அங்கு நினைக்கக் கூடிய சூழல் இல்லை! திட்டுகிறீர்கள்! என்ன செய்ய?
சுதந்திரம் கொடுத்து உரிமைகளை மறுத்தால்

அதுவும் அடிமைத்தனமே.

Saturday, December 24, 2011

தமிழை சிதைக்கலாமா?

(பண்புடன் குழும விவாதத்தின் ஒருபகுதி)
//நாட்டுக்கு "சுதந்திரம்' கிடைத்து இன்றைக்கு 65ஆவது ஆண்டு நடக்கிறது. 650 ஆண்டு சுதந்திர வாய்ப்பில் தமிழ் மக்கள் அடைந்த நிலை, "இங்கிலீஷ் வேண்டாம்; தமிழ் வேண்டும்'. இதுதானா? அய்யோ பைத்தியமே! தமிழை (பிறமொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்படாத) தமிழ் மூல நூல்களை, தனித் தமிழ் இலக்கிய நூல்களில் எதை எடுத்துக் கொண்டாலும், அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பதான இலக்கணப்படி அமைந்த தமிழ் "சுவை' அல்லாமல், அறிவு, பகுத்தறிவு, வாழ்க்கை அறிவு, வளர்ச்சி பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனத்தை சிறு கருத்தை, பூதக் கண்ணாடி வைத்து தேடியாவது கண்டுபிடிக்க முடியுமா? கண்டுபிடித்து பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று தமிழ் அபிமானிகளை வணக்கத்தோடு கேட்கிறேன்.

சர்வத்தையும் விஞ்ஞான மயமாக மேல்நாட்டு முறைகளைக் கொண்டு ஆக்கி, சர்வத்திலும் மேல்நாட்டானை (புதிய முறைகளை)ப் பின்பற்றி, வளர்ச்சி அடையவே முயற்சிக்கிறோம். திட்டம் போடுகிறோம். இந்தக் காரியங்களுக்குதமிழர் – முத்தமிழர் சங்கங்களையே நம்பி என்ன காரியத்திற்கு, ஆங்கிலக் கருத்தோ,இங்கிலீஷ் சொல்லோ, ஆங்கிலேயனிடம் பயிற்சியோ இல்லாமல் இங்கிலீஷை பகிஷ்கரித்து விட்டு என்ன சாதித்துக் கொள்ள முடியும்?பலரும் அறிந்த சொல்லைப் புறக்கணிப்பானேன் ?

சாதாரணமாக பிரயாணத்திற்குப் பயன்படும் ரயில், கார், லாரி, பஸ், சைக்கிள் என்ற பெயர்களை எதற்காக மாற்ற வேண்டும்? இந்தியாவில் உள்ள பல நூற்றுக்கணக்கான மொழி பேசும் மக்களும், இந்தப் பெயர்களை அப்படியேதான் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.–

தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம்...தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? "தாய்ப்பால் சிறந்தது' என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தற்றவள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும்!


இப்படிப்பட்ட இந்தத் தாய்ப் பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை காலில் நடப்பதைத் தவிர, உழைப்புக்கு – காரியத்துக்குப் பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளை – ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே – என்றுதான் பரிவோடு கேட்கிறேன்.இன்றைய தினம் கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள்.//

திரு செல்வன் அவர்களே,

தமிழ் பற்று, தமிழ் மொழி மீதான ஆர்வம் என்பதை நீங்கள் தவறாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள்.

தமிழக மக்களும்தான். அதற்கு அர்த்தம் ஒருவர் தமிழ் மொழி தவிர மற்ற மொழிகளை கற்கக் கூடாது என்று பொருளல்ல. நீங்கள் எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். அதற்காக தாய் மொழியை மறக்கவோ அல்லது அதனை சிதைக்கவோ கூடாது என்பதைத்தான் தமிழ் மொழி ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவதெங்கும் காணோம் என்று பாரதி சொன்னான். அதைத்தான் நாங்களும் சொல்கிறோம். நீங்கள் மற்ற மொழிகளை பயின்றால்த்தான் தமிழ் மொழியின் இனிமை தெரியும்.

வட மொழியும், ஆங்கிலமும் இன்னும் பிற மொழிகளையும் தமிழர் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் தமிழ் மொழியை அழிக்கக் கூடாது.

நடப்பது என்ன? சாதாரண மக்கள் வரை வேண்டுமென்றே தமிழில் ஆங்கிலத்தை கலந்து பேசி அதனை பெருமை என்று கருதுகின்றனர். இவர்கள் யாரும் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ பேசினால் யாரும் குறை சொல்லப்போவதில்லை. தமிழ் தெரியாத ஒரு வேற்று மாநிலத்தவர், நாட்டவர் அப்படித்தான் பேசி வருகின்றனர். அவர்களை யாரும் குறை சொல்லவில்லை.

தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள் வேண்டுமென்றே மொழிக்கலப்பை செய்வதைத்தான் தவிர்க்க வேண்டும் என்கிறோம். ஆங்கிலம் படிக்காதீர்கள் என்று சொல்லவில்லை. கருத்துப் பரிமாற்றத்திற்கு ஆங்கிலம் அவசியம். இந்தி மொழியை தமிழ் அரசியல்வாதிகள் வெறுக்கக் காரணம் அதன் திணிப்புதானே தவிர. அந்த மொழியை அல்ல.

இது வட இந்திய அரசியல்வாதிகளின் செயலுக்கான எதிர்வினையே தமிழக அரசியல்வாதிகளின் இந்தி எதிர்ப்பு. மற்றபடி தனித் தமிழ் ஆர்வலர்கள் தமிழ் மொழியைத் தவிர வேறு மொழிகளை படிக்காதீர்கள் என்று சொல்வதாக நீங்கள் நம்பினால் அது தவறு.

ஆங்கிலம் கலந்து பேசினால்த்தான் கௌரவம் என்று நினைத்து சாதாரண மக்கள் ஒரு மயக்கத்தில் உள்ளனர். அவர்கள் முழுக்க முழுக்க ஆங்கிலத்தை தெளிவுற கற்று அம்மொழியை பேசினால் தவறில்லை. ஆனால் ஆங்கிலத்தையும் கற்காமல், தமிழையும் கற்காமல் இரண்டு மொழியும் அழித்து மூன்றவது ஒரு மொழியை உருவாக்கி வருகின்றனர். இதற்குத்தான் தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

தற்போதுள்ள நிலைமை தொடர்ந்தால் இன்னும் நூறு ஆண்டுகளில் தமிழ் மொழியை சுத்தமாக மறந்து விடுவார்கள். அதன் பின் இந்த பிரச்சனையே இருக்காது. பின்னர் ஆராய்ச்சியாளர்கள், பண்டிதர்கள் தமிழை விழுந்து விழுந்து ஆராய்ச்சி செய்வார்கள். சாதாரண மக்கள் தங்களுக்குத் தெரியாமலேயே அந்த மொழியை மறந்து விடுவார்கள்.

அந்த நிலையை தடுக்கத்தான் மொழி ஆர்வலர்கள் முயற்சி செய்கிறார்கள். மற்றபடி மாற்று மொழிகளை கற்க வேண்டாம் என்று சொல்லவில்லை.
•••••••••••••••••••••••••••••••••••••••
//அடுத்தவனை அது பேச வேண்டாம், இதை செய்யவேண்டாம் என்று திட்டுவதை தவிர தமிழ் ஆர்வலர்கள் செய்த உருப்படியான காரியங்கள் ஏதேனும் உண்டா?

அடுத்தவனுக்கு தமிழ் படி தமிழில் பேசு என்று உபதேசம் செய்து விட்டு தானும் தன்னுடைய குடும்பமும் ஆங்கிலமும் இந்தியும் கற்று முன்னேறுவது தானே இந்த தமிழ் ஆர்வலர்களின் பல்லாண்டு செயல்.

தமிழை வளர்க்க செய்த, செய்கின்ற, செய்யப்போகின்ற செயல்களை கொஞ்சம் சொல்லுங்களேன்.

ராஜசங்கர்//

திரு ராஜா சங்கர் அவர்களே,

தமிழ் ஆர்வலர்கள் யாரையும், எதையும் பேச வேண்டாம் என்று சொல்லவில்லை. தமிழில் எதையும் கலக்காதீர்கள் என்றுதான் சொல்கிறோம். மற்றபடி நீங்கள் உலகத்தின் எந்த பாஷையையும் பேசினாலும் நாங்கள் வருத்தப்படப்போவதில்லை.

நீங்கள் தமிழை பேசாவிட்டாலும் யாரும் வருத்தப்பட மாட்டார்கள். ஆனால் தமிழில் கலப்படம் செய்யாதீர்கள்.

எந்த மொழியை கற்றுக் கொள்ளுங்கள். அதற்கு தடையில்லை. தமிழை மட்டும் அழிக்காதீர்கள் என்பதுதான் எங்களது வேண்டுகோள்.
•••••••••••••••••••••••••••••••••••••••

//வேற்று மொழி தெரியாதவன் தமிழில் மொபைல் போன் என்பதை எப்படி சொல்லுவான்?? கைப்பேசி/குறுபேசி/செல்பேசி என்று அதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் படுத்தல் கள்.

இதில் கைப்பேசி என்று சொன்னால் குறு பேசி என்று சொல்பவர்களுக்கு கோபம். செல்பேசி என்று சொன்னால் இந்த இரண்டு பேருக்கும் கோபம். இதிலேயே யாரும் ஒன்றும் செய்யவில்லையே? //

திரு ராஜா சங்கர் அவர்களே,

நீங்கள் சொல்வது தமிழ் படுத்துதல்கள். அதுவல்ல தமிழ் ஆர்வலர்களின் வேலை. அது சில ஆர்வக் கோளாறுகளால் செய்யப்படுவது. இதனால் யாருக்கும் கோபம் வரவில்லை.
•••••••••••••••••••••••••••••••••••••••
//அன்றாடம் சோத்துக்கு உழைப்பவன் செல்போன் என்று சொல்லிவிட்டு அடுத்தவேலையை பார்க்கபோவானா? அல்லது செந்தமிழில் பேசி வயிற்றை காயப்போடுவானா? //

வயிற்றுக்குச் சோறு கிடைக்கிறது என்றால் ஹீப்ரூ வேண்டுமானாலும் பேசுங்கள் என்றுதான் சொல்கிறோம். அதற்காக நான் ஹீப்ரூவை தமிழில் கலந்து பேசுவேன் என்பதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியாது.
•••••••••••••••••••••••••••••••••••••••
//தமிழில் பெயர்வைக்க, கருத்துக்களை சொல்ல தமிழை படித்திருக்கவேண்டும். கண்டுபிடிப்புகளை நிகழத்தியிருக்கவேண்டும். அதற்கெல்லாம் கையாலாகாதவர்கள் ஏன் தமிழில் பேசு என கூவ வேண்டும்? //

தமிழை படிக்கவிடாமல் செய்து வருவதும் தமிழ் மொழிக்கு எதிரான சதி என்கிறோம். கண்டுபிடிப்புகளுக்கும் மொழிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன? கண்டுபிடிப்புகளை வேறு மொழிகளில் சொல்லத்தான் வேறு மொழி தேவை. தமிழர்கள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை என்று நீங்களாக நினைத்துக் கொண்டால் அதற்கு நாங்கள் எதுவும் செய்ய முடியாது. தமிழர்கள் கையாலாகாதவர்கள் இல்லை. அவர்கள் சாதனை செய்து வருகிறார்கள்.

அவர்களது சாதனை பெரும் சாதனையாக ஆகிவிடுமோ என்றுதான் சிலர் அஞ்சுகின்றனர். மற்றபடி நீங்கள் எந்த மொழியில் பேசினாலும் கவலை இல்லை. தமிழில் வேறு மொழிகளை கலந்து பேசாதீர் என்றுதான் சொல்கிறோமே தவிர, பேச வேண்டாம் என்று சொல்லவில்லை.
•••••••••••••••••••••••••••••

நீங்கள் தமிழை பேசாவிட்டாலும் யாரும் வருத்தப்பட மாட்டார்கள். ஆனால் தமிழில் கலப்படம் செய்யாதீர்கள்.

ராஜசங்கர்,

மிதிவண்டியும், தொலைக் காட்சியும்,மின்னஞ்சலும் தமிழர் கண்டறிந்ததா..? அன்றாட வாழ்விற்க்குள் வரவில்லையா என்ன.அவ்வளவு ஏன் கணிணி, கணிப்பொறி என்று சுஜாதா காலத்தில் எவ்வளவு சர்ச்சைகள் வந்தது. சில படுத்தல்கள் காரணமா கலப்பை ஏற்றுக்க வேண்டியது இல்லையே. நேரிடையா முழுமையா ஆங்கிலத்தில் பேசிக்கலாமே.. ?

நமக்கு பழைய வரலாற்றை அறிய சமஸ்கிரத கலப்பு தேவை படுகிறது. வருங்காலத்தில் வாழ ஆங்கில கலப்பு தேவை படுகிறது எனில், காலந்தோறும் பிற மொழிகள் கலப்பிற்க்கு விட்டு கொடுத்தால் தமிழ் எங்கு மிச்சம் நிற்க்கும்..?

அவ்வளவு ஏன் நீங்கள், நான், செல்வன், தேவன் என நாம் அனைவரும் சமகாலத்தில் பிறமொழி வாழ்வியல் (அலுவலக) சூழலில் வாழ்ந்து கொண்டு இங்கு தமிழில் பேசவில்லையா..?

தமிழ் பயணி
•••••••••••••••••••••••••••••
செல்வன்

ரேம்போ உணர்ச்சிவசப்பட்டு பைத்தியம் என்றெல்லாம் கூறி இருக்கிறீர்கள்..

அந்த பாடலில் ஆங்கிலம் கற்க கூடாது என்றோ பேசக்கூடாது அன்றோ இல்லை மொழி கலப்பில்லாமல் பேசுங்கள் என்று தான் இருக்கிறது. அதற்க்கு எதற்கு இவ்வளவு வியாக்கியாங்கள்..

இன்னைக்கு நத்தார் விடுமுறை நாள்.. பொழுது போகவில்லையா..

அப்புறம் என்ன அது //பகிஷ்கரித்து விட்டு//???

பாக்கியராசன் சே
•••••••••••••••••••••••••••••••••••••••
//நான் எந்த மொழியில் எப்படி பேசவேண்டும் என்பதை சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. வேண்டுமானால் நீங்கள் தனித்தமிழில் பேசி வாழந்து காட்டுங்கள். அது எப்படியிருக்கிறது என்று பார்த்து மற்றவர்கள் பின்பற்றுவார்கள்.

சினிமாவில் ஒய் திஸ் கொலைவெறி என்று பாடினால் நாக்கில் ஜொள் வழிய கேட்கவேண்டியது. என்கு டமில் த்ரியாத் என்று சொன்னால் அதையும் கேட்டு கொண்டாடவேண்டியது. அப்புறம் எவனோ தமிழில் பேசவில்லை என ஒப்பார் வைக்கவேண்டியது.

முதலில் நீங்கள் ஒழுங்காக தமிழ் பேசி வாருங்கள். அப்புறம் அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லலாம்.//
//மிதிவண்டி, தொலைக்காட்சி, மின்னஞ்சல் என்றெல்லாம் நடைமுறை வாழ்க்கையில் எத்துணை பேர் சொல்லுகிறார்கள்? புழங்குகிறார்கள்? ஒரு சதவீதம் அல்லது இரண்டு சதவீதம் இருக்குமா?

கணினி என்பது ஏன் புழக்கத்தில் இருக்கிறது என்றால் அந்த சொல் பன்னெடுங்காலமாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. சாப்ட்வேர் என்பதற்கு இது தான் சொல் என எல்லோரும் ஒரு ஒருமித்த கருத்துக்கு வந்துவிட்டார்களா?

//நமக்கு பழைய வரலாற்றை அறிய சமஸ்கிரத கலப்பு தேவை படுகிறது. வருங்காலத்தில் வாழ ஆங்கில கலப்பு தேவை படுகிறது எனில், காலந்தோறும் பிற மொழிகள் கலப்பிற்க்கு விட்டு கொடுத்தால் தமிழ் எங்கு மிச்சம் நிற்க்கும்..? //

ஏனென்றால் நாம் எதையும் செய்வது கிடையாது. அறிவியலுக்கு ஏற்றவாறு எதையும் மொழிபெயர்த்தோ தமிழ்படுத்தியோ வைக்கவில்லை. ஏதேனும் ஒரு புத்தக கண்காட்சிக்கு போய் பாருங்கள் அறிவியல் நூல்கள் எத்துணை இருக்கிறது என?

சமையல்கலை, சினிமா, சோதிடம், கற்பனைகதைகள், சிறுகதைகள், கவிதை என்றெல்லாம் தான் இருக்குமே தவிர வேறு ஏதுவும் இருக்காது. அப்படியிருக்க, தமிழ் எப்படி வாழும்?????

நமக்கு தேவை, சினிமா, கவிதை, கதை அடுத்தவனை திட்டுவது. அப்புறம் தேவலோகத்தில் இருந்து யாரேனும் வந்து தமிழை வாழவைப்பார்களா????

//
அவ்வளவு ஏன் நீங்கள், நான், செல்வன், தேவன் என நாம் அனைவரும் சமகாலத்தில் பிறமொழி வாழ்வியல் (அலுவலக) சூழலில் வாழ்ந்து கொண்டு இங்கு தமிழில் பேசவில்லையா..? //

முழுக்க முழுக்க செந்தமிழில் பேசவில்லை. இப்போது பேசவும் முடியாது.

ராஜசங்கர்//


ஐயா ராஜா சங்கர் அவர்களே,

உங்களை யாரும் எந்த மொழியிலும் பேச சொல்லவில்லை.

தமிழில் கலப்படம் செய்யாதீர்கள் என்பது எங்களது கோரிக்கையே. அதையும் ஆணையாக சொல்லவில்லை.

மக்களிடம் காணப்படும் இழிநிலையே திரைத் துறையிலும் உள்ளது. மக்களிடம் உள்ள நிலை மாறும்போது இந்த நிலை மாறலாம்.

மற்றபடி நாங்கள் முடிந்தவரை தமிழில் பேசி, எழுதி வருகிறோம்.
•••••••••••••••••••••••••••••••••••••••
//முழுக்க முழுக்க செந்தமிழில் பேசவில்லை. இப்போது பேசவும் முடியாது. //

அது உங்களது நம்பிக்கை. மற்றபடி ஏற்கனவே கலந்துவிட்ட சமஸ்கிருத, ஆங்கில சொற்களை நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை. இனியும் அதிகமான வேற்றுமொழிச் சொற்களை புகுத்தாதீர்கள்.

மொழியை சிதைக்காதீர்கள் என்றுதான் சொல்கிறோம்.

ஏழு கோடிப்பேரில் தமிழறிந்த, கற்ற, புலமை பெற்ற அறிஞர்கள், ஆசிரியர்கள் ஒரு ஒரு லட்சம் பேராவது இருக்கமாட்டார்களா?

அந்த ஒரு லட்சம் பேரும் ஆளுக்கு ஏதேனும் ஒன்று செய்திருந்தாலே இன்னேரம் தமிழில் நல்ல நூல்கள் வந்திருக்கும், நல்ல படிப்பாளிகள் கிடைத்திருப்பார்கள். அந்த ஒரு லட்சம் பேர் ஒரு பத்துவருடத்திலேயே ஒரு கோடிப்பேராவது ஆயிருக்கமாட்டார்களா?

இந்த அளவுக்கு தமிழ் பற்றை வைத்துக்கொண்டு ஏன் கோரிக்கை கீரிக்கை எல்லாம் வைக்கவேண்டும்?

கையாலாகாதவர்கள் சொல்வதற்கு எந்த மதிப்பும் கிடையாது.

வளராத மொழி, மாற்றங்களை தாங்காத மொழி சிதைந்தே போகும். அது காலத்தின் கட்டாயம்.

வீடு கட்டினால் பராமரிக்கவேண்டும். பராமரிக்காதவீடு இடிந்தே போகும்.

ராஜசங்கர்


•••••••••••••••••••••••••••••••••••••••

ஐயா ராஜா சங்கர் அவர்களே,

அந்த தமிழர்களிடம்தானே நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். தெலுங்கர்களிடமோ, மலையாளிகளிடமோ நாங்கள் தமிழை பேசுங்கள், தமிழை வளருங்கள் என்று கோரிக்கை விடுக்க வில்லையே.

எங்களது ரத்த உறவுகளான அந்த ஏழு கோடிப்பேருக்கும், அவர்களிடையே உள்ள கற்றறிந்தோருக்கும்தான் நாங்கள் இந்த கோரிக்கையை முன் வைக்கிறோம்.

தமிழை கற்றறிந்த மாற்று இனங்களுக்கோ, தமிழை வியாபார மொழியாக பேசும் மார்வாடி போன்ற இனத்தவருக்கோ நாங்கள் கோரிக்கை விடுக்க வில்லை.

அந்த ஏழுகோடிப்பேரில் உள்ளவர்களாகத்தான் தமிழ் ஆர்வலர்கள் இந்த கோரிக்கையை முன் வைக்கிறார்கள். இப்போதே ஏராளமான வாசிப்பும், படைப்புகளும் உருவாகி வருகின்றன. இன்னும் சிறிது காலத்திற்குள் நீங்கள் விரும்பும் வகையில் கோடிக்கணக்கான படைப்புகள் உருவாகும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

//வளராத மொழி, மாற்றங்களை தாங்காத மொழி சிதைந்தே போகும். அது காலத்தின் கட்டாயம். வீடு கட்டினால் பராமரிக்கவேண்டும். பராமரிக்காதவீடு இடிந்தே போகும். //

உங்களது கருத்தை ஏற்கிறேன். ஆனால் அந்த வளர்ச்சி முறையான வளர்ச்சியாக இருக்க வேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் சிதைவு இருக்கக் கூடாது.

உடலில் ஒரு பாகம் மட்டும் வளர்ந்தால் எப்படி இருக்கும்? அதுதான் கூடாது என்கிறோம்.

வீட்டுப் பராமரிப்பு பணிகளில் ஒன்றுதான் மொழிக் கலப்புச் செய்யாதீர்கள் என்பது.
மக்கள் என்னிடம் சுதந்திரமாக வந்து
என்னிடமிருந்து சுதந்திரமாக செல்ல வேண்டும் - ஓஷோ

http://www.youtube.com/watch?v=otGQqO2TYMI

Wednesday, December 7, 2011

பொருள் - தமிழக எல்லைக்குள் ஐயப்ப பூஜை செய்ய கோரிக்கை விடுத்தல்

மாண்பு மிகு முதல்வருக்கு,

பொருள் - தமிழக எல்லைக்குள் ஐயப்ப பூஜை செய்ய கோரிக்கை விடுத்தல்

முல்லைப் பெரியாறு பிரச்சனை உச்ச நிலையில் இருக்கும் நிலையில் கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் தமிழக பக்தர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனவே அவர்களின் பாதுகாப்பு கருதி தமிழக எல்லைக்குள் ஓரிடத்தில் பூஜை செய்யுமாறு கோரிக்கை விடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நிரந்தரமாகவே தமிழக எல்லையில் ஐயப்பனுக்கு ஒரு கோவில் கட்டினால் அது இன்னமும் பாதுகாப்பாகவும். தமிழக அரசுக்கு வருவாய் ஏற்படுத்துவதாகவும் அமையும் என்று கருதுகிறேன்.

தாழ்மையுடன்
பெருமாள் அ. தேவன்

--

Regards,
Perumal A. Thevan,
103, Sai Dham Building,
Gopal Krishna Nagar,
Sagoan, Dombivli, Thane,
Maharashtra - 421201
Mob: 9833753808

ap_thevan2003@yahoo.co.in,
ap_thevan34@rediffmail.com,
apthevan@gmail.com

http://perumalthevan.blogspot.com/

Tuesday, November 22, 2011

பணம் – ஓஷோ


அமெரிக்க பத்திரிகைகளை பார்த்தால் நீங்கள் வாழ்க்கையில் ஒரு விஷயத்தை தவறவிடுகிறீர்கள் என்பதை புரிந்துகொள்வீர்கள். அது மகிழ்ச்சியை பணத்தின் மூலம் வாங்கிவிடலாம் என்பதே ஆகும். அவை நீங்கள் எதையோ தவறவிட்டு விட்டீர்கள் என்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகின்றன. அதன் பின் நீங்கள் அதற்காக வேலை செய்ய ஆரம்பிக்கிறீர்கள். அதற்காக பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறீர்கள். பின்னர் அதனை வாங்குகிறீர்கள். அதன் பின் நீங்கள் ஏமாற்றப்பட்டதாக உணருகிறீர்கள். அந்த உணர்வு ஆழமான உணர்வு அல்ல. ஏனெனில் நீங்கள் ஏமாற்றப்பட்டதாக உணருவதற்கு முன்பே சில புதிய ஏமாற்றங்கள் உங்கள் மனதில் பதிந்து விட்டன. இப்போது அவை முன்னோக்கி இழுத்துச் செல்கின்றன. நீங்கள் கண்டிப்பாக ஒரு மலைவாசஸ்த் தலத்தில் ஒரு வீடு வைத்திருக்க வேண்டும். அல்லது நீங்கள் கண்டிப்பாக ஒரு கோடை ஓய்வு இல்லம் வைத்திருக்க வேண்டும். அல்லது நீங்கள் கண்டிப்பாக ஒரு படகு வைத்திருக்க வேண்டும். எப்போதும் எதையாவது சாதித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களால் சந்தோஷமாக இருக்க முடியும். அவை உங்களை மரணம் வரை இழுத்துச் செல்லும். நீங்கள் இறக்கும் வரை, அந்த விளம்பரங்கள், அந்த பரப்புரை உங்களை இழுத்துச் செல்லும்.

பொருள் சார்ந்த (உலக ஆதாய) வாழ்க்கை முறையில் பணம் எல்லாவற்றும் மேலானதாக உள்ளது. பொருள் சாராத வாழ்க்கை முறையில் பணம் என்பது ஒரு வழிமுறையாக உள்ளது. சந்தோஷம் மேலானதாக உள்ளது. மகிழ்ச்சி மேலானதாக உள்ளது. உங்களது சுய தனித் தன்மையே மேலானதாக உள்ளது. நீங்கள் யார் என்று அறிந்திருப்பீர்கள் மற்றும் எங்கே நீங்கள் போகிறீர்கள் என்று அறிந்திருப்பீர்கள். அப்போது உங்களை திசை திருப்ப முடியாது. திடீரென உங்களது வாழ்க்கை தியானம் செய்யக்கூடிய தரம் கொண்டிருப்பதை பார்ப்பீர்கள்.

பணம் உருவாக்கும் மிகப் பெரிய பிரச்சனை என்னவென்றால், மற்றவர்கள் உங்கள் மீது பணம் செலுத்துகிறார்களா அல்லது உங்களது பணத்தின் மீது அன்பு செலுத்துகிறார்களா, நீங்கள் விரும்பத் தக்கவராக இருக்கும்போது நீங்கள் விரும்பத்தக்கவராக இருக்கிறீர்களா அல்லது உங்களது பணம் விரும்பத்தக்கதாக உள்ளதா என்பதை கண்டறிய முடியாமல் போவதே ஆகும். இது தெரிந்தாலாவது வாழ்க்கை எளிமையானதாக ஆகிவிடும்.

உண்மையான ஆன்மீகம் பூமியில் வேரூன்றியதாக இருக்க வேண்டும். உலகத்தை ஒதுக்கும் ஆன்மீகம், உலகத்தை மறுக்கிறது. அது பண்பாக மாறிவிடுகிறது. அது அழகிய கற்பனையாக மாறிவிடுகிறது. அதில் ரத்த ஓட்டம் இருப்பதில்லை. அதில் உயிரோட்டம் இருப்பதில்லை. யூதர்கள் மிகவும் உலக ஆதாயத்தில் ஈடுபாடு மிக்கவர்களாக உள்ளனர் என்பது உண்மையே. பணம் வைத்திருப்பதில் என்ன தவறு? ஆனால் யாரும் அதனை தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடுபவராக இருக்கக் கூடாது. அவர்கள் அதனை பயன்படுத்தக் கூடியவராக இருக்க வேண்டும். அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று யூதர்கள் அறிந்துள்ளனர். யாரும் கஞ்சத்தனமாக இருக்கக் கூடாது. பணத்தை உருவாக்கி பயன்படுத்த வேண்டும். சரியான முறையில் பயன்படுத்தப்பட்டால் பணம் என்பது அழகிய கண்டுபிடிப்பு, ஒரு பெரும் ஆசீர்வாதம் ஆகும். பணம் பல சாதனைகளை சாதித்து சாட்டுகிறது. பணம் என்பது ஒரு மாயமந்திம் போன்றது.

உங்களது சட்டைப் பையில் பத்து ரூபாய் தாள் இருந்தால், நீங்கள் உங்களது சட்டைப் பையில் ஆயிரக்கணக்கான பொருட்களை வைத்திருக்கிறீர்கள். நீங்கள் அந்த பத்து ரூபாயை வைத்து எதையும் வாங்கலாம். நீங்கள் ஒரு மனிதனைக் கொண்டு இரவு முழுவதும் உங்களுக்கு மசாஜ் செய்ய வைக்கலாம். அல்லது நீங்கள் அதனை கொண்டு உணவை வாங்கலாம். அல்லது நீங்கள் அதனைக் கொண்டு எதைவேண்டுமானாலும் செய்யலாம். அந்த பத்து ரூபாய் தாள் பல விஷயங்களை சாத்தியமாக்கும் தன்மை கொண்டுள்ளது. ஆனால் அந்த தாள் இல்லாவிட்டால் உங்களால் அந்த சாத்தியங்களை எடுத்துச் செல்ல முடியாது. அப்போது உங்களது வாழ்க்கை வரம்புக்குட்பட்டதாக ஆகிவிடுவிறது. நீங்கள் மசாஜ் செய்யும் ஒருவரை வேலைக்கு அமர்த்தலாம். ஆனால் அது உங்களிடம் உள்ள சாத்தியம் மட்டுமே. திடீரென உங்களுக்கு பசிக்கிறது அல்லது தாகமெடுக்கிறது. அப்போது ஒரு மனிதனால் எதையும் செய்ய முடியாது. ஆனால் பத்து ரூபாய் தாள் பல விஷயங்களை செய்யக் கூடியது. லட்சக்கணக்கான விஷயங்கள். அதில் முடிவில்லாத சாத்தியங்கள் உள்ளன. இது மனிதனின் கண்டுபிடிப்புக்களில் மிகச் சிறந்த ஒன்று. எனவே அதனை எதிர்க்கத் தேவையில்லை. நான் அதனை எதிர்ப்பவன் இல்லை.

அதனை பயன்படுத்துங்கள். அதனை பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு அழுத்தமாக அதனை பிடித்துக் கொள்கிறீர்களோ, உங்களது அழுத்தத்தைப் பொறுத்து உலகம் ஏழையாகிவிடும். ஏனெனில் பணம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு செல்லும்போதுதான் அது பெருகுகிறது. ஆங்கிலத்தில் பணத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த சொல் ஒன்று உள்ளது. அது “கரண்சி” ஆகும். அதற்கு என்ன பொருள் என்றால் பணம் நீரோட்டம் போல ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என்பதே. எப்போதுமே அது ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் சென்றவாறு இருக்க வேண்டும். அது எவ்வளவு அதிகமாக செல்கிறதோ அவ்வளவு சிறப்பானது.

உதாரணமாக, என்னிடம் ஒரு பத்து ரூபாய் தாள் இருந்து அதனை நானே வைத்துக்கொண்டால், அப்போது உலகிலேயே ஒரேயொரு பத்து ரூபாய் தாள்தான் இருக்கும். அதனை நான் உங்களுக்கு கொடுக்க, நீங்கள் அதனை மற்றொருவருக்கு கொடுத்தால், அது பத்து கைகளின் வழியே சென்றால் அப்போது நம்மிடையே நூறு ரூபாய் இருக்கும். நாம் நூறு ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பயன்படுத்தியுள்ளோம். பத்து ரூபாய் பத்தால் பெருக்கப்படுகிறது. பணத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று யூதர்கள் அறிந்திருந்தார்கள். அதில் தவறேதும் இல்லை. ஆனால் பேராசை தீயது. பேராசை என்பதற்கு நீங்கள் எப்போதும் பணத்தைப் பற்றியே நினைக்கிறீர்கள், அதனை பயன்படுத்துவது இல்லை என்று பொருள். அது ஒரு முற்றுப்புள்ளியாகி விடுகிறது. அது கெட்டது. நீங்கள் ஒரு யூதராக இருக்கிறீர்களா, ஜைனராக இருக்கிறீர்களா, இந்துவாக இருக்கிறீர்களா அல்லது முஸ்லீமாக இருக்கிறீர்களா என்பது பிரச்சனையில்லை.

மனது எப்போதுமே இன்னும் இன்னும் என்று கேட்ட வண்ணம் உள்ளது. உங்களிடம் பணம் இருந்தால், அது அதிக பணத்தை விருமபுகிறது. உங்களுக்கு கௌரவம் இருந்தால், அது அதிக கௌரவத்தை எதிர்பார்க்கிறது. உங்களிடம் அறிவு இருந்தால் அது அதிக அறிவுக்காக ஏங்குகிறது. மனது எப்போதுமே “இன்னும்” வேண்டும் என்ற நிலையில் உள்ளது.

வாழ்க்கை பற்றிய நமது மனப்போக்கு முழுவதுமாகவே பணம் தொடர்பானதாக உள்ளது. பணம் என்பது படைப்பு சக்தியே இல்லாத ஒன்றின் மீது ஒருவர் ஆர்வம் கொள்ளும் பொருளாக உள்ளது. அணுகுமுறை முழுவதுமே அதிகாரம் சார்ந்ததாக உள்ளது. அதிகாரம் அழிவை ஏற்படுத்தக் கூடியது. அது ஒன்றை படைக்கக் கூடியதல்ல. பணம் கொள்ளையடிக்கக் கூடிய ஒன்றாக, சுரண்டக் கூடிய ஒன்றாக இருப்பதால் பணத்தின் பின்னால் ஓடும் ஒருவர் அழிவை ஏற்படுத்தக் கூடியவராக இருப்பார். அது பலரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் அது உங்களிடம் இருக்கும். அதிகாரத்தை பெறவேண்டும் என்றால் நீங்கள் பலரை சக்தியற்றவராக ஆக்க வேண்டும் என்று பொருள். நீங்கள் அவர்களை அழிக்க வேண்டும். அதன் பின்னால்தான் நீங்கள் சக்திவாய்ந்தவராக ஆக முடியும். சக்தி பெற்றவராக இருக்க முடியும். நினைவிருக்கட்டும் – இவை அழிவுக்குரிய செயல்கள். படைப்பாற்றல் உலகை அழகு படுத்துகிறது. அது உலகிற்கு ஒன்றை கொடுக்கிறது. அது எதையும் எடுத்துக் கொள்வதில்லை. ஒரு படைப்பாளி உலகிற்கு வந்தால் அவன் உலகின் அழகிற்கு மெருகேற்றுகிறான்.

