நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஒரு ஆன்மீக குடும்பத்திலே பிறந்தவர்.
அவரது தாய் பூஜை புனஸ்காரங்கள் மீது மிகுந்த நம்பிக்கை உடையவர்.
அவரது தாய் பூஜை புனஸ்காரங்கள் மீது மிகுந்த நம்பிக்கை உடையவர்.
புராண இதிகாசங்களில் மிகுந்த புலமை உடையவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் .
நேதாஜி தன்னுடைய ஆன்மிக குருவாக ராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும் உள்ளதாக கூறுகின்றார் .
நேதாஜி தன்னுடைய ஆன்மிக குருவாக ராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும் உள்ளதாக கூறுகின்றார் .
போர்க்களத்தில் உபதேசிக்கப்பட்ட பகவத் கீதை அவருக்கு பிடித்த ஒன்று .அதில் அர்ஜுனனுக்கு கூறப்படும் " உறவுகள் மற்றும் நண்பர்களின் தாக்கத்திலிருந்து விடுபட்டு ஒரு வீரன் எவ்வாறு யுத்தத்தை நேர்மையுடன் சந்திக்க வேண்டுமென்ற அத்தியாயத்தை அவர் பலமுறை தன்னுடைய சக இந்திய தேசிய ராணுவத்தினருடன் பகிர்ந்துள்ளார்.
அதேபோல அதை தன் வாழ்நாளில் நடைமுறைப் படுத்தியுள்ளார் .நேதாஜி அவர்கள் அடிக்கடி ஆழ்நிலை தியானம் செய்யக்கூடிய இயல்புடையவர். இக்கட்டான பல சூழல்களில் தியானத்தின் மூலமாகவே தன்னுடைய பிரச்சினைகளுக்கு தீர்வினை தேடியவர். பல நாட்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வீட்டு சிறையில் வைக்கப்பட்ட பொழுது மிகநீண்ட தியானத்தில் ஆழ்ந்து விடும் பழக்கம் அவரிடத்தில் இருந்தது. மாவீரன் நெப்போலியனுக்கு யுத்தகளத்தில் கூட ஒரு மணி நேரம் குதிரையில் அமர்ந்தவாறே உறங்கும் பழக்கம் உண்டு என்பது போல நேதாஜி அவர்களுக்கும் இக்கட்டான சூழலிலும் சுற்றிலும் குண்டு மழை பொழிந்த போதும் சிறிது நேரம் தியானம் செய்யும் பழக்கம் உள்ளவராக இருந்தார். இந்த தியானம் தன்னை நெருக்கடியான சூழலில் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தி உள்ளதாக அவர் கூறுகிறார். இறை நம்பிக்கை உடையவர்களாகவே அவருடைய தேசிய படையினரும் இருந்தனர் என்றாலும் அவ்வாறு இறைநம்பிக்கை அல்லாத புரட்சி கருத்துடைய இளைஞர்களையும் நாத்திக கருத்துக்களை கொண்டோரையும் கூட நேதாஜி சமமாகவே கருதினார் .மேலும் இந்து இஸ்லாமிய சீக்கிய இனங்களைச் சேர்ந்த அத்தனை படையினருக்கும் அவரவர் நம்பிக்கைப்படி தங்கள் வழிபாடுகளை மேற்கொள்ள தன்னுடைய ராணுவத்தில் முழு சுதந்திரம் கொடுத்திருந்தார். அதேசமயம் இத்தகைய மத பூசல்களும் தன்னுடைய ராணுவத்தினர் தொண்டர்கள் ஆட்பட்டு விடாதவாறு அவர்களைப் பயிற்றுவித்து இருந்தார்.
சிங்கப்பூர், ஜப்பான், கொரியா,, நேபாளம் & ஆஸ்திரியா போன்ற நாடுகளில் அவர் பயணம் மேற்கொண்ட போதெல்லாம் கிறிஸ்தவ மற்றும் புத்ததேவ் ஆலயங்களுக்கும் சென்று அங்குள்ள மத குருமார்களிடம் தத்துவங்களை விவாதிக்க கூடியவராக இருந்தார் .அதேபோல உலகமெங்கும் பரவி இருந்த ராமகிருஷ்ண மடம் மற்ற விவேகானந்தர் மடங்களுக்கு செல்லும் வழக்கத்தையும் கொண்டிருந்தார். ஆசாத் ஹிந்த் என்ற நாடுகடந்த அரசை அவர் உருவாக்கிய பொழுது "கடவுளின் பெயராலேயே என்னுடைய இந்திய தேசத்தையும் அதில் வாழும் 38 கோடி இந்தியர்களையும் விடுவிக்க இந்த இலட்சிய மிகுந்த போரை என்னுடைய உயிர் மூச்சு இறுதிவரை மேற்கொள்வேன்" என்று இறைவனின் பெயரால் உறுதிமொழி எடுத்தார்.
