முதன் முதலில் இந்திய மண்ணின்
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்த முதல் ௧ட்சி
அகில இந்தியபார்வர்ட்பிளாக்௧ட்சி
தமிழீழ விடுதலைக்காக தமிழீழ மண்ணில் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் கட்டமைத்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரமாக களமாடி கொண்டிருந்த காலம் அந்தக் காலகட்டத்தில் சர்வதேச நாடுகளின் பல்வேறு விதமான ஆதரவுகள் கிடைத்தாலும் இந்தியாவில் குறிப்பாக தாய்த்தமிழ் உறவுகள் வாழ்கின்ற தமிழ்நாட்டின் தமிழ் மக்களின் ஆதரவினை புலிகள் விரும்பினர்
அது சமயம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் அவர்களை சந்திக்க விடுதலைப் புலிகள் எண்ணினர்...
அந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் அவர்களுடன் நெருங்கிய தொடர்பிலும் நண்பராகவும் இருந்த அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆண்டித்தேவர் அவர்களுக்கு தமிழ் தேச இயக்கத்தின் தலைவர் பழ நெடுமாறன் மற்றும் பல தலைவர்கள் மூலம் இந்த தகவல் போய் சேர்ந்தது...
அப்போது மதுரைக்கு வருகை தந்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மேலமாசி வீதியில் உள்ள நெடுமாறன் அவர்களின் தமிழ் தேச இயக்க அலுவலகத்தில் ஆண்டித்தேவர் அவர்களை நேரில் சந்தித்தார்
விடுதலைப் புலிகள் குறித்தும் பிரபாகரன் குறித்தும்
ஆண்டித்தேவர் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களிடம் தகவலை விளக்கி
1985 ம் ஆண்டு முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களையும் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களையும் சந்திக்க வைத்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நிகழ்த்தி காட்டியவர் ஆண்டித்தேவர் ஆவார்....
இந்த சந்திப்பின் மூலம் விடுதலைப்புலிகளுக்கும் எம்ஜிஆர் அவர்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டன....
அதன்மூலம் விடுதலைப் புலிகளுக்கு பல உதவிகள் கிடைத்தன...
அதைத் தொடர்ந்து தொடர்ந்து இந்தியாவிற்கு வருகை தந்த
அமைதி பேச்சுவார்த்தை குழுவான ஆண்டான் பாலசிங்கம் கிட்டு பேபி சுப்ரமணியம் ரகீம் உள்ளடக்கிய குழு
முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களை சந்தித்து
தமிழீழத்தில் நடப்பது குறித்து அக்குழுவினர் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களிடம் விளக்கினார்கள்...
அச்சந்திப்பில் நிகழ்விற்கும் அமைதிப் பேச்சுவார்த்தை குழுவிற்கு அடைக்களமாகவும் ஆதரவாகவும் விளங்கியவர் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் ஆண்டித்தேவர் அவர்கள்
உசிலம்பட்டி காளப்பன்பட்டி மற்றும் வருசநாட்டு மலைப்பகுதி அதை சுற்றியுள்ள கிராமங்களில் விடுதலை புலிகள் இயக்கத்தின் 100மேற்பட்ட வீரர்களை வீட்டுக்கு ஒருவர்களாக தங்க வைத்து ஆதரவளித்து அவர்களுக்கு பலவித பயிற்சிகள் வழங்கப்பட்டது...
நேதாஜி அவர்களை தனது முன்மாதிரியாக எண்ணி செயல்பட்டவர் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள்...
இந்தத் தகவலை 1985-ஆம் ஆண்டில் சம்பவத்தில் நேரடியாக இருந்த அகில இந்திய பார்வர்ட் பிளாக் இயக்கத்தின் மூத்த தலைவர் ஒருவர் மூலமாக இத்தகவலை பெற்றேன்....
தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட வரலாற்றில் மறைக்கப்பட்ட நிகழ்வுகளை எம் மக்களிடம் கொண்டு சேர்ப்பேன்....
ஜெய்ஹிந்த்
இர.திவாகரன்
மத்தியகுழு உறுப்பினர்உறுப்பினர்(AISB)
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி
No comments:
Post a Comment