Thursday, March 5, 2020

ஒரு தெய்வீகக் காதல் கதை


பையனுக்கு வயது 18, பெண்ணுக்கு வயது 17. பையன் பத்தாம் வகுப்போடு நின்று விட்டு தந்தைக்கு உதவியாக இருந்து வருகிறான். பெண் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இருவரும் முன்பிருந்தே காதலித்து வந்துள்ளனர். பெண் போனில் பேசுவதைக் கண்ட பெற்றோர் திட்டியுள்ளனர். எங்காவது போய்த் தொலை என்று அவர்கள் பேசவே, திடீரென அந்தப் பெண் கிளம்பிச் சென்று 35 கிமீ தொலைவில் ஒரு ஊரில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு, தான் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் வந்து தன்னை அழைத்துச் செல் என்று பையனிடம் மொபையில் சொல்லி இருக்கிறார். பையன் இது பற்றி தன் தந்தையிடம் சொல்லி இருக்கிறான். தந்தை சரி பேசிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு பெண்ணை அழைத்துச் சென்று தனது சகோதரரின் வீட்டில் தங்க வைக்கச் சொல்லி இருக்கிறார். இதற்கிடையில் பெண் வீட்டார் மேற்படி பையன், அவனது தந்தை மீது காவல் துறையில் புகார் செய்கிறார். அந்தத் தந்தை தெரிந்தவர்களை வைத்து பேசி முடிக்கலாம் என்று முயற்சி செய்தார். பெண்ணின் தாய் அதை ஏற்காமல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். உடனே காவலர்கள் பையனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறைக்கு அனுப்பினார்கள். பெண்ணை காப்பகத்தில் சேர்த்தனர். சில தினங்களுக்குப் பிறகு பெண்ணின் பெற்றோர் காப்பகம் சென்று அவரை அழைத்து வந்து விட்டனர். பையனின் பெற்றோர் பையனை ஜாமீனில் எடுத்துள்ளனர். நிபந்தனை ஜாமீனில் வந்து நீதிமன்றத்தில் கையொப்பம் இட்டு வருகிறார். இதற்கிடையில் மீண்டும் பெண் பையனின் வீட்டிற்குச் சென்று விடுகிறார். மீண்டும் காவல் துறை தலையிட்டு பெண்ணை காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். பையனுக்கு 21 வயது வரும் வரை பெண்ணுக்கு 18 வயது ஆகும் வரை காத்திருக்க வேண்டும் என்று சொல்லி பெரியவர்கள் ஆலோசனை சொல்லி சமாதானப்படுத்தியுள்ளனர். இவ்வாறு கடந்த 25 நாட்களாக இந்த காதல் கதை ஓடுகிறது. 

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...