இங்கே ஒரு பாடல், அங்கே ஒரு ஓவியம் என்று உருவாக்குகிறான். அவன் உலகை நளினமாக நடனமாடச் செய்கிறான். அழகாக அனுபவிக்கிறான். ஆழமாக அன்பு செலுத்துகிறான். அமைதியாக தியானம் செய்கிறான். அவன் உலகை விட்டுச் செல்லும்போது. அவன் தனக்குப் பின்னால் ஒரு சிறந்த உலகை விட்டுச் செல்கிறேன். அவனை யாருக்காவது தெரியுமா அல்லது சில பேருக்காவது அவனை தெரியுமா என்பது பிரச்சனையில்லை. சிறிது இயற்கை மதிப்பு உள்ள காரணத்தால் அது அருமையாக நிரம்பியிருக்கும்.

பணம், அதிகாரம், கௌரவம் ஆகியவை படைப்பு இல்லாதவை. உருவாக்க முடியாதவை மட்டுமல்லாமல் அழிக்கும் நடவடிக்கைகளையும் கொண்டது. இவற்றிடம் எச்சரிக்கையாக இருங்கள். இவற்றிலிருந்து எச்சரிக்கையாக இருந்தால் நீங்கள் எளிதாக படைப்பாளியாகி விடலாம். உங்களுக்கு படைக்கும் திறன் சக்தி, கௌரவம், பணத்தை கொடுக்கும் என்று நான் சொல்லவில்லை. உங்கள் வழியெல்லாம் பூந்தோட்டம் அமையும் என்று நான் சொல்லவில்லை. இது உங்களுக்கு தொல்லையை ஏற்படுத்தலாம். இது நீங்கள் ஒரு ஏழையைப்போல வாழ்க்கையை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளலாம். நான் உங்களுக்கு என்ன வாக்குறுதி கொடுக்கிறேன் என்றால், நீங்கள் உங்களுக்குள்ளே மிகப்பெரிய பணக்காரனாக இருப்பீர்கள். மிக ஆழத்தில் நிரம்பியவராக இருப்பீர்கள். ஆழத்தில் நீங்கள் சந்தோஷமாக, கொண்டாட்டமாக இருப்பீர்கள். நீங்கள் கடவுளிடமிருந்து தொடர்ந்து அதிகமாக மற்றும் ஆசீர்வாதத்தை பெறுவீர்கள்.

வெளிப்புறமாக நீங்கள் புகழ் பெற சாத்தியமில்லாமல் போகலாம். உங்களிடம் பணம் இல்லாமல் போகலாம். நீங்கள் இந்த உலகத்தில் வெற்றி பெறுவது என்பது பெருந்தோல்வியாக போகலாம். இது உள்ளேயுள்ள உலகத்தில் தோற்பதாகும். நீங்கள் உங்களது சுயத்தை இழந்து விட்டால் முழு உலகைக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? இந்த உலகம் முழுவதையும் சொந்தமாக்கிக் கொண்டு உங்களை இழந்து விட்டால் என்ன ஆகும்? ஒரு படைப்பாளி தனது சுயத்தை தனதாக்கிக் கொள்கிறான். அவன்தான் குரு. அதனால்தான் கிழக்கில் நாங்கள் ‘ஸ்வாமி’ என்று அழைக்கிறோம். ‘ஸ்வாமி’ என்பதற்கு குரு என்று பொருள். பிச்சைக்காரர்களும் ஸ்வாமி - குரு என்று அழைக்கப்படுகிறார்கள். பேரரசர்கள், தங்களது வாழ்க்கையின் இறுதியில், அவர்கள் பிச்சைக் காரர்கள்தான் என்பதை நிரூபித்ததுள்ளனர். பணம், அதிகாரம், கௌரவத்தின் பின்னால் ஓடும் மனிதன் பிச்சைக்காரன். ஏனெனில் அவன் தொடர்ச்சியாக பிச்சைக்காரனாக இருக்கிறான். உலகிற்கு கொடுக்க அவனிடம் எதுவும் இல்லை.

ஒவ்வொருவரும் அளவுகடந்த தெய்வீகத் தன்மையை பெற்றிருப்பதால் அளவுகடந்த வலிமை பெற்றிருப்பார்கள். ஒவ்வொருவரும் உயிர்வாழ்தலின் தோற்றமான கடவுளிலேயே வேர் பதித்து இருப்பதால் ஒவ்வொருவரும் வலிமையாக இருப்பார்கள். மனிதனின் மனது அதனை மறக்க முற்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் அதை மறக்கும்போது பலவீனமாகிறீர்கள். நீங்கள் பலவீனமாகும்போது செயற்கையான முறையில் நீங்கள் வலிமை பெற முயற்சிக்கிறீர்கள். பணத்தை தேடுவதன் உண்மையில் மூலம் எதை தேடுகிறீர்கள்? நீங்கள் அதிகாரத்தை தேடுகிறீர்கள், நீங்கள் பலத்தை தேடுகிறீர்கள். கௌரவத்தை, அரசியல் அதிகாரத்தை தேடுவதன் மூலம் நீங்கள் எதைத் தேடுகிறீர்கள்? நீங்கள் அதிகாரம், பலத்தை தேடுகிறீர்கள். ஆனால் பலம் என்பது எப்போதும் உங்களுக்கு அருகிலேயே இருக்கிறது. நீங்கள் தவறான இடங்களில் தேடுகிறீர்கள்.

சந்தோஷத்தை பெறுவதிலிருந்து அதிக இடையூறு ஏற்படுத்துவதால் பணத்தைப் பற்றி மிகவும் கவலைப்படாதீர்கள். ஆனால் அதற்கு மாறாக என்ன நடக்கிறது என்றால் எல்லாரும் பணம் இருந்தால் சந்தோஷமாக இருப்பதாக நினைக்கிறார்கள். பணத்திற்கும் சந்தோஷத்திற்கும் சம்பந்தம் இல்லை. நீங்கள் சந்தோஷமாக இருந்து உங்களிடம் பணம் இருந்தால் நீங்கள் அதனை சந்தோஷத்திற்காக பயன்படுத்தலாம். நீங்கள் கவலையாக இருந்து உங்களிடம் பணம் இருந்தால் நீங்கள் அதிக கவலையைப் பெற பணத்தை பயன்படுத்துவீர்கள். ஏனெனில் பணம் என்பது ஒரு நடுநிலையான சக்தி என்பதால் ஆகும்.

நினைவிருக்கட்டும், நான் பணத்திற்கு எதிரானவன் கிடையாது. நான் சொல்வதை தவறாக புரிந்துகொள்ளாதீர்கள். நான் எதற்கும் எதிரானவன் கிடையாது. பணம் என்பது ஒரு வழிமுறை. நீங்கள் சந்தோஷமாக இருந்து உங்களிடம் பணம் இருந்தால் நீங்கள் அதிக சந்தோஷமாக இருப்பீர்கள். உங்களது பணத்தைக் கொண்டு என்ன செய்ய முடியும்? என்ற நிலை ஏற்படுவதன் காரணமாக நீங்கள் கவலையாக இருந்து பணம் வைத்திருந்தால் மிகவும் கவலைப்படுவீர்கள்.

உங்களது வாழ்க்கை முறை எதுவாக இருந்தாலும் உங்களது பணம் அதை மாற்றிவிடும். நீங்கள் கவலையாக இருக்க உங்களிடம் அதிகாரம் இருந்தால், நீங்கள் உங்களது அதிகாரத்தை வைத்து என்ன செய்வீர்கள்? உங்களது அதிகாரத்தை கொண்டு உங்களுக்கு நீங்களே விஷம் வைத்துக் கொள்வீர்கள். ஆனால் பணம் சந்தோஷத்தை தரும் என்று எல்லாரும் பணத்தையே தேடுகின்றனர். மரியாதை சந்தோஷத்தை தரும் என்று மரியாதையை தேடுகின்றனர். ஏதாவது வழியில் அதிக பணம் கிடைக்கும் என்றால் மக்கள் தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள, வழியை மாற்றிக்கொள்ள எப்போதும் ஆயத்தமாக உள்ளனர்.

நீங்கள் பணத்தை சம்பாதிக்கலாம். ஒருநாள் பணம் கிடைத்துவிடும். அப்போது ‘நீ என்ன பெற்றுவிட்டாய்?’ என்று வாழ்க்கை கேட்கும். ஆனால் நீங்கள் கேட்பதில்லை. இப்போது நீங்கள் உங்களது பணத்தை அரசியலுக்காக செலவிட நினைப்பீர்கள். நீங்கள் பிரதமர் அல்லது குடியரசுத் தலைவராக ஆக விரும்புகிறீர்கள். அதன் பின் எல்லாம் வேறொன்றும் வேண்டாம் என்று நினைக்கிறீர்கள். ஒருநாள் நீங்கள் பிரதமராக ஆகிவிடுகிறீர்கள். இப்போது, ‘நீ என்ன பெற்றுவிட்டாய்?’ என்று வாழ்க்கை மீண்டும் கேட்கிறது. நீங்கள் அதை கேட்பதில்லை. நீங்கள் வேறு எதையாவது யோசிக்க ஆரம்பிக்கிறீர்கள். வேறு ஏதாவது வேண்டும். வாழ்க்கை பரந்தத ஒன்று. அதனால்தான் பல வாழ்க்கை வீணடிக்கப்படுகிறது.

நாம் இயற்கை அல்லாத பணம், கௌரவம், அதிகாரம் என்று பல நகர்வுகளால் திசை திருப்பப்படுகிறோம். குயில் பாடுவதை கேட்பதால் பணம் கிடைக்கப் போவதில்லை. குயில் பாடுவதை கேட்பதால் உங்களுக்கு அதிகாரம், கௌரவம் கிடைக்கப் போவதில்லை. பட்டாம்பூச்சியை பார்ப்பது உங்களுக்கு பொருளாதார, அரசியல், சமூக ரீதியாக உதவப் போவதில்லை. இந்த விஷயங்கள் உங்களுக்கு பணம் அளிப்பதில்லை, ஆனால் இந்த விஷயங்கள் உங்களை சந்தோஷமாக்கும்.

எல்லாரும் அர்த்தமுள்ள விஷயங்களை தள்ளிப் போட்டுக்கொண்டே போகின்றனர். நாளை அவை சிரிக்கும், இன்னும், பணம் சேர்க்க வேண்டும்... நிறைய பணம், அதிக கருவிகள். நாளை அவர்கள் அன்பு செலுத்துவார்கள். இன்று நேரமில்லை. ஆனால் நாளை என்பது ஒருபோதும் வருவதில்லை. ஒருநாள் அவர்கள் அனைத்துவிதமான கருவிகளை வைத்திருப்பர். நிறைய பணமும் வைத்திருப்பர். அவர்கள் ஏனியின் கடைசிப் படிக்கு வந்துவிட்டனர். குளத்தில் குதிப்பதை தவிர வேறு வழியில்லை.

நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். நீங்கள் உலகிலேயே பெரிய பணக்காரனாகலாம். நீங்கள் (அமெரிக்க தொழிலதிபரும் வள்ளலலுமான) ஆண்ட்ரூ கார்னீஜி ஆகலாம். ஆனால் இறுதியில் நீங்கள் உலகிலேயே பெரும் பணக்காரராகும்போது, வாழ்க்கை முழுவதும் வீணாகி விட்டதே என்று நீங்கள் நினைக்க ஆரம்பிக்கிறீர்கள். பணம் இருக்கிறது. ஆனால் அதன் உள்ளே உட்பொருள் எதுவும் இல்லை. வாழ்க்கை நீர்த்துப் போய்விட்டது.

http://www.messagefrommasters.com/Spiritual_Quotes/Osho/osho_money_quotes1.htm

Wednesday, November 16, 2011

இனப்படுகொலை - ஐநாவின் மனித உரிமை கழகத்திலும் இலங்கைக்கு மறைமுக ஆதரவளிக்கும் இந்தியா

தமிழினப் படுகொலையின்போது அனுபவித்த சொல்லவொண்ணா துயரத்திற்காக இலங்கை மீது ஐநாவின் மனித உரிமை கழகம் நடவடிக்கை எடுக்கும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த கூட்டம் 2011 செப்டம்பர் மாதம் நடைபெற்றது. 2009ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் ஐநா மனித உரிமைகள் கழகத்திற்கு (யூஎன்எச்ஆர்சி) கொழும்பு/ இந்தியா அழுத்தம் கொடுத்ததைப்போல அல்லாமல் தற்போது ராஜபக்சேவுக்கு எதிராக ஏராளமான இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதற்கு விக்கிலீக்ஸ் இணையதளம் (போர்க்குற்றத்திற்கு உடந்தையாக ஏராளமான ஆவணங்களை வெளியிட்டு வருகிறது), ஐநா ‘நிபுணர் குழு‘ அறிக்கை, சேனல்4-ன் ‘கொலைக்களங்கள்‘ மற்றும் ஹெட்லைன்ஸ் டுடேயின் ஆவணப்படம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஊடகங்களின் சமநிலையான செய்திகளுக்கே நன்றி சொல்ல வேண்டும்.

இது சர்வதேச சமுதாய அமைப்புகளுடன் உலகின் மனச்சாட்சியை கிளர்ந்தெழச் செய்தது. இது இலங்கையின் இனப்படுகொலை அரசை தனிமைப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக குற்றவாளிகளை நிறுத்த ஒரே குரலில் அறைகூவல் விடுத்தது. மனித உரிமைகளை மதிக்காத வரலாறு கொண்ட நாடுகள் மற்றும் யூஎன்எச்ஆர்சி-க்கு எதிரான புவிசார் அரசியல் கொள்கைகளை கொண்ட மற்ற நாடுகளின் இடையூறு இருந்தபோதிலும் இன்று ஐநா மனித உரிமைக் கழகம் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்கக் கூடிய நிலையில் உள்ளது.

யூஎன்எச்ஆர்சி ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள் மீது எடுக்க வேண்டிய உண்மையான நடவடிக்கை ஈழத்தமிழர்களை காப்பாற்றுவதற்காக மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் முழுவதுமாக அழிக்கப்படாமல் இருக்க மற்றும் மனித குலம் பெரும்பயன் அடைய வேண்டும் என்பதற்காக முக்கியமானதாகும். காட்டுமிராண்டித்தனமான அரசாங்கங்கள், அதிகார ஆசையில் கிளர்ச்சியை அடக்க மனித உரிமைகளை காற்றில் பறக்கவிடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும். இறையாண்மைக்கு பங்கம் என்று ராஜபக்சே புலம்புவதால் நடைபெற்ற மனித உரிமை பிரச்சனைகளில் (காரணமில்லாமல் கைது செய்வது, சிறைவைப்பை நீட்டிப்பது, சட்டப்பூர்வமான கிளர்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் அரசியல்வாதிகளை கொலை செய்வது) சர்வதேச நாடுகள் தலையிடுவதை தடுக்க முடியாது. முபாரக், கடாஃபி, அஸாத் போன்றோர் மனித உரிமை குற்றங்களால்தான் சர்வதேச தலையீட்டை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் இதற்கு மாறாக இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த ஆட்சியாளர்கள் இலங்கையின் சிறிய, பெரிய (40,000க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால்) படுகொலையை கண்டிப்பவர்களை மிரட்டுகின்றனர். இவர்கள் ராஜபக்சே இனப்படுகொலை விசாரணையிலிருந்து தப்பிக்க போதுமான செயல்முறை மற்றும் கால இடைவெளியை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றனர். காங்கிரஸ் சோனியாவின் கூட்டமான மன்மோகன் சிங், எஸ்எம் கிருஷ்ணா, மீரா குமாரியை உள்ளிட்டவர்கள் இலங்கைக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் அறநெறி தவறாத வரலாறு கொண்ட இந்தியா மீது கறை படியச் செய்கின்றனர்.

யூதர்களை கொலை செய்ய கொடூரமான ருடால்ஃப் ஹோஸ் விஷவாயு அறையையும், ஹென்ரிச் ஹிம்லெர் சுட்டுக்கொல்லும் படையினரையும் வைத்திருந்தனர் என்பதை வாசகர்கள் அறிவர். ராஜபக்சே, ‘தாக்குதல் இல்லாத பகுதி‘ என்று கூறி அப்பாவி தமிழ் மக்களை அதற்குள் அழைத்து பின்னர் துப்பாக்கிகளாலும் விமானத்திலிருந்தும் சுட்டு ஹிட்லரின் இன அழிப்பை மீண்டும் அரங்கேற்றியுள்ளான். இந்த கொலைகளுக்கு பச்சைக் கொடி காட்டியவர்கள் மேனன்/ நாராயணன் ஆவர். இன்னமும் இந்த சோனியா கூட்டத்தினர் அமைதி காத்து பொய்க்கு இசைபாடி வருகின்றனர். இலங்கை ராணுவத்தினர் ஒருகையில் துப்பாக்கியும் மறு கையில் மனித உரிமை சாசனத்தையும் கொண்டு, முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் யாரையும் கொல்லவில்லை என்று செல்லும் ராஜபக்சேயின் கருத்தை ஆமோதிப்பவர்களாக உள்ளனர். மேனன் மற்றும் நாராயணன் குழு அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொல்ல உதவியாக விமானங்களையும் ராவின் உளவுத் தகவல்களையும் கொடுத்தனர்.

வெற்றிக் களிப்பில் துடித்த இலங்கை ராணுவத்தினர் தங்களது புகைப்படம் ‘கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தில் வரும் என்று தெரியாமல் முள்ளிவாய்க்காலில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ராஜபக்சேவின் வெற்றிக்கோப்பை பெருமிதம் அவரிடம் டிபியூ-கள் (ஆழமாக ஊடுறுவிச் செல்லும் பிரிவு) இருக்கின்றன என்பதை காட்டுவதாகவும். இவற்றை தமிழின் திரிபு மொழி பேசும் இந்தியர்கள் ‘தாக்குதல் இல்லாத பகுதியில்‘ இருந்தவாறு இந்த பிரிவை வழிநடத்தினர் என்பதை காட்டுகிறது. இது இலங்கை போர்க்குற்றத்திற்கு புதிய பரிமாணத்தை தருவதாக உள்ளது. சேனல் 4-ன் ஆய்வாளர்கள் இந்த டிபியூக்கள் எந்த அளவு தாக்குதல் இல்லாத பகுதியில் மக்கள் கொலை செய்யப்பட உதவியாக இருந்தனர் என்பதை நிரூபிக்கக் கூடும். ராஜபக்சேயின் ராணுவம் பொதுமக்களை கொல்ல யூஏவி-களையும் (ஆளில்லாத விமானம்) பயன்படுத்தியது. இது மனித கேடயமாக பிடித்து வைத்துள்ள பொதுமக்களை புலிகள் (அந்த பகுதியில் இருந்த ஒரே ஆயுதக் குழு) கொன்றார்கள் என்ற குற்றச்சாட்டையும் பொய் என நிரூபிக்கிறது. புலிகளின் மீது பலி போடுவதற்காகவே ராஜபக்சே கூட்டத்தினர் இந்த டிபியூக்களை வைத்து மக்களை மனித கேடயமாக பிடித்து கொலை செய்ததாக பெருமை பேசிக் கொள்கின்றனர். சேனல் 4-ன் ‘கொலைக்களங்கள்‘ குற்றச்சாட்டை மறுப்பதற்கான வீடியோக்களை இந்த டிபியூ மற்றும் யூஏவிகளே வீடியோக்களை வழங்கின. சேனல் 4 தற்போது இந்த டிபியூ மற்றும் யூஏவி வீடியோக்களை ஆராயலாம்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாஸிகள் செய்த இனக்கொலைகளுக்கு இணையானது அல்லது அதற்கும் அதிகமானது. ராஜபக்சேயும் மற்றும் அவனைப் போன்றோரும் இனஅழிப்பில் ஈடுபட ஏதுவாக ராஜபக்சே, அவனது இனப்படுகொலை கூட்டாளி இந்தியாவால் ஐநா/ ஐநா மனித உரிமைக் கழக அமைப்புகள் சீர்குலைக்கப்படுமா? ராஜபக்சே மீது உலகம் நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலை கடாஃபிக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. அவர் ராஜபக்சேவைப் போல லிபியாவில் எதிர்ப்போரை அழிக்க திட்டமிட்டார். ஆனால் சர்வதேச நாடுகள் இதனை புரிந்துகொண்டு அந்நாட்டு மக்களை பாதுகாத்தன. இறையாண்மை ஒருமைப்பாடு என்ற கருத்தை புறந்தள்ளிய சர்வதேச சமூகம் மிலோஸ்விச்-க்கு (ராஜபக்சே போல இனப்படுகொலை செய்தவன்) எதிராக நடவடிக்கை எடுத்தன. ராஜபக்சேவின் ஏமாற்று வேலைகளும், குற்றப் பங்காளிகளும் சர்வதேச நடவடிக்கையை தவிர்க்க ராஜபக்சேவுக்கு ஒரு வழியை ஏற்படுத்தி கொடுக்க முடியுமா?

ஹிட்லரின் இனப்படுகொலை இஸ்ரேல் என்ற நாடு பிறக்க வழி செய்தது. ஆனால் ராஜபக்சேவும் இந்திய பாதுகாவலர்களும் தமிழீழத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அண்டை நாடான சைப்ரஸில் துருக்கியர் அழிக்கப்படுவதை தடுக்க துருக்கி இறையாண்மையை ஒதுக்கித் தள்ளிவிட்டு துருக்கியர் கொண்ட சைப்ரஸை உருவாக்க செயல்பட்டது. அதேபோல கொடுங்கோல் ராணுவ ஆட்சியின் இன அழிப்பு கொள்கை மற்றும் கொடூரமான கொலைகளையும் தடுக்க ஆஸ்திரேலியா தலையிட்டு கிழக்கு திமோர் உருவாக உதவியது. கிழக்கு திமோர் இனப்படுகொலையில் 300 பேர் மட்டுமே கொல்லப்பட்டனர். ஆனால் தமிழீழத்தில் ஒரு இடத்தில் (முள்ளிவாய்க்கால்) / ஒரு தாக்குதலில் மட்டுமே 40,000 பேர் கொல்லப்பட்டனர். இருந்தும் டெல்லி சோனியா கூட்டத்திற்கு எந்த கொடுமையும் தெரியவில்லை. அதுபோன்ற கொடுமை இலங்கையில் நடைபெற்றதற்காக எதிர்ப்புத் தெரிவிக்கவும் இல்லை.

ஈழத் துயரத்திற்கான மையப்புள்ளி தமிழருக்கு எதிரான சிங்களவாதத்தின் தவறான புரிந்துணர்வு ஆகும். இது யூத எதிர்ப்பு நாஸியின் மனநிலையை மிஞ்சும் மனநிலையாகும். 1947ம் ஆண்டு தமிழர்களுக்கு 30 சதவீதம் அரசியல் பிரதிநிதித்துவம் இருந்தது. ஆனால் சிங்கள பேரினவாதம் தற்போது அதனை 10 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாக ஆக்கிவிட்டது. இலங்கை சுதந்திரம் பெற்ற ஒரு ஆண்டுக்குள்ளாகவே (1948) பத்து லட்சம் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு அவர்கள் தமிழகத்திற்கு (இந்தியா) அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தமிழர்களின் தலைவிதியை எண்ணி இந்தியா வருத்தப்படவில்லை. ஜேஆர் ஜெயவர்தனே பல ஆண்டுகளுக்கு பின்னர் இவர்களது குடியுரிமையை பாதியை மட்டுமே அங்கீகரித்தார். அதுவும் தனது தேர்தல் வெற்றியை உறுதி செய்வதற்காகவே செய்தார். இந்த தமிழர்களுக்கு இரண்டாம்பட்ச வாழ்க்கையிலிருந்து விடுதலை கிடைக்கவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களின் புலம்பல் என்னவென்றால், “இந்த விஷயங்களை இந்தியா புரிந்துகொள்ளும்போது (வடக்கு இலங்கை உட்பட) இலங்கையில் சிங்கள ராணுவத்தினரின் வாரிசுகளைத் தவிர ஒரு தமிழரும் இருக்க மாட்டார்கள். இந்தியா காரணமாகவே தோட்டத் தொழிலாளர்கள் விலைபோனார்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது. அவர்கள் நாஸிகளால் யூதர்களுக்கு ஒதுக்கப்பட்டது போன்ற முகாம்களில்தான் வாழ்ந்தனர். அவர்கள் அந்த பகுதியை விட்டுப் வெளியே போக முடியாது. குறைந்த சம்பளத்தில் 10 x 10 அளவுள்ள அறையில் வாழ்ந்து சாக வேண்டும். அவர்கள் அடிமைகளைப் போலவே வாழ்ந்தனர்.“ இது போன்ற மனநிலை படைத்த இலங்கை தொடர்ந்து தமிழர்களின் உரிமைகளை பறித்து வருகிறது. இதற்கு காரணம் இந்தியாவின் அலட்சியம்தான்.

அதேபோல சிங்களவரின் இலங்கை தொழில்வளம் பெற்ற பகுதியாகவும், தமிழர்கள் வீடில்லாத பரதேசிகளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசாங்கம் தெற்கில் ஆரம்பித்து தற்போது வடக்கிலும் தனது கைக்கூலிகளை வைத்து தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி போலீஸ் வன்முறையையும் அரங்கேற்றி வருகிறது. தெற்கு பகுதியில் உள்ள தமிழர்கள் அச்சுறுத்தப்பட்டு தங்களுக்கு பாதுகாப்பான வடக்குப் பகுதிக்கு துரத்தப்படுகின்றனர். எஞ்சியுள்ளவர்கள் அடிமை போல வாழ்ந்து வருகின்றனர். இதுவே தெற்கு இலங்கையின் நிலை. தார்ஸி விட்டாச்சியின் “எமர்ஜென்சி 1958" இந்த துயரத்தை படமாக சித்தரிக்கிறது.

1958ம் ஆண்டு அரசாங்கத்தால் வடக்கு இலங்கைக்கு துரத்தப்படுதல் அல்லது இனப்படுகொலை அரங்கேற்றப்படுகிறது. தெற்கு பகுதியிலிருந்து சரக்கு கப்பல்களில் வந்து சேர்ந்ததை இன்னமும் பல தமிழர்கள் நினைவு கூர்கின்றனர். அவர்கள் தொடர்ந்து இந்த துயரத்தை சஹித்து வந்தனர். இலங்கையின் எந்த பகுதியிலும் எந்த இனத்தவரும் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர் என்று ராஜபக்சே சொல்வது பச்சைப் பொய். 1983ம் ஆண்டு அரசாங்கம் தூண்டிவிட்ட கலவரத்தால் பத்து லட்சத்திற்கும் மேலான மக்கள் வெளிநாடுகளுக்குச் சென்றனர். இவ்வாறு இலங்கை எந்த செலவும் இல்லாமல் இருபது லட்சம் மக்களை துரத்தியடித்தது. இலங்கை செய்த ஒரே வேலை ஈழம் – சிங்களம் என்ற பிளவை ஆழப்படுத்தியதாகும். 30 ஆண்டுகளாக நடந்த அமைதிப் போராட்டம் மக்கள் மத்தியில் ஈழத்திற்கான பரவலான அர்ப்பணிப்பை ஏற்படுத்தியிருந்தது.

சிங்களவர் மத்தியில் இன அழிப்பு ஆழமாக பதிந்துவிட்ட நிலையிலேயே தமிழர்களை கொல்லும் முறை மிகவும் கொடூரமாக மாறியுள்ளது. இனப்படுகொலைக்காக சிங்களவர்கள் வடக்குப் பகுதியிலிருந்த தமிழ் மக்களை ஒன்று சேர்த்து பட்டினிபோட்டு கண்மூடித்தனமாக சுட்டு குண்டுவீசித் தாக்கினர். உயர் பாதுகாப்புப் பகுதி என்று கூறி தமிழர்களின் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து அவர்களை துரத்தினர். பின்னர் அவற்றை சிங்களவருக்கு வழங்கினர். அதேபோல தமிழர்களின் மீன்வளமும் பறிக்கப்பட்டது. சிங்கள கடற்படையின் பாதுகாப்பு மற்றும் ஊக்கத்தால் சிங்கள மீனவர் தமிழர்களின் பகுதியில் வந்து மீன் பிடிக்கின்றனர்.


இந்த சிங்கள மீனவர்கள்தான் தொடர்ந்து கப்பற்படையின் உதவியுடன் இந்திய தமிழர்களை தாக்குகின்றனர். இந்த செயல்கள் ஆக்கிரமிப்பை காட்டினாலும் கூட இந்திய கப்பற்படையினர் தங்களது நாட்டினருக்குப் பதிலாக சிங்களவருக்கு பாதுகாப்பு கொடுக்கின்றனர். இது போன்ற கொடுமைகள் எல்டிடிஈ ஆட்சி செய்த காலத்தில் நடைபெறவில்லை. இது சோனியா கூட்டத்திற்கு தெரியாமல் இல்லை. இது போன்ற கொடுமைகளை இலங்கை பத்திரிகைகளே உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக வெளியிடுகின்றன. அச்சம் காரணமாக தெற்கில் உள்ள தமிழர்களின் நிலை 1983ம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலையில் உள்ளது, 2009 மே மாத தோல்விக்குப் பின்னர் அவர்களது நிலை மிக மோசமாகிவிட்டது என்பது சோனியா கூட்டம் அறிந்ததே.

ராஜபக்சேயின் பயங்கரவாதத்தின் நோக்கம் வாழ்க்கை நிலையை மாற்றி, வடக்கு இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பான பகுதி என்ற எண்ணத்தை மாற்றுவதே ஆகும். இந்த எண்ணம் தாய்நாட்டிலிருந்து தமிழர்களின் அடையாளங்களை அழிப்பதற்கானதாகும். போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் பணியை இனப்படுகொலை மனநிலை கொண்ட ராஜபக்சேயிடம் ஒப்படைப்பது ஈழத் தமிழர்களை எப்போதும் அடிமைகளாக வைத்திருப்பதற்கு சமமானதாகும்.

இருந்தாலும் ராஜபக்சேவின் டெல்லி கூட்டாளிகள் (மன்மோகன் சிங், எஸ்எம் கிருஷ்ணா, மேனன்கள்), வட இலங்கையில் தொடர்ந்து தமிழ் மக்கள் அழிக்கப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். அவர்கள், ராஜபக்சே சொல்வதை போலவே, நீண்ட உள்நாட்டுப் போருக்கு முடிவுக்கு கொண்டு வந்து இலங்கை சாதாரண நிலை திரும்பி விட்டது, தமிழர்கள் வாழ்வில் அமைதி திரும்பி விட்டது என்று சொல்லி வருகின்றனர். இந்த யுத்தி முழுப் பூசனியை சோற்றில் மறைக்கும் பொய் என்று ஹெட்லைன்ஸ் டுடேயின் ஆவணப்படும் வெளிக்காட்டியது.

நரகத் தீவு என்று கூறுமளவு சித்ரவதை, கொலை, கற்பழிப்பு, கடத்தல், விசாரணையின்றி, சுட்டுக்கொள்ளுதல், தீவிரவாதம் (?) இல்லாத நிலையிலும் ராணுவ தளங்களின் விரிவாக்கம் என்று கூறி பலவந்தமான குடியேற்றங்களை செய்து வருகிறது. மிகவும் ஆபத்தான இந்த அரசாங்கத்திற்கு உதவியாக தான் செய்த திரைமறைவு வேலைகளை கோத்தபயா ராஜபக்சே வெளிக் கொண்டு வந்து தன்னையும் சிக்க வைத்துவிடுவாரோ என்ற அச்சமே இலங்கை படுகொலை விஷயத்தில் இந்தியாவின் நிலைக்கு காரணம். மன்மோகன் சிங்கின் கருத்து என்னவென்றால் நல்லதோ அல்லது கெட்டதோ தீவிரவாதம் இருக்க கூடாது என்பதாகும். இன அழிப்பு மற்றும் இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஜிஹாதி போன்ற ‘தீவிரவாதிகளே‘ அவர்கள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டியவர்களே.

ராஜபக்சே பற்றிய மன்மோகன் சிங்கின் கருத்து என்னவென்றால், அம்னெஸ்டி இன்டர்நேஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச், ரெட் கிராஸ் மற்றும் இன்னும் பல மனிதாபிமான அமைப்புகள் மற்றும் ஒபாமா, டேவிட் மிலிபேண்ட், ஹிலாரி கிளின்டன் மற்றும் வேறு மேற்கத்திய தலைவர்கள் மற்றும் ஆர்2பி (பாதுகாப்பதற்கான பொறுப்பு) கருத்துக் கொண்டிருப்போர் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் ஆவர். டெல்லி இவ்வளவு பலவீனமான அறிநெறி கொண்ட தலைவர்களை கொண்டிருப்பது வருந்தத் தக்கதே. இனப்படுகொலையில் இப்போது டெல்லி சோனியா கூட்டத்திற்கு ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவிப்பதை தவிர வேறு வழியில்லை.

இன்னொரு கேரள மஃபியா உறுப்பினரான நம்பியார் ஐநாவின் ஆர்2பி விதிமுறைகளை பயன்படுத்தி முள்ளிவாய்க்கால் படுகொலையை தடுக்க உலக பாதுகாவலனான ஐநாவுக்காக வேலை செய்யவேண்டியவர் ஆவார். ஆனால் இவர் தனது கேரள நண்பர்களான நாராயண் மற்றும் மேனனுடன் சேர்ந்து திரைமறைவு வேலை செய்து இனப்படுகொலையில் கோத்தபயாவுக்கு உதவினார். இதையே ஐநாவின் நிபுணர் குழுவே ‘அப்பாவி மக்களை பாதுகாக்க வேண்டிய ஐக்கிய நாடுகளின் அரசியல் அமைப்புகள் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டன‘ என்று குறிப்பிட்டுள்ளது. நம்பியார் காரணமாகவே வெள்ளைக் கொடி கொண்டு வந்த தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஐநா அலுவலகங்களில் சிங்கள அதிகாரிகளுடன் இணைந்து நம்பியார் செயல்பட்டக்கொண்டே அவர் இன்னமும் ஐநாவில் முக்கிய பதவி வகித்துவருவது பல அடிப்படை கேள்விகளை எழுப்புகிறது. அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நேரத்தில் அவர்களது கூக்குரலை கண்டுகொள்ளாமல் இருந்த பற்றிய மர்மங்களை சர்வதேச குற்றவியல் நிதிமன்றம் மட்டுமே வெளிக்கொணர முடியும் என்று ஈழத்தமிழர்கள் நம்புகின்றனர்.

ஆனால் இந்த நம்பியார் இலங்கை ராணுவத்தின் ஆலோசகராக உள்ள தனது சகோதரர் சதீஷ் நம்பியாரின் வேலை வாய்ப்பு பரிபோய்விடக் கூடாதே என்பதிலேயே அதிக கவலைப்பட்டார்.