இந்திய தேசிய ராணுவத்தின் கட்டளை அதிகாரியாக அவர் மீண்டும் பதவியேற்ற பொழுது அனைவருக்குமான இறைவன் தன்னுடைய ராணுவத்திற்கு இந்த இக்கட்டான சூழலில் இந்தியா தவித்துக் கொண்டிருக்கிற வேளையில் பலத்தையும் வெற்றியையும் தர வேண்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தன்னுடைய அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை ஒரு இடதுசாரி கட்சியாகவே பதிவு செய்தார் .பொதுவாக இடதுசாரி கட்சிகள் என்பது நாத்திக கருத்து உடையவர்களாகவே அறியப்படுகின்றனர் .எனினும் நேதாஜி, தனது கட்சி என்பது அரசியல், பொருளாதார, சமூக நிலைகளில் இடதுசாரி தத்துவ நிலைகளிலே செயல்படும் என்று அறிவித்திருந்தார் வர்ண தர்மத்தின்படி மக்களை படிநிலை சாதிய அமைப்பாக மாற்றி வைத்து உள்ள சமூக இழிநிலையை சுபாஷ் சந்திரபோஸ் கடுமையாக எதிர்த்தார் .தன்னுடைய ராணுவத்தில் இருப்போர் இத்தகைய பாகுபாடு மேற்கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அரசாங்கமானது இந்திய மக்களை மதத்தின் அடிப்படையில் ,சாதியின் அடிப்படையில் பல கூறுகளாக பிரித்து வைத்து தங்களது ஆட்சியை வெற்றிகரமாக நடத்துகிறது என்று காந்திஜி முன்னிலையிலேயே பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இந்தியாவில் வறுமையும் பொருளாதார சமமின்மையும் பெருக மதங்களும் சாதி பூசல்களும் காரணமென்று பகிரங்க குற்றச்சாட்டினர்.
சுதந்திரத்திற்கான போரிலே அனைவரும் கவனம் செலுத்திய பொழுது அம்பேத்கர் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் மட்டுமே சமய சமூக விடுதலையை வென்றெடுக்க வேண்டிய அவசியத்தையும் உணர்ந்து செயல்பட்டனர் . சுபாஷ் சந்திர போஸ் தன் சுயசரிதையில் இவ்வாறு கூறுகின்றார் "நான் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவன், நான் பிறந்த வீடு இருக்கும் பகுதியான ஒரியா பஜார் கட்டாக் பெரும்பான்மை முஸ்லிம்களால் சூழப்பட்ட பகுதி. என்னுடைய தந்தையோ ஒரு இந்து துறவி போன்றவர் .ஆனால் நாங்கள் இஸ்லாமியர்களின் முகரம் உட்பட அத்தனை விழாக்களிலும் பங்கு பெற்று உள்ளோம். இஸ்லாமியர்கள் அவர்களுடைய வழிபாட்டு முறைகளில் மட்டுமே மாறுபட்டு இருந்தார்களே தவிர அவர்கள் அனைவரும் நம்மவர்களே".
தீண்டாமைக்கு எதிராக அனைவரும் வாய்ச்சொல் வீரர்களாக இருந்த சமயத்தில் அதனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநாடுகளில் செயல்வடிவம் திட்டங்களை விவரித்தவர் . இத்தகைய செயல் காங்கிரஸில் இருந்த பல உயர்சாதியினருக்கு உதறலை கொடுத்தது.
இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து பொழுது அதில் கட்டளை அதிகாரிகளாக தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மற்றும் பௌத்த இஸ்லாமிய சீக்கிய வீரர்களை சமமாக நியமித்தார் .
வீரத்திற்கு சாதி, சமய ,பாலின பாகுபாடு கிடையாது என்று ஓங்கி உரைத்தார்.
தான் அமைக்க உள்ள ஆசாத் இந்த் ஆனது எந்தவித சாதி சமய சலுகைகள் இன்றி எளிய ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கான அரசாகவே இருக்கும் என்றும் , சமயம் மற்றும் வழிபாடு என்பது ஆட்சி இறையாண்மை ஆகியவற்றில் எந்தவித பங்கும் எடுக்க அனுமதிக்க மாட்டேன் என்றும் உறுதிபடக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment