Tuesday, March 10, 2020

அரசர்கள் அஞ்சப் பிறந்தான்



வரலாற்று ஏடுகளில் சில மன்னர்களின் பெயர்களே அவர்களின் தனித்துவ வரலாறு பேசும், அப்படிப்பட்ட மன்னர் பெயர் பட்டியலில் வருகின்ற பெயர் தான் அரசர்கள் அஞ்சப்பிறந்தான்.

புதுக்கோட்டையின் மேற்குப்பகுதியை கோனாடு என்றும், அது சோழர்களின் எல்லைப் படைபற்றாக விளங்கி வந்ததை நாம் புதுக்கோட்டை வட்டார கல்வெட்டுகள் மூலமாக அறியப் பெறலாம்.

அம்மேற்கு பகுதியை சிங்கமங்கலம் என்றும், அதனை ஆட்சி செய்தவர்கள் சிங்கமங்கல அரையர்கள் என்று அழைக்கப் பெற்றனர்.

இதே சிங்கமங்கலத்தரையர்கள் சோழர் வீழ்ச்சிக்கு பின்பு பாண்டியரின் படைப்பற்றான கானாட்டிற்கு அரையர்களாக ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

இதனை திரிபுவனச்சக்கரவர்த்தி ஶ்ரீவீரபாண்டியத் தேவர் ஆட்சியாண்டு கிபி1306ஆம் ஆண்டு கல்வெட்டில் “கடலடையாதிலங்கை கொண்ட சோழ வள நாட்டுக் கானாட்டுப் படைப்பற்று சிங்கமங்கலத்தரையர்களில்” என சிங்கமங்கலத்தரையர்கள் கானாட்டிற்கு பாண்டியரின் படைத் தலைவர்களாக வருகிறார்கள்.

இந்த சிங்கமங்கலத்தரைகள் கள்ளர் குலத்தை சார்ந்தவர்கள் என்றும் அவர்களுடைய கடலடையாதிலங்கை கொண்ட சோழ வள நாடு என்பது கள்ளர் நாடு என்பதை வீரசயண உடையார் ஆட்சியாண்டு கிபி1351ஆம் ஆண்டு கல்வெட்டில் கள்ளர் பால் கற்குறிச்சி கடலடையாதிலங்கை கொண்ட சோழவள நாட்டின் சிங்கமங்கலத்தரையர்களில் சிவலோகமுடையானான தெற்கிலரையன்
ஆயிரவனான அயிலாயனும் வடக்கிலரையன் சாந்தனும்,தேவனும் என கள்ளர் நாடாகவும்,கள்ளர் தலைவராகவும் அறியப் பெறுகிறார்கள்.

சரி இதன் மூலமாக யார் அந்த அரசர்கள் அஞ்சப் பிறந்தான் என்பதை பார்க்க, நமக்கு திரிபுவனச்சக்கரவர்த்தி ஶ்ரீவீரபாண்டித் தேவர் ஆட்சியாண்டு கல்வெட்டில் கோனாட்டு கடலடையாதிலங்கை கொண்ட சோழவள நாட்டு அரசுகண்ட தேவன் அரசர்கள் அஞ்சப் பிறந்தானான_அயிலாராயனென் என்று வழங்கப் பெறுகிறது.

இந்த அயிலாராயனென் சிங்கமங்கலத்தரையரின் தம்பியாக உள்ளதை ஶ்ரீவீரபாண்டியத் தேவர் கல்வெட்டில் உள்ளதை நாம் காணலாம்.

மேலும் இந்த அரசர்கள் அஞ்சப்பிறந்தான் என்பவர் புல்வயல் அரசராக வருவதை ஶ்ரீதிரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழன் காலத்து கல்வெட்டு எண்: 179 கடலடையாதிலங்கை கொண்ட சோழவள நாட்டு தெற்றன் அரசர்கள் அஞ்சப்பிறந்தானான குலோத்துங்க சோழக் கடம்பரையனென் என அறியப்படுகிறார்.

சோழர்,பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகளிலே அரசர்களை அஞ்ச வைப்பதற்காக பிறந்தவன் என அம்மன்னர்களால் அழைக்கப்பட்டிருப்பதால், அரசர்கள் அஞ்சப்பிறந்தானின் வீரத்தை நினைத்தாலே பிரமிக்க வைக்கிறது. அப்படிப்பட்ட கள்ளர் குல தலைவரை உங்களிடம் நினைவுபடுத்தியமைக்கு பெருமை கலந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்.

இன்றும் கள்ளர்களில்
அஞ்சாத் தேவன்
அச்சமறியார்
பட்டங்களில் சோழபாண்டிய வாழ்வியலாக வாழ்ந்து வருகிறார்கள்.

குறிப்பு: போதை வஸ்த்துகளில் இருந்து மீண்டு
வாருங்கள், காத்துக் கொண்டிருக்கிறோம்
நன்றி
புதுக்கோட்டை வட்டாரக் கல்வெட்டுகள்

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு






No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...