யுஎஸ், நார்வே மற்றும் ஈயூ உறுப்பினர்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வி அடைந்ததற்கு காரணமும் இந்த கேரள மஃபியாவே காரணம். இந்தியாவில் தேர்தல் நடைபெறுவதற்குள் போரை தீவிரமாக நடத்தி முடிக்குமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தது நம்பியாரும்/ நாராயணனுமே. இதன் காரணமாகவே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்றது. காப்பாற்றப்பட்டதாக கூறப்படும் 3,20,000 மக்கள் திறந்தவெளி மனித பண்ணைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணமான கேரள மஃபியா, நாராயணன்/ மேனன்/ சோனியாவை பாதுகாக்கவே படுகொலை செய்திகள் வெளியேறாமல் தடுத்தது. ஏனெனில் கோத்தபயா ஐசிசி விசாரணையில் நிறுத்தப்பட்டால் அவர் உண்மைகளை வெளியே சொல்ல வேண்டியிருக்கும் என்பதால் ஆகும். இனப்படுகொலை பற்றிய செய்திகள் வெளியானதும் சிங்கள இலங்கை கலக்கமடைந்து ‘பயங்கரவாதம் மீதான போர்‘ என்று கூறி ‘மனிதாபிமான நடவடிக்கை‘ என்று கூறத்தொடங்கியது. ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையை ஏற்க மறுப்பதன் மூலம் இலங்கை, ஐநா ஈழத் தமிழர்களை பாதுகாக்க தவிறிவிட்டதோ என்ற கேள்வியை அமுக்க முயற்சிக்கிறது.

துருக்கி சைப்ரஸில் உள்ள தனது மக்களை காப்பாற்றியபோது, தமிழ் மக்களுக்கு ஆதரவு அளித்த இந்திரா காந்தியின் வழியிலிருந்து மாறி சோனியா கூட்டம் தமிழ் மக்களை காட்டிக்கொடுத்தது. இந்த நிலையில் ஈழத் தமிழர்கள் சர்வதேச அமைப்பான ஐநாவை நோக்கி திரும்பியுள்ளனர். அவர்கள் ஐநா அமைப்புகளே தங்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் என்று நம்புகின்றனர்.

நிபுணர் குழுவின் அறிக்கை, விக்கிலீக்ஸின் வெளியீடுகள், சேனல் 4-ன் கொலைக்களங்கள் ஆவணம் மற்றும் ஹெட்லைன்ஸ் டுடே ஆவணங்கள் மற்றும் உலகம் முழுவதும் சமநிலையான செய்திகளை வழங்கும் ஊடகங்களுக்கு ஈழத் தமிழர்கள் நன்றிக்கடன் பட்டவர்கள் ஆவர். சர்வதேச சமுதாயம் இலங்கையின் போர்க்குற்றங்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா இருக்கும் நிலையிலிருந்து விலகுமாறு புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். வெற்றிகரமான போர்க்குற்ற நடவடிக்கைகள் இலங்கையின் தமிழின படுகொலைகளை குறிப்பாக மக்கள் கூட்டமாக கொல்லப்படுவதை தடுக்கும்.

இலங்கையின் இனப்படுகொலை வரலாற்றை பார்க்கும்போது, தமிழர்களிள் உயிர்களுக்கு கிடைக்கும் சிறந்த பாதுகாப்பு என்பது இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் வகையில் ஐநா போர்க்குற்ற மன்றங்கள் எடுக்கும் நடவடிக்கையே ஆகும். ஆற்றல் மிக்க அதிகார பரவலாக ராஜீவ் காந்தியின் 13 வது திருத்தம் அல்லது இனப்படுகொலை சிங்களவருடனான கூட்டாட்சி அமைப்பு என்று கிடைத்தாலும் கூட சர்வதேச சமுதாயம் ஐநா அமைப்பை பயன்படுத்தி ஈழத்தமிழர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

எந்தவித அரசியல் தீர்வு ஏற்பட்டாலும், சர்வதேச அமைப்புகள் உயிர்ப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் உத்தரவாதம் தரவேண்டும். இனியொரு முள்ளிவாய்க்கால் படுகொலையை தாங்க ஈழத்தமிழர்களிடம் மனவலிமையோ, திராணியோ இல்லை. சர்வதேச அளவில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள இலங்கை ஏற்கனவே உலக நாடுகளின் மத்தியில் ஒதுக்கப்பட்டுள்ளதை காட்டுவதாக உள்ளது. இது இன்னமும் தெளிவாக இலங்கைக்கு புரிய வைக்கப்பட வேண்டும்.

இதற்கு இங்கிலாந்து மற்றும் கனடாவின் எம்பிகள் பரவலாக புறக்கணிப்புக்களை நடத்த வேண்டும். ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரீன்கள் பெர்த்தில் நடக்கும் அரசாங்க சந்திப்பின் பொதுநலன் (காமன்வெல்த்) தலைவர்களின் அடுத்த மாநாட்டில் இலங்கையை தடை செய்ய கோரவேண்டும். 1987க்கு பிறகு ஃபிஜி நான்கு ஆட்சிக் கவிழ்ப்புகளை சந்தித்துள்ளது. ஒவ்வொரு முறையும் சர்வதேச தடை விதிக்கப்பட்டது. பொதுநலன் நாடுகள் அமைப்பிலிருந்து இருமுறை தடை செய்யப்பட்டது. 2007ம் ஆண்டு அவசர நிலை அறிவித்ததால் பாகிஸ்தான் மீதும் தடை விதிக்கப்பட்டது. இரு விஷயங்களிலுமே இந்தியா தடைகளை முன்னெடுத்து விதித்தது. இலங்கையில் மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்ட இனப்படுகொலையுடன் ஒப்பிடுகையில் அந்த நாடுகளில் நடைபெற்றவை பெருங்குற்றங்கள் கிடையாது. பொதுநலன் நாடுகள் இனப்படுகொலை செய்த இலங்கையை வெளியேற்றி தங்களது தார்மீக பொறுப்பை காட்ட வேண்டும்.

- விஎஸ் சுப்ரமணியம்
தமிழில் - தேவன்
நன்றி – கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17376:2011-11-11-22-32-48&catid=1:articles&Itemid=264
நன்றி – கிரவுண்ட் ரிப்போர்ட்

http://www.groundreport.com/World/DELHI-s-COVERT-SUPPORT-FOR-SRI-LANKA-GENOCIDE-AGAI/2941588

Tuesday, November 15, 2011

உடலுறவு மனிதனை முட்டாளாக்குகிறது – ஓஷோ



மதம் உடலுறவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தொன்னூற்று ஒன்பது சதவீதம் முட்டாள்த் தனமானது. ஆனால் ஒரு சதவீதம் உண்மை இருக்கிறது. அதை என்னால் மறுக்க முடியாது. ஆனால் நான் அந்த ஒரு சதவீத உண்மை பற்றி நான் எப்போதும் உங்களிடம் பேசவில்லை. ஏனென்றால் அந்த ஒரு சதவீத உண்மை உங்களை ஏமாற்றலாம். அதனால் நான் அந்த தொன்னூற்று ஒன்பது சதவீதம் பற்றியே பேசி வருகிறேன். ஆனால் எனது சித்திரத்தை முழுமையாக்க... இவையே எனது கடைசி தீட்டுதல்களாகும். என்னால் எதையும் விட்டுவிட முடியாது.

ஒரு சதவீத உண்மை முக்கியமானது. உண்மையில் அந்த ஒரு சதவீதம் காரணமாகவே அனைத்து மதங்களும் பாலுணர்வுக்கு எதிராக மாறிவிட்டன. அந்த உண்மை என்னவென்றால் பாலுணர்வு மனிதனை முட்டாளாக்குகிறது என்பதுதான். அவன் ஒரு அடிமை என்றிருக்கும்போது, அது அவன் அந்த கலையில் திறமை வாய்ந்தவன் என்ற கருத்தை தருகிறது. இந்த அடிமைத்தனத்தை முறிக்க வேண்டும். இந்த குழியிலிருந்து அவனை வெளியே எடுக்க வேண்டும். ஆனால் அந்த குழியே அரண்மனை என்று அவன் நினைக்க ஆரம்பித்தால் அவனை அதிலிருந்து வெளியே தூக்க முடியாது. அதிலிருந்து வெளியே வருமாறு நீங்களும் அவனிடம் சொல்ல முடியாது. எனவேதான் அனைத்து மதங்களும் பாலுணர்வை கண்டிக்கின்றன.

ஆனால் மதங்கள் அதனை அளவுக்கதிகமாக கண்டித்து விட்டன. அவர்கள் அந்த ஒரு சதவீதத்திற்காக தொன்னூற்று ஒன்பது சதவீத அபாயத்தை மறந்து விட்டனர். தொன்னூற்று ஒன்பது சதவீத பொய்யின் அபாயத்தை கையிலெடுக்காமல் அதனை எளிதாக செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் மனிதனின் அபாயத்தை ஒரு எளிய வழிமுறையாகவே பார்த்தனர். அதுவே சாத்தியமாகும் மிகத் தாழ்ந்த நிலையாகும். நீங்கள் வெறும் வழிமுறை மட்டுமே. தீர்வு அல்ல. உங்களுக்கு தெரியாத ஒரு சக்தியால் நீங்கள் பயன்படுத்தப் படுகிறீர்கள். காலில் விழும் அனைவரும் உங்களுக்குத்தான் காலுக்கு விழுவதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இயற்கை அளவில் வாழும் மனிதன் உடலுறவு என்ற பிரமையை கொண்டிருக்கிறான். அந்த பிரமை இயற்கை, உயிரியல், ரசாயனத்தால் உருவாக்கப்படுகிறது. நீங்கள் உடலுறவு கொள்ளும்போது உங்களது உடலில் உள்ள போதைப்பொருட்கள் வெளிப்படுகின்றன. அது உங்களுக்கு இன்பத்தை ஏற்படுத்துகிறது. போதைப் பழக்கங்களுக்கு ஆளாகுபவர்கள் மெள்ள மெள்ள உடலுறவில் ஆர்வமில்லாமல் போவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

போதை மருந்துகளை அதிகம் விரும்பும் ஹிப்பிகள், யிப்பிகள், மற்ற அனைவரும் உடலுறவில் முழுவதுமாக நாட்டமிழக்கின்றனர். ஏனெனில் இப்போது இன்பத்தை அடைய சிறந்த வழி கிடைத்துவிட்டது. இப்போது இதனுடன் ஒப்பிடும்போது உடலுறவு ஒன்றுமில்லாததாக தோன்றுகிறது. இது இவை இரண்டுமே போதையை ஏற்படுத்தக் கூடியவை என்ற உண்மையை உங்களுக்கு புரிய வைக்கலாம்.

இயற்கை அந்த போதைப் பொருளை மிகவும் குறைந்த அளவில் பயன்படுத்தி வருகிறது. இதுவரை அதிகமாக்கும் தேவை ஏற்படவில்லை. ஒருவேளை இயற்கை சிறந்த போதைப்பொருளை, சிறந்த ரசவாதத்தை உருவாக்க, அதனுடைய தரத்தை இன்றைய தேவைக்கு ஏற்ப உருவாக்குவது பற்றி பரிசீலனை செய்ய வேண்டியிருக்கலாம். ஆனால் இது மனித தேவைக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் வெகு தொலைவில் உள்ளது. சிறந்த போதைக்காக மனித மனம் எல்எஸ்டி போன்ற போதைப் பொருட்களை உருவாக்கியது. கபீர், புத்தர், ரூமி போன்ற அனைத்து ஞானிகளும் அதைப் பற்றித்தான் பேசி வந்தனர். ஆனால் அவர்கள் இந்த நிலையை அடைய மாட்டு வண்டி பயணத்தை மேற்கொண்டனர்.

ஆனால் அறிவியல் மிகவும் மேம்பட்ட போதைப்பொருட்களை நமக்கு கொடுத்துள்ளது. எனவே யோகாசனம், தந்த்ரா, போன்ற இதர விஷயங்கள் தேவையில்லை. நீங்கள் ஒரு ஊசியை போட்டுக்கொண்டால் போதும். அதனைச் செய்ய வேறொருவர் தேவையில்லை. பல மணிநேரம் இன்பமாக இருப்பதால் இது பாலுறவு உச்சநிலையை விட மேம்பட்ட ஒன்றுதான். ஏனெனில் உச்சநிலை சில நொடிகளே நீடிக்கக் கூடியது. இது அதற்கான அதிக ஆசையை மட்டுமே உருவாக்குகிறது. ஆனால் ஒருபோதும் திருப்தி அளிப்பதில்லை.

இரண்டாவது அறிகுறி என்னவென்றால் போதை மருந்து அடிமையாக்கும் சக்தி படைத்தது- மக்கள் உடலுறவுக்கு அடிமையாகி விடுகின்றனர். அடிமையாகுவதில் ஒரு வினோதமான விஷயம் என்னவென்றால், உங்களிடம் அந்த போதை மருந்து இருந்தால் ஒன்றும் ஏற்படுவதில்லை. ஆனால் உங்களிடம் இல்லையென்றால், அது இல்லையே என்று ஏங்க ஆரம்பித்து விடுகிறீர்கள். நீங்கள் வைத்திருக்கும்போது அதற்கான ஏக்கமே ஏற்படுவதில்லை. ஏக்கம் என்பதே வருவது கிடையாது. அது உங்களிடம் இருக்கும்போதெல்லாம் அது வெறும் வீணான முயற்சி என்று உணருகிறீர்கள். அதனால் ஒன்றும் கிடைப்பதில்லை என்று நினைக்கிறீர்கள். நீங்கள் பரிணாமத்தில் ஒரு அங்குலம் கூட நகர்வதில்லை. நீங்கள் ஒரு கணத்திற்கு வானத்தில் குதிக்கிறீர்கள். ஆனால் திரும்பி பூமியில் விழுந்து விடுகிறீர்கள்.

அதனால்தான் யாரும் பொதுவான இடங்களில் உடலுறவு வைத்துக் கொள்வது கிடையாது. அதற்கு வேறு காரணமே கிடையாது. காரணம் என்னவென்றால் யாருமே முட்டாள்த்தனமாக காட்சியளிக்க விரும்புவதில்லை. இப்போது இந்த உலகத்திலேயே முன்னேறிய முட்டாள்த் தனமான இடமான கலிஃபோர்னியாவில் படுக்கை அறையை எட்டிப் பார்ப்பவர்களுக்காகவே ஹோட்டல்களை நடத்துகின்றனர். அதற்காக பணம் கொடுக்க வேண்டும். உள்ளே இரண்டு முட்டாள்கள் உடலுறவு கொள்கிறார்கள். அந்த அறையில் அவர்களைச் சுற்றி அமர்ந்திருக்கும் முட்டாள்கள் இந்த முட்டாள்கள் எப்படி அனுபவிக்கின்றனர் என்று பார்க்கின்றனர். அந்த ஜோடி எப்படி தாங்களாகவே முட்டாளாகிக் கொள்கின்றனர் என்பதை அவர்கள் பார்த்து அனுபவிக்கிறார்கள். அதற்காக பணம் செலவழிக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் அந்த இருவருக்கும் பணம் கொடுக்கப்படுகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது.
முதல் நாளில் ஒருவர் அந்த அறைக்குள் இருந்தார். வெளியே வந்ததும் பலரும் சந்தோஷமாக இருப்பதை கண்டார். “என்ன விஷயம்?“ என்று அவர் அவர்களிடம் கேட்டார். “ஷோ பிரமாதமாக இருந்தது“ என்று அவர்கள் சொன்னார்கள். “எந்த ஷோ?“ என்று கேட்டார். “உனக்குத் தெரியாதா? அருமையான ஷோ நாளைக்கு வந்து பாரு“ என்று சொன்னார்கள்.


மகாமடையனான அவன் ஷோவில் மிகவும் முட்டாள்த்தனமான வேலைகளை செய்து கொண்டிருந்தான். அதனால் பார்க்க வேண்டிய ஷோவாக இருந்தது. அடுத்தநாள் அவர் தனது நண்பர்களை உடன் அழைத்து வந்திருந்தார். இப்போது அவர் அறைக்கு வெளியே இருந்து பார்த்தார். அப்புறம்தான் என்ன விஷயம் என்று அவருக்கு புரிந்தது. முந்தைய நாள் இவர் அறைக்கு உள்ளே இருந்தார். வெளியே இருந்த அனைவரும் அவரைப் பார்த்து ரசித்துள்ளனர். இது ஒரு தந்திரமான வேலை. இப்போது அவர் மற்றொருவரை அனுபவித்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.


பொது இடங்களில் உடலுறவு கொள்வதற்கு உலகம் முழுவதும் உள்ள அனைத்து கலாச்சாரங்களும் ஏதாவது ஒரு வழியில் தடை பிறப்பித்துள்ளன. அதற்கான ஒரே காரணம் முட்டாள்த் தனமான வேலைகளை அந்தரங்கமாகத்தான் செய்யவேண்டும் என்பதாகும். தேவையில்லாமல் நீங்கள் மற்றவர்களின் இலவச பார்வைப் பொருளாக ஆகாதீர். ஒரு கூட்டம் கூடி நின்று உங்களை ரசிக்கும். யாராலும் அந்த இடத்தை கடந்து செல்ல முடியாது. அங்கேயே நின்று விடுவார்கள். தாங்களும் இதே போன்ற வேலையைத்தான் செய்கிறோம் என்று அவர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் அது ஒரு சுய நினைவற்ற நிலை.

இயற்கையான நிலையில் உடலுறவு கொள்வது கீழான நிலையாகும். இது இயற்கையால் உருவாக்கப்பட்ட கனவு. உங்களால் இந்த கடினமான வேலையை கடந்து செல்ல முடியும். அது சந்தோஷமாக நிலையாக இல்லாதிருந்தால், நீங்கள் அதனை மறுக்கப் போகிறீர்கள். “நானே என்னை முட்டாளாக்கிக் கொள்ள மாட்டேன்“ என்று சொல்லி விடுவீர்கள். நிச்சயமாக இயற்கை உங்களுக்கு ஒரு கவர்ச்சியை கொடுத்துள்ளது.
ஆதாரம் – ஓஷோவின் புத்தகம் “ஃப்ரம் மிஸரி டூ என்லைட்மென்ட்“ சேப்டர் 5-லிருந்து

நன்றி- மெஸேஜ் ஃப்ரம் மாஸ்டர்ஸ்


http://www.messagefrommasters.com/Shiva-Shakti/sex_fool.htm

Monday, November 14, 2011

ஈனமலரே

சேற்றில் தோன்றும்
செந்தாமரை பல இருக்க
சேற்றை பூசிக்கொள்ளும்
மலர் தினமும் பிறக்கிறது

ஒரு மொழியை, இனத்தை,
உணர்வை கேலி பேசும்
காகித சருகே
உன்னை நீயே கேட்டுப்பார்

நீ பழிக்கும் மொழிபேசும்
மக்கள் பணத்தை
உண்டு கொழுத்த
நீ செய்ததென்ன?

உனக்கு துணிவிருந்தால்
கன்னித்தாயின் வரலாறை
காதல் திருமணத்தை
பெற்ற குழந்தையை எழுதுவாயா?

மதச்சார்பற்ற நாளிதழென
பேரு பெற்ற இந்து கூட
ஏனோ(?) தமிழன் விஷயத்தில்
சோரம் போனபோது

கரிக்கொட்டையால் எழுதும்
கழிவறை எழுத்துக்களை
அச்சிலேற்றும் நீ மட்டும்
விதிவிலக்கா?

நிச்சயம் நீ ஈன வரலாறு
படைக்கிறாய்,
உன் ரத்தத்தில்
பெருமை சேர்க்கிறாய்

பாவம் இந்த மக்கள்
பொறுமைசாலிகள்
தமிழின வரலாற்றில்
உனக்கும் இடமுண்டு

வல்லரசெல்லாம் போனதெங்கே?
பாழாய் நீயும் போவதெங்கே?

ஆனாலும் நான் உன்னை
வாழ்த்துகிறேன்
உன் சேவையால் என் இனத்தை
தட்டி எழுப்புவதற்காக

Thursday, November 10, 2011

ஜீவநதிகள் வற்றி விட்டனவா?

பழம்பெருமை படைத்த இந்தியாவே
இமயத்தில் உள்ள ஜீவநதிகள்
வற்றிவிட்டனவா?

இல்லை, அங்கே மின் நிலையங்கள்
அமைக்க இடமில்லையா?
இல்லை அமைப்பதற்கான
மனமில்லையா?

அழித்து வரும் தண்ணீரை
வறண்டு கிடக்கும் பூமிக்கு
திருப்பிவிட வெள்ளையன்
வழி சொன்னானே

அதை நிறைவேற்ற
அக்கறை இல்லாத உங்களுக்கு
அணுமின் தயாரிக்கும்
ஞானோதயம் எப்படி வந்தது?

Wednesday, November 9, 2011

விளைநிலம் விற்று

கண்ணை விற்று சித்திரம் வாங்கலாம்
ஓவியம் வைக்க வீடு சிறக்கலாம்
கேளிர் கண்டு களிக்க
கலை வளர்க்கலாம்

விளைநிலம் விற்று
விவசாயம் வளர்க்கலாம்.
உழவனை தூக்கிலிட்டு
கூட்ட நெரிசலை குறைக்கலாம்

இமாலய தண்ணீர் எல்லாம்
கடலில் கலக்கலாம்
வறண்டு கிடக்கும் பூமியெல்லாம்
வானம் பார்த்து ஏங்கலாம்

அணுவில் மின்னலெடுத்து
ஆலைகள் வளர்க்கலாம்
உலகெல்லாம் ஒதுக்கும்
தந்திரம் வளர்க்கலாம்

மக்கள் ஐயம் தீர்க்கா
மாக்களாட்சி வளர்க்கலாம்
பொல்லா அதிகாரம் பெற்று
வல்லாட்சி அமைக்கலாம்

தமிழனை மட்டும் நாயென
கொன்று குவிக்கலாம்
இந்தியருக்கு என்றுமவன்
சூத்திரனாக இருக்கலாம்

ஈழப்போரின்போது என் இனத்தின்
கூக்குரலை அடக்கினாயே?
இந்த குரலுக்கு மட்டும்
ஏன் இத்தனை சால்ஜாப்பு?

தமிழன் ஈனப்பிறவியென
எண்ணி இருந்துவிடாதே.
வல்லரசெல்லாம் சுவடே இல்லாமல்போன
பெருமை கொண்டது இந்த உலகு

Saturday, November 5, 2011

போதிதர்மர் என்ற ஜென் குரு – ஓஷோ


போதிதர்மருக்கு நான் என் இதயத்தில் ஆழமான இடத்தை கொடுத்துள்ளேன். அது அவரைப் பற்றி பேசுவதை மிக முக்கியமான தருணமாக்குகிறது. ஒருவேளை அவர் ஒருவர்தான் நான் மிகவும் ஆழமாக அன்புசெலுத்துபவராக இருக்கலாம். அவரைப் பற்றி பேசுவது நான் என்னைப் பற்றி பேசுவதைப் போன்றதாகும். இது பெரிய சிக்கலையும் ஏற்படுத்துகிறது. ஏனெனில் இவர் தன் வாழ்நாளில் எதையுமே எழுதியது கிடையாது. ஞானிகளைப் பற்றி எப்போதுமே எழுதப்படுவதில்லை. இதற்கு போதிதர்மரும் விதிவிலக்கல்ல. ஆனால் பாரம்பரிய  முறையில் நான் பேசப்போகும் மூன்று புத்தகங்கள் போதிதர்மரைப் பற்றியவை.

போதிதர்மர் பற்றி மாற்றுக் கருத்துக்கள் கூறப்படவில்லை என்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளாக இந்த புத்தகங்கள் போதிதர்மரைப் பற்றி பேசிவந்துள்ளன. நாம் அவற்றை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதற்கு ஒரு காரணமும் சொல்ல முடியாது. நான் ஒரு அறிஞன் இல்லை. நிச்சயமாக போதிதர்மரைப் பற்றிக் கூறிய தகவல்கள் குறைபாடு உள்ளவையாக இருக்கலாம். ஏனெனில், இவை அவரால் எழுதப்பட்டவை இல்லை. அவரது சீடர்கள் குறிப்புகளை கொடுத்துள்ளனர். ஒரு சீடர் தனது குருவிடமிருந்து குறிப்புகளை எடுக்கும்போது அவர் தனது பெயரை அதில் குறிப்பிடக் கூடாது என்பது பண்டைக்கால மரபு. ஏனெனில் அதில் அவருக்கு சொந்தமானது எதுவும் கிடையாது. அது அவரது குருவிடமிருந்து வந்தது.

ஆனால் நான் புரிந்திருப்பதைப் போல போதிதர்மரை நெருக்கமாக புரிந்துகொள்வது... அவரைப் பற்றி பல தவறான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. வேறொருவர் குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்து தனது மனதை அதில் செலுத்தினால் மட்டுமே இது சாத்தியமாகும். அவர் போதிதர்மர் சொல்ல வந்ததை சொல்லி இருக்கிறார். ஆனால் அதிகம் புரிந்துகொள்ளாமல் சொல்லியிருக்கிறார்.  

நாம் இந்த சூத்திரங்களுக்குள் செல்வதற்கு முன்பாக, போதிதர்மரைப் பற்றிய சில விஷயங்களை தெரிந்துகொள்வது நல்லது. அது அவரைப்பற்றி அறிந்து கொள்வதற்கு வசதியாக அமையும். மேலும் இந்த புத்தகங்களில் எது அவர் சொன்னவை மற்றும் எது அவர் சொல்லாதவையாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ளும் வழியாக இருக்கும். இது மிகவும் வினோதமான கருத்தாக இருக்கும்.

போதிதர்மர் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பாக தென்னிந்திய அரசனுக்கு மகனாக பிறந்தவர். அங்கு பல்லவர்கள் என்ற பெரும் சாம்ராஜ்யம் இருந்தது. அவர் தனது தந்தைக்கு மூன்றாவது மகன் ஆவார். அதிபுத்திசாலியாக இருந்த அவர் உலக விஷயங்களை கண்டு தனது ராஜ்யத்தை துறந்தார். அவர் உலக விஷயங்களுக்கு எதிரானவர் கிடையாது. ஆனால் அவர் முக்கியத்துவம் இல்லாத உலக விஷயங்களில் தனது நேரத்தை வீணாக்கவும் விரும்பவில்லை. அவரது முழுக் கவனமும் தன்னுடைய சுய தன்மையைப் பற்றி அறிவதாகவே இருந்தது. ஏனென்றால் அது தெரியாத நிலையில் நீங்கள் இறப்பை முடிவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் ஆகும்.    

உண்மையில் உண்மையைத் தேடிய அனைவருமே இறப்பை எதிர்த்துப் போராடினர். பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், “இறப்பு இல்லையென்றால், மதமும் இருக்காது“ என்று அறிவித்தார். அதில் சிறிது உண்மையும் இருக்கிறது. நான் இதனை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் மதம் என்பது ஒரு பரவலான அமைப்பாகும். இது இறப்பை மட்டுமல்லாமல் பேரின்பம், உண்மை, வாழ்க்கையின் பொருள், இன்னும் பிற பொருள்களை தேடுவதாக உள்ளது. ஆனால் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் சொன்னதும் சரியே. இறப்பு இல்லையென்றால், மிகச் சிலரே, மிக அரிதாகவே மக்கள் மதத்தில் நாட்டம் கொண்டவர்களாக இருந்திருப்பர். மரணம் என்பது மதத்திற்கு பெரும் ஊக்கமாக அமைந்தது.


போதிதர்மர் தனது ராஜ்யத்தை துறந்தார். அதற்கு முன்னதாக தன் தந்தையிடம், “உங்களால் என்னை மரணத்திலிருந்து பாதுகாக்க முடியாது என்றால், தயவுசெய்து என்னை தடுக்காதீர்கள். மரணத்திற்கு பின்னால் என்னவென்று தேடுவதற்கு என்னை அனுமதியுங்கள்“ என்று சொன்னார். அந்தக் காலம் மிகவும் அழகிய காலமாகும். குறிப்பாக கிழக்கு நாடுகளில் அழகிய காலமாக இருந்தது. அவரது தந்தை ஒரு நிமிடம் யோசித்தார். “நான் உன்னை தடுக்க மாட்டேன். ஏனென்றால் என்னால் உனது மரணத்தை தடுக்க முடியாது. நீ எனது ஆசீர்வாதத்தோடு உனது தேடுதலை துவக்கலாம். என்னுடைய பற்று காரணமாகவே நீ எனக்குப் பின்னால் இந்த பல்லவ சாம்ராஜ்யத்தை அரசாள்பவனாக இருப்பாய் என்று நினைத்தேன். ஆனால் நீ அதற்கு மேலான ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளாய். நான் உன் தந்தை, என்னால் எப்படி உன்னை தடுக்க முடியும்?“ என்று சொன்னார்.

மேலும், “நீ நான் எதிர்பார்க்காத வகையில் ஒரு சிறு கேள்வியை கேட்டுவிட்டாய். ‘உங்களால் எனது மரணத்தை தடுக்க முடியும் என்றால் நான் அரண்மனையை விட்டு போகமாட்டேன். ஆனால் எனது மரணத்தை தடுக்க முடியாது என்றால், என்னை தடுக்காதீர்கள்‘ என்று சொல்லிவிட்டாய். இதன் மூலம் யாரும் போதிதர்மரின் புத்திசாலித்தனத்தை புரிந்துகொள்ளலாம்.

இரண்டாவதாக, நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் அவர் கௌதம புத்தரை பின்பற்றுபவர் ஆவார். சில விஷயங்களில் இவர் புத்தரையும் மிஞ்சிச் செல்கிறார். உதாரணமாக புத்தர் தனது சன்னியாசிகளாக பெண்களைச் சேர்த்துக்கொள்ள அஞ்சினார். ஆனால் போதிதர்மர் ஒரு ஞானம் பெற்ற பெண்ணாலேயே தூண்டப்படுபவராக இருந்தார். அவரது பெயர் பிரக்யதாரா. ஒருவேளை மக்கள் அவரது பெயரை மறந்திருக்கலாம். போதிதர்மர் காரணமாகவே மக்கள் இன்றும் அவரை நினைவில் வைத்துள்ளனர். ஆனால் பெயர் மட்டும்தான் உள்ளது. அவரைப் பற்றி வேறு எந்த விஷயமும் நமக்குத் தெரியவில்லை. அவர்தான் போதிதர்மரை சீனாவிற்கு செல்லச் சொன்னார். புத்த மதம் போதிதர்மர் செல்வதற்கு அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே அங்கு சென்றுவிட்டது. இதனை ஒரு அதிசயம் என்றே சொல்லலாம். இதுபோல முன்பு எப்போதும் நடந்ததே இல்லை. புத்தரின் போதனைகளை சீன மக்கள் அனைவருமே உடனே ஏற்றுக்கொண்டனர்.

அப்போது சீன மக்கள் கன்ஃபூசியஸின் கருத்துக்களை கொண்டிருந்தனர். அவற்றை அவர்கள் வெறுக்கும் நிலையில் இருந்தனர். ஏனெனில் கன்ஃபூஸியஸ் ஒரு நீதிமான், சுத்திகரிக்கும் கருத்துக்கொண்டவர் ஆவார். அவருக்கு வாழ்க்கையின் உட்புற ரகசியங்களைப் பற்றி எதுவும் தெரியாது. உண்மையில் உள்ளே எதுவும் இருக்கிறது என்பதையே அவர் மறுத்தார். எல்லாமே புறம்தான். அதனை சுத்திகரித்து, மெருகேற்றி, பண்படுத்தி முடிந்தவரை அதனை அழகாக்குங்கள் என்பதே அவரது போதனை.

கன்ஃபூஸியஸ் காலத்தில் லவோ த்சு, சுவாங் த்சு, லீய த்சு போன்றவர்களும் இருந்தனர். அவர்கள் அனைவருமே துறவிகளே ஒழிய குருக்கள் இல்லை. அவர்களால் கன்ஃபூஸியஸுக்கு எதிராக மக்களின் மனதில் ஒரு எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்க முடியவில்லை. எனவே அங்கு ஒரு வெற்றிடம் இருந்தது. ஆத்மா இல்லாமல் யாராலும் உயிர் வாழ முடியாது. நீங்கள் அவ்வாறு நினைக்க ஆரம்பித்தால் உங்களது வாழ்க்கை அனைத்து அர்த்தங்களையும் இழக்க ஆரம்பிக்கும். ஆத்மா என்பது மிகவும் ஒருங்கிணைந்த கருத்தாகும். அது இல்லையென்றால், நீங்கள் உயிர்வாழ்தல், முடிவில்லா வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்கிறீர்கள். இது ஒரு மரத்திலிருந்து வெட்டி எடுக்கப்படும் கிளை செத்து விடுவதைப் போன்றதாகும். அது தனக்குள்ள ஊட்டச்சத்து ஆதாரத்தை இழந்து விடுகிறது. இதுபோன்றதே உங்களுக்குள்ளே ஆத்மா, மனச்சாட்சி என்ற ஒன்று இல்லை என்பது. இது உங்களை உயிர்வாழும் நிலையிலிருந்து விலக்கிவிடுகிறது. இவ்வாறு ஒருவர் தானாகவே சுருங்க ஆரம்பித்து மூச்சுத் திணறலை உணர ஆரம்பிக்கிறார்.           


ஆனால் கன்ஃபூஸியஸ் மாபெரும் பகுத்தறிவாளர் ஆவார். லாவோ த்சு, சுவாங் த்சு, லிய த்சு போன்ற துறவிகள் கன்ஃபூஸியஸ் சொல்வது தவறு என்பதை அறிந்திருந்தனர். ஆனால் அவர்கள் ஞானிகளாக இருக்கவில்லை. அவர்கள் தங்களது ஒருசில சீடர்களுடன் தங்களது மடங்களில் வசித்து வந்தனர்.

புத்தமதம் சீனாவிற்கு சென்ற உடனேயே அது நூற்றுக் கணக்கான ஆண்டுகள் தாகமாக இருந்த மக்களின் ஆத்மாவிற்குள் இறங்கியது. புத்தமதம் மழை மேகம் போல வந்தது. அது அவர்களது தாகத்தை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு தணித்தது.


கிறிஸ்தவ மதம் ஏராளமானோரை மதம் மாற்றியது. ஆனால் மதமாற்றத்தை, மதத்தை ஏற்பதாக சொல்ல முடியாது. அது ஏழைகள், பசியாக இருப்பவர்கள், பிச்சைக்காரர்கள், அனாதைகளை மதமாற்றம் செய்கிறது. இதனை அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், கல்வி போன்றவற்றை கொடுத்துச் செய்கிறது. ஆன்மீக தாக்கத்தால் செய்வதில்லை. இஸ்லாம் எண்ணற்ற மக்களை மதமாற்றம் செய்தது. ஆனால் கத்தி முனையில் மாற்றியது. நீங்கள் முஸ்லீமாக இருந்தால் உயிர்வாழலாம், இல்லாவிட்டால் உயிர்வாழ முடியாது. முடிவு செய்ய வேண்டியது நீங்கள்தான்.


ஆனால் சீனாவில் ஏற்பட்ட மதமாற்றம் மனித வரலாற்றிலேயே மதத்தை ஏற்றுக் கொண்ட மதமாற்றமாகும். புத்த மதம் தன்னைப் பற்றி மட்டுமே விவரித்தது. அதனுடைய அழகிய கருத்துக்களை மக்கள் புரிந்து கொண்டனர். அவர்கள் அந்த கருத்துக்களுக்காக தாகத்துடன் காத்திருந்தனர். உலகத்திலேயே மிகப்பெரிய நாடான சீனா முழுவதுமாக புத்த மதத்திற்கு மாறியது. அறுநூறு ஆண்டுகளுக்குப் பின்னர் போதிதர்மர் சீனா சென்றபோது, அங்கு ஏற்கனவே முப்பதாயிரம் புத்த ஆலயங்கள், மடங்கள் இருந்தன. இருபது லட்சம் புத்த துறவிகள் இருந்தனர்.  இருபது லட்சம் என்பது சிறு எண்ணிக்கை கிடையாது. அது சீன மக்கள்த் தொகையில் ஐந்து சதவீதம் ஆகும்.

போதிதர்மாவின் குருவான பிரக்யதாரா, அவருக்கு முன்னர் சீனா சென்ற எல்லாரும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் ஞானம் பெற்றவர்கள் கிடையாது என்று சொன்னார். அவர்கள் மாபெரும் அறிவாளிகள், மிகவும் ஒழுக்க சீலர்கள், மிகவும் அன்பான, அமைதியான, இரக்கம் கொண்டவர்கள். ஆனால் அவர்களில் யாரும் ஞானம் பெற்றவர்கள் இல்லை. எனவே இப்போது சீனாவுக்கு இன்னொரு புத்தர் தேவைப்பட்டது. களம் தயாராக இருந்தது.

சீனாவை அடைந்த முதல் ஞானி போதிதர்மர் ஆவார். நான் இங்கு தெளிவு படுத்த விரும்பும் விஷயம் என்னவென்றால் கௌதம புத்தர் தனது சன்னியாசியாக ஒரு பெண்ணை சேர்த்துக்கொள்ள அஞ்சிய அதேவேளையில் ஒரு பெண்ணே போதிதர்மரை புத்தரின் வழியில் செல்லத் தூண்டினார் என்பதாகும். அப்போது ஞானம் பெற்ற பலர் இருந்தனர். ஆனால் அவர் ஒரு காரணத்திற்காகவே அந்த பெண்ணை தேர்ந்தெடுத்தார். அந்த காரணம் ஒரு பெண்ணும் ஞானம் பெறலாம் என்பதை காட்டுவதற்காக அவ்வாறு செய்தார். அது மட்டுமல்லாமல் அவரது சீடர்களும் ஞானம் பெறமுடியும் என்பதையும் காட்டுவதற்காக அவ்வாறு செய்தார். போதிதர்மரின் பெயர் அனைத்து ஞானம் பெற்ற புத்த துறவிகளுக்கு மத்தியில் புத்தருக்கு அடுத்த நிலையில் அறியப்படுகிறது.


அவரைப் பற்றி பல கதைகள் உள்ளன. அவை அனைத்துமே சில முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன. முதல் கதை. அவர் சீனாவிற்கு செல்ல மூன்று ஆண்டுகள் ஆனது. சீனப் பேரரசர் வூ அவரை வரவேற்க வந்தார் என்பதாகும். அவரது புகழ் அவருக்கு முன்பே அங்கு சென்றுவிட்டது. பேரரசர் புத்தரின் போதனைகளுக்கு சேவை செய்ய பெரும் சேவை புரிந்திருந்தார். ஆயிரக்கணக்கான அறிஞர்கள் புத்தரின் போதனைகளை பாலி மொழியிலிருந்து சீன மொழிக்கு மொழியாக்கம் செய்து கொண்டிருந்தனர். பேரரசரே அந்த மொழியாக்கத்திற்கு நிதியுதவி செய்தார். அவர் ஆயிரக்கணக்கான ஆலயங்கள் மற்றும் மடங்களை நிறுவினார். ஆயிரக்கணக்கான துறவிகளுக்கு உணவளித்து வந்தார். அவர் புத்தருக்கு சேவை செய்வதற்காகவே தனது கருவூலம் முழுவதையும் செலவிட்டார். உண்மையில் போதிதர்மருக்கு முன்னர் அங்கு சென்றிருந்த புத்த துறவிகள் அவர் மாபெரும் புண்ணியம் பெற்று வருவதாக கூறிவந்தனர். அவர் சொர்க்கத்தில் கடவுளாக பிறப்பார் என்றும் கூறினர்.

அதனால் இயல்பாகவே, அவர் போதிதர்மரை  பார்த்ததும் முதல் கேள்வியாக, “நான் ஏராளமான மடங்களை நிறுவியுள்ளேன், ஆயிரக்கணக்கான அறிஞர்களுக்கு உணவளித்து வருகிறேன், புத்தரைப் பற்றி படிப்பதற்காகவே ஒரு பல்கலை கழகத்தை திறந்துள்ளேன், நான் புத்தரின் போதனைகளுக்காகவே எனது ராஜ்யம் மற்றும் கருவூலம் முழுவதையும் ஈடுபடுத்தி வருகிறேன். எனக்கு மாறாக என்ன கிடைக்கும்?“ என்று கேட்டார்.

போதிதர்மர் இதனை விரும்புவாரா என்று தெரியாத காரணத்தால் அவரைப் பார்த்து சிறிது குழப்பமடைந்தார். போதிதர்மர் மிகவும் கோபமாக காணப்பட்டார். அவரது கண்கள் மிகப் பெரிய கண்களாக இருந்தன. ஆனால் அவரது இதயம் தாமரை போல மிகவும் மென்மையானது. அவரது முகம் நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் அபாயகரமானதாக இருந்தது. சன்கிளாஸ்கள் மட்டும் இல்லை. அது இருந்திருந்தால் அவர் ஒரு கடத்தல்க் காரனைப்போல இருந்திருப்பார்.

இதனால் பெரும் அச்சத்துடன், பேரரசர் வூ கேட்ட கேள்விக்கு போதிதர்மர், “ஒரு புண்ணியமும் கிடைக்காது. மாறாக, நரகத்திற்கு செல்ல தயாராக இரு“ என்றார்.

பேரரசர் விடவில்லை, “நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா? எதற்காக நரகத்திற்கு செல்ல வேண்டும்? புத்த துறவிகள் சொல்வதை எல்லாம் நான் செய்து வருகிறேன்.“ என்று சொன்னார்.   
  
“நீ உன் குரலை கேட்க ஆரம்பிக்கவிட்டால், புத்தமதத்தவரோ அல்லது புத்தமதத்தை சேராதவரோ உனக்கு உதவ முடியாது. நீ இன்னமும் உனது உள்ளே எழும் குரலை கேட்கவில்லை. நீ கேட்டிருந்தால் இது போன்ற முட்டாள்த் தனமான கேள்வியை கேட்டிருக்க மாட்டாய்“ என்று போதிதர்மர் சொன்னார்.

“புத்தரின் வழியில் பிரதிபலன் என்பதே கிடையாது. ஏனெனில் பிரதிபலனுக்கான பேராசையே மனதால்த்தான் வருகிறது. புத்தரின் முழுப்போதனையுமே ஆசையை துறப்பதே. ஆனால் மனதில் ஆசையுடன் நீங்கள் ஆலய்ங்கள், மடங்கள் கட்டி ஆயிரக்கணக்கான துறவிகளுக்கு உணவளித்து புண்ணிய காரியங்களை அனைத்தையும் செய்து வந்தாலும் கூட நீங்கள் நரகத்திற்குச் செல்ல தயாராகிறீர்கள் என்றுதான் பொருள். நீங்கள் சந்தோஷத்தின் காரணமாக, உங்களது ராஜ்யம் முழுவதுமாக உங்களது சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ள இவற்றை செய்து வந்தால், பிரதிபலனுக்கான சிறிதளவு ஆசை கூட இல்லாமல் இருந்தால், அந்த செயலே பெரும் பலன் ஆகும். இல்லையென்றால் நீங்கள் எல்லாத்தையும் இழந்துவிட்டீர்கள் என்று பொருள்.“


பேரரசர் வூ, “என் மனம் குழப்பமாக உள்ளது. என் மனதை அமைதிப்படுத்த முயற்சி செய்கிறேன். ஆனால் இந்த சிந்தனைகள் மற்றும் அவர்களது சத்தம் காரணமாக நான் அமைதி பெற முடியவில்லை. உள்ளேயுள்ள குரல் என்று எதைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியவில்லை“ என்று சொன்னார்.

“அப்படியானால், அதிகாலை நான்கு மணிக்கு, உங்களது பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல் நான் தங்கியுள்ள, மலைமேல் உள்ள ஆலயத்திற்கு வந்துவிடுங்கள். நான் நிரந்தரமாக உங்களுக்கு மனஅமைதியை தருகிறேன்“ என்று போதிதர்மர் சொன்னார்.

இந்த மனிதர் வினோதமாகவும் பயங்கரமானவராகவும் இருக்கிறாரே என்று பேரரசர் நினைத்தார். அவர் பல துறவிகளை பார்த்திருந்தார். அவர்கள் மிகவும் பவ்யமாக இருந்தனர். ஆனால் இவர், நான் ஒரு மாபெரும் நாட்டின் பேரரசர் என்பதைக் கூட பொருட்படுத்தவில்லையே. அதிகாலை நான்கு மணிக்கு அவரிடம் தனியாகச் செல்வது என்றால்... இந்த மனிதரை பார்த்தால் பயங்கரமானவராக இருக்கிறாரே. பேரரசர் எப்போதுமே ஏராளமான வீரர்களை தன்னுடன் அழைத்துச் செல்பவராக இருந்தார்.

பேரரசரால் அன்று முழுவதும் தூங்கமுடியவில்லை. “போகவேண்டுமா? போக வேண்டாமா? ஏனெனில் அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர் நம்பமுடியாதவராக இருக்கிறார்.“ அதேவேளையில் அந்த மனிதரின் நேர்மையை மனதின் ஆழத்தில் நினைத்துப் பார்த்தார். அவர் நீ ஒரு பேரரசன் என்பதைப் பற்றி சிறிது கூட பொருட்படுத்தவில்லை. ஆனால் அவர் ஒரு சாதாரண பிச்சைக்காரராக இருக்கிறார். ஒரு பேரரசரைப் போல நடந்துகொள்கிறார். அவருக்கு முன்னால் நீ ஒரு பிச்சைக் காரனாக இருக்கிறாய். அதுவும் அவர் சொன்ன விதம். “நான் நிரந்தரமாக உன் மனதில் அமைதி நிலவச் செய்வேன்.“

“வினோதமாக இருக்கிறது. ஏனெனில் நான் இதனை இந்தியாவிலிருந்து வந்த பல்வேறு அறிஞர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவர்கள் அனைவரும் எனக்கு பல முறைகளை, யுக்திகளை கற்றுக் கொடுத்தனர். நான் அவற்றை பயிற்சி செய்து வருகிறேன். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் இந்த மனிதர் வினோதமாக இருக்கிறார். பார்த்தால் பைத்தியம் போல அல்லது குடிபோதையில் இருப்பவர் போல இருக்கிறார். முகமே வினோதமாகத்தான் இருக்கிறது. பெரிய கண்கள் அச்சுறுத்துவதாக இருக்கிறது. ஆனால் உண்மையானவராகவும் தோன்றுகிறார். இவர் புரியாத புதிராக இருக்கிறார். இந்த விஷயத்தில் துணிந்து இறங்கலாம். அவர் என்ன செய்துவிடுவார்? அதிகபட்சம் என்னைக் கொல்ல முடியும்.“ இறுதியாக, “நான் உனக்கு நிரந்தர மன அமைதியை தருவேன்“ என்று சொன்னதால் அவரால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை.

பேரரசர் வூ அதிகாலை நான்கு மணிக்கு இருட்டில் அந்த ஆலயத்திற்கு தனியாகச் சென்றார். போதிதர்மர் அங்கு கைத்தடியுடன் படிகட்டிலேயே நின்றிருந்தார். “போகலாமா வேண்டாமா என்று ராத்திரி பூராவும் தர்க்கம் செய்தாலும் நீங்கள் வருவீர்கள் என்று தெரியும். ஒரு சாதாரண துறவியைக் கண்டு அஞ்சும் நீங்கள் ஒரு பேரரசரா? இந்த கைத்தடியைத் தவிர வேறொன்றும் இல்லாத ஒரு ஏழைப் பிச்சைக்காரனான இந்த துறவியைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும்? இந்த கைத்தடியைக் கொண்டுதான் உங்களுக்கு மன அமைதித் தரப் போகிறேன்.“

பேரரசர், “அடக்கடவுளே, யாராவது கைத்தடியைக் கொண்டு யாருக்காவது மன அமைதியை ஏற்படுத்த முடியுமா? ஒரு ஆளைத் தீர்த்துக் கட்டலாம். மண்டையில் ஓங்கி அடித்து ஒருவரை அமைதியாக்கலாம். ஆனால் மனதை அமைதியாக்க முடியாது. ஆனால் இப்போது திரும்பிப் போகவும் முடியாதே“ என்று நினைத்தார்.

“ஆலயத்தின் மண்டபத்தில் உட்காருங்கள்“ என்று போதிதர்மர் சொன்னார். அங்கு சுற்றிலும் யாருமே இல்லை. “உங்களது கண்களை மூடுங்கள். நான் இந்த தடியோடு உங்கள் முன்பாக அமர்ந்திருப்பேன். நீங்கள் செய்ய வேண்டியது உங்களது மனதை பிடித்து நிறுத்த வேண்டியதே. உங்கள் கண்களை மூடிக்கொண்டு உள்ளே தேடிப்பாருங்கள். அது எங்கே இருக்கிறது என்று பாருங்கள். நீங்கள் பிடித்த உடனே, ‘இதோ இருக்கிறது‘ என்று என்னிடம் சொல்லுங்கள். மீதியை என் தடி  பார்த்துக் கொள்ளும்.

தேடுதலை மேற்கொள்ளும் எந்த ஒரு துறவிக்கும் அவர் கண்டிராத உண்மை அல்லது அமைதி அல்லது நிர்சலனமான இது ஒரு வினோதமான அனுபவமாக இருக்கும். ஆனால் இப்போது வேறு வழியில்லை. போதிதர்மர் தான் சொல்வது எல்லாத்தையும் காரணத்தோடுதான் சொல்கிறார் என்பதை முழுமையாக அறிந்துகொண்ட பேரரசர் வூ அங்கு கண்களை மூடி அமர்ந்தார். அவர் சுற்றறுமுற்றும் தேடிப் பார்த்தார். அங்கு மனது என்ற ஒன்று இல்லை. அந்த தடி தன் வேலையை செய்துவிட்டது. முதல் முறையாக அவர் அதுபோன்ற ஒரு சூழலில் இருந்தார். கொடுக்கப்பட்ட வாய்ப்பு... நீங்கள் மனதைக் கண்டால், இவர் இந்த தடியை வைத்து என்ன செய்யப்போகிறார் என்பது தெரியவில்லை. அந்த அமைதியான மலைப்பிரதேசத்தில், தனக்கென ஒரு ஈர்ப்பு சக்தியைக் கொண்ட போதிதர்மரின் முன்னிலையில்.... அங்கு பல ஞானிகள் இருந்திருக்கலாம். ஆனால் போதிதர்மர் அவர்களிடமிருந்து தனித்து இமயம் போல உயர்ந்து விளங்குகிறார். அவரது ஒவ்வொரு செயலும் உண்மையானது தனித்தன்மை வாய்ந்தது. அவரது குறிப்புகள் அவரது முத்திரையை பதிப்பதாக உள்ளன. அவை கடன் வாங்கியவை அல்ல.

அவர் மனதை கண்டுபிடிக்க கடினமாக தேடிப்பார்த்தார். முதல் முறையாக அவரால் மனதை கண்டுபிடிக்க முடியவில்லை. அது ஒரு சிறு யுக்தி. நீங்கள் எப்போதுமே அதனை தேடிப் பார்ப்பதில்லை என்ற காரணத்தால்த்தான் மனம் என்பதே இருக்கிறது. நீங்கள் அதனை அறிந்திருப்பதில்லை என்ற காரணத்தால்த்தான் அது இருக்கிறது. நீங்கள் அதனை தேடும்போது, அதனை அறியும்போது, விழிப்புணர்வு அதனை முழுமையாகக் கொன்று விடுகிறது. பலமணிநேரம் ஆனது. அமைதியான அந்த மலைகளுக்கு இடையே குளிர்ச்சியான தென்றலுடன் சூரியன் உதித்தது. பேரரசர் வூவின் முகத்தில் அமைதி நிலவுகிறது என்பதை போதிதர்மரால் காண முடிந்தது. அந்த அமைதி, அந்த அசைவற்ற நிலை அவர் ஒரு சிலையாக இருந்தால் எப்படி இருக்குமோ அதுபோல இருந்தது. அவரை பிடித்து உலுக்கி, “நீண்ட நேரமாகிவிட்டது. மனதைப் பார்த்தீர்களா?“ என்று கேட்டார்.


“தடியை பயன்படுத்தாமலேயே நீங்கள் என் மனதை முழு அமைதிப் பெறச் செய்துவிட்டீர்கள். என்னிடம் மனம் இல்லை. நீங்கள் சொன்ன உள்ளே இருக்கும் குரலை நான் கேட்டேன். நீங்கள் சொன்னதெல்லாம் சரியே என்று இப்போது நான் புரிந்துகொண்டேன். நீங்கள் எதுவுமே செய்யாமல் என்னை மாற்றிவிட்டீர்கள். ஒவ்வொரு செயலுக்கும் அந்தச் செயலே பரிசு என்பதை இப்போது நான் புரிந்துகொண்டேன். இல்லாவிட்டால் அந்தச் செயலை செய்யாதீர்கள். உங்களுக்கு பரிசளிக்க யார் இருக்கிறார்கள்? இது ஒரு குழந்தைத் தனமான கருத்து. உங்களுக்கு தண்டனை அளிக்க யார் இருக்கிறார்கள்? உங்களது செயலே உங்களுக்கு தண்டனை, உங்களது செயலே உங்களுக்கு பரிசு. உங்கள் தலைவிதியை நிர்ணயிப்பது நீங்களே.“ என்று பேரரசர் வூ சொன்னார்.     

“நீங்கள் அரிதான சீடர். நான் உங்களை நேசிக்கிறேன். மரியாதை செலுத்துகிறேன். ஒரு பேரரசர் என்ற காரணத்தால் அல்ல. ஒருமுறை அமர்ந்ததிலேயே மனதின் இருள் முழுவதையும் அகற்றக் கூடிய மிகப்பெரும் விழிப்புணர்வு, பிரகாசத்தை பெற்ற காரணத்திற்காக“ என்று போதிதர்மர் சொன்னார்.

அவரை அரண்மனைக்கு வருமாறு வூ வற்புறுத்தினார். “அது என்னுடைய இடம் அல்ல.  நான் காட்டிற்குச் சொந்தமானவன். நான் முன்பு தெரிந்திராத எந்தச் செயலையும் சுயமாகவே செய்கிறேன். நான் ஒவ்வொரு நொடியும் தொடர்ச்சியாக வாழ்கிறேன். நான் கணித்துக் கூறப்பட முடியாதவன். நான் உங்களது அரசவை, உங்களது மக்கள், உங்களுக்குத் தேவையில்லாத தொல்லைகளை உருவாக்கலாம். நான் அரசவைக்கு உரித்தவன் இல்லை. என்னை காட்டிலேயே விட்டுவிடுங்கள்.“

அவர் டாய் என்ற பெயர் உள்ள மலையில் வாழ்ந்தார்... போதிதர்மர் பற்றி கூறப்படும் இரண்டாவது கதை, தேயிலையை உருவாக்கிய முதல் மனிதர் போதிதர்மர் என்பதாகும். ‘டீ‘ என்ற வார்த்தை டாய் என்ற பெயரிலிருந்து வந்தது. ஏனெனில் அது டாய் மலையில் உருவாக்கப்பட்டதாலாகும். எல்லா மொழிகளிலும் உள்ள டீ என்ற வார்த்தை டாய் என்ற ஆதாரச் சொல்லிருந்தே உருவாக்கப்பட்டவை. ஆங்கிலத்தில் டீ என்றும் இந்தியில் சாய் என்றும் சொல்லப்படுகிறது. டாய் என்ற சீன வார்த்தையை சா என்றும் உச்சரிக்கலாம். அதேபோல மராத்தி வார்த்தையும் சா-தான். 

போதிதர்மர் தேனீர் தயாரித்த விதம்  வரலாற்று முக்கியத்தும் பெறாவிட்டாலும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் பெரும்பாலான நேரம் தியானம் செய்தவாறே இருந்தார். சிலசமயம் இரவுநேரத்தில் தியானம் செய்தவாறே உறங்கிப்போவார். எனவே, தூங்கக் கூடாது என்பதற்காக, அவரது கண்களுக்கு பாடம் புகட்டுவதற்காக அவர் தனது புருவ மயிர் எல்லாத்தையும் பிடுங்கி ஆலயத்தின் மைதானத்தில் எறிந்து விட்டார். அந்த புருவ மயிர்களே தேயிலைச் செடியாக வளர்ந்தது என்பது கதை. அவைதான் முதல் தேயிலைச் செடியாக இருந்தது. அதனால்த்தான் நீங்கள் தேனீர் அருந்தினால் உங்களால் தூங்க முடியாமல் போகிறது. புத்த மதத்தில் தியானம் செய்வது வழக்கமானது. இதற்கு தேனீர் மிகவும் உதவி செய்வதாக இருந்தது. எனவே தேனீர் விழிப்புணர்வுடன் வைத்திருப்பதால் புத்த துறவிகள் அனைவருமே தியானத்தின் ஒரு பகுதியாக அதனை அருந்துகின்றனர்.

சீனாவில் இருபது லட்சம் புத்த துறவிகள் இருந்த போதிலும், போதிதர்மர் தனது சீடர்களாக நான்கு பேரை மட்டுமே தேர்ந்தெடுக்க முடிந்தது. உண்மையில் அவர் மிகவும் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுப்பவராக இருந்தார். அவர் தனது முதல் சீடரான ஹூய் கோ-வை தேர்ந்தெடுக்க அவருக்கு ஒன்பது ஆண்டுகள் ஆகின.

ஒன்பது ஆண்டுகள் ஆகின என்பது வரலாற்று உண்மை. ஏனெனில் இதுபற்றி போதிதர்மரின் காலத்தைச் சேர்ந்த பல்வேறு பண்டைக் கால குறிப்புகள் உள்ளன. இந்த உண்மையை அவை அனைத்தும் சொல்கின்றன. மற்றவற்றை சொல்லாவிட்டாலும் கூட, அவர் வூவை திருப்பி அனுப்பிய பிறகு ஒன்பது ஆண்டுகள் ஆலயத்தின் சுவரை நோக்கியே அமர்ந்திருந்தார். அவர் அதனை மாபெரும் தியானமாகச் செய்து வந்தார். அவர் வெறுமனே ஆலயச் சுவரை பார்த்தவாறே அமர்ந்திருந்தார். நீண்டகாலம் சுவற்றையே பார்த்துக் கொண்டிருப்பது என்பதை உங்களால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. மெள்ள மெள்ள அவர் அந்த சுவரை விரும்ப ஆரம்பித்தால் உங்களது மனத்திரையும் வெறுமையாகிவிடும்.

அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. “எனக்கு ஏற்ற சீடர் வராவிட்டால் நான் யாரையும் பார்க்க மாட்டேன்“ என்று அறிவித்திருந்தார்.

வழக்கமாக மக்கள் வந்து அவருக்கு பின்னால் அமர்ந்துதான் அவர் சொல்வதை கேட்பர். இது வினோதமான சூழ்நிலை. யாருமே இதுபோல பேசியதே இல்லை. அவர் சுவரைப் பார்த்துதான் பேசுவார். மக்கள் பின்புறமாக அமர்ந்து அவரது சொற்பொழிவை கேட்பர். அதற்கு அவர், “பார்வையாளர்கள் என்னை மிகவும் புண்படுத்துகின்றனர். அவர்கள் சுவர் போலவே உள்ளனர். யாரும் புரிந்துகொள்வதில்லை. மனிதர்களை இதுபோன்ற ஒரு அறியாமையில் பார்க்கும்போது அது புண்படுத்துவதாக உள்ளது. ஆனால் சுவரைப் பார்த்தால் அந்த கேள்வியே எழாது. சுவர் என்பது ஒரு சுவர்தானே. அது கேட்காது, எனவே புண்படுவதற்கு அவசியமில்லை. யாராவது எனது சீடராக இருக்க தகுதி கொண்டிருக்கிறார்கள் என்று நிரூபித்தால் மட்டுமே நான் பார்வையாளர்களை பார்த்துப் பேசுவேன்“ என்று காரணம் சொன்னார்.

ஒன்பது ஆண்டுகள் கடந்தன. ஜனங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. என்ன செய்து அவரை திருப்திப் படுத்துவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களால் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது ஹூய் கோ என்ற இளைஞன் வந்தான். கத்தியால் ஒரு கையை வெட்டி போதிதர்மரின் முன்னால் வீசினான். மேலும் அவன், “இதுதான் ஆரம்பம். நீங்கள் திரும்பாவிட்டால், என் தலை உங்கள் முன்பாக விழும். நான் என் தலையை வெட்டப் போகிறேன்.“ என்று சொன்னான்.
போதிதர்மர் திரும்பிச் சொன்னார், “நீதான் எனக்கேற்ற சீடன். நீ உன் தலையை வெட்டத் தேவையில்லை. நாம் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.“ ஹூய் கோ என்ற இந்த இளைஞன்தான் அவரது முதல் சீடரானான்.

இறுதியில் அவர் சீனாவை விட்டு கிளம்பியபோது, அல்லது சீனாவை விட்டு புறப்பட நினைத்தபோது அவர் தனது நான்கு சீடர்களை அழைத்தார். ஹூய் கோவிற்கு பின்னர் மேலும் மூன்று சீடர்கள் சேர்ந்திருந்தனர். “எளிய வார்த்தைகளில், சிறு வாக்கியங்களில், தந்திபோல எனது போதனையைச் சொல்லுங்கள். நான் நாளை இமயமலைக்குச் செல்ல இருக்கிறேன். நான் உங்கள் நால்வரில் ஒருவரை எனது வாரிசாக தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்“ என்று சொன்னார்.         

“உங்களது போதனை மனதை கடந்து முழு அமைதி பெறுவதைப் பற்றிச் சொல்கிறது. அதன் பின் எல்லாமே அதன்படி நடக்க ஆரம்பிக்கிறது“ என்று முதல் சீடர் சொன்னார்.

“நீ சொன்னதில் தவறில்லை. ஆனால் உனது பதில் எனக்கு திருப்தி தரவில்லை. எனது தோல் உனக்கு வந்துள்ளது“ என்று போதிதர்மர் சொன்னார்.

“நான் என்பது இல்லை, வெறுமனே இருப்பது மட்டுமே உள்ளது என்பதே உங்களது அடிப்படை போதனை“ என்று இரண்டாம் சீடர் சொன்னார்.

“கொஞ்சம் பரவாயில்லை, ஆனால் எனது தரத்திற்கு இல்லை. உன்னிடம் எனது எலும்பு உள்ளது. உட்கார்“ என்று போதிதர்மர் சொன்னார்.

“எதையும் சொல்ல முடியாது. எதையும் சொல்லும் திறன் எந்த வார்த்தைக்கும் இல்லை“ என்று மூன்றாவது சீடர் சொன்னார்.

“நல்லது, ஆனால் நீ ஒன்றைப் பற்றி சொல்லிவிட்டாய். நீயே உனக்கு மாறாக நடந்துகொண்டாய். உட்கார். உன்னிடம் எனது எலும்பு மஜ்ஜை உள்ளது“ என்று போதிதர்மர் சொன்னார்.

எஞ்சியுள்ளவர் அவரது முதல் சீடரான ஹூய் கோ ஆவார். அவர் ஒன்றுமே பேசாமல் போதிதர்மரின் காலில் விழுந்தார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. “நீதான் அதைச் சொன்னாய். நீதான் என் வாரிசாக இருக்கப் போகிறாய்“ என்று போதிதர்மர் சொன்னார்.


ஆனால் அன்றிரவு தன்னைத் தேர்ந்தெடுக்க வில்லை என்பதால் பழிவாங்கும் நோக்கத்தோடு சில சீடர்கள் போதிதர்மருக்கு விஷம் கொடுத்தனர். எனவே அவர்கள் அவரை புதைத்து விட்டனர். அதைவிட வினோதமான கதை மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் தனது கைத்தடியில் ஒரு செருப்பை தொங்கவிட்டபடி இமயமலையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்ததை ஒரு அரசாங்க அதிகாரி பார்த்தார் என்பதாகும். அவர் வெறும் காலில் நடந்து சென்றதாக கூறினார்.

அந்த அதிகாரி அவருக்கு பழக்கமானவராவார். பலமுறை அவரைச் சந்தித்திருக்கிறார். அதிக ஈடுபாடு இல்லாவிட்டாலும் அவர் மீது அன்பு வைத்திருந்தார். “இந்த செருப்புக்கு என்ன அர்த்தம்? ஒரு செருப்பை மட்டும் ஏன் தொங்க விட்டிருக்கிறீர்கள்? என்று அவர் கேட்டார். “சீக்கிரமே நீ தெரிந்துகொள்வாய். எனது சீடர்களை சந்தித்தால் நான் நிரந்தரமாக இமயமலையில் தங்கப் போவதாக சொல்லுங்கள்“ என்று போதிதர்மர் சொன்னார்.

அந்த அதிகாரி முடிந்த வரை விரைவாக போதிதர்மர் வாழ்ந்த மடம் உள்ள மலைக்குச் சென்றார். அவருக்கு விஷம் கொடுத்து புதைக்கப்பட்டதாக அங்கு இருந்தவர்கள் சொன்னார்கள்... அங்கு ஒரு கல்லறையும் கட்டியிருந்தார்கள். அந்த அதிகாரி எல்லையில் பணியிலிருந்ததால் அவர் அதைப் பற்றி கேள்விப்பட்டிருக்க வில்லை. “அடக்கடவுளே, நான் அவரைப் பார்த்தேன். நான் பார்த்தது பொய் இல்லை. நான் பலமுறை அவரை பார்த்திருப்பதால் எனக்கு அவரை நன்றாகத் தெரியும். அதே கோபமான கண்கள், அதே காட்டுத்தனமான தோற்றம். அதற்கும் மேலாக, அவர் தன் கைத்தடியில் ஒற்றைச் செருப்பை மாட்டியிருந்தார்“ என்று அவர் சொன்னார். 

சீடர்களால் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை. அவர்கள் அந்த கல்லறையை திறந்தனர். அங்கே இருந்தது ஒரேயொரு செருப்பு மட்டுமே. அப்போது அந்த அதிகாரி, “சீக்கிரமே தெரிந்துகொள்வாய்“ என்று போதிதர்மர் சொன்னதை புரிந்துகொண்டார்.  

ஏசுநாதர் உயிர்த்தெழுந்தது பற்றி நாம் அதிகம் கேள்விப் பட்டிருக்கிறோம். போதிதர்மர் உயிர்த்தெழுந்தது பற்றி யாருமே பேசவில்லை. ஒருவேளை அவர்கள் புதைத்தபோது அவர் கோமாவில் இருந்திருக்க வேண்டும். அவர் சுயஉணர்வை அடைந்த போது கல்லறையிலிருந்து வெளியேறிவிட்டார். ஒரு செருப்பை கல்லறையில் விட்டுவிட்டு ஒரு செருப்பை கைத்தடியில் மாட்டிக் கொண்டார். திட்டமிட்டபடியே அவர் அங்கிருந்து வெளியேறிவிட்டார்.

அவர் இமயமலையின் எல்லையில்லாத பனிக்குவியலில் இறக்க விரும்பினார். அங்கு அவருக்கான கல்லறையோ, ஆலயமோ, சிலையோ இருக்கக் கூடாது என்று அவர் விரும்பினார். அவர் மக்கள் வணங்குவதற்காக பாதச் சுவடுகளை விட்டுச் செல்ல விரும்பவில்லை. அவர் மீது அன்பு செலுத்துபவர்கள் தங்களது சுய ஆன்மாவில் இருக்க வேண்டும். “என்னை யாரும் வணங்கக் கூடாது“ என்று விரும்பினார். சொல்லப்போனால் அவர் மாயமாக மறைந்து விட்டார். அவருக்கு என்ன ஆனது, எப்படி இறந்தார் என்பது பற்றி யாருமே கேள்விப்படவில்லை. அவர் இமயமலையின் எல்லையற்ற பனிக்குவியலில் புதைபட்டிருக்க வேண்டும்.    

இதுதான் அவர். நம்மிடம் புத்தகம் என்று கூறக்கூடிய மூன்று சிறிய தொகுப்புகளே உள்ளன. அவை அவரது எழுத்துக்கள் அல்ல. ஏனென்றால் அவை அவரது தன்மையை காட்டவில்லை. அவை அவரது சீடர்களாக இருந்த அறிஞர்களால் விட்டுச் செல்லப்பட்ட குறிப்புக்கள். எனவே அவை அடிப்படையில், முக்கியமான தவறுகளையும், தவறான கருத்துக்களையும், தவறான பொருள்களையும் தரக்கூடியவையாக உள்ளன. அவர்கள் மனம் இல்லாதவர்கள் அல்ல. அவர்களது மனங்களே குறிப்புகளை எடுக்கின்றன. அவர்களது மனங்களே வார்த்தைகளை தேர்ந்தெடுக்கின்றன.


போதிதர்மர் வார்த்தைகளை சொல்லும் மனிதனாக இல்லாமல் செயலைச் செய்யும் மனிதனாக இருந்தார். அவர் ஒரு புத்தகம் எழுத வாய்ப்பே இல்லை. தன்னை வணங்கக் கூடாது என்ற கருத்துக்கொண்ட, தன்னை பின்தொடர பாதச் சுவடுகளை விட்டுச் செல்ல விரும்பாத மனிதன் புத்தகத்தையும் எழுதப் போவதில்லை. ஏனெனில் அது அவர் தன்னை பின்பற்ற பாதச் சுவடுகளை விட்டுச் செல்வதற்கு சமமாக ஆகிவிடும்.

ஆனால் நான் அவற்றைப் பற்றி பேசுவதை தேர்ந்தெடுத்தேன். ஏனென்றால் இந்த மூன்று தொகுப்புக்களும் போதிதர்மரால் எழுதப்பட்டவை என்று பல நூற்றாண்டுகளாக நம்பப்பட்டு வந்ததே ஆகும். அவற்றில் மற்றவர்கள் விட்டுச் சென்ற குறிப்புகளே இங்கும் அங்குமாக போதிதர்மர் பற்றி சொல்கின்றன. ஏதோ குறிக்கப்பட்டுள்ளது. இதில் எது போதிதர்மரின் வார்த்தைகள், எது குறிப்பெடுத்தவரின் வார்த்தைகள் என்பதை கண்டுபிடிப்பது எந்தவொரு அறிஞருக்கும் கடினமானதே. 


எனது அனுபவத்தின் மூலமாக எது போதிதர்மரின் வார்த்தைகளாக இருக்க முடியும், எது அறிஞர்களால் புரிந்துகொள்ளப்பட்ட வார்த்தைகளாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். எனவே இவை வெறும் சாதாரண கருத்துக்கள் அல்ல. இதனை பதறிலிருந்து நெல்லை பிரித்தெடுப்பது போன்ற போதிதர்மரின் கருத்துக்களை பிரித்தெடுக்கும் முதல் முயற்சி ஆகும்.

ஆதாரம் “போதிதர்மர் மாபெரும் ஜென் குரு“ ஓஷோ
நன்றி - மெசேஜ் ஃப்ரம் மாஸ்டர்ஸ்

                          







      



நